Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ilavu Kaatha Nilavu!
Ilavu Kaatha Nilavu!
Ilavu Kaatha Nilavu!
Ebook81 pages29 minutes

Ilavu Kaatha Nilavu!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100603276
Ilavu Kaatha Nilavu!

Read more from Devibala

Related to Ilavu Kaatha Nilavu!

Related ebooks

Reviews for Ilavu Kaatha Nilavu!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ilavu Kaatha Nilavu! - Devibala

    http://www.pustaka.co.in

    இலவுகாத்த நிலவு!

    Ilavu Kaatha Nilavu!

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    1

    தபாலைப் பிரித்தாள் சங்கவி!

    சென்னையிலிருந்து நேர்முகத் தேர்வுக்கான கடிதம்.

    அது ஒரு பெரிய கம்பெனி.

    ஆச்சர்யமாக இருந்தது சங்கவிக்கு.

    யார்கிட்டேயிருந்து கடுதாசி? கேட்டபடி மாமியார் வந்தாள்.

    நான் மெட்ராஸ்க்கு ஒரு கம்பெனிக்கு அப்ளிகேஷன் போட்டிருந்தேன். இன்டர்வ்யூ வந்திருக்கு அத்தே. பெரிய கம்பெனி அது!

    அப்போதுதான் உள்ளே நுழைந்து கொண்டிருந்தான் பாண்டியன்.

    எது பெரிய கம்பெனி?

    அந்தக் கடிதத்தைக் காட்டினாள் அவனிடம்.

    ஆமாம். நான்கூடக் கேள்விப்பட்டிருக்கேன். ஆனா நிறையப் பேர் இன்டர்வ்யூ வருவாங்க. சிபாரிசு நிச்சயமா இருக்கும். நீ போகவே வேண்டாம்!

    இல்லீங்க! அப்படி விட்ர வேண்டாம். போய்த்தான் பாக்கலாமே. ஒருவேளை கிடைச்சிட்டா... கைநிறைய சம்பளம் கிடைக்காதா?

    வேலை எங்கே?

    மெட்ராஸ்லதான் அத்தே!

    உனக்கு அறிவிருக்கா? நாங்க இங்கே பூங்குடில இருப்பம். நீ மட்டும் மெட்ராஸ்ல உத்யோகம் பார்த்துட்டு தனியா இருப்பியா?

    அந்த அளவுக்கு வந்த பின்னால், அதைப்பற்றி யோசிச்சா பத்தாதா?

    தபாரு! கஞ்சியோ, கூழோ அரை வயித்துக்குக் குடிச்சாலும் இந்தப் பூங்குடில போதும். பொம்மனாட்டி காலை எடுத்து வெளியே வச்சிட்டா, குடும்பத்துல் நிம்மதி போயிடும். நான் சொல்றது புரியுதா?

    சங்கவி பேசவில்லை.

    சரி! நீங்க சாப்பிட வாங்க!

    பாண்டியன் ஒன்றும் பேசாமல் கை, கால் கழுவப் போனான்.

    பாண்டியன் சங்கவிக்கு சொந்த அத்தை மகன்தான். சிறு வயதில் தாயை இழந்தவள் சங்கவி. அப்பா ராணுவத்தில் இருந்தார். பல இடங்களுக்கு மாற்றல் வந்து கொண்டே இருந்ததால் கான்வென்ட்டுடன் இணைந்த ஹாஸ்டலில் சங்கவியை விட்டுப் படிக்க வைத்திருந்தார். சங்கவி 17 வயதில் தன் மெட்ரிகுலேஷனை முடித்து நாலைந்து மாதங்களில் அப்பாவுக்கு ஒரு ஹார்ட் அட்டாக் வந்து முதல் மணி அடித்துவிட்டது.

    சங்கவி! நான் அக்காவுக்கு கடுதாசி போட்டிருக்கேன். பாண்டியனைக் கூட்டிட்டு நாளைக்கு அவ வர்றா!

    எதுக்கப்பா?

    நான் ரொம்ப நாளைக்கு இருக்க மாட்டேன்மா. உன்னை அநாதையா விட்டுட்டுப் போக எனக்கு மனசில்லை!

    ஏம்பா அப்படியெல்லாம் பேசறீங்க?

    அதனால பா... பாண்டியனை உனக்குக் கட்டி வைக்கலாம்னு நான் தீர்மானம் பண்ணிட்டேன்!

    அப்பா!

    உனக்கு அவனைப் புடிக்கலையாம்மா?

    தெரியலைப்பா. அத்தான் நான் சின்ன வயசுல பார்த்தது. ஞாபகம் இல்லை...

    அவன் வரட்டும். உங்க அத்தை கிட்டப் பேசி இதைப்பற்றி நான் முடிவெடுக்கறேன்!

    சங்கவி ஒன்றும் பேசவில்லை!

    மறுநாள் காலை அத்தையும், பாண்டியனும் வந்துவிட்டார்கள். பாண்டியன் இத்தனை அழகாக இருப்பான் என்று சங்கவி எதிர்பார்க்கவில்லை.

    நல்ல நிறமும், எடுப்பான மீசையும், உயரம், உடம்பு எல்லாம் அளவாக செதுக்கி வைக்கப்பட்டிருந்தது.

    எதுக்குடா தம்பி திடீர்னு வரவழைச்ச?

    நான் ரொம்ப நாள் உயிரோட இருக்கப் போறதில்லைக்கா!

    தம்பீ!

    என் மகளை உன் மருமகளாக்கிக்க உனக்கு விருப்பமா?

    அத்தை, மகனைப் பார்த்தாள்.

    "தம்பி... உனக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1