Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pagai Thodarum
Pagai Thodarum
Pagai Thodarum
Ebook108 pages41 minutes

Pagai Thodarum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100603285
Pagai Thodarum

Read more from Devibala

Related to Pagai Thodarum

Related ebooks

Reviews for Pagai Thodarum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pagai Thodarum - Devibala

    http://www.pustaka.co.in

    பகை தொடரும்

    Pagai Thodarum

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    1

    நாளைக்கு உங்க மகனை டிஸ்சார்ஜ் செஞ்சு நீங்க கூட்டிட்டுப் போகலாம். அவர் குணமாயாச்சு...

    தேங்க் யூ டாக்டர். இப்ப நான் எங்க மகனைப் பார்க்கலாமா?

    தாராளமா..!

    சேஷன் மெல்ல கிரி இருந்த அறையை நோக்கி நடக்கத் தொடங்கினார். அந்த ஊரில் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர் சேஷன். பல கோடிகளை பிஸினஸில் சம்பாதித்தவர். கிரி ஒரே பிள்ளை. அயல் நாடு சென்று படித்து வந்தான். பிஸினஸை முழுவதையும் அவன் கையில் ஒப்படைக்கலாம் என்று சேஷன் காத்திருந்த நேரம்—

    தான் ஒரு பெண்ணைக் காதலிப்பதாக கிரி வந்து சொன்னான் ஒரு நாள்.

    அப்பா, பானுவை நான் லவ் பண்றேன்...

    அவ யாரு, குலம் கோத்திரம் இதெல்லாம் தெரியணும் கிரி.

    உறவுக்காரங்கனு யாருமில்லை. லேடீஸ் ஹாஸ்டல்ல இருக்கா. உத்யோகம் பார்க்கறா. கண்ணுக்கு அழகா இருப்பா. நல்ல பொண்ணு.

    நீ கோடீஸ்வரன் கிரி. கேவலம் ஒரு அனாதைப் பொண்ணா உன் மனைவியா வரணும்?

    என் மனைவியாயிட்டா, அவளும் ஒரு கோடீஸ்வரிதானே?

    முதலில் சேஷன் மறுத்தார். அவன் மேல் கோபப்பட்டார். இது நடக்காதென்று கூச்சலிட்டார்.

    கிரி எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை.

    சிறு வயதில் தாயை இழந்தான். ஏராளமான பணம், பட்டு மெத்தையில் அவன் வளர வளர பிடிவாத குணமும், மூர்க்கமும் கூடவே வளர்ந்தது. ஏறத்தாழ ஒரு முரட்டுத்தனமே உருவாகி வளர்ந்து விட்டான். நினைத்ததை சாதித்தே தீர வேண்டும் என்ற வெறி.

    எல்லாம் உதறிவிட்டு அந்த பானுவோடு அவன் நடப்பான் என்ற அளவுக்குப் போய்விட, அப்பா பிள்ளையை இழக்க மனமில்லாமல் சம்மதித்தார்.

    கல்யாணத் தேதி முடிவாகி விட்டது. ஊரைக் கூட்டி ஏற்பாடு செய்திருந்தார் சேஷன். அதுவும் கிரியின் ஆசைத்தான்.

    முதல் நாள் ரிசப்ஷன் நடந்து முடியும் தருவாயில் முழு அலங்காரத்தில் இருந்த பானு சற்று சோர்வுடன் உட்கார்ந்தாள்.

    என்ன பானு?

    தலையைச் சுத்துது கிரி.

    சரி, நீ போய் படு. களைப்பா இருக்கே. டாக்டரை நான் வரவழைக்கட்டுமா?

    வேண்டாம். காலை முதலே ஒரே டென்ஷன். சரியாய்ப் போகும்.

    நாலடி அங்கிருந்து நடந்திருப்பாள். சட்டென விழுந்தாள்.

    அத்தனை பேரும் பதற, அவளது கைகளும், கால்களும் வெட்டி வெட்டி இழுக்கத் தொடங்கின.

    வலிப்பு!

    ஒரு நபர் தலைதெறிக்க ஓடினார் டாக்டருக்கு. பெரிய சாவிக் கொத்து அவள் கையில் திணிக்கப்பட்டது. அதற்குள் உதடு கடிபட்டு, ரத்தமும், நுரையுமாகப் பாய்ந்தது. கண்கள் திருகிக் கொண்டன.

    வலிப்பு நின்று விட்டது. அசையாமல் கிடந்தாள். டாக்டர் வந்தார் பரிசோதித்தார்.

    இதயம் ரொம்ப பலவீனமா இருக்கு. உடனடியா ஆஸ்பத்திரில சேர்த்துருங்க.

    டாக்டர்! விடிஞ்சா கல்யாணம்... சேஷன் இழுக்க...

    நிறுத்துங்க. அதையெல்லாம் தாங்கிக்கிற வலு உடம்புல இல்லை. கல்யாண டென்ஷன்தான் இந்த வலிப்புக்குக் காரணம். சீக்கிரம்.

    பானு ஆஸ்பத்திரியில சேர்க்கப்பட்டாள்.

    சேஷன் இரவு பத்தரைக்கு மகனை அழைத்துக் கொண்டு வெளியே வந்தார்.

    காதலித்தது தப்பில்லை கிரி. ஆனா எல்லாம் விசாரிக்காம அதைச் செய்யலாமா?

    என்னப்பா சொல்றீங்க?

    பானுவுக்கு எபிலெப்சி உண்டாம். இது நாலாவது வலிப்பாம். உனக்குத் தெரயுமா இந்த விவரம்?

    யார் சொன்னா?

    ஹாஸ்டல்ல அவளோட தங்கியிருக்கிற கங்கா சொன்னா.

    சரி, போகட்டும். நல்ல டாக்டரைக் காண்பிச்சு அறவே அதைப் போக்கடிக்க முடியுமானு பார்க்கலாம்.

    அன்று அத்தனை கவனிப்பு இருந்தும் விடிகாலையில் மற்றொரு ஸ்ட்ரோக் வந்து விட்டது. டாக்டர்கள் பரபரப்பாக இயங்கத் தொடங்கி விட்டார்கள். சரியாக ஏழு மணிக்கு பானுவின் இதயம் தன் துடிப்பை நிறுத்திக் கொண்டது. அதுதான் கிரி அவள் கழுத்தில் தாலி கட்ட வேண்டிய முகூர்த்த நேரம்.

    அவளை அதிகம் நேசித்தான் கிரி. கதறிக் கதறி அழுதான். மூன்று நாட்கள் நல்ல ஜுரத்தில் நினைவில்லாமல் கிடந்தான். ஜுரம் விட்டதும், சிரித்தான், அழுதான். தாறுமாறாகப் பேசத் தொடங்கினான். முரட்டுத்தனமும் கூடிப் போயிருந்தது.

    டாக்டர் பார்த்தார்.

    அந்த அதிர்ச்சியில் மன முறிவு உண்டாகியிருக்கு. உடனடியா ஒரு சைக்யாட்ரிஸ்டைப் பாருங்க.

    அப்பா சேஷன் அழைத்துப் போனார்.

    தனியாரில் ஒரு மனநோய் மருத்துவமனை இருந்தது. அதில் அனுமதிக்கப்பட்டான், கடந்த ஒரு வருடமாக அங்குதான் இருக்கிறான் கிரி.

    இதோ குணமாகி விட்டது.

    சேஷன் அவன் இருந்த அறைக்குள் நுழைந்தார்.

    குட்மார்னிங் கிரி.

    ஹலோ டாடி. எப்ப வந்தீங்க?

    இப்பத்தான். நாளைக்கு டிஸ்சார்ஜ்னு டாக்டர் சொல்லிட்டார்.

    ஐயாம் ஆல்ரைட் நெள!

    சொன்னார் டாக்டர். டாடியால முடியலை. நீ வந்துதான் நிறையப் பொறுப்புக்களை ஒப்பக்கணும்.

    நர்ஸ் உள்ளே வந்தாள்

    "இது நர்ஸ் சுமித்ரா டாடி.

    Enjoying the preview?
    Page 1 of 1