Adutha Ilakku
By Rajesh Kumar
()
About this ebook
Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.
Read more from Rajesh Kumar
Kuttralathil Oru Kutram Rating: 0 out of 5 stars0 ratingsSivappai Oru Pournami Rating: 4 out of 5 stars4/5Vivek Thotrathillai Rating: 5 out of 5 stars5/5Karuppu Udai Devathai! Rating: 5 out of 5 stars5/5Oru Kulir Kaala Kutram Rating: 5 out of 5 stars5/5Theeratha Dhrogam Rating: 5 out of 5 stars5/5Vivek, Vishnu, Oru Vidukadhai Rating: 4 out of 5 stars4/5Sorgam Rating: 5 out of 5 stars5/5Puthiya Abaayam Rating: 4 out of 5 stars4/5Manidhan Rating: 5 out of 5 stars5/5Mathangalil Aval Margazhi Rating: 5 out of 5 stars5/5Only Vivek! Rating: 5 out of 5 stars5/5Mella Mella Oru Thigil Rating: 5 out of 5 stars5/5Naan Naaneythaan Rating: 4 out of 5 stars4/5Uyir Urugum Satham Rating: 5 out of 5 stars5/5Uyir Meethu Thaagam Rating: 4 out of 5 stars4/5Thavarukkum Thavarana Thavaru! Rating: 5 out of 5 stars5/5Sorry Wrong Number Rating: 4 out of 5 stars4/5Isai Kolai Rating: 5 out of 5 stars5/5Nalliravu Seithi Rating: 4 out of 5 stars4/5Dinasari Moondru Kolaigal Rating: 4 out of 5 stars4/5Vendru Vaa Vivek Rating: 3 out of 5 stars3/5Shimla Ramya Rating: 5 out of 5 stars5/5Antha 69 Naatkal! Rating: 5 out of 5 stars5/5‘Sorry... Konnuttean..!’ Rating: 0 out of 5 stars0 ratingsVivek, Roopala Thuppariyum Novelgal Thoguthi 1 Rating: 4 out of 5 stars4/5Mudhal Nimisham Rating: 2 out of 5 stars2/5Virpanaiku Alla Rating: 5 out of 5 stars5/5Iruttile Rendu Per Rating: 4 out of 5 stars4/5
Related to Adutha Ilakku
Related ebooks
Karuppu Neruppu! Rating: 3 out of 5 stars3/5Yenni Ettavathu Naal! Rating: 0 out of 5 stars0 ratingsPagal Nera Alligal Rating: 5 out of 5 stars5/5Vellai Roja Karuppu Poonai...! Rating: 0 out of 5 stars0 ratingsNamruthavin Naal Rating: 0 out of 5 stars0 ratingsPagai Enakku Pagai Rating: 0 out of 5 stars0 ratingsKanavugal Ingey! Rating: 0 out of 5 stars0 ratingsKanavugal Inge Virkkapadum Rating: 0 out of 5 stars0 ratingsEnna Satham Indha Neram? Rating: 4 out of 5 stars4/5Aduththa Ilakku Rating: 0 out of 5 stars0 ratingsKadaisi Punnagai Rating: 5 out of 5 stars5/5Sarpa Viyugam Rating: 0 out of 5 stars0 ratingsUrainthu Pona Unmai Rating: 0 out of 5 stars0 ratingsEllam Poi Rating: 0 out of 5 stars0 ratingsOotha Nira Devathai Rating: 0 out of 5 stars0 ratingsSivappu Iravu Rating: 4 out of 5 stars4/5Bombay Panthayam Rating: 0 out of 5 stars0 ratingsOru Thuimayana Kutram Rating: 4 out of 5 stars4/57 - vathu Arivu Rating: 0 out of 5 stars0 ratingsThapu Thapai Oru Kolai Rating: 5 out of 5 stars5/5Iravu Pathu Rating: 0 out of 5 stars0 ratingsMarupadiyum Oru Thadavai! Rating: 0 out of 5 stars0 ratingsAthikalai Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsRaajali Rating: 3 out of 5 stars3/5Kadaisi Yethiri Rating: 0 out of 5 stars0 ratingsWashindonil Vivek Rating: 5 out of 5 stars5/5Hydrogen Pookkal Rating: 5 out of 5 stars5/5Kadaisi kattalai Rating: 0 out of 5 stars0 ratingsKannale Kollathey! Rating: 5 out of 5 stars5/5Theeratha Dhrogam Rating: 5 out of 5 stars5/5
Related categories
Reviews for Adutha Ilakku
0 ratings0 reviews
Book preview
Adutha Ilakku - Rajesh Kumar
http://www.pustaka.co.in
அடுத்த இலக்கு
Adutha Ilakku
Author:
ராஜேஷ் குமார்
Rajesh Kumar
For more books
http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
1
ரூ. 1300 கோடி புதையல்: 'எஸ்.எஸ். கெயர் சோப்பா!' இது ஒரு சொகுசுக் கப்பலின் பெயர். இந்தக் கப்பல் கடந்த 70 ஆண்டுகளாகக் கடலுக்குள் மூழ்கிக் கிடந்தது. அதை இப்போது கண்டுபிடிக்கும் சிறு முயற்சியில் ஈடுபட்டுக் கடந்த செப்டம்பர் மாதம் 26ஆம் தேதிதான் அது மூழ்கிக் கிடக்கும் இடத்தைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். இவ்வளவு கஷ்டப்பட்டுக் கண்டுபிடிக்க காரணம் அதனுள் இருக்கும் 1300 கோடி ரூபாய் மதிப்புள்ள வெள்ளிக் கட்டிகள். இந்த எஸ்.எஸ்.கெயர் சோப்பா கப்பல் எப்படிக் கடலுக்குள் மூழ்கியது தெரியுமா?
கும்பகோணம் ரயில்வே ஸ்டேஷனில் சதாப்தி எக்ஸ்பிரஸ் நின்றபோது மத்தியானம் இரண்டு மணி. அது ஏப்ரல் மாதத்தின் ஆரம்பம் என்பதால் வெயில் நடு மண்டையில் இறங்கி ஐம்பத்தைந்து வயதான ஞானவேலையும் ஐம்பது வயதான செல்லத்தையும் கிறுகிறுக்க வைத்தது.
செல்லம்...!
ரயிலை விட்டு இறங்கி சூட்கேஸோடு நடந்து கொண்டிருந்த ஞானவேல் தோளில் போட்டிருந்த மேல் துண்டால் வழுக்கையில் அரும்பியிருந்த வியர்வையை ஒற்றிக் கொண்டே கூப்பிட்டார்.
ம்...
கூல் ட்ரிங்க்ஸ் ஏதாவது சாப்பிடுறியா?
வேண்டாங்க... ரயில்ல சாப்பிட்டதே நெஞ்சைக் கரிக்கிற மாதிரி இருக்கு.
ரயிலை விட்டு இறங்கிய கும்பலோடு கலந்து இருவரும் ஸ்டேஷனின் எக்ஸிட் வாசலை நோக்கி நடந்தார்கள். செல்லம் ஈனஸ்வரத்தில் கூப்பிட்டாள்.
என்னங்க...!
சொல்லு...
பட்டீஸ்வரம் ஜோசியர் சரியா சொல்லிடுவாரா?
சொல்லிடுவார்.
எனக்கென்னவோ பயமாயிருக்குங்க...
என்ன பயம்?
நம்ம பொண்ணு அபூர்வா உயிரோடு கிடைப்பாளா?
இதோ பார் செல்லம்...! நீயோ நானோ பயப்படற மாதிரி அபூர்வாவுக்கு ஒண்ணும் ஆயிருக்காது. இப்ப நாம பார்க்கப் போகிற பட்டீஸ்வரம் ஜோஸியர் பலராமய்யர் ஜோதிடக் கலையில் ரொம்பவும் பிரசித்தமானவர். காணாமல் போன நிறையப் பேரை அவர் கண்டுபிடிச்சுக் குடுத்து இருக்கார். போலீஸ் டிபார்ட்மெண்ட்ல இருக்கிற பெரிய பெரிய ஆட்களே இவரைத் தேடி வர்றாங்கன்னா பார்த்துக்கோயேன்...!
"இப்படிச் சொல்லித்தான் சமயபுரத்தில் இருக்கிற ஒரு ஜோசியர் கிட்ட கூட்டிட்டுப் போனீங்க... அவரும் அபூர்வாவோட ஜாதகத்தைப் பார்த்துட்டு அவளோட உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. உங்க பொண்ணு ஏதோ ஒரு மனக் குழப்பத்தில இருக்கா... இன்னும் ஒரு வாரத்துக்குள்ளே அவ வீடு திரும்பிடுவான்னு சொன்னார்.
அவர் சொல்லிப் பத்து நாள் ஓடிப்போச்சு... நம்ம பொண்ணு திரும்பி வர்றதுக்கான அறிகுறியே தெரியலை. எனக்கென்னமோ இந்த ஜோஸ்யர்கள்கிட்ட போறதைக் காட்டிலும் கோயிலுக்குப் போய் அந்தத் தெய்வத்துக்கிட்ட முறையிடலாம்...
"செல்லம்! ஒரு உண்மையை நீ புரிஞ்சுக்கணும். ஜோஸ்யர்களும் மனிதர்கள்தான். சமயபுரம் ஜோதிடர் நம்ம பொண்ணு அபூர்வாவோட ஜாதகத்தைப் பார்க்கும் போது ஏதாவது தப்பு பண்ணியிருக்கலாம். நமக்கு நேரம் சரியில்லாதபோது எல்லாமே சரியாய் நடக்கணும்னு எதிர் பார்க்கிறது தப்பு...
இப்ப நாம் பார்க்கப் போகிற பட்டீஸ்வரம் ஜோஸியர் துர்க்கையோட அருள் பெற்றவர். அவர் எது சொன்னாலும் பலிக்கும். நம்ம பொண்ணு அபூர்வா கண்டிப்பா உயிரோடு கிடைப்பா...
- பேசப் பேசவே ஞானவேலின் கண்கள் நீரில் பளபளத்தன. மனைவிக்குத் தெரியாமல் தோளில் போட்டிருந்த துண்டால் கண்களை ஒற்றிக் கொண்டார்.
இருவரும் ஸ்டேஷனை விட்டு வெளியே வந்தார்கள். ஸ்டேஷனுக்கு வெளியே ஆட்டோக்களும், டாக்ஸிகளும் மர நிழலில் காத்திருக்க...
ஞானவேல் ஒரு டாக்ஸியை நோக்கிப் போனார். டிரைவிங் சீட்டில் உட்கார்ந்து நாளிதழைப் புரட்டிக் கொண்டிருந்த அந்த டிரைவர் எழுந்து வந்தார்.
எங்கே ஸார் போகணும்?
பட்டீஸ்வரம்.
கோயிலுக்கா?
இல்லப்பா... அங்கே பலராமய்யர்ன்னு ஒரு ஜோஸியர் இருக்கார். அவர் வீட்டுக்குப் போகணும்...
ஓ... ஜோஸியர் வீடா! அது ஊரை விட்டுத் தள்ளி ஒரு தென்னந் தோப்புக்குள்ளே இருக்கே... ரேட் கூட வரும் ஸார்...
இதோ பாரப்பா... உன்கூடப் பேரம் பேசிட்டு இருக்கிற மன நிலையில நாங்க இல்லை. ஒரு முக்கியமான விஷயமாய் ஜோஸியரைப் பார்க்கிறதுக்காக கோயமுத்தூரிலிருந்து வந்திருக்கோம், நியாயமான ரேட்டை வாங்கிக்க...
- ஞானவேல் சொல்லி விட்டு டாக்ஸியின் பின்பக்கக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே போனார். அவரைத் தொடர்ந்து செல்லமும் ஏறி உட்கார்ந்தாள்.
டாக்ஸி புறப்பட்டது. தெருக்களில் வேகம் எடுத்தது. ஐந்து வருடங்களுக்கு முன்பு பார்த்த கும்பகோணம் இப்போது லேசாய் மாறியிருந்தது. சாலையோரக் கட்டடங்கள் தங்களுடைய உயரங்களை உயர்த்தியிருந்தன. காற்று வெய்யிலில் சூடாகி முகங்களில் மோதியது.
செல்லம் ஞானவேலின் தோளைத் தொட்டாள்.
என்னங்க! வீட்டுக்கு ஃபோன் பண்ணி நாம கும்பகோணம் வந்து சேர்ந்துட்டதை சுஜா கிட்டயோ... சுதா கிட்டயோ சொல்லிடுங்க.
நான் நினைச்சேன்... நீ சொல்லிட்ட
- சொன்னவர் தன் சட்டைப் பாக்கெட்டிலிருந்து செல்ஃபோனை எடுத்து எண்களை அழுத்தி விட்டுக் காதுக்கு ஒற்றிக் கொண்டார். மறுமுனையில் ரிங் போயிற்று. அடுத்த சில விநாடிகளில் மகள் சுஜாவின் குரல் கேட்டது.
அப்பா! கும்பகோணம் போய்ச் சேர்ந்துட்டீங்களா?
ம்... இப்பத்தான்.
அம்மா எப்படி இருக்காங்க? ஜர்னியில் ஒண்ணும் பிரச்சினையில்லையே?
ஒரு பிரச்சினையும் இல்லை. இப்பத்தான் ரயிலை விட்டு இறங்கி ஜோஸியர் வீட்டுக்கு கால் டாக்ஸியில் போயிட்டிருக்கோம்.
மத்தியானம் சாப்பிட்டீங்களா?
ம்... டிரெய்ன்ல தயிர்ச் சாதம் சாப்பிட்டோம்.
அப்பா! கோயில்கள் இருக்கிற ஊருக்குப் போயிருக்கீங்க... நீங்க திரும்பி வரும்போது அக்கா வீட்டில இருப்பா!
அந்த நம்பிக்கையில்தான் நானும் அம்மாவும் கும்பகோணத்துக்குப் புறப்பட்டு வந்திருக்கோம்.
அப்பா! ஜோஸியரைப் பார்த்த கையோடு உடனே ஊருக்குப் புறப்பட்டு வந்துடாதீங்க. ரெண்டு நாள் தங்கியிருந்து எல்லாக் கோயில்களையும் பார்த்துட்டு வாங்க, பட்டீஸ்வரம் துர்க்கையம்மன் ரொம்பவும் பவர்ஃபுல். அக்கா பேருக்கு அர்ச்சனை பண்ணுங்க...
சரி! நீயும் சுதாவும் வீட்டில் பத்திரமாய் இருங்க...
அப்பா! உங்களுக்கும் அம்மாவுக்கும் எங்களைப் பத்தின கவலையே வேண்டாம். பக்கத்து ஃபிளாட் சித்ரா மாமி, எதிர் ஃபிளாட் பார்வதி மாமி எல்லாரும் எங்க மேல கேர் எடுத்துக்கிறாங்க...
போலீஸ் ஸ்டேஷனிலிருந்து ஏதாவது தகவல் வந்ததா?
இன்ஸ்பெக்டர் ஃபோன் பண்ணி அக்காவோட லேட்டஸ்ட் ஃபோட்டோ கிடைக்குமான்னு கேட்டார்...
ஆல்பத்துல இருக்குமே!
ம்... இருந்தது. ஒரு கான்ஸ்டபிள் வந்தார். எடுத்துக் குடுத்துட்டேன்.
இன்ஸ்பெக்டர் ஏதாவது சொன்னாரா?
"அக்காவைத் தேடிக் கண்டுபிடிக்கிறதுக்காக ஒரு தனி போலீஸ் படை