Thanga Trisoolam
()
About this ebook
He is something of an expert on South Indian Hindu traditions and mythological lore. His stories typically deal with cases of supernatural occurrence, divine intervention, reincarnation, and ghosts, and are often based on or inspired by true stories reported from various locales around the state ofTamil Nadu.
Two or three of his novels are published every month in publications such as Crime Story and Today Crime News.
Read more from Indira Soundarajan
Asura Jathagam Rating: 5 out of 5 stars5/5Dhinam Oru Uyir! Rating: 5 out of 5 stars5/5Sivaragasiyam Rating: 5 out of 5 stars5/5Rajathanthiran Rating: 5 out of 5 stars5/5Chidambara Ragasiyam Rating: 4 out of 5 stars4/5Kannip Parunthu Rating: 5 out of 5 stars5/5Pei... Pisasu... Bootham Rating: 4 out of 5 stars4/5Thottathellam Pon Rating: 5 out of 5 stars5/5Markazhi Roja Rating: 5 out of 5 stars5/5Thiruvannamalai Rating: 3 out of 5 stars3/5Nandhi Ragasiyam Rating: 5 out of 5 stars5/5Ezhavathu Jenmam Rating: 4 out of 5 stars4/5Aranmanai Ragasiyam Rating: 4 out of 5 stars4/5Sivam Rating: 4 out of 5 stars4/5Manam Oru Marmadesam Rating: 5 out of 5 stars5/5Kannan Ennum Mannan! Rating: 5 out of 5 stars5/5Yandhira Jaalam Rating: 5 out of 5 stars5/5Sathiyai Santhippom! Rating: 5 out of 5 stars5/5Aval Oru Savithri Rating: 5 out of 5 stars5/5Nooravathu Kadathal Rating: 5 out of 5 stars5/5Kaatru… Kaatru... Uyir Rating: 3 out of 5 stars3/5Mandhira Vaasal Rating: 5 out of 5 stars5/5Kaatthiruntha Naagam Rating: 5 out of 5 stars5/5Rudhra Veenai - Part 3 Rating: 4 out of 5 stars4/5Naga Vanam Rating: 5 out of 5 stars5/5Oru April Puthisaali Rating: 5 out of 5 stars5/5Maayamaai Silar Rating: 5 out of 5 stars5/5Sithargal Raajyam Rating: 5 out of 5 stars5/5Mandhira Valai Rating: 5 out of 5 stars5/5Neela Neela Oodi Vaa Rating: 5 out of 5 stars5/5
Related to Thanga Trisoolam
Related ebooks
Vaira Bommai Rating: 0 out of 5 stars0 ratingsMoondravathu Kan! Rating: 5 out of 5 stars5/5Dhivya Roja Thottam Rating: 0 out of 5 stars0 ratingsJenma Jenmamai Rating: 0 out of 5 stars0 ratingsAathma Rating: 5 out of 5 stars5/5Enge En Kannan Rating: 0 out of 5 stars0 ratingsOlivatharkku Vazhiillai Rating: 5 out of 5 stars5/5Aayiram Kodi Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsAadu Puli Aattam Rating: 0 out of 5 stars0 ratingsAthai Mattum Sollathe! Rating: 5 out of 5 stars5/5Sutri Sutri Varuvean Rating: 0 out of 5 stars0 ratingsIlamaiyil Kol Rating: 5 out of 5 stars5/5Mandhira Viral Rating: 0 out of 5 stars0 ratingsKrishnadaasi Rating: 5 out of 5 stars5/5Oru Kavirajanin Kathai: Kalamega Pulavanin Varalaru Rating: 0 out of 5 stars0 ratingsMoondraam Sakthi Rating: 0 out of 5 stars0 ratingsYezham Sakthi Rating: 0 out of 5 stars0 ratingsKaatrodu Oru Yudham Rating: 0 out of 5 stars0 ratingsMaayap Punnaigai Rating: 0 out of 5 stars0 ratingsKoottirkkul Puhuntha Uyir Rating: 5 out of 5 stars5/5Naaga Padai Rating: 5 out of 5 stars5/5Nooru Kodi Roopai Vairam Rating: 0 out of 5 stars0 ratingsTharisanam Rating: 0 out of 5 stars0 ratingsMele Uyare Uchiyile Part - 2 Rating: 5 out of 5 stars5/5Pallavan Pandiyan Baskaran Rating: 0 out of 5 stars0 ratingsKaala Vettai Rating: 0 out of 5 stars0 ratingsThedathey Tholayathey! Rating: 5 out of 5 stars5/5Mayamaan Malai Rating: 0 out of 5 stars0 ratingsThenkizhakku Minnal Rating: 5 out of 5 stars5/5Hitchcock Kathaigal Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Thanga Trisoolam
0 ratings0 reviews
Book preview
Thanga Trisoolam - Indira Soundarajan
http://www.pustaka.co.in
தங்க திரிசூலம்
Thanga Trisoolam
Author:
இந்திரா செளந்தர்ராஜன்
Indira Soundarajan
For more books
http://www.pustaka.co.in/home/author/indira-soundarajan-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 1
புரிந்து கொள்ள முடிந்தால் புரிந்து கொள்ளுங்கள்...
ஒருவர் பார்வைக்கு ஒருவராக தெரியலாம். உண்மையில் அவர் ஒருவர் மட்டுமல்ல! அவருக்கு முன்பின் ஒரு வரிசை உள்ளது!
வெகு நாட்களுக்கு பிறகு லஷ்மி முகத்தில் கொஞ்சம் போல துளி சந்தோஷம், தெரிந்தது. அதற்கு காரணமும் இருந்தது. அந்த காரணத்துக்கு கஜேந்திரன் என்று ஒரு பெயரும் உண்டு. கஜேந்திரன் யாரோ அல்ல.... அவள் தவமிருந்து பெற்ற பிள்ளை.
அவனும் அவள் எதிரில் கையில் ஒரு ஃபைலுடன், டக் செய்து கொண்டு சட்டை பேண்ட்டுடன் வந்து புன்னகையோடு நின்றான்.
என்ன கண்ணு புறப்பட்டுட்டியா?
ஆமாம்மா.... நேரமாயிடிச்சு. இப்ப புறப்பட்டாதான் ஆபீஸ் போக சரியா இருக்கும். இல்லாட்டி முதல் நாளே லேட்டா போனேன்கற கெட்ட பெயர்தான் ஏற்படும்...
வேணாம்… வேணாம். நீ இப்பவே கிளம்பு...
விபூதி வெச்சு ஆசீர்வாதம் பண்ணி அனுப்பும்மா
லஷ்மி மகன் விருப்பத்தை நிறைவேற்றி முடித்தாள். அவன் வீட்டை விட்டு வெளியேறவும், கணவன் கோவிந்தராஜனின் படத்தின் முன் நின்று ஒரு பெருமூச்சுடன் பார்த்தாள்.
மாலை போடப்பட்ட படம்!
கோவிந்தராஜன் இறந்து ஏழெட்டு வருடங்கள் ஆகின்றன. அன்று தொலைந்து போன சந்தோஷம் இன்று கஜேந்திரன் வேலைக்கு புறப்பட்டிருக்கும் நிலையில்தான் துளிபோல் அந்த வீட்டுக்குள் அடி எடுத்து வைத்துள்ளது.
இருந்தபோதிலும் கோவிந்தராஜன் இறந்த விதம் மிகக் கொடுமையானது. இரும்புக் கம்பிகளை ஏற்றி வந்த லாரி ஒன்றன் பின்னால் ஸ்கூட்டரில் சென்றபடி இருந்த கோவிந்தராஜன், லாரி டிரைவர் பிரேக் பிடிக்கவும், தானும் பிரேக் பிடித்து நிறுத்துவதற்குள் ஸ்கூட்டர் தான் வந்த வேகத்துக்கு முன்னேறிவிட்டது. அப்படி ஏறியதில் மிகச் சரியாக கூரிய கம்பிகள் அவர் மார்புக்குள் துளை போட்டுக் கொண்டு புகுந்ததில் மனிதர் அப்படியே, அந்த கம்பிகள் அவரை மார்போடு தூக்கிப் பிடித்த நிலையிலேயே உயிரை விட்டது பெரிய கொடுமை.
அதை எல்லா பத்திரிகைகளும் வேறு புகைப்படம் எடுத்து வெளியிட்டு லக்ஷ்மி மனதில் ஆறாத ரணத்தை உண்டாக்கிவிட்டன. கணவனின் மரணம் மட்டுமல்ல, லக்ஷ்மியின் கொழுந்தன், அதாவது கஜேந்திரனின் சித்தப்பா கூட கிட்டத்தட்ட அதே போலதான் ஒரு விபத்தில் உயிரை விட்டார். அவர் ஒரு பில்டிங் காண்ட்ராக்டர்.
கட்டடம் ஒன்றின் மாடித்தளத்தில் நின்றபடி மேற்பார்வை இட்டுக் கொண்டிருந்தவர், தளம் எதிர் பாராமல் பெயர்ந்ததில் பொட்டலம் போல் மேலிருந்து கீழே விழத் தொடங்கினார். கீழே கட்டட பில்லர் ஒன்று கம்பி கட்டப்பட்ட நிலையில் இருக்க, அதன்மேல் விழுந்ததில் பில்லர் கம்பிகளில் சரியாக மூன்று கம்பிகள் மட்டும் திரிசூலம் போல மார்பை துளை போட்டிருந்தன.
இப்படி ஒரு துக்கத்துக்கு இரண்டு துக்கங்கள் சூழ்ந்து கொண்டதில் லக்ஷ்மி உறைந்து போய் விட்டாள். நல்ல வேளையாக ஓரளவிற்கு சொத்துப்பத்துக்கள் இருந்ததில் பொருளாதார சிரமங்கள் பெரிய அளவில் இல்லாமல் போய்விட்டன. கஜேந்திரனையும் நன்றாக படிக்க வைக்க முடிந்தது. இன்றைக்கு படிக்க வைப்பதா பெரியது? படிப்பதுதானே பெரிது.... கஜேந்திரன் நல்ல பையன்.... நன்றாகவே படித்தான். நிறைய பாடங்களில் முதல் மாணவனாகவும் வந்தான். அதெல்லாம் சேர்ந்து ஒரு நல்ல வேலையையும் வாங்கிக் கொடுத்துவிட்டது.
பிரபலமான ஒரு விண்ட்மில் நிறுவனத்தில் புராஜெக்ட் இன்ஜினீயர் போஸ்ட்!
மாதம் முப்பதாயிரம் சம்பளம்!
இன்று வேலை என்பது இருவிதமாகத்தான் உள்ளது! ஒன்று, மகாமட்டமான அடிமாட்டு சம்பளத்துடன் கூடிய வேலை…
இன்னொன்றோ கை கொள்ளாத அளவு சம்பளம் தரும் பெரிய வேலை... அந்த காலம் போல, ஐம்பது ரூபாய் சம்பளத்தில் ஆரம்பித்தேன். படிப்படியாக வளர்ந்து ஐயாயிரம் வரை வந்தேன் என்று நம் அப்பா, மாமாக்கள் பாடிய பல்லவிக்கெல்லாம் இன்று இடமில்லை. இப்படி காலம் மாறிப் போயிருப்பதும் வளர்ச்சியா இல்லை கலியின் கொடுமையா என்பதெல்லாம் போகப் போக ஒரு வேளை புரியுமோ என்னவோ...?
நல்ல வேளை கஜேந்திரன் கை நிறைய சம்பாதிக்கும் சம்பளக்காரனாகிவிட்டான். ஒரு நல்ல வேலை கிடைத்து அவன் வேலைக்கு போனதில் லக்ஷ்மிக்கு கொஞ்சம் போல பெருமை... மகிழ்ச்சி....
அவனது விண்ட் மில் நிறுவனம் ஒரு புதிய நிறுவனம். வடநாட்டுக்காரர் ஒருவரின் முதலீட்டில் துவங்கப்பட்டுள்ளது. இன்று இந்தியாவுக்கு இருக்கும் இரண்டு பிரதான சிக்கலில் முதலானது மின்சாரம்! அடுத்தது எரிபொருள்… இந்த இரண்டும் இல்லாதபடிக்கு ஆதாம் ஏவாளில் தொடங்கி நம்முடைய சேர சோழ பாண்டியர்கள் வரை எல்லோரும் எப்படித்தான் காலம் தள்ளினார்களோ? அதை கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. கரண்ட் கட் ஆன நொடி உடம்பு வியர்க்க ஆரம்பித்து ஒரு எரிச்சல் பரவத் தொடங்கி விடுகிறது. பெட்ரோல் தட்டுப்பாடு வந்து விட்டாலோ அது இன்னும் மோசம்… கால்கள் இருப்பது வீட்டுக்குள் நடப்பதற்கும், அடுத்தபடியாக கடவுள் கால்களை கொடுத்திருப்பதே பைக்கை உதைத்து ஸ்டார்ட் செய்வதற்கும், காலால் அமுக்கி பிரேக் போடுவதற்கும் தானே? எனவே, திண்டாடிப் போய் விடுகிறோம். அதனாலேயே பெட்ரோல் என்ன விலை விற்றாலும் அதன் விற்பனைக்கு மட்டும் ஒரு குந்தகமும் வருவதேயில்லை.
இப்படி இரு சமாசாரங்கள் இந்தியாவை மட்டுமல்ல, உலகையே ஆட்டி வைக்கும்போது அந்த சக்தியை வசப்படுத்துவது எப்படி என்றுதான் புத்திசாலிகள் யோசிப்பார்கள்?
கஜேந்திரன் வேலைக்கு சேர்ந்திருக்கும் விண்ட் மில் புராஜெக்ட் நிறுவனம் காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிக்கும் ஒரு நிறுவனமாகும். அந்த மின்சாரத்தை உடனுக்குடன் பயன்படுத்திக் கொள்வது ஒரு பக்கம்.... தண்ணீரை பனிக்கட்டியாக மாற்றி இடம் மாற்றி எடுத்துச் சென்று பின் உருக்கி அதை பயன்படுத்திக் கொள்வது போல காற்றாலை மின்சாரத்தை எதிலாவது சேமித்து வைத்து தேவைப்படும்போது தேவைப்படும் இடத்துக்கு பேட்டரிகளை கொண்டு சென்று பயன்படுத்துவது போல பயன்படுத்த முடியுமா