Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Engamma Maharasi
Engamma Maharasi
Engamma Maharasi
Ebook82 pages32 minutes

Engamma Maharasi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100603359
Engamma Maharasi

Read more from Devibala

Related to Engamma Maharasi

Related ebooks

Reviews for Engamma Maharasi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Engamma Maharasi - Devibala

    http://www.pustaka.co.in

    எங்கம்மா மகராசி

    Engamma Maharasi

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    1

    டாக்டர் வெளியே வந்தார். சுந்தரம் ஆர்வத்துடன் டாக்டர் முகத்தைப் பார்த்தார்.

    டாக்டர் தன் அறை நோக்கி வேகமாக நடந்தார். சுந்தரம் பின் தொடர்ந்தார்.

    தன் அறைக்குள் நுழைந்த டாக்டர், எதிர் நாற்காலினயக் காட்ட சுந்தரம் அம்ர்ந்து கொண்டார்.

    அவங்க நிச்சயமா பிழைக்க மருத்துவரீதியா வாய்ப்பில்லை! ஏதாவது மிராக்கிள் நடக்கணும்! அதிசயத்தை யார் மூலமாவது கடவுள் நிகழ்த்தினா உண்டு. எந்த நேரமும் மரணத்தை எதிர் பார்த்துக்கலாம். அதிகபட்ச கெடு அஞ்சு நாள். வேண்டியவங்களுக்கு நீங்க சொல்லிக்கலாம்!

    சுந்தரம் பேசவில்லை!

    அந்தம்மாவோட பிள்ளை எங்கே?

    ஸாரி டாக்டர்! கழுத்து வரைக்கும் குடிச்சிட்டு எவளாவது தேவடியா மடில படுத்துக் கிடப்பான். அவனாலதான் இந்தம்மா இந்த நிலைக்கு ஆளானாங்க! புருஷன் சாகும் போது புள்ளைக்கு நாலே வயசு! அவர் அற்புதமான மனுஷன். எந்தக் கெட்ட காற்றும் தன்னை நெருங்க விட மாட்டார். நெருப்பா வாழ்ந்தார். எப்படி உழைச்சார்? லட்சக்கணக்கா சம்பாதிச்சார். பாழாப்போன ரத்தப் புற்று நோய் அவருக்கு வரணுமா? போய்ச் சேர்ந்தார். அத்தனையும் அந்தம்மா தோள்ள.

    அவர் உயிரோட இருந்த வரைக்கும் வீட்டை விட்டு வெளில போகாத அந்தம்மா, திடீர்னு கண்ணைக் கட்டிக் காட்டுல விட்டமாதிரி எப்படி தவிச்சுப் போனாங்க தெரியுமா? ஆனா தவிப்பும், சோர்வும் அதிக நாட்கள் நீடிக்கலை! துக்கத்தை மூட்டைக் கட்டி வச்சிட்டு வாசல்ல காலை வச்சிட்டா அந்தப் புண்ணியவதி! யாருக்காக? தன்னோட ஒரே பிள்ளைக்காக! என்னாமாதிரி உழைச்சா தெரியுமா? அவர் விட்டுட்டுப் போன லட்சக்கணக்கான சொத்துக்களை கோடிகளுக்கு மாத்தினாங்க! இவன் பதினாறு வயசுலேர்ந்து கெடத் தொடங்கியாச்சு! பதினெட்டு வயசுல தேவடியா வீட்டுக்குப் போன ஒரே ஆம்பிளை இவனாகத்தான் இருக்க முடியும்!

    டாக்டர். அவரையே பார்க்க,

    அந்தம்மா மேலயும் தப்புண்டு! தன் ஒரே பிள்ளைக்காக கோடிக் கணக்குல சேர்க்கணும்னு ஆசைப்பட்டு, அந்தப் பிள்ளையை கூர்ந்து கவனிக்காமல் விட்டுட்டாங்க! எல்லாம் இவங்களே பார்க்கணும்னு ஆனதால, அவனைப் பாக்க முடியல! அவன் பாதை மாறி, கையை விட்டுப் போனப்புறம்தான் அந்தம்மா அதை உணர ஆரம்பிச்சாங்க!

    குடிச்சிட்டு ரோட்ல விழுந்து கிடக்கறது

    வேசி வீட்டு ஆட்கள் இவனைத் தேடி வர்றது...

    என்ன பாக்கி?

    இந்த நான்கு வருஷமா அந்தம்மா இவனால படற. அவமானங்கள் கொஞ்சமில்லை!

    அந்த வேதனை தாங்காமதான் படுக்கைல விழுந்தாங்க!

    நேர்ல அவனைக் கூப்பிட்டுக் கண்டிக்கலையா?

    செய்யாமலா இருப்பாங்க? ஒரு நாள் முழுக்க உட்கார வச்சுப் பேசினாங்க!

    என்ன சொன்னான்?

    மூஞ்சில அடிச்ச மாதிரி சொன்னான். 'என் இஷ்டப்படிதான் நான் இருப்பேன்! நீ யாரு என்னைக் கண்டிக்க?

    "அப்படியா? அப்படீன்னா கோடிக் கணக்கான இந்த சொத்துக்கள் உன்னை வந்து சேராது. இது பூர்வீக சொத்து இல்லை! உங்கப்பா சுயமாக சம்பாதிச்சது! இப்ப

    Enjoying the preview?
    Page 1 of 1