Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nenjil Or Alai
Nenjil Or Alai
Nenjil Or Alai
Ebook87 pages32 minutes

Nenjil Or Alai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்துமதி என்ற பெயரில் எழுதும் இவர் தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு சொந்தக்காரர். கிட்டத்தட்ட நூறு புத்தகங்கள் வெளியாகி உள்ளன.மூன்று சிறுகதைத் தொகுதிகள்.இவரது தரையில் இறங்கும் விமானங்கள்,சக்தி,நாவல்கள் சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சியிலும்,கங்கா யமுனா சரஸ்வதி சன்,ராஜ் டிவி களிலும், நீ நான் அவள் விஜய் டிவியிலும் தொடர்களாக ஒளிபரப்பப் பட்டன.இவர் திரைப்படத் துரையிலும் கால் பதித்துள்ளார்.அஸ்வினி என்ற பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்து நடத்தியுள்ளார். திரைப்படத் தணிக்கைக்குழு அங்கத்தினராகவும் இருந்துள்ளார்.தி

இவரது தரையில் இறங்கும் விமானங்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் துணைப்பாடத் திட்டமாக வைக்கப்பட்டுள்ளது. குருத்து, தண்டனை போன்ற சிறுகதைகளும் துணைப்பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட்டவைகளே! மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் இவரது படைப்புகள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580123903344
Nenjil Or Alai

Read more from Indhumathi

Related authors

Related to Nenjil Or Alai

Related ebooks

Reviews for Nenjil Or Alai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nenjil Or Alai - Indhumathi

    http://www.pustaka.co.in

    நெஞ்சில் ஓர் அலை

    Nenjil Or Alai

    Author:

    இந்துமதி

    Indhumathi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/indhumathi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    1

    ஜன்னல் அருகில் உட்கார்ந்து மழையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் நிர்மலா. எத்தனை நேரம் பார்த்தாலும் மழை அலுப்பதாக இல்லை. நான்கு நாட்களாக விடாமற் பெய்து கொண்டிருக்கிறது. சடசடவென்ற சத்தமும் சிலுசிலுக்கிற காற்றும் மனதை ரம்மியப் படுத்து கிறது. இப்படிப் பெய்து கொண்டே இருந்தால் கூடத் தேவலாம் போலிருக்கிறது, அதைச் சொன்ன போது வேலைக்காரி ஜெயம்மா அலுத்துக் கொண்டாள்.

    என்ன மழை பாப்பா இது. ஒரு வேலையும் செய்ய விடாமல் ஓயாமல் பெய்துகிட்டு... எப்ப நிக்குமோ தெரியலை

    ரசனைகளின் வேறுபாட்டை நினைத்து நிர்மலா சிரித்துக் கொண்டாள். இத்தனை நேரம் தாத்தா இருந்திருந்தால் அவளுடன் மழையை வேடிக்கை பார்த்திருப்பார். ஜன்னல் வழியாகக் கை நீட்டி நீர்த்துளிகள் சிதறுவதையும், அதன் சிலிர்ப்பையும் ரசித்திருப்பார். மழைக்கோட்டையும் தலை நனையா திருக்கக் குல்லாவையும் போட்டுக் கொண்டு மலைச்சரிவில் இறங்கி ஏறி நூறு தரமாவது நடந்திருப்பார். சமுத்திரக் கரை ஓரம் ஓடிப்போய் விட்டு வந்து குழந்தை மாதிரி சிரித்திருப்பார்.

    நிம்மி........ இந்த மழையை அப்படியே காகிதத்தில் கொண்டு வா பார்ப்போம்... என்பார்.

    அப்படி அவர் சவாலை ஏற்றுக் கொண்டு தூரிகையும், வர்ணக் கலவைகளுமாய் உட்கார்ந்து நான்கே நாட்களில் அவள் முடித்த ஓவிய மான 'மழைக்கால வானம்' முதல் பரிசு பெற்றது. அவளுக்கு ஐயாயிரம் ரூபாய் பரிசு தேடித் தந்தது. பரிசையும், பத்திரத்தையும் அவள் சார்பில் தாத்தாவும், மனோகரனும் போய்த்தான் வாங்கிக் கொண்டு வந்தார்கள்......

    இவள் அனேகமாக வெளியில் போவது கிடையாது. கையடியில் கட்டையை ஊன்றி நடக்கிற போது மற்றவர்களின் பார்வை அனுதாபமாகத் தன் மீது படிவதை விரும்புவதில்லை. வீட்டிற்குள் இருக்கிறவரை சக்கர நாற்காலி உபயோகப் பட்டு வருகிறது. வெளியில் போனால் தான் சிரமம் தெரிகிறது. தன் குறை உறுத்தலாகப் படிகிறது.......

    கடந்த ஆறு மாதங்களாகத் தான் இந்தக் குறை. அதற்கு முன் பெங்களூர் கல்லூரியில் எல்லாவற்றிலும் இவள் தான் முதல். டென்னிஸ், நீச்சல், ஓட்டப் பந்தயம்.......... அப்பா அவளுக்காகவே வீட்டிற்குள் டென்னிஸ் கோர்ட் போட்டார். நீச்சல் குளம் கட்டினார்.

    "நிம்மிடால், உனக்காகத்தான் எல்லாம். எனக்கென்ன இன்னொரு பையனா, பெண்ணா....? உன் ஒருத்திக்காகத் தான் அத்தனையும்............

    பெரிய அரண்மனை வீடு, நாலைந்து கார்கள், திரும்பின இடமெல்லாம் வேலைக்காரர்கள், அவள் பெயருக்கே ஏகப்பட்ட ஷேர்கள், பார்ட்டிகள், அதில் மூழ்கிப் பூரித்துப் போகும் அம்மா.

    இவள் கார் விபத்தாகி ஆஸ்பத்திரியில் கிடந்த போது கூட அம்மாவும் அப்பாவும் கூட இல்லை. ஒரு முறை வந்து பார்த்து விட்டுப் போனதோடு சரி. ராமையாதான் இரவு பகலாகக் கூடவே இருந்து கவனித்து கொண்டான். அம்மாவும், அப்பாவும் இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு முறை வருவார்கள். யாரோ அறிமுகமான சினேகிதனையோ சினேகிதி யையோ பார்க்க வருகிற மாதிரித் தான் இருக்கும்.

    என்ன நிம்மி, இன்னிக்கு எப்படி இருக்கே...? என்பார்கள்.

    தேவலைப்பா............ ஆனால் கால்ல வலிதாம்ப்பா பொறுக்க முடியலை............ என்றதும் அம்மாவின் முகமும், அப்பாவின் முகமும் லேசாகச் சுருங்கும்.

    அப்படித்தாம்மா இருக்கும். கால் எலும்பு முறிஞ்சுது கூடணும் பாரும்மா. அது வரை பொறுத்துக்கத்தான் வேணும்.. நீ சின்னக் குழந்தையா? இப்படி அழறதுக்கு, பதினெட்டு வயசுப் பொண்ணில்லை. கொஞ்சம் சமாளிச் சுக்கம்மா.....

    சரி சமாளிச்சுக்கறேன். ஆனால் நீ கூட இரும்மா, ராமைய்யா வேணாம் மா... யாராவது பொம்பளையா இருந்தால் வசதியாக இருக்கும்மா...

    "அப்படின்னா லஷ்மியை அனுப்பி வைக்கிறேன், வீட்ல இருந்து அவ பெரிசா என்ன வேலை செய்யறா.....'

    லஷ்மி வேணம்மா, நீ இரும்மா.... - அவள் கண்களும், குரலும் கெஞ்சும். அதைக் கவனிக்காத மாதிரி அம்மாவிடமிருந்து பதில் வரும்.

    நான் எப்படி இருக்க முடியும்? நாளைக்கு வீட்ல பெரிய பார்ட்டி. லண்டன்லேருந்து போர்ட் ஆஃப் டைரக்டர்ஸ் எல்லாம் வராங்க... அதற்கு வேண்டிய ஏற்பாடுகளையெல்லாம் கவனிக்க வேண்டாமா...?

    "பார்ட்டி, பார்ட்டி,......... உனக்கு இதைத் தவிர வேறும் எதுவுமே தெரியாதம்மா...பந்தம், பாசம், அன்பு எதற்கும் அர்த்தம் புரியாதா -? வயிற்றில் பிறந்த பெண் அதுவும் ஒரே பெண் ஆஸ்பத்திரியில் கிடக்கிற போது யாருக்காவது பார்ட்டிக்குப்போக, பார்ட்டி கொடுக்க மனசு

    Enjoying the preview?
    Page 1 of 1