Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Appusamiyin Thaali Bakkiyam
Appusamiyin Thaali Bakkiyam
Appusamiyin Thaali Bakkiyam
Ebook200 pages1 hour

Appusamiyin Thaali Bakkiyam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Bakkiyam Ramasamy is the pseudonym of Ja. Raa. Sundaresan (born June 1, 1932). He was born in Jalakandapuram, Salem district. His pen name is a combination of his mother's name (Bakkiyam) and his father's (Ramasamy). His first breakthrough was the publication of the story Appusami and the African Beauty in Kumudam in 1963. Since then he has published a number of serialized novels, stage plays and short stories featuring the same set of characters. Some of the stories were published under various pen names including Yogesh, Vanamali, Selvamani, Mrinalini, Sivathanal, and Jwalamalini. He also worked as a journalist in Kumudam, eventually retiring in 1990 as its joint editor.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580112303238
Appusamiyin Thaali Bakkiyam

Read more from Bakkiyam Ramasamy

Related authors

Related to Appusamiyin Thaali Bakkiyam

Related ebooks

Related categories

Reviews for Appusamiyin Thaali Bakkiyam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Appusamiyin Thaali Bakkiyam - Bakkiyam Ramasamy

    http://www.pustaka.co.in

    அப்புசாமியின் தாலி பாக்கியம்

    Appusamiyin Thaali Bakkiyam

    Author:

    பாக்கியம் ராமசாமி

    Bakkiyam Ramasamy

    For more books

    http://www.pustaka.co.in/home/author/bakkiyam-ramasamy-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    பொருளடக்கம்

    அதிரடிக் குரலோன் அப்புசாமி

    அப்புசாமியின் தாலி பாக்கியம்

    அப்புசாமியின் ‘வால்’ நாளில்...

    ஹரே அப்புசாமி! ஹரே கிருஷ்ணசாமி!

    முன்னுரை

    ஒரு பத்திரிகையில் உதவி ஆசிரியராக வேலை செய்வதில் ஓர் அனுகூலம் உண்டு. சார், சார், என் கதையைப் பிரசுரியுங்கள் சார், என்று ஓரொரு பத்திரிகை ஆபீசாகப் போய்க் கெஞ்சவேண்டிய அவசியம் இல்லை. நாம் எந்தப் பத்திரிகையில் வேலை செய்கிறோமோ, அந்த ஆசிரியரை மட்டும் கெஞ்சினால் போதும்.

    நான் ஒருவகையில் அதிருஷ்டக்காரன். குமுதம் ஆசிரியர் பெருமதிப்புக்குரிய எஸ். ஏ. பி. அவர்களை எனது ஆசானாக அடைந்தது என் வாழ்நாளில் எனக்குக் கிடைத்த பெரும் பாக்கியமாகும்.

    தனது இலாகாவினரை அவரே விதம்விதமாகக் கதைகள் எழுதச் சொல்வார்.

    அவர் தந்த பயிற்சியும், கற்றுத் தந்த உத்திகளும் செய்த இலக்கியத் தொந்தரவுகளும் ஏராளம். அதி அற்புதமான ரசிகர்.

    ‘ரா. கி. ர., புனிதன், ஜ. ரா. சு.’ என்ற மூவரை மட்டும் தனது ஆசிரிய இலாகாவில் வைத்துக் கொண்டு, ‘இந்தியாவிலேயே அதிக விற்பனையுள்ள பத்திரிகை என்று குமுதத்துக்கு எப்படி அவர் பெருமை சேர்த்தார் என்று பலரும் ஆச்சரியப்பட்டனர். அதற்குக் காரணம் இருந்தது. ஆசிரியர் திரு. எஸ். ஏ. பி. அவர்கள் அந்த மூவரைப்போல் முப்பது மடங்கு ஓரொரு இதழுக்கும் உழைத்துக் கொண்டிருந்தார்.

    தாமும் அதி அற்புதமாக எழுதிக்கொண்டு தனது சகாக்களையும் எழுத வைத்து, அவர்களோடு தனது ரசனைகளையும் பகிர்ந்துகொண்டு, அவற்றை விதம் விதமான வடிவங்களில் எழுத்துக்களாக்கி மக்களுக்கு வினியோகித்தார். எல்லா வகைச் சுவைகளிலும் என்னை எழுதவைத்தார்.

    நகைச்சுவை உணர்வில் அவர் அரசு.

    அவர் அருளால் உருவாகிய பாத்திரங்களே அப்புசாமி – சீதாப்பாட்டி.

    தமிழகத்தில் முப்பத்தைந்து வருஷங்களாக உலவி வருகிற கதாபாத்திரங்களாக அவை இன்னும் இருந்து வருவதற்குக் காரணம் எனது ஆசான் நகைச்சுவை வள்ளல் திரு எஸ். ஏ. பி. அவர்கள்தான்.

    ஒரொரு கதையை உருவாக்குவதிலிருந்து அச்சில் வெளிவரும்வரை கூடவே நிழலென வருவார்.

    மற்றக் கதைகளை விட அப்புசாமி கதைகள் உருவாக்குவதில் அவர் பங்கு அதிகம், காட்டிய சிரத்தை அதிகம் என்றே சொல்வேன். அதில் அவரும் நானும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஒரு குழந்தையின் கையில் கண்ணாடி ஜக்கைக் கொடுத்து அனுப்பிவிட்டுக் கூடவே போகிற அம்மா மாதிரி அவர் எனக்கு அப்புசாமி கதையில் கூடவே வருவார்.

    அப்புசாமியை எப்படியெல்லாம் வறுத்து எடுக்கலாம் என்று இருவரும் மணிக்கணக்கில் பேசிக் கண்ணில் நீர் வருகிற மாதிரி சிரிப்போம்.

    சுலபத்தில் திருப்தி அடைந்து விட மாட்டார். இன்னின்ன மாதிரி எழுதினால் ஒருத்தரை அழவைக்க மாறும். இப்படி எழுதினால் சிரிக்க வைக்க முடியும் என்ற உத்திகளை வெகு நன்றாக அறிந்தவர். மற்றவர்களிடம் இருந்து அதை வெளிக்கொணரப் படாதபாடு படுவார்.

    நகைச்சுவை என்பது வெறும் gas அல்ல. முதலில் ஒரு கதை இருந்தே தீரவேண்டும். அப்புறம் கொண்டு வாருங்கள் அதில் அப்புசாமியை என்று கூறுவார். நகைச்சுவை என்ற பெயரால் கதை அம்சம் இல்லாமல் இருக்கக்கூடாது என்பதால் வெகு கவனமாக இருந்தார்.

    வெகு நாட்கள் வரை அப்புசாமி கதைகளை சிறுகதைகளாகவே அனுமதித்தார். சிறுகதை என்றால் கைக்கு அடக்கம். ஒரு நல்ல சம்பவமும் twistம் கொடுத்தாலே வாசகர்கள் திருப்தி அடைந்துவிடுவார்கள்.

    ஆனால், நாவல் என்பது, அதுவும் நகைச்சுவை நாவல் என்பது, நம்மை எங்கோ கொண்டுபோய்த் திசை தெரியாது அழுத்திவிடக்கூடும். ஆகவே நகைச்சுவை நாவல் எழுதுவது மிகவும் கஷ்டமான வேலை என்பதால் அப்புசாமி நாவலாக உருவாகாமலே இருந்தார். படிப்படியாக நாவலாகவும் உருவானார்.

    - பாக்கியம் ராமசாமி

    ***

    அதிரடிக் குரலோன் அப்புசாமி

    1

    ஆறாத சுடச்சுட பொங்கலை ஆற அமர அமர்ந்து அப்புசாமி ஒரு வாய் எடுத்து வைத்துச் சுவைத்திருப்பார்.

    ஸைலேன்ஸ்! என்ற மாபெரும் கத்தல் அவரைத் தூக்கிவாரிப்போட வைத்தது. அவரை என்பதைவிட அவர் கையிலிருந்த பொங்கலை. அவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சியில் பொங்கல் பொட்டலம் துள்ளி மண்ணில் விழுந்து புரண்டது.

    ஐயோன்னா வருமா, அப்பான்னா வருமா? சுண்டலாக இருந்தாலும் பொறுக்கி எடுத்துத் துடைத்துக் கிடைத்து, குழாய்த் தண்ணீரில் அலம்பிக் கிலம்பி, உலகத்தமிழ் மாநாட்டுத் தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் போல் தட்டுத் தடுமாறித் தப்பும் கிப்புமாக ஓரளவு சமாளித்து விடலாம்.

    ஆனால் இது சுத்தமாகப் போயே போன தென்னக காங்கிரஸ் கேஸ். அட, விழுந்ததுதான் விழுந்தது! இப்படியா விழ வேண்டும்!

    வெண்பொங்கலுக்கு, அதுவும் மார்கழி மாசத்து வெண்பொங்கலுக்கு, அதுவும் விடியற்காலையில் கோவிலில் ஓசியில் கிடைக்கிற பொங்கலுக்கு இத்தனை ருசியா.

    சே! கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போயிற்றே!

    எந்தச் சோதா அப்படிக் கத்தியது என்று சுதந்திரப் பூங்காவைச் சுற்றுமுற்றுமாக ஒரு நோட்டம் விட்டார்.

    அவர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, ஸைலேன்ஸ்! என்று மறுபடி அதே இடிக்குரல் வெளிப்பட்டு அவரை நடுங்க வைத்தது.

    சிமெண்ட் பெஞ்சிலிருந்து எழுந்தவர் தொம்மென்று உட்கார்ந்துவிட்டார்.

    இருளில் மரத்தில் ஒளிந்திருந்த காக்கா, குருவிகள் மற்றும் அடையாள அட்டைகளில்லாத பறவை இனங்கள் அந்த ‘ஸைலேன்ஸ்’ சத்தம் கேட்டுக் குபீரென்று பறந்தன.

    மரங்களிலிருந்து வயதான சருகுகள் பொலபொல் என உதிர்ந்தன; - தேவர்கள் இலைமாரி பொழிவது போல.

    எங்கேயிருந்து வந்தது இந்தப் பயங்கர ஒலி? பொங்கலை மண்ணுக்கனுப்பிய பொல்லாத சத்தம் வந்த திசை எது?

    பூங்காவில் கார்ப்பரேஷனுக்குச் சொந்தமான செடிக்கூண்டுகள் கும்பலாக ஒரு பக்கம் கடாசப்பட்டிருந்தன. அவற்றின் அருகிலிருந்த ஒரு மொட்டை பெஞ்ச்சில் சாதுவாக ஒரு மொட்டைத்தலை வாலிபன் உட்கார்ந்திருந்தான்.

    அப்புசாமி ஆச்சரியப்பட்டுப் போனார், இவ்வளவு ஒல்லிப் பிச்சானாக இருக்கிற நீங்களா அவ்வளவு பெரிய சத்தம் எழுப்பியது?

    இது சாதா ரகம். விடியற்காலையில் மத்தவங்களுக்கு டிஸ்டர்ப் ஆகுமேன்னு கொஞ்சம் மெதுவாக கத்தினேன் என்றான் தொண்டையை நீவிக் கொண்டு.

    எங்கே, இன்னொரு தரம் கத்துங்க பார்க்கலாம்! அப்புசாமி நேயர் விருப்பம் தெரிவித்தார் ஆர்வத்தோடு.

    ஸ்டுடியோவுலே நான் ஒரு தரம் கத்தறதுக்கு ஒரு ரூபா இருபது பைசா தருவாங்க.

    ஸ்டுடியோ? அப்புசாமி நெய்ப்பிசுக்கான விரலால் தலையைச் சொறிந்து கொண்டார். நீங்க ஸ்டுடியோவிலே வேலை செய்யறவரா?

    சைலன்ஸ் சஞ்சீவின்னு நீங்க கேள்விப்பட்டதில்லையா? அந்த வாலிபன் கேட்டுவிட்டு, கொஞ்சம் இருங்க. பனி விலகறதுக்குள்ளே இன்னும் நாலு ஸைலேன்ஸ் வுட்டுட்டுப் பேசறேன் என்றவன் ஸைலேன்ஸ்! என்று கத்தினான். அவன் கத்தின ஒலி அலை அப்புசாமியின் காதில் ரொய்ங்கென்று புகுந்து தலை கிர்ர்ர் அடித்துத் தொப்பென்று உட்கார்ந்து விட்டார்.

    ஸைலேன்ஸ் சஞ்சீவிக்கு சினிமா ஸ்டுடியோ ஒன்றில் சற்று வித்தியாசமான வேலை. படப்பிடிப்பில் ஷாட் ரெடியானதும், ‘ஸைலென்ஸ்’ என்று உரக்கக் கத்த வேண்டும். ஒரு தடவை கத்துவதற்கு ஒரு ரூபாய் இருபது பைசா. மூணு வருஷமாகக் கத்தி வருகிறான். ஒரு நாளைக்குச் சராசரி பத்து ஷாட் கூலி கிடைக்கும். மாதச் சம்பளத்தில் அமர்த்திக்கொள்ள யாரும் முன் வரவில்லை.

    என்னவோ வண்டி ஓடுது சார். இந்தக் குளிர் காலத்திலே, பனியிலே நல்லா பிராக்டிஸ் பண்ணிப்பேன். நமக்குத் தொண்டைதானே சோறு போடுது.

    சஞ்சீவியின் வாழ்க்கையைக் கேட்டதும் அப்புசாமிக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.

    ஆகா, மனிதர்கள்தான் எத்தனை விதங்களில் கஷ்டப்பட்டு உழைக்கிறார்கள். நாமும் இருக்கிறோமே?

    சஞ்சீவியிடம் விடைபெற்றுக் கொண்டு பஸ் ஸ்டாண்டை அடைந்தார். பஸ்ஸில் ஏறியதும் கம்பியைப் பிடித்துக் கொண்டு முன்னேறினாரே தவிர, டிக்கெட் வாங்கவில்லை. சஞ்சீவி பற்றிய சிந்தனையேதான்!

    யோவ் பெரிசு! எங்கேய்யா போவணும்? சரசரன்னு முன்னாலே போயிட்டா உங்க தாத்தாவா வந்து டிக்கெட் எடுப்பான்? கண்டக்டர் காய்ந்தார்.

    அப்புசாமிக்குக் கண்டக்டரின் குரல் காதில் விழவில்லை. மனசுக்குள் ‘ஸைலேன்ஸ்’ குரலே ஒலித்துக் கொண்டிருந்தது. ‘நம்மால் அவ்வளவு பெரிசாகக் கத்த முடியுமா?’

    கண்டக்டர் மகா எரிச்சலாகி, யோவ் சாவு கிராக்கி டிக்கெட் வாங்காம டபாய்ச்சுடலாம்னு பார்க்கிறியா? யோவ் பெரிசு! காது கீது செவுடா? நடிக்கிறியா? வேலை காட்றயா வேலை? வயசாச்சேன்னு பாத்தா மரியாதையைக் கெடுத்துகிருவாங்க... பார்த்தீங்களா, அந்தக் கிழவனை? இவ்வளவு கத்தறேனே... வந்து டிக்கெட் எடுக்கறானா பார்

    அப்புசாமியின் மனசு பூரா ‘சைலேன்ஸே’ நிரம்பியிருந்தது. ‘அது மாதிரி நாம கத்த முடியுமா? அடேங்கம்மா, எப்பேர்ப்பட்ட சிங்கக்குரல்! அணுகுண்டுக்குரல்! ஒரு மனுஷத் தொண்டையிலிருந்து இத்தா சோடு சத்தம் வெளியிலே வருமா? பயல் நாறாட்டம் இருக்கான். நான்கூட சீதேக் கியவியோடு சண்டை போடறப்போ, சபதம் போடறப்போ உரக்கக் கத்தியிருக்கேன், ஆனால் இது அதி உன்னத மஹா கத்தல். ஆ! என்ன மாதிரி கத்தினான்!’

    அடுத்த கணம், அவரையும் அறியாமல் ‘ஸைலேன்ஸ்!’ என்ற கத்தல் அவரிடமிருந்து வெளிப்பட்டு விட்டது. நல்ல உரத்த சத்தமாகவே ஸைலேன்ஸ் வந்து விட்டது. பூங்காவில் ஒலித்த சஞ்சீவியின் குரலில் பாதி அளவாவது கத்தியிருப்பார்.

    கண்டக்டரின் கையிலிருந்த டிக்கெட் புத்தகங்கள் தொபதொபவென்று கீழே விழுந்தன.

    டிரைவர் கிர்ரீச் என்று பிரேக் அடித்தார். பஸ்ஸிலிருந்த பயணிகளுக்கு மூச்சு முட்டியது. காதில் கும்மென ரீங்காரம்.

    அப்புசாமியே ஆச்சரியப்பட்டார், நம் தொண்டைக்குள்ளிருந்தா இவ்வளவு பெரிய ஸைலேன்ஸ் கிளம்பியது என்று - சில ஒல்லித் தாய்மார்கள் அஞ்சு கிலோ குழந்தையைப் பிரசவித்து ஆச்சரியப்படுவதுபோல.

    தன் குரல் கேட்டுப் பயணிகள் எல்லாரும் திகைப்பதையும், பஸ் பூராக் கப்சிப்பென்று அமைதியாகி, ஒரு வகைப்பீதி படர்ந்த முகத்துடன் விழிப்பதையும் அப்புசாமி பார்த்தார். மகா மகிழ்ச்சி ஏற்பட்டது.

    அட, நம்ம சவுண்டும் பரவாயில்லையே! என்று மகிழ்ந்தவர், தன்னையே சோதித்துக் கொள்வது போல, ‘ஸைலேன்ஸ்!’ என்று இரண்டாம் தடவையாகக் கத்தினார்.

    கண்டக்டருக்குத் தன்னைத்தான் அப்புசாமி அப்படி ஸைலேன்ஸ்’ என்று கத்திக் கண்டிக்கிறார் என்று தோன்றிவிட்டது.

    அடேங்கம்மா! என்ன மாதிரி சவுண்ட்! என்று பிரட்த்த கண்டக்டர் அடுத்த நிமிஷம் தானே அப்புசாமியை நாடி வந்து பயமும் மரியாதையும் வியப்புமாக அவரைப் பார்த்தான். பெரீவரே எங்க போகணுங்க? என்று பணிவாகக் கேட்டு டிக்கெட் தந்து விட்டுப் போனான்.

    சீட்டில் உட்கார்ந்திருந்த ஓர் இளைஞன் எழுந்து பெரீவரே, நீங்க உட்காருங்க. நான் அடுத்ததிலே இறங்கறேன். என்று அவருக்கு இடம் கொடுத்தான்.

    அப்புசாமி தனது ஸ்டாப்பிங் வந்து இறங்குகிற வரையில் பஸ்ஸில் ஒரு துளி சத்தமில்லை. கப்சிப், எல்லாரது பார்வையும் அப்புசாமியையே வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தன.

    சீதாப்பாட்டி மத்தியானம் ஒரு இருபது நிமிட குட்டித் தூக்கம் போடுவது வழக்கம். கையில் விரித்து வைத்துக்கொண்ட ரீடர்ஸ் டைஜஸ்ட் தொப்பென்று மார் மீது குப்புற விழுந்திருக்கும். கதவைத் தட்டியோ, மணியை அழுத்தியோ தூக்கத்தைக் கெடுத்துத் தொந்தரவு செய்யாமல் உள்ளே வருவதற்காக அப்புசாமியிடமும் ஒரு சாவி தந்து வைத்திருந்தாள். அவர் அதை இடுப்பு அரைஞாணின் கருப்புக் கயிற்றில் ஒரு பின்னூசியில் கோர்த்து வைத்திருப்பார். முக்கால்வாசி நேரங்களில் அதை எடுக்கக் சோம்பல் பட்டுக்கொண்டு மணியை அழுத்திவிடுவார்.

    அப்புசாமி தனது உரத்த சிந்தனையோடு

    Enjoying the preview?
    Page 1 of 1