Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ini, Illai Ilaiyuthirkaalam...
Ini, Illai Ilaiyuthirkaalam...
Ini, Illai Ilaiyuthirkaalam...
Ebook89 pages35 minutes

Ini, Illai Ilaiyuthirkaalam...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar is an extremely prolific Tamil novel writer, most famous for his crime, detective, and science fiction stories. Since publishing his first short story "Seventh Test Tube" in Kalkandu magazine in 1968, he has written over 1,500 short novels and over 2,000 short stories.

Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100403355
Ini, Illai Ilaiyuthirkaalam...

Read more from Rajesh Kumar

Related to Ini, Illai Ilaiyuthirkaalam...

Related ebooks

Reviews for Ini, Illai Ilaiyuthirkaalam...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ini, Illai Ilaiyuthirkaalam... - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    இனி, இல்லை இலையுதிர்காலம்...

    Ini, Illai Ilaiyuthirkaalam...

    Author:

    ராஜேஷ்குமார்

    Rajesh Kumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    1

    விக்னவிநாயக பாதம் நமஸ்தே!

    பூஜையை முடித்துக்கொண்டு அந்தச் சிறிய பூஜையறையிலிருந்து வெளிப்பட்டாள் விஜயலட்சுமி. தலைக் கேச ஈரத்தை உறிஞ்சுவதற்காக தலையில் சுற்றப்பட்டிருந்த அந்த ஈரிழை டவல் கூட முப்பது வயது விஜயலட்சுமியின் முகத்துக்கு தனியழகை சப்ளை செய்து கொண்டிருக்க, நெற்றிக்கு இட்டிருந்த குங்குமம் கன்னியாகுமரிக் கடலில் உதிக்கும் சூரியனை ஞாபகத்துக்குக் கொண்டு வந்தது.

    காற்றுக்காக ஜன்னல்களைத் திறந்து வைத்துவிட்டு சமையலறையை நோக்கி நகர முயன்ற விநாடி பக்கத்து அறையிலிருந்து குரல் கேட்டது.

    அம்மா... விஜி...!

    அப்பாவின் குரல்.

    வந்துட்டேம்பா...!

    விஜயலட்சுமி உள்ளே போனாள்.

    அப்பா பொன்னம்பலம் படுக்கைக்குசாய்ந்து உட்கார்ந்து இடது கை விரல்களால் நெஞ்சுக்குழியை நீவிக் கொண்டிருந்தார். விஜயலட்சுமி பக்கத்தில் போய் உட்கார்ந்தாள்.

    என்னப்பா...! நெஞ்சு வலிக்குதா...?

    அது என்னிக்கு வலிக்காம இருந்திருக்கு...?

    பொன்னம்பலம் அந்த சிரமத்திலும் புன்னகைத்து விட்டுக் கேட்டார்.

    ஜனனி எழுந்துட்டாளா..?

    ம்... எழுந்து குளிச்சுட்டிருக்கா...

    எத்தனை மணிக்கு அவளுக்கு இன்டர்வ்யூ?

    ஒன்பது மணிக்கு...

    அது என்ன வேலைக்கான இன்டர்வ்யூ...?

    குழந்தை உணவுகளைத் தயாரிக்கிறஃபேக்டரி அது...

    ஃபேரக்ஸ் மாதிரியா..?

    ஆமாப்பா

    ஃபேக்டரி எங்கே...?

    அம்பத்தூர்ல...

    வேலை கிடைச்சுடுமா...?

    அப்பா..! உங்ககிட்ட பேசிட்டிருந்தா காலை டிபனை பண்ண முடியாது. அதோ... ஜனனியே வந்துட்டா..! நீங்க என்னகேக்கணுமோ அதை அவகிட்டயே கேட்டுக்கலாம்...

    விஜயலட்சுமி சமையலறைக்குள் நுழைந்துவிட பொன்னம்பலம் ஜனனியைப் பிடித்துக் கொண்டார்.

    என்னம்மா...! வேலை கிடைச்சுடுமா...?

    "கொஞ்சம் கஷ்டம்தான்ப்பா... பெரிய கம்பெனி. நல்ல

    சம்பளம். ஏகப்பட்ட ரெக்கமண்டேஷன்ஸ் வரும். அதையெல்லாம் மீறி வேலை கிடைக்கணும்ன்னா போன ஜென்மத்துல கண்டமேனிக்கு புண்ணியம் பண்ணியிருக்கணும்."

    ஒண்ணிலிருந்து பத்துக்குள்ளே ஒரு நெம்பர் சொல்லு...

    ஏழு...

    உனக்கு கண்டிப்பா வேலை கிடைச்சுடும்

    எப்படிப்பா...?

    இன்னிக்கு தேதி என்ன...?

    இருபத்தஞ்சு...

    ரெண்டையும் அஞ்சையும் கூட்டு. என்னடோட்டல்?

    ஏழு...

    இன்னிக்கு தேதி, மாசம், வருஷம் இந்த மூணையும் கூட்டிப்பார். எவ்வளவு வருது...?

    ஜனனி மனசுக்குள் கூட்டிப் பார்த்துவிட்டு. அட கூட்டுத்தொகை ஏழு என்றாள்.

    பொன்னம்பலம் சிரித்தார்.

    பார்த்தியா...? இன்னிக்கு பூராவும் எண் ஏழோட ஆதிக்கம். உன்கிட்ட ஒண்ணிலிருந்து பத்துக்குள்ளே ஒரு நெம்பர் சொல்லச் சொன்னதும் நீ 'ஏழு'ன்னு சொன்னே. தைரியமா போய் இன்டர்வ்யூவை அட்டெண்ட் பண்ணு. வேலை கண்டிப்பா கிடைக்கும்...

    இன்னிக்கு அப்பாவோட ஜோஸியம் பலிக்குதான்னு பார்க்கலாம்.

    எனக்கும் கொஞ்சம் ஜோஸியம் சொல்றீங்களா... பொன்னம்பலம்...?

    குரல் கேட்டுவாசல் பக்கம் திரும்பினார் பொன்னம்பலம். வீட்டுக்காரர் இறுகிய முகத்தோடு நின்றிருந்தார்.

    வாங்க... நாயுடு...!

    வர்றது இருக்கட்டும். நானும் ஒண்ணிலிருந்து பத்துக்குள்ளே ஒரு நெம்பர் சொல்றேன். நீங்க எனக்கு தரவேண்டிய நாலுமாச வாடகை பாக்கி எப்போ கிடைக்கும்ன்னு சொல்லுங்க...

    அடுத்த மாசம் வரைக்கும் பொறுங்க நாயுடு. சேர்த்து குடுத்துடறேன்...

    எப்படி கொடுப்பீங்க...? சிங்கப்பூரிலிருந்து ஏதாவது ட்ராஃப்ட் வரப்போறதாஃபேக்ஸ்ல மெஸேஜ் வந்ததா...?

    ஜனனி கோபமானாள்.

    நாயுடு ஸார்..! நீங்க வயசுல பெரியவங்க இப்படியெல்லாம் ஒருத்தர் மனசு புண்படும்படியா பேசக்கூடாது. அப்பா ஹெட்மாஸ்டராயிருந்து ரிடையர்ட் ஆனவங்க. அவர் வகித்த உத்யோகத்துக்காவது கொஞ்சம் மரியாதை குடுங்க

    "இதோ பாரம்மா ஜனனி...! உங்கப்பாவுக்கு மரியாதை தானே வேணும்...?வண்டி வண்டியா தர்றேன். இந்த வழியா போகும்போதும் சரி...

    Enjoying the preview?
    Page 1 of 1