Neruppin Matroru Mugam
By Maharishi
()
About this ebook
கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை ‘ரன் மெஷின்’ என்றால், 83 வயதிலும் ஓயாமல் எழுதி வரும், மூத்த படைப்பாளர் மகரிஷியை, ‘எழுத்து இயந்திரம்’ என்றே சொல்லலாம். இதுவரை, 130 நாவல்கள், 5 சிறுகதை தொகுப்புகள், 60க்கும் மேற்பட்ட கட்டுரைகள் என 22 ஆயிரம் பக்கங்களுக்குமேல் எழுதிக் குவித்துள்ளார். இன்றும் அவரது பேனா மையின் ஈரம் காயவே இல்லை.
இவர் எழுதிய பல நாவல்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டு உள்ளன. ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய, ‘புவனா ஒரு கேள்விக்குறி’ (1977) படத்தின் கதை மகரிஷியுடையது.
தவிர, ‘பனிமலை’ என்ற நாவல், ‘என்னதான் முடிவு?’ (1965) படமாக ஆக்கம் பெற்றது. ‘பத்ரகாளி’ (1976), ‘சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு‘ (1977), ‘வட்டத்துக்குள் சதுரம்‘ (1978), ‘நதியை தேடிவந்த கடல்’ (1980) ஆகிய திரைப்படங்களும் மகரிஷியின் நாவல்களை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்பட்டன.
தமிழில் கல்கி, ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், சுஜாதா போன்ற நாவலாசிரியர்களின் படைப்புகளில் ஒருசில, திரைப்படமாக உருவாக்கம் பெற்றுள்ளன. எனினும், தனிப்பட்ட ஒரு எழுத்தாளரின் நாவல்கள் அதிக எண்ணிக்கையில் திரைமொழியில் சொல்லப்பட்டது என்றால் அது மகரிஷி உடையது மட்டுமே. இதை பெருமைக்குரியதாக சொல்லும் அதேநேரம், அதிகளவில் கதை திருட்டுக்கு உள்ளானதும் மகரிஷியின் படைப்புகள்தான்.
Read more from Maharishi
Kanneer Thuliyil Kadalosai Rating: 0 out of 5 stars0 ratingsKoodu Sellum Paravai Rating: 0 out of 5 stars0 ratingsBhadrakali Rating: 0 out of 5 stars0 ratingsSpatikam Rating: 0 out of 5 stars0 ratingsVilayada Vanthaval Rating: 0 out of 5 stars0 ratingsPattu Kudai Rating: 0 out of 5 stars0 ratingsKanavodu Sila Naatkal Rating: 0 out of 5 stars0 ratingsIppadiye Oru Vazhkkai Rating: 0 out of 5 stars0 ratingsThattaamaalai Rating: 0 out of 5 stars0 ratingsNeruppu Kozhi Rating: 0 out of 5 stars0 ratingsKalyana Parisu Rating: 0 out of 5 stars0 ratingsOosi Munai Rating: 0 out of 5 stars0 ratingsPanisuvar Rating: 0 out of 5 stars0 ratingsPuthiya Poo Rating: 0 out of 5 stars0 ratingsKaandhamunai Rating: 0 out of 5 stars0 ratingsSooriya Paathai Rating: 0 out of 5 stars0 ratingsBhuvana Oru Kelvikuri Rating: 0 out of 5 stars0 ratingsAthuvaraiyil Kanchana Rating: 0 out of 5 stars0 ratingsVeera Sudhandhiram! Rating: 0 out of 5 stars0 ratingsSakkara Vandi Rating: 0 out of 5 stars0 ratingsPanju Bommai Rating: 0 out of 5 stars0 ratingsMara Seeppu Rating: 0 out of 5 stars0 ratingsUnmaiyai Sonnavan Rating: 0 out of 5 stars0 ratingsGarudanai Kaditha Paambu Rating: 0 out of 5 stars0 ratingsPadi Paranthaval Rating: 0 out of 5 stars0 ratingsKaatril Mithantha Padagu Rating: 0 out of 5 stars0 ratingsNinaivugal Unnoduthan... Rating: 0 out of 5 stars0 ratingsMuthukal Pathu Rating: 0 out of 5 stars0 ratingsVaanathu Nilavu Rating: 0 out of 5 stars0 ratingsKaatrodu Odiyavan! Rating: 0 out of 5 stars0 ratings
Related to Neruppin Matroru Mugam
Related ebooks
Malai Sarivil Oru Tea Kadai Rating: 0 out of 5 stars0 ratingsKannai Nambathey Rating: 3 out of 5 stars3/5கண்ணை நம்பாதே Rating: 0 out of 5 stars0 ratingsEnnai Pol Oruvan Rating: 0 out of 5 stars0 ratingsSaranagadhi Rating: 5 out of 5 stars5/5Irappathu Sugam... Rating: 5 out of 5 stars5/5Purusha Vettai Rating: 0 out of 5 stars0 ratingsNooru Kodi Roopai Vairam Rating: 0 out of 5 stars0 ratingsNadana Nila Rating: 0 out of 5 stars0 ratingsஉன் தோள் சேர ஆசைதான்! Rating: 0 out of 5 stars0 ratingsUn Thol Sera Aasaithan Rating: 0 out of 5 stars0 ratingsL Board Murder Rating: 0 out of 5 stars0 ratingsVaadagaikku Oru Vaanavil Rating: 0 out of 5 stars0 ratingsPoovodum Pottodum Rating: 0 out of 5 stars0 ratingsMaaney Mayiley Manjari Rating: 0 out of 5 stars0 ratingsUyarndhavargal Rating: 5 out of 5 stars5/5Gnanam Piranthathu Rating: 0 out of 5 stars0 ratingsNinaikka Therintha Manam Rating: 0 out of 5 stars0 ratingsOru Kulir Kaala Kutram Rating: 5 out of 5 stars5/5Nandhavana Thendral Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Vaseegaram Rating: 4 out of 5 stars4/5Thottal Thodarum Rating: 4 out of 5 stars4/5Unakkey Uyiranen! Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalukku Karuppu Kodi Rating: 5 out of 5 stars5/5Narmatha Yen Pogiral? Rating: 0 out of 5 stars0 ratingsNayam Pada Urai Rating: 0 out of 5 stars0 ratingsSollathey Sei! Rating: 5 out of 5 stars5/5Sabthapathi Rating: 0 out of 5 stars0 ratingsSoundarya... Rating: 0 out of 5 stars0 ratingsPookalin Mozhi Puriyalaye? Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Neruppin Matroru Mugam
0 ratings0 reviews
Book preview
Neruppin Matroru Mugam - Maharishi
http://www.pustaka.co.in
நெருப்பின் மற்றொரு முகம்
Neruppin Matroru Mugam
Author:
மகரிஷி
Maharishi
For more books
http://www.pustaka.co.in/home/author/maharishi
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம்7
அத்தியாயம் 8
1
கோர்ட் வட்டாரத்தில் எம். என். எஸ் என்று அழைக்கப்படும் பிரபல கிரிமினல் லாயர் எம். என். சீனிவாசன் கோர்ட்டுக்குப் புறப்படத் தயாராக நின்றுகொண்டிருந்தார்.
நெற்றியில் ஒற்றைக்கோடாக சிவப்பில் ஸ்ரீ சூர்ணம். பஞ்சகச்சமாக வேஷ்டி உள்ளே நுழைத்துப் போடப்பட்ட சட்டை மேல் கருப்புக்கோட் தலையில் மெல்லிய டர்பன் நெஞ்சுக்குழியை மூடிக்கொண்ட மாதிரி நெக்டை.
அவர் வெளியே புறப்பட கரியநிற போர்ட் கார் பாதி போர்டிகோவை அடைத்துக்கொண்டு நின்றது,
சைட்டேஷன்கள் சொருகப்பட்ட சட்ட புத்தகங்களை ஜூனியர் கொண்டுவந்த வைத்தான்..
சங்ககிரி போயிட்டு மத்தியானம் வந்துடறேன். அதுக்குள்ள நம்மோட வழக்கு கூப்டாபாஸோவர் பண்ணிவை. சரியா ரெண்டு மணிக்கெல்லாம் வந்துடறேன்... அந்த மெயின் விட்னஸ் கந்தாயி அலையஸ் காவேரியம்மாவ கொஞ்சம் சரிபண்ணிவை கோர்ட்ல சாட்சிக்கூண்டிலே வந்து ஏதாவது உளறி வைக்கப்போறா. பிராசிகிவூஷன்ல கேக்கற கேள்விக்கு மட்டும் பதில் சொன்னாப் போதும்ணும் சொல்லிரு பிராசிக்யூட்டர் கேட்டா சரியா மூணு மணிக்கெல்லாம் நம்பகேஸை ஆரம்பிச்சுடலாம் சொல்லு
.
ஓ.கே. ஸார்.
பங்களா கேட்டில் வெள்ளை அம்பாசிடர் ஒன்று மெதுவாக நுழைந்து உள்ளே வந்தது.
யாரது ராமகிருஷ்ணன் கார் மாதிரி இருக்கு...!
அவர் நினைத்து முடிப்பதற்குள் கார் மரத்தடியில் வந்து நின்றது.
ராமகிருஷ்ணன் முன்னே இறங்க அவன் பின்னால் அவனுடைய தந்தை மாரிமுத்துக்கவுண்டர் இறங்கினார். முன்பகுதியிலிருந்து மேலும் இருவர் இறங்கினார்கள்.
மெதுவாக நடந்த தந்தை மாரி முத்துவின் கையைப் பிடித்துக்கொண்டு கம்பீரமான உயரத்துடன் நல்ல ஆகிருதியுடன் ராமகிருஷ்ணன் வந்தான்.
மாரிமுத்துக்கவுண்டரைப் பார்த்தவுடன் இவன் என்ன இப்படியாகிவிட்டான்? எவ்வளவு கம்பீரமாக இருப்பான். அடர்த்தியான தலைக்கேசமும் விசிறி வாழைபோல மீசையும், புருவமயிர் கூட அசாதாரண அடர்த்தியுடன் இருக்குமே! அஞ்சு வருஷத்துக்கு முன் பார்த்த மாரிமுத்துதுவா இவன்? நோய் வந்த கோழி மாதிரி உடம்பு இப்படிசூம்பிப்போய் நடக்க முடியாமல் மகன் கையைப்பிடித்துக் கொண்டு நடக்கறமாதிரி இவனுக்கு என்ன வந்து விட்டது?
ராமகிருஷ்ணன் தந்தையின் கையை விட்டுவிட்டு சீனியருக்கு வணக்கம் கூறினான்.
வாடா... கவுண்டா... என்னடா இப்படியாயிட்டே என்ன உடம்பு உனக்கு. உன்ன பார்த்து கிட்டதட்ட அஞ்சுவருஷமிருக்குமில்லையா..
மாரிமுத்துவின் கையைப்பிடித்து அழைத்துக் கொண்டு வந்து முன் வராண்டா ஹாலில் இருந்த சோபாக்கள் ஒன்றில் உட்காரவைத்தார் வக்கீல் எம். என். எஸ்.
"அப்பாக்கு அஞ்சு ஆறு வருஷமா உடம்பு சரியில்லே பெராலிக் வந்து பொழச்சதே புனர்ஜென்மம்மாதிரி ஆயிட்டாரு...
மாரிமுத்து ஏதும் பேசவில்லை கைகள் லேசாக நடுங்கிக்கொண்டிருக்க மகனுக்கு ஏதோ ஜாடை காட்டினார் அதைப்புரிந்துகொண்ட ராமகிருஷ்ணன் கையுடன் கொண்டுவந்திருந்த எவர்சில்வர் பிளேட் ஒன்றில் வெற்றிலைபாக்குடன் ஒரு கல்யாண பத்திரிகையை வைத்து லேசாக நடுங்கிக்கொண்டிருக்கும் தந்தையின் கையில் கொடுத்து தானும் அந்த தட்டைப்பிடித்துக் கொண்டு நின்றான்.
சாமி, உங்கமவன் ராமகிருஷ்ணனுக்கு கல்யாணம் சாமி முன்னால நின்னு நடத்திக் குடுக்கணும் என் மவன ஒரு கவுரவமான வக்கிலா ஆளாக்கினவக நீங்க. இவனோட கல்யாணத்துக்கு நானே நேரில் வந்து வெத்தில் வைக்கிர ஓரே ஆளு நீங்க தா... அவசியம் வந்து போவனும்...
லேசாக வார்த்தைகள் சிதைந்து வந்தாலும் ஓரளவு மனதில் உள்ளதை சரியான முறையில் பேச நாக்கு ஒத்துழைப்பு தந்தது,
மாரிமுத்துவின் மெலிந்து போன இரண்டு கரங்களையும் சேர்த்துப்பிடித்தார். எம். என், எஸ்...
அப்பாவுக்கு உங்கள மட்டும் நேரில் பார்த்து இன்விடேஷன் தரணும்னு ஆசை மத்த சொந்தக்காரங்க வீட்டுக்கெல்லாம் நான் மட்டும்தான் போறேன்...
அப்பா இப்ப சுலபமா பேசின பேச்சே இப்ப உங்களோட பேசினாரே இது மட்டும் தான், இதைமட்டும் கொஞ்சநாளா மனசுக்குள்ளாரயே பேசிப்பேசி பயிற்சி எடுத்துகிட்டு இருப்பாருன்னு நினைக்கறேன்.
மாரிமுத்துவும் அதற்குமேல் ஒன்றும் பேசவில்லை மற்றவர்கள் முகத்தையே பார்த்தவண்ணமிருந்தார்.
நான் அவசியம் வரேன்டா.. உன் மகன் கல்யாணத்துக்கு வரதை விட எனக்கு வேற என்ன வேலை. கண்ணணை மாதிரி இவனும் எனக்கொரு மகன்..."
மாரிமுத்துவின் கரங்களைப்பிடித்துக்கொண்டு பேசிக் கொண்டிருந்தார். எம். என்: எஸ்...
அட்வகேட் காபிக்கு உள்ளே குரல் கொடுத்தார். பீங்கான் ஜெக்கில் காபி வந்தது எல்லோரும் குடித்தார்கள்.
கார்வரையில் மாரிமுத்துவை கையைப் பிடித்து அழைத்துவந்தவர் அவரை காரில் உட்கார வைத்து விட்டுத் திரும்பினார்.
ராமகிருஷ்ணன் வந்ததிலிருந்தே உற்சாகமின்றி காணப்பட்டான். அந்த வாலிப வழக்கறிஞன் முகத்தில் கல்யாணத்தின் குதூகலமில்லை. இதை சீனிவாசன் கவனிக்கத் தவறவில்லை.
கூடவந்தவர்கள் அனைவரும் காரில் ஏறிக் கொண்டபின் ராமகிருஷ்ணன் மட்டும் காரின் கதவைப் பிடித்தபடி நின்று கொண்டிருந்தான்.
ராமகிருஷ்ணா !
சீனியர் அவனை அழைத்தார். அவன் தான் பிடித்திருந்த