Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Appusamiyum Bharathi Naarkaaliyum
Appusamiyum Bharathi Naarkaaliyum
Appusamiyum Bharathi Naarkaaliyum
Ebook109 pages42 minutes

Appusamiyum Bharathi Naarkaaliyum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Bakkiyam Ramasamy is the pseudonym of Ja. Raa. Sundaresan (born June 1, 1932). He was born in Jalakandapuram, Salem district. His pen name is a combination of his mother's name (Bakkiyam) and his father's (Ramasamy). His first breakthrough was the publication of the story Appusami and the African Beauty in Kumudam in 1963. Since then he has published a number of serialized novels, stage plays and short stories featuring the same set of characters. Some of the stories were published under various pen names including Yogesh, Vanamali, Selvamani, Mrinalini, Sivathanal, and Jwalamalini. He also worked as a journalist in Kumudam, eventually retiring in 1990 as its joint editor.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580112303235
Appusamiyum Bharathi Naarkaaliyum

Read more from Bakkiyam Ramasamy

Related to Appusamiyum Bharathi Naarkaaliyum

Related ebooks

Related categories

Reviews for Appusamiyum Bharathi Naarkaaliyum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Appusamiyum Bharathi Naarkaaliyum - Bakkiyam Ramasamy

    http://www.pustaka.co.in

    அப்புசாமியும் பாரதி நாற்காலியும்

    Appusamiyum Bharathi Naarkaaliyum

    Author:

    பாக்கியம் ராமசாமி

    Bakkiyam Ramasamy

    For more books

    http://www.pustaka.co.in/home/author/bakkiyam-ramasamy-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
    All other copyright © by Author.

    பொருளடக்கம்

    1. அப்புசாமியும் பாரதி நாற்காலியும்

    2. அப்புசாமி கலந்துகொண்ட க்விஸ்!

    3 அப்புசாமி செய்த கிட்னி தானம்

    4. வாய்வா? தாய்வா?

    5. ஒரு ஆக்ரோஷமான மோதல்

    6. உ. பி. அப்புசாமி (உணர்ச்சிப் பிழம்பு அப்புசாமி)

    7. அலங்காநல்லூர் அப்புசாமி

    முன்னுரை

    ஒரு பத்திரிகையில் உதவி ஆசிரியராக வேலை செய்வதில் ஓர் அனுகூலம் உண்டு. சார், சார், என் கதையைப் பிரசுரியுங்கள் சார், என்று ஓரொரு பத்திரிகை ஆபீசாகப் போய்க் கெஞ்சவேண்டிய அவசியம் இல்லை. நாம் எந்தப் பத்திரிகையில் வேலை செய்கிறோமோ, அந்த ஆசிரியரை மட்டும் கெஞ்சினால் போதும்.

    நான் ஒருவகையில் அதிருஷ்டக்காரன். குமுதம் ஆசிரியர் பெருமதிப்புக்குரிய எஸ். ஏ. பி. அவர்களை எனது ஆசானாக அடைந்தது என் வாழ்நாளில் எனக்குக் கிடைத்த பெரும் பாக்கியமாகும்.

    தனது இலாகாவினரை அவரே விதம்விதமாகக் கதைகள் எழுதச் சொல்வார்.

    அவர் தந்த பயிற்சியும், கற்றுத் தந்த உத்திகளும் செய்த இலக்கியத் தொந்தரவுகளும் ஏராளம். அதி அற்புதமான ரசிகர்.

    'ரா. கி. ர., புனிதன். ஜ. ரா. சு'. என்ற மூவரை மட்டும் தனது ஆசிரிய இலாகாவில் வைத்துக் கொண்டு, 'இந்தியாவிலேயே அதிக விற்பனையுள்ள பத்திரிகை என்று குமுதத்துக்கு எப்படி அவர் பெருமை சேர்த்தார் என்று பலரும் ஆச்சரியப்பட்டனர். அதற்குக் காரணம் இருந்தது. ஆசிரியர் திரு. எஸ். ஏ. பி. அவர்கள் அந்த மூவரைப்போல் முப்பது மடங்கு ஓரொரு இதழுக்கும் உழைத்துக் கொண்டிருந்தார்.’

    தாமும் அதிஅற்புதமாக எழுதிக்கொண்டு தனது சகாக்களையும் எழுத வைத்து, அவர்களோடு தனது ரசனைகளையும் பகிர்ந்துகொண்டு, அவற்றை விதம் விதமான வடிவங்களில் எழுத்துக்களாக்கி மக்களுக்கு வினியோகித்தார். எல்லா வகைச் சுவைகளிலும் என்னை எழுதவைத்தார்.

    நகைச்சுவை உணர்வில் அவர் அரசு.

    அவர் அருளால் உருவாகிய பாத்திரங்களே அப்புசாமி - சீதாப்பாட்டி.

    தமிழகத்தில் முப்பத்தைந்து வருஷங்களாக உலவி வருகிற கதாபாத்திரங்களாக அவை இன்னும் இருந்து வருவதற்குக் காரணம் எனது ஆசான் நகைச்சுவை வள்ளல் திரு. எஸ். ஏ. பி. அவர்கள்தான்.

    ஓரொரு கதையை உருவாக்குவதிலிருந்து அச்சில் வெளிவரும்வரை கூடவே நிழலென வருவார்.

    மற்றக் கதைகளைவிட அப்புசாமி கதைகள் உருவாக்குவதில் அவர் பங்கு அதிகம், காட்டிய சிரத்தை அதிகம் என்றே சொல்வேன். அதில் அவரும் நானும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஒரு குழந்தையின் கையில் கண்ணாடி ஜக்கைக் கொடுத்து அனுப்பிவிட்டுக் கூடவே போகிற அம்மா மாதிரி அவர் எனக்கு அப்புசாமி கதையில் கூடவே வருவார்.

    அப்புசாமியை எப்படியெல்லாம் வறுத்து எடுக்கலாம் என்று இருவரும் மணிக்கணக்கில் பேசிக் கண்ணில் நீர் வருகிற மாதிரி சிரிப்போம்.

    சுலபத்தில் திருப்தி அடைந்துவிட மாட்டார். இன்னின்ன மாதிரி எழுதினால் ஒருத்தரை அழவைக்க முடியும். இப்படி எழுதினால் சிரிக்க வைக்க முடியும் என்ற உத்திகளை வெகு நன்றாக அறிந்தவர். மற்றவர்களிடம் இருந்து அதை வெளிக்கொணரப் படாதபாடு படுவார்.

    நகைச்சுவை என்பது வெறும் gas அல்ல. முதலில் ஒரு கதை இருந்தே தீரவேண்டும். அப்புறம் கொண்டு வாருங்கள் அதில் அப்புசாமியை என்று கூறுவார். நகைச்சுவை என்ற பெயரால் கதை அம்சம் இல்லாமல் இருக்கக்கூடாது என்பதால் வெகு கவனமாக இருந்தார்.

    வெகு நாட்கள் வரை அப்புசாமி கதைகளை சிறுகதைகளாகவே அனுமதித்தார். சிறுகதை என்றால் கைக்கு அடக்கம். ஒரு நல்ல சம்பவமும் twistம் கொடுத்தாலே வாசகர்கள் திருப்தி அடைந்துவிடுவார்கள்.

    ஆனால், நாவல் என்பது, அதுவும் நகைச்சுவை நாவல் என்பது, நம்மை எங்கோ கொண்டுபோய்த் திசை தெரியாது அழுத்திவிடக்கூடும். ஆகவே நகைச்சுவை நாவல் எழுதுவது மிகவும் கஷ்டமான வேலை என்பதால் அப்புசாமி நாவலாக உருவாகாமலே இருந்தார். படிப்படியாக நாவலாகவும் உருவானார்.

    இந்த வகையில் அப்புசாமி சிறுகதைகள், நாவல்கள் அனைத்தையும் புத்தக வடிவில் வெளியிட்டிருக்கும் பூம்புகார் பதிப்பகம் தமிழகத்தில் பதிப்புத் துறையில் தனக்கென ஒரு தடம் போட்டு, புடம் போட்ட தங்கமாய் விளங்கிவருகிறது. அவர்கள் இதனை வெளியிட்டிருப்பதற்காக எனது மனமார்ந்த மகிழ்ச்சியையும், நன்றியையும் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

    - பாக்கியம் ராமசாமி

    ***

    1. அப்புசாமியும் பாரதி நாற்காலியும்

    காட்சி -1

    'அப்புசாமி மார்கழி மாதத்துப் பன்னிரண்டு டிகிரி ஸெல்ஸியஸ் அக்மார்க் பனிக் குளிரில், சக்தியில்லாத சக்தி முற்றப் புலவர்போல் கையது கொண்டு மெய்யது பொத்தி, மெய்யதுகொண்டு கையது பொத்தி, காலதுகொண்டு கழுத்தது பொத்தி, மூக்கதுகொண்டு தோளது பொத்தி இன்னும் பலதுகொண்டு பலது பொத்தி, ப்ரேக் டவுன் ஆன மரவட்டை மாதிரியும், வீணாய்ப் போன விஷ்ணு சக்கரம் போலவும், சற்றே பிரிந்தும் பிரியாமலும், விரிந்தும் விரியாமலும், சில பாகங்கள் தெரிந்தும் தெரியாமலும் வெடவெடத்துக் கொண்டிருக்கிறார்.’

    ஒரு ஷோலாப்பூருக்கோ, பின்னிக்கோ அவர் ஆசைப்படவில்லை. தனது நாலு முழ லுங்கியைக்கூடப் போர்வையாக்கிக் கொள்ளமுடியாத சூழ்நிலையைச் சீதாப்பாட்டி உருவாக்கிவிட்டிருந்தாள்.

    பங்களாக் கதவு தேங்காய் சீனிவாசன் பாஷையில் 'பச்சக்' என்று இறுக்கமாக மூடி, நச்சக் என்று பெரிய பூட்டைத் தொங்கவிட்டுக் கொண்டிருக்கிறது.

    பெண்டாட்டிக்குக் கோபம் வரவேண்டியதுதான். அதற்கென்று ஓர் அளவுகிடையாதா?

    அப்புசாமி தொடர்ந்து வெடவெடத்துக் கொண்டிருக்கிறார்.

    இரும்புக் கேட்டை யாரோ திறக்கிறார்கள். மசமசவென்று வெள்ளையாக ஓர் உருவம் அவர் கண்ணில் நிழலாடுகிறது. வருவது யார்? 'குளிரால் வாடிய மயிலுக்குப் போர்வை ஈந்த வள்ளல் பேகனின் ஆவியா?’

    'பேகானோ பாராய்... கிருஷ்ணா நீ பேகானோ பாராய்..!’ அதிகப்படிக் குளிரில் மூளை குழம்பின மாதிரி அப்புசாமி படுத்தவாறே பாடுகிறார். உருவம் இன்னும் நெருங்குகிறது. கண்களின் முன்னே அலை அலையாகத் தெரிந்த டெலிவிஷன் டிஸைன்களினூடே உருவத்தை மறுபடி கூர்ந்து பார்க்கிறார்.

    அப்புசாமி : யார்? யாரது? வள்ளல் பேகனா? சீக்கிரம் போர்த்தித் தொலைடாப்பா. புண்ணியமாப் போகும்.

    உருவம் : தாத்தாவ்! என்ன இங்கே ஜாலியாகப் படுத்துக்கொண்டு?

    அப்புசாமி :

    Enjoying the preview?
    Page 1 of 1