Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Parijadha Poove!
Parijadha Poove!
Parijadha Poove!
Ebook107 pages51 minutes

Parijadha Poove!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100603286
Parijadha Poove!

Read more from Devibala

Related to Parijadha Poove!

Related ebooks

Reviews for Parijadha Poove!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Parijadha Poove! - Devibala

    http://www.pustaka.co.in

    பாரிஜாத பூவே!

    Parijadha Poove!

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    1

    புது மானேஜர் பேரு ரங்கதுரையாம்!

    ஆஷா சொன்னதும் மின்சாரம் தொட்டதைப் போல ஒரு துள்ளுத் துள்ளி விட்டேன்.

    ரங்கதுரை என்றால், அவர்தானா?

    இந்தப் பெயர் பரவலாக இருக்காது. நிச்சயமாக அவராகத்தான் இருக்க முடியும். பத்து வருடங்களுக்குப் பிறகு திரும்பவும் வருகிறாரா? - என்னால் தாள முடியவில்லை.

    ரங்கதுரை இங்கு வருவது நல்லதா? இல்லை பிரச்னையா? எனக்கென்ன பிரச்னை?நான் ஏன் ரங்கதுரையின் வரவுக்காகப் பதற வேண்டும்?

    மனது அவசரமாக ஒரு சமாதான அறிக்கை விட்டாலும், இதயத்தின் படபடப் பைக் குறைக்க முடியவில்லை.

    பிற்பகல் மூன்று மணிக்கு பர்மிஷன் எழுதி வைத்துவிட்டு வெளியே வந்தேன். ஆபீசில் இருக்கப் பிடிக்கவில்லை.

    மின்சார ரயிலில் உட்கார்ந்தேன். அந்த நேரத்தில் கூட்டம் இல்லை.

    ரங்கதுரையின் குடும்பம் இப்போது எங்கே? தனியாக வருகிறாரா? குடும்பத்துடனா?

    எப்படி வந்தால் எனக்கென்ன? நான் ஏன் இத்தனை கவலைப்பட வேண்டும்?

    பெரம்பூரில் இறங்கினேன். பதினைந்து நிமிடங்கள் போல நடந்து காய்கறி மார்க்கெட்டுக்குள் நுழைந்தேன். தேவையான காய்கறிகளை வாங்கிக் கொண்டு நான் வீட்டுக்குள் நுழையும்போது, மணி நாலறை.

    என் ஐந்து வயது மகன் ஓடி வந்து இடுப்பைக் கட்டிக் கொண்டான். அவனது வழக்கமான கோட்டா நெய் பிஸ்கட்டை எடுத்துத் தந்தேன்.

    சீக்கிரம் வந்துட்டியாம்மா?

    ம்! பாட்டியைப் போட்டு படுத்தினியா?

    செத்து சுண்ணாம்பு ஆயாச்சு. வயசான காலத்துல இதைவிட மோசமான தண்டனை கூடாது.

    மாமியார் தொடங்கி விட்டார்.

    நான் பதில் பேசாமல் உள்ளே போனேன்.

    என்ன பேச முடியும்?

    ரெண்டு பேரும் வேலைக்குப் போக வேண்டும். பணத்தின் தேவை அப்படி. குழந்தையை கவனிக்கும் பொறுப்பு வயதானவர்களுக்கு வந்து விழுகிறது. என் மகன் ரெட்டை வால். தாங்க முடியாத விஷமம். தினசரி நாலு புகார்கள் வீட்டு வாசல் படியில் காத்திருக்கும்.

    காபி கலந்து மாமியாருக்கு எடுத்து வந்தேன்.

    அவன் எப்ப வருவான்?

    யாரத்தே? உங்க பிள்ளையா?

    ம்!

    வழக்கமான நேரத்துக்குத்தான். ஏன்?

    எனக்கு முழங்கால் வலி தாளலை. அவன் வந்ததும் டாக்டர் கிட்டப் போகணும்!

    அவர் வர்ற வரைக்கும் காத்திருப்பானேன்? நான் கூட்டிட்டுப் போறேன்?

    வேண்டாம். அவன் வரட்டும்!

    சரி!

    நான் என்ன செய்தாலும் பிடிக்காது. எந்த நேரமும் குற்றமும், குறையும்தான். எங்களுக்குக் கல்யாணமாகி எட்டு வருடங்கள். மூன்று வருடங்கள் கழித்துத்தான் அருண் பிறந்தான்.

    பெரிய குடும்பம்!

    இவருக்கு மூன்று தங்கைகள். கடைசி இரண்டு தங்கைகளைக் கரையேற்றிய பொறுப்பு இவரது. அதனால் கடனை அடைக்க வேலை பார்க்கும் பெண் வேண்டும் என்று சொல்லி விட்டார் தீர்மானமாக.

    ஆரம்ப காலத்தில் அம்மாக் கோண்டுதான். மாமியாரின் அராஜகத்தில் முழி பிதுங்கி, பல நாள் தலைகாணியை நனைத்தவள்தான் நான்.

    ஆனால் பதில் பேசமாட்டேன். எந்திரமாக நான் உழைத்து உழைத்து மெளனம் சாதித்தது அவரைக் கணிசமாக பாதித்து விட்டது.

    மாமனார் உயிரோடு இருக்கும் வரை ஒரு மாதிரி, மாமியாரின் அல்லி தர்பார் தொடர்ந்தது. மாமனார் தலை சாய்ந்ததும் மாமியார் ஓய்ந்திருந்தாள். அந்த நேரம் குடும்ப நிர்வாகம் என் கைக்கு வந்து விட்டது.

    துக்கம் ஓரளவு ஆறியதும் மாமியார் என் ஆட்சியை விரும்பாமல் ஒரு நாள் கலாட்டாவே செய்து விட்டார்.

    இவர் அதை சாதுர்யமாக கையாண்டார். நானும் புரிந்து கொண்டேன்.

    'நல்ல கணவன் எனக்கு!'

    நானும் அவசரப்படக் கூடாது. என்றைக்குமே நிதானமாக நடந்து கொண்டால் சிக்கல் இல்லை. கல்யாணம் ஆன புதிதில் எல்லா ஆண்களுமே தன் வீட்டு மனிதர்களிடம் அதிகமாக நெருக்கம் வைத்திருப்பது நிஜம்தான்.

    அளவுக்கு மீறிய பொறுமை, அவர்களை நம் பக்கம் கொண்டு வந்து சேர்த்து விடும் என்பது கண்கூடான நிஜம். எனக்கும் அது பலித்தது.

    நேரம் இரவு ஏழு!

    நான் ராத்திரி சமையலைத் தொடங்கியிருந்தேன்.

    அவர் வந்து விட்டார். படியேறியிருக்க மாட்டார்.

    ராம்ஜி! எனக்கு மூட்டு வலி தாங்கலை. டாக்டர் கிட்டக் கட்டிட்டுப் போ!

    அம்மா, நான் காபி குடிச்சிட்டு வரட்டுமா?

    "அது கூட வேண்டாம்னா

    Enjoying the preview?
    Page 1 of 1