Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nattupura Kolaigal!
Nattupura Kolaigal!
Nattupura Kolaigal!
Ebook80 pages48 minutes

Nattupura Kolaigal!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100603245
Nattupura Kolaigal!

Read more from Devibala

Related to Nattupura Kolaigal!

Related ebooks

Reviews for Nattupura Kolaigal!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nattupura Kolaigal! - Devibala

    http://www.pustaka.co.in

    நாட்டுப்புறக் கொலைகள்!

    Nattupura Kolaigal!

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    1

    சென்னை மத்திய சிறைச் சாலையில் இருட்டான அந்தக் கார்டாரின் மூலையில் உள்ள அந்த அறையில் அவன் இருந்தான்.

    கைதிகள் அணியும் கட்டம் போட்ட வெள்ளை அரை நிஜாரும், பனியனும் அணிந்து லேசான தாடி வளர்த்து கண்களில் ஒளியோடு, கையில் புத்தகம் வைத்திருந்தான்.

    'பாரதியாரின் பாஞ்சாலி சபதம்’

    சென்ட்ரியின் பூட்ஸ் ஒலி கேட்க, புத்தகத்திலிருந்து கண்களை உயர்த்தினான்.

    சென்ட்ரி முன்னால் வர-

    கூடவே ஜெயிலர், இன்னும் ஒரு சில முக்கிய அதிகாரிகள் வந்து கொண்டிருந்தார்கள்.

    இவனது அறைக் கதவு திறக்கப்பட்டது.

    எழுந்து கொண்டான்.

    என்ன சத்யமூர்த்தி? எப்படியிருக்கே?

    பாருங்க சார்!

    உனக்கொரு சந்தோஷச் செய்தி சொல்ல வந்திருக்கேன் நான்!

    பதில் பேசாமல் நின்றான்.

    நாளையோட உன் தண்டனைக் காலம் 14 வருஷம் முடியுது, உன் நன்னடத்தையை சிபாரிசு செஞ்சு மேலிடம் பரிந்துரை பண்ணினதால உனக்கு விடுதலை.

    மெள்ளச் சிரித்தான் சத்யமூர்த்தி.

    என்ன சந்தோஷப்படுத்தலையா இந்தச் செய்தி உன்னை?

    எல்லா உணர்வுகளையும் சமமா ஜீரணிக்கிற மனநிலையை இந்த சிறைச்சாலை எனக்குத் தந்தாச்சு சார். சிறைச்சாலை ஒரு கல்லூரி, சென்று திரும்பியவன் ஒரு குருநாதன்'னு ஒரு பாட்டு உண்டு. எனக்கது பொருந்தும்."

    குட். உன் ரிலீஸிங் ஆர்டரை நான் ரெடி பண்ணனும். இந்த இரவு சிறைச் சாலைல உன் கடைசி இரவு. வரட்டுமா?

    அத்தனை பேரும் விலக, கதவு பூட்டப்பட்டது.

    மறுபடியும் பாரதியாரின் மேல் பார்வை பதித்தான் சத்யமூர்த்தி.

    இப்போது மனது லயிக்கவில்லை.

    புத்தகத்தை மூடி வைத்தான்.

    'நாளை எனக்கு விடுதலை'

    ‘பதினாலு நீண்ட வருடங்களுக்குப் பின் வெளியுலகம் காணப் போகிறேன்.’

    அடிமனதில் லேசான ஒரு ஆர்ப்பரிப்பு இருக்கத்தான் செய்தது. சந்தோஷமா, துக்கமா என்று பிடிபடாத ஒரு சங்கடம் வயிற்றைப் பிசைந்தது.

    சத்யமூர்த்தி, இ, பி. கோ. 302வது செக்ஷனில் கொலைக் குற்றம் சாட்டப்பட்டு சிறைக்குள் நுழையும் போது அவனுக்கு முப்பது வயது.

    இப்போது நாப்பத்தி நாலு!

    கொலை...!

    கொலை செய்துவிட்டு வந்தவன் இந்த சத்யமூர்த்தி.

    'தனக்கு மரண தண்டனை என்று சர்வ நிச்சயமாக நம்பி வந்தவன் இவன்!'

    'இவன் வாதம், இவன் பக்கமிருந்த நியாயம் எல்லாம் சட்டரீதியாக பரிசீலிக்கப்பட்டு, உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் அப்பீலுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, குடியரசுத் தலைரிடம் கருணை மனு சமர்பிக்கப்பட்டு, மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.'

    சத்யமூர்த்தியின் நன்னடத்தை காரணமாக அதுவும் 14 வருடங்களாகக் குறைக்கப்பட்டு...

    இதோ விடுதலை...!

    'நாளைக்கு விடுதலை!'

    ஒரு மாதிரி மயக்கமாக இருந்தது. இனம் புரியாத உணர்வுக் கலவை. சுருண்டு படுத்துக் கொண்டான் ஒரு மூலையில்.

    'நாளை விடு தலையானால் எங்கே போவேன்?'

    'என்னை வரவேற்க யார் உண்டு?'

    'மறுபடியும் கிராமத்துக்குப் போகமுடியுமா?'

    'என்ன இருக்கிறது அங்கே?'

    'இருக்கும் சொத்து பத்துக்களை விற்று ஆக்ரோஷமாக வழக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1