Appusamy Varisu Thedukirar
()
About this ebook
Read more from Bakkiyam Ramasamy
Mahabalipurathil Marupadi Narasimma Pallavan Rating: 0 out of 5 stars0 ratings'Ink'eetham Therinthavara Neegal? Rating: 0 out of 5 stars0 ratingsMamanar Kathaigal Rating: 5 out of 5 stars5/5Marumagal Rajyathil... Rating: 0 out of 5 stars0 ratingsAppusamyum Africa Azhagiyum Rating: 5 out of 5 stars5/5Come on Appusamy Come on Rating: 0 out of 5 stars0 ratingsAppusamyin Colour TV Rating: 0 out of 5 stars0 ratingsAppusamyum Azhagi Pottiyum Rating: 0 out of 5 stars0 ratingsAppusami 80 Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsAppusami Thairiyasami Rating: 0 out of 5 stars0 ratingsAppusamy Padam Edukkirar Rating: 0 out of 5 stars0 ratingsSirikkatha Manamum Sirikkum Rating: 0 out of 5 stars0 ratingsHuman Bomb Appusamy Rating: 0 out of 5 stars0 ratingsBakkiyam Ramasamyin 100 Suvaiyana Nagaichuvai Kathaigal Rating: 5 out of 5 stars5/5Bakkiyam Ramasamyin Nagaichuvai Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsSila Nerangalil Sila Anubavangal Part 3 Rating: 0 out of 5 stars0 ratingsKoondukkul Appusami Rating: 0 out of 5 stars0 ratingsAppusamy Paritchai Ezhuthukirar! Rating: 0 out of 5 stars0 ratingsSila Nerangalil Sila Anubavangal Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsAayirathoru Appusamy Iravugal Rating: 0 out of 5 stars0 ratingsRajini Illathil Ragalai Rating: 0 out of 5 stars0 ratingsVeerappan Kaattil Appusami! Rating: 0 out of 5 stars0 ratingsSila Nerangalil Sila Anubavangal Part 4 Rating: 0 out of 5 stars0 ratingsMaanavar Thalaivar Appusamy Rating: 0 out of 5 stars0 ratingsBerovin Pinnal Rating: 0 out of 5 stars0 ratingsAppusamikkul Kuppusami Rating: 0 out of 5 stars0 ratingsAppusami Seitha Kidney Thaanam Rating: 0 out of 5 stars0 ratingsEnnakinaru! Rating: 0 out of 5 stars0 ratingsSirithe Ahavendiya Chinna Chinna Katturaigal Rating: 0 out of 5 stars0 ratingsMahabalipurathu Arpangal! Rating: 0 out of 5 stars0 ratings
Related to Appusamy Varisu Thedukirar
Related ebooks
Vilagava? Vilagiva..! Rating: 5 out of 5 stars5/5Appusamyum Arputha Vilakkum Rating: 0 out of 5 stars0 ratingsHuman Bomb Appusamy Rating: 0 out of 5 stars0 ratingsMaanavar Thalaivar Appusamy Rating: 0 out of 5 stars0 ratingsAppusamy Paritchai Ezhuthukirar! Rating: 0 out of 5 stars0 ratingsDabbaji Bansleyudan Appusami Rating: 0 out of 5 stars0 ratingsThandanai Rating: 0 out of 5 stars0 ratingsIndru Nee Nalai Nee Endrum Nee Rating: 0 out of 5 stars0 ratingsAakasavaniyil Appusamy Rating: 0 out of 5 stars0 ratingsAvalum Solval Theerpu! Rating: 0 out of 5 stars0 ratingsPoo Pookkum Osai Rating: 0 out of 5 stars0 ratingsAasai Kiliye! Azhagiya Rani! Rating: 0 out of 5 stars0 ratingsMarupadiyum Malathi Rating: 0 out of 5 stars0 ratingsKanne Kaadhali Rating: 0 out of 5 stars0 ratingsAagayam Mannil Varum! Rating: 0 out of 5 stars0 ratingsPuthuputhu Anubavangal Part-3 Rating: 0 out of 5 stars0 ratingsRagasiyathai Sol Kiliye..! Rating: 0 out of 5 stars0 ratingsAnubava Alaigal Rating: 0 out of 5 stars0 ratingsKaathirukkirean! Rating: 0 out of 5 stars0 ratingsPookkatha Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsKanne Kaathiru! Rating: 0 out of 5 stars0 ratingsAmma Sonna Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsAugust Thiyagi Appusamy Rating: 0 out of 5 stars0 ratingsAndha Maalai Mayakkam Rating: 0 out of 5 stars0 ratingsAppusamiyin Thaali Bakkiyam Rating: 0 out of 5 stars0 ratingsJananam Rating: 4 out of 5 stars4/5Oru Paravaiyin Saranalayam Rating: 0 out of 5 stars0 ratingsMarupadiyum Padikkalam Rating: 0 out of 5 stars0 ratingsIthuvum Tajmahal Than Rating: 0 out of 5 stars0 ratingsVergalai Thedi…. Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Appusamy Varisu Thedukirar
0 ratings0 reviews
Book preview
Appusamy Varisu Thedukirar - Bakkiyam Ramasamy
http://www.pustaka.co.in
அப்புசாமி வாரிசு தேடுகிறார்!
Appusamy Varisu Thedukirar!
Author:
பாக்கியம் ராமசாமி
Bakkiyam Ramasamy
For more books
http://www.pustaka.co.in/home/author/anuradha-ramanan-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
1
அப்புசாமி டெலிபோனில் பேசிக்கொண்டிருந்தார்.
அச்சிக் கண்ணு! பிலு! பிலு! பிலு! சம்மோத்துச் சக்கரைக் குட்டி! தாத்தா மம்மம் சாப்டுட்டு... தாச்சி தூங்கிட்டு... வேணாண்டி ராஜா.... வேணான் வேணான். தாத்தாகிட்டேதான் ஊங்குவியா? நான் போன்லேயே லொலலாயி பாடுவேனாம்... நீ கேட்டுண்டே ஊங்குவியாம். நாணாமா? தாத்தா மடியிலேதான் தாச்சிக்கணுமா? டிரெய்ன் பாக்கணுமா? டிரெய்னெல்லாம் தூங்கிண்டிருக்கும்டா செல்லம்... இல்லட்டா எங்கானும் முட்டிண்டு அங்கங்கே விழுந்து கிடக்கும்டா செல்லம்... என் ராஜாக் கண்ணோன்னோ. காத்தாலைக்கு தாத்தா உங்கிட்டே ஓடி வந்துடுவேனாம்...
டக்கென்று விளக்கைப் போட்டாள் சீதாப்பாட்டி. மணி ராத்திரி இரண்டரை.
என்னது, பெரீய நியூஸன்ஸாப் போச்சு உங்களோட? ராத்திரி ரெண்டு மணிக்குத் தொண தொணன்னு ஃபோனிலே நான்-ஸ்டாப்பாகப் பேசிக் கொண்டு? தேர் இஸ் எ லிமிட் ஃபார் எவ்ரிதிங்!
சீதாப்பாட்டியின் கண்டனத்தை அப்புசாமி கண்டுக்கவே இல்லை. போன் மூலமாகத் தாலாட்டை அனுப்பத் தொடங்கினார்.
ஆராரோ... ராராரா சோளீகீ பீச்சே... ஆராரோ க்யா ஹை... ஆரீராரோ ராராரோ... சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே... ஆரடிச்சு நீ அழறே... வீரபாண்டிக் கோட்டையிலே... ஆராரோ... ஆராரோ வெள்ளி முளைக்கும் வேளையிலே... உனக்குக் கோட்டை பாக்கணுமாடா கண்ணு! காத்தாலே தாத்தா ஆட்டோவிலே புர்ர்ன்னு வந்து... எப்பிடி வந்து? புர்ர்ன்னு வந்து... செரி... செரி டபடபன்னு வந்து... சீதே, குழந்தை என்ன புத்திசாலி பார். ஆட்டோவிலே புர்ன்னு வந்துன்னு நான் சொல்றேன். அது ஆட்டோ புர்ர்ர் இல்லே, டபடப சொல்லுங்கறது. ஒரு வயசுக் குழந்தைக்கு எவ்வளவு புத்தி! சுத்திப் போடணும்!
குழந்தையையே சுத்திப் போட்டுடலாம்.
சீதாப்பாட்டி எரிச்சல் தாங்க முடியாமல் சொல்லிவிட்டு,ஸாரி, உங்க முட்டாள்தனத்துக்குக் குழந்தை என்ன செய்யும்? உங்களை பர்(த்)டே பார்ட்டிக்கு அனுப்பினது என் தப்பு. ஒரு வாரமாக உங்க நியூஸன்ஸ் தாங்கலை.
ரிஸீவரை பலவந்தமாக வாங்கி டிஸ்கனெக்ட் செய்தாள்.
இரண்டு நிமிஷம் கழித்து மறுபடி கிர்ரிங்... கிர்ரிங்!
குழந்தைதான் கூப்பிடறான்!
என்று பாய்ந்து எடுத்தார் அப்புசாமி.
பேசியது குழந்தையின் அப்பா.
ஸாரி தாத்தா. போனை நீங்க வெச்சுட்டீங்களாம். தாத்தா வெச்சுட்டார்னு பயல் கத்தி ஆர்ப்பாட்டம் பண்றான். ப்ளீஸ்... கொஞ்சம் பக்குவமாப் பேசிச் சமாதானம் பண்ணினதுக்கப்புறம் வையுங்க. எங்க பிள்ளையாலே உங்களுக்கு ரொம்பத் தொந்தரவு. அவன் அடம் பிடித்துக் கத்தினால் விறைத்து மூச்சுப் போயிடறது, உங்களுக்கே தெரியும்!
ஹி ஹி! போனைக் குழந்தை கையிலே குடுங்க... விடிய விடிய வேணும்னாலும் பேசறேன். என்னடா சித்தார்த் கண்ணு, அழுதியா தாத்தா காணம்னு? தோ தாத்தா பேசறேன். பெல பெல பெல! கிசு கிசு கிசு! டொட் டொட் டொட் டொட்ட...! தாத்தா விசில் ஊதிக் காட்டட்டுமா?
குழந்தைக்காக வாங்கி வைத்திருந்த பிளாஸ்டிக் விசிலை பிர்ர்பிர்ர் என்று ஊகிக் காட்டினார்.
உனக்குத்தாண்டா செல்லம் விசிலு. அம்மா காதைப் புடிச்சிண்டு சம்மோத்தாத் தூங்கு. என் காதுதான் வேணுமா? ஹஹஹ! அழக்கூடாது. தாத்தா, இதோ இப்ப வர்றேன். போனை வெச்சுடுடா கண்ணு. ரொம்ப நேரம் வெச்சிட்டிருந்தா டமால்னு ஷாக் அடிச்சிடும்... என்னது, போனுக்குக் கரெண்ட் கிடையாதா? அச்சோ சீதே! பொல்லாத பயல். போனுக்குக் கரெண்ட் கிடையாதுங்கறான் சீதே! இவன் நிச்சயமா ஸர்.ஸி.வி. ராமனாவோ, லட்சுமணனாவோதான் ஆகப் போறான், பாரேன்.
போனைக் கண்டுபிடித்த க்ரஹாம்பெல்லே இந்தக் குழந்தைதான்னு கூடச் சொல்வீங்க. ப்ளீஸ்! போனை வையுங்க முதலிலே. நான் கொஞ்சமாவது தூங்கணும். நாலு மணிக்கெல்லாம் ஏர்போர்ட்டுக்கு வேற போயாகணும். நீங்க உங்க குழந்தையைப் பார்க்கப் போய்த் தொலையுங்க.
அப்புசாமி அந்த இரவில், கௌதம புத்தர் அரண்மனையிலிருந்து வெளியேறிய மாதிரி - என்ன ஒரு வித்தியாசம் - பற்றுகளைத் துறந்து கௌ.பு. வெளியேறினார். அப்புசாமி பற்றோடு கிளம்பினார். அவர் ரதத்தில் போனார். அப்புசாமி ஆட்டோவில் புறப்பட்டார்.
அவர் புறப்பட்டுச் சென்ற பிறகும் சீதாப்பாட்டியால் தூங்க முடியவில்லை. மூன்று நிமிஷத்துக்கெல்லாம் மறுபடி டெலிபோன்.
ப்ளீஸ்... காலையில் பேசலாமே?
என்றாள் சீதாப்பாட்டி.
மறுமுனையில் குழந்தை,யார் நீ பேசறே? பாத்தியா? நீ ஊங்கலையா? நான் பேசுவேன்னு முழிச்சிண்டிருக்கியா? சித்தார்த்துக்காக முழிச்சிண்டிருக்கியா?
உன் தாத்தா புறப்பட்டு வரார்டா டார்லிங்! குட் நைட்.
போனை வெச்சுடாதே பாத்தி. ஒனக்குக் கதையெல்லாம் தெரியுமாமே. தாத்தா சொன்னா. நீ காக்கா கதை சொல்றியா? வடெ தொபுகடீர்னு எப்பி விழுந்து நரி தூக்கிண்டு ஓடியே போச்சி அது சொல்லு.
பாட்டி கொட்டாவி விட்டாள்.ஆல்ரைட்... நான் தூங்கணும்டா செல்லம். போனை வெச்சுடறேன்.
குழந்தை அடுத்த நிமிஷம் கட்சியிலிருந்து பிரிந்த உறுப்பினர் மாதிரி பாட்டியைக் காட்டமாகத் தாக்கிப் பேசியது.நீ கெட்ட பாத்தி. நீ நாணாம். உன்கூட டூ. நான் பேச்சவே மாட்டேன்.
சீதாப்பாட்டி,குட் நைட்
சொல்லி டெலிபோனைக் கட் செய்தாள்.
'குழந்தையின் பிறந்த நாள் பார்ட்டிக்கு இவரை அனுப்பியதற்கு இவ்வளவு பெரிய தண்டனையா? எதையும் ஓவராகப் பண்ணி மாட்டிக் கொள்வதே இவருடைய ஹோல்டைம் ஜாபாக ஆகிவிட்டது' என்று குமுறினாள்.
..........சென்ற வாரத்தில் ஒரு தினம் பா.மு.கழகத்துக்கு மிகவும் வேண்டியவரான உமா சங்கர் தம்பதி தங்கள் குழந்தையின் பிறந்த நாளைச் சிறப்பாகக் கொண்டாடினார்கள். கழகத்து விசேஷ வைபவங்களுக்கு விருந்து, சிற்றுண்டி சப்ளை செய்யும் இளம் தம்பதிகள்.
பாட்டியைக் காக்கா பிடிக்கவோ அல்லது நிஜமான மரியாதையுடனோ (முன்னது அறுபத்தொன்பது சதவிகிதம், பின்னது முப்பத்தொரு சதவிகிதம் என்று வைத்துக் கொள்ளலாம்.) தங்கள் வீட்டு எல்லா நிகழ்ச்சிகளுக்கும் பாட்டியைக் கூப்பிடுவார்கள். வணங்கி ஆசி பெற்றுக் கொள்வார்கள். இந்தத் தடவை பாட்டி அதே நேரம் ஒரு ரோட்டரி கிளப்பில் கலந்து கொள்ள வேண்டியிருந்ததால் அப்புசாமியைத் தன் பிரதிநிதியாக அனுப்பி வைத்தாள்.
அப்புசாமிக்குப் பிறந்த நாள் குழந்தையை, அதிலும் முக்கியமாக அது கொடுத்த கேக்கை ரொம்பப் பிடித்து விட்டது. கேக்கணுமா?
தாத்தாவுக்கு ஆ போடு! ஆ போடு
என்று வாயைத் திறந்து நாலைந்து துண்டுகளை ஒரு டால்ஃபினின் சுறுசுறுப்போடு விழுங்கித் தள்ளினார்.
குழந்தை சித்தார்த்துககு அப்புசாமியை மிகவும் பிடித்துவிட்டது. அவருக்கு கேக்கு பிடித்தது. குழந்தைக்கு அப்புசாமியின் மூக்கு பிடித்துவிட்டது.
சித்தார்த் சரியான விஷமக் கொடுக்கு. அப்புசாமியின் கண்ணாடியைப் பறித்து - ஏறக்குறைய கண்களில் தானே மாட்டிக் கொண்டான். அப்புசாமியோ அஹிம்சா மூர்த்தியாககுழந்தைன்னா அப்படித்தான்! இப்படி விஷமம் பண்ணினாத்தான் கலகலப்பா இருக்கும்...
என்று கண்ணாடியை இழந்தாலும் பொறுமையை இழக்காமலிருந்தார்.
அப்புசாமியின் மூக்கைப் பிடித்து ஆட்டினான் குழந்தை. பல வருடங்களாக அது வேரூன்றிப் பலமாக இருந்ததால், குழந்தையால் மூக்கைப் பறிக்க இயலவில்லை. தனது பொடி நகங்களால் கீறி மகிழ்ந்தது. அப்புசாமிக்கு அந்தக் கீறல்கள் ராமர் அணிலின் முதுகை அன்போடு வருடியது போன்ற இன்பத்தை ஏற்படுத்தின. லேசாக ரத்தம் கூடச் கசிந்தது.
அப்புறம் பிறந்த நாள் குழந்தை யானை ஏற்றம், குதிரை ஏற்றம் செய்ய விரும்பியது.
அப்புசாமி தவழும் போஸ் தந்தார். அவருக்கும் நெடுநாளாகத் தவழ வேண்டும் என்ற ஆசை மனசுக்குள் மறைந்திருந்தது.
பிறந்த நாள் குழந்தை மட்டும் ஏறினால் பரவாயில்லை. கூட இருந்த ஒரு டஜன் வாண்டுகளும் அப்புசாமியின் முதுகில் ஆரோகணம் செய்தனர்.
டேய்! டேய்! தாத்தாவை அடிக்கவெல்லாம் கூடாது
என்று தாயார்க்காரி ஒப்புக்குச் சொல்லிவிட்டு வேறு காரியங்களைக் கவனிக்கப் போய்விட்டடாள்.
குழந்தையின் அப்பா,தாத்தாவை விளக்குமாத்துக் குச்சியாலெல்லாம் அடிக்கக்கூடாது
என்று சொல்லி அசலான ஒரு மூங்கில் குச்சியைத் தந்துவிட்டுப் போனார்.
அப்புசாமியின் முதுகில் பட்டேரென்று சாக்லேட் டப்பாவால் ஒரு சாத்தல் சாத்தியது குழந்தை.யானே, வேகமாப் போ...
அதற்குள் பின்புறமிருந்து ஒரு முற்றல் பையன்,ஹை! ஹை! வண்டலூர் போ!
என்று காலால் உதைத்தான்.
பிறந்தநாள் விழாவுக்கு வந்திருந்த பெரியோர்களுக்கு இந்தக் காட்சி மிக வேடிக்கையாக இருந்தது. அப்புசாமியின் முழங்கால் முட்டிகளில் அரை சென்டி மீட்டராவது தேய்ந்திருக்கும். ஆனால் அதை அவர் பொருட்படுத்தவில்லை.
யானே, ஐஸ்க்ரீம் தின்னு!
என்று குழந்தை ஒரு கப் ஐஸ்க்ரீமை அப்புசாமியின் தலையில் ஊற்றிவிட்டு, 'ஹ ஹ ஹ!' என்று சிரித்ததும், அவர் வலியெல்லாம் பறந்துவிட்டது.
அப்புசாமியின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் மாதிரி ஆனந்த ஐஸ்க்ரீம் வழிந்தது. கூடுமானவரை வீணாக்காமல் நாக்கைக் கொண்டு வெலாவாரியாக எட்டின வரை தின்று மகிழ்ந்தார்.
குழந்தைக்கு அவரை ரொம்பப் பிடித்துவிட்டது. விநாடிகூட அவரை விட மாட்டேன் என்று கழுத்தைக் கட்டிக் கொண்டது. அவர் அந்தக் குழந்தையை விட்டுவிட்டுப் புறப்பட்டால் கத்தோ கத்தென்று அது கத்தல்.
கத்தத் தொடங்கினால் மூச்சு நிற்கிற அளவு கத்தும். உடம்பு நீலம் பாரித்துப் போய்விடும். உடனே ஜலீரென்று முகத்தில் தண்ணீரடித்தால்தான் அடுத்த மூச்சு வாங்கும். அதைக் கத்த விட எல்லாருக்கும் பயம்.
..........காலையில் ஏழு மணி சுமாருக்கு அப்புசாமி வீடு திரும்பினார் - கையில் குழந்தையுடன்.
குளியலறையிலிருந்து திரும்பிய சீதாப்பாட்டி அதிர்ச்சியுடன்,குழந்தை! இதை ஏன் தூக்கிட்டு வந்தீங்க? உங்க மண்டையிலே மூளை என்கிற எக்விப்மெண்ட் இருக்கிறதா, தொலைந்துட்டுதா?
என்றாள்.
அலறாதேம்மே
என்றார் அப்புசாமி.நாங்க ரெண்டு பேரும் ஈருடல் ஓருயிர். பயல் என்கூடவேதான் இருப்பானாம். நான் இல்லைன்னா கத்தோ கத்து. கண்ணா, பாட்டிக்கு குட் மார்னிங் சொல்லு. ஷேக் ஹாண்ட் பண்ணு...
சீதாப்பாட்டி பல்லை நறநறத்தாள்.முதல்லே குழந்தையைக் கொண்டு போய் பேரண்ட்ஸ்கிட்டே ஒப்படைச்சிட்டு வாங்க.
அவங்க ரெண்டு பேரும் ஆபீஸ் போயாச்சு. சாயந்தரம் வரைக்கும் குழந்தை இங்கேதான் இருப்பான். நீ ஒண்ணும் குழந்தைக்குப் பால் கீல் தரவேண்டியதில்லை. தரணும்னு நினைச்சாலும் முடியாது. ஹி ஹி! இதோ இந்தக் கூடையிலே இருக்கிறது பூராவும் குழந்தைக்கான பால், தீனி, பிஸ்கட், ஐஸ்க்ரீம்... கூல் டிரிங்... ஜட்டி, சட்டை, ரப்பர் ஷீட்...
மூச்சா!
என்று திடீர் அறிவிப்பு செய்தது குழந்தை.
ஐயோ, கீழே கார்ப்பெட்! கார்ப்பெட்! பாங்காக் கார்ப்பெட்! சீக்கிரம் பாத்ரூமுக்குக் குழந்தையை எடுத்துட்டுப் போங்க
- சீதாப்பாட்டி அலறினாள்.
அப்புசாமி குழந்தையைத் தூக்கிக் கொண்டு பாத்ரூமுக்கு ஓடினார்.
அங்கே போய் குழந்தை நிர்வாண நிலையை அடைந்ததும் மறு அறிவிப்பு செய்தது.மூச்சா வல்லை. சும்மாச் சொன்னேன்!
அடப் படவா! பொய் சொன்னியா?
அப்புசாமி குழந்தையைக் கட்டிக் கொண்டு கொஞ்சினார்.சீத்தே! இவனோட பொல்லாத குறும்பைப் பாரேன். மூச்சா வல்லையாம்.
சீதாப்பாட்டி அங்கே இல்லை. அவள் கார் உறுமிக் கொண்டு போர்ட்டிகோவை விட்டுப் புறப்பட்டுவிட்டது.
பாட்டியின் மனசில பெரிய கவலை முளைத்தது.'இது என்ன, ஒரு புது உறவைப் பிடித்துக் கொண்டு இவர் வந்திருக்கிறார்? இவரை நம்பி ஒரு குழந்தையை அனுப்பியிருக்கிற அந்த இர்ரெஸ்பான்ஸிபிள் பேரண்ட்ஸைத்தான் கண்டிக்கணும்' என்று எண்ணியவாறு வண்டியைத் தெருமுனையில் திருப்பிப் பிரதான சாலையில் செலுத்தினாள்.