Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Saavu Moondru Angulam
Saavu Moondru Angulam
Saavu Moondru Angulam
Ebook98 pages40 minutes

Saavu Moondru Angulam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100603287
Saavu Moondru Angulam

Read more from Devibala

Related to Saavu Moondru Angulam

Related ebooks

Related categories

Reviews for Saavu Moondru Angulam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Saavu Moondru Angulam - Devibala

    http://www.pustaka.co.in

    சாவு மூன்று அங்குலம்

    Saavu Moondru Angulam

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    1

    கழுத்தில் தொங்கிய மாங்கல்யத்தை கையில் எடுத்துப் பார்த்தாள் அஞ்சு. நிமிர்ந்தாள். வெகு நெருக்கமாக தனக்கெதிரே நின்ற விஸ்வரூபனை கலவரத்துடன் ஏறிட்டாள்.

    கண்களில் கண்ணீர் கோடு போட்டு கன்னத்தை சொந்தம் கொண்டாடியது.

    விஸ்வரூபன் எதுவும் பேசவில்லை.

    அவளை இன்னும் நெருங்கினான்.

    மெல்ல தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான். வெகு இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.

    அடைக்கலம் தேடும் சின்னப் பறவை போல அவன் மார்பில் முகத்தைப் புதைத்துக் கொண்டு அழத் தொடங்கினாள் அஞ்சு.

    அஞ்சு!

    ...!

    அஞ்சுக் கண்ணா!

    ம்!

    என்னை நீ நம்பலையாடா?

    கொஞ்சம் பதட்டமாக அவனை ஏறிட்டாள்.

    நம்பறியா இல்லையா?

    நம்பாம இத்தனை தூரம் வருவேனா? ஒற்றை ஒற்றை வார்த்தைகளாக உதிர்த்தாள்.

    அவன் கண்களுக்குள் தன் விழிகளை ஊடுருவிச் செலுத்தினான் ரூபன்.

    ம்!. வேண்டாம்!

    என்ன வேண்டாம்?

    ஒரு மாதிரி இருக்குது எனக்கு!

    ஒரு மாதிரின்னா? என்ன மாதிரி?

    உங்க பார்வைல கரன்ட் இருக்கு. அது என் கண் வழியா நரம்புகளைப் போய்ச் சீண்டுது!

    நீ பேசறதைக் கேக்க சுகமா இருக்கு!

    அப்ப பேசிட்டே இருக்கட்டுமா?

    பேச்சு மட்டும் போதுமா?

    வேறென்ன வேணும்?

    விடிகாலைல உன் கழுத்துல இதை நான் கட்டியிருக்கேன்! மார்பைத் தொட்டு மாங்கல்யத்தை எடுத்தான்.

    அதனால?

    இது லைசென்ஸ்!

    எதுக்கு?

    எல்லாத்துக்கும்! கண்ணடித்தான். கைகள் அவள் சந்தன இடுப்பில் மெல்ல வழுக்கிக் கொண்டு தவழ,

    ம்! நெளிந்தாள்.

    விடுப்பா!

    ஏண்டா?

    இது ஓட்டல்!

    அதனால?

    பயம்மா இருக்கு ராஜா!

    என்ன பயம்? நானிருக்கேன் உன் பக்கத்துல. தாலி கட்டின புருஷன். அப்புறம் என்ன பயம்?

    ஓட்டல்ல தப்புதான் நடக்குமாமே?

    வெறும் கற்பனை! தப்பானவங்களா இருந்தா பயப்படணும். நமக்கென்ன பயம்?

    அவளது மேலாக்கை விலக்கினான் சரேலென.

    கதவு தட்டப்பட்டது.

    அஞ்சு திடுக்கிட்டது சேலையை அள்ளிக் கொண்டாள். அவனை விட்டு விலகி நின்றாள்.

    ரூபன் கதவைத் திறந்தான்.

    மது, மாது எதுவும் வேண்டுமா என்று தெலுங்கில் செப்பிய பேரர், உள்ளே தெரிந்த அஞ்சுவைப், பார்த்து நமட்டாகச் சிரித்தான்.

    ரூபன் 'சள்’ளென விழ, பணியாள் பயந்து பின் வாங்கினான். ரூபன் கதவைத் தாளிட்டான்.

    என்னவாம்?

    விடு! நீ வா!

    வேணாம்பா! இங்கே வச்சு எதுவும் வேண்டாம். கதவுல காமிரா ஒளிச்சு வச்சிருப்பான். நான் மாட்டேன். தள்ளிப் போய்ப் படுங்க. குட் நைட்!

    அஞ்சு... யேய் அஞ்சு! நமக்கு இன்னிக்கு முதலிரவுடி!

    ஐ ஸெட் குட் நைட்!

    இழுத்துப் போர்த்திக் கொண்டு அஞ்சு திரும்பிப் படுத்துக் கொள்ள, எரிச்சலுடன் தன் கட்டிலில் விழுந்தான் ரூபன்.

    விளக்கு உறுத்த, இரவு விளக்கை மட்டும் அமைத்துக் கொண்டு, மின் விசிறியை பெரிதாக்கினான்.

    விஸ்தாரமான சொகுசு அறை அது.

    உறக்கம் வரவில்லை.

    அஞ்சுவிடம் மெல்லிய குறட்டை ஒலி கேட்டது.

    படுக்கப் பிடிக்காமல் எழுந்து ஜன்னலோரம் நடந்தான் ரூபன்.

    நேரம் இரவு ஒன்பதாகிக் கொண்டிருந்தது.

    திரை சீலையை விலக்கினான்.

    ஹைதராபாத் நகரம் சுறுசுறுப்பாக விளக்குகளின் மத்தியில் மிதந்து கொண்டிருந்தது.

    தூரத்தில் பிர்லா மந்திர் மலைக் கோயில் கண்சிமிட்டிக் கொண்டிருந்தது.

    காலையில் கல்யாணம் நடந்த வெங்கடேசர் ஆலயம்.

    ஹுசைன் சாகரின் விளிம்புகளில் பனிக்கு பயந்து உல்லன் சுமந்த மனிதர்கள் மெல்ல நடந்து கொண்டிருக்க,

    ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு அங்கேயே உட்கார்ந்தான் ரூபன்.

    ஒரு மாத காலத்தில் என்னெல்லாம் நடந்து விட்டது. அதுவும் மின்னல் வேகத்தில்.

    அப்போது அத்தனை துணிச்சலாக செயல்பட்ட அஞ்சுவா

    Enjoying the preview?
    Page 1 of 1