Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Uyir Painkili
Uyir Painkili
Uyir Painkili
Ebook107 pages46 minutes

Uyir Painkili

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Vidhya Subramaniam born in 1957. She was introduced in Mangaiyar Malar through a story Mudhal Konal in 1982. She has written more than 100 short stories and novels. She has got lots of rewards in her 27 years of career. Rewards like Anandhachari Arakattalai Virudhu for her essay Thennang Kaatru, Tamilnadu government award for her Vanathil Oru Maan short stories, Bharat State Bank's first prize for her Aagayam Arugil Varum essays, Kovai Lilly Deivasigamani Virudhu for her Kanniley Anbirunthal short stories. Beyond the Frontier has her outstanding short stories which are translated to english. Anthology of Tamil Pulp Fiction also has her 2 short stories.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580105703366
Uyir Painkili

Read more from Vidya Subramaniam

Related to Uyir Painkili

Related ebooks

Reviews for Uyir Painkili

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Uyir Painkili - Vidya Subramaniam

    http://www.pustaka.co.in

    உயிர்ப் பைங்கிளி

    Uyir Paikiliye

    Author:

    வித்யா சுப்ரமணியம்

    Vidhya Subramaniam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vidhya-subramaniam-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    1

    ஒரு சின்ன கரப்பான் பூச்சியால்தான் அவர்கள் இருவருக்கும் அறிமுகம் ஏற்பட்டது. பாரிஸ்கார்னரில் ஒரு பழைய கட்டிடத்தின் படியிறங்கி வெளியில் வந்தவள் திடீரென்று அலறியபடி துள்ளினாள். தன் தோளில் மாட்டியிருந்த கைப்பையையும் துப்பட்டாவையும் உதறி எறிந்தாள். துப்பட்டா பறந்து வந்து அவன் காலடியில் விழ அவன் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான். அனாதையாய்க் கிடந்த கைப்பையை பார்த்தபடி வெல்வெலத்துப் போய் நின்றிருந்தாள். அவன் கிட்டே வந்து அவனையும் அவள் கைப்பையையும் மாறி மாறிப் பார்த்தபடி துப்பட்டாவை அவளிடம் நீட்டினான்.

    என்னாச்சு?

    க...கரப்பான் பூச்சி...

    எங்க?

    பையில..

    அவன் பையை எடுத்து பிரிக்க இயலாத ஒரு சின்ன பாக்கெட்டிலிருந்து அது வெளியே வர அவள் மீண்டும் அலறினாள்.

    அவள் அந்தப் பூச்சியை தெருவோரம் கொண்டு போய் தட்டி விட காகம் ஒன்று கொத்திக் கொண்டு போயிற்று. அவன் பையை முடி அவளிடம் வந்து நீட்டினான்.

    தேங்க்ஸ். படியிறங்கும் போது எங்கோந்தோ பறந்து வந்துச்சு

    நீங்க குதிச்ச குதியில பயந்துக்கிட்டு பைக்குள்ளே பூந்துடுச்சு..

    அவன் முடித்தான். அவனை ஏற இறங்கப் பார்த்தான்.

    இன்டர்வியூக்கு வந்திங்களா? அவள் சென்று வந்த கட்டிடத்தைப் பார்த்தபடி கேட்டான்.

    ஆமா. ஆனா அங்க யாருமே இல்ல. அப்டி ஒரு கம்பெனியே இல்லன்றாங்க. இதை நம்பி காஞ்சிபுரத்துலேர்ந்து வந்தேன்.

    துக்கடா கம்பெனிக்கெல்லாம் அப்ளிகேஷன் போட்டா இப்படித்தான்

    நீங்களும் இங்கதான் வந்தீங்களா?

    இல்ல, ஆனா இதே பில்டிங்பதான் வேலை பாக்கறேன். இனிமே அப்ளிகேஷன் போடறதுக்கு முந்தி நல்லப் கம்பெனி யான்னு விசாரிச்சுக்கிட்டு போடுங்க, திருதிருன்னு முழிச்சுகிட்டு நிக்காம பத்திரமா அடுத்த பஸ் பிடிச்சு ஊர் போய்ச் சேருங்க.

    அவள் முகம் ஒரு மாதிரியாயிற்று. அழுது விடுவாள் போலிருந்தது.

    என்ன ஏதாவது பிரச்சனையா? வீட்ல திட்டப் போறாங்கன்னு பயமா?

    ப்ஸு... ரொம்ப கஷ்டதுல அம்மாட்ட இருந்த கொஞ்ச பணத்தையும் வாங்கிட்டு வந்துட்டேன. வேலை கிடைச்சுடும்ங்கற நம்பிக்கைல. அப்பா வேற ஹாஸ்பிடல்ல இருக்கார். எப்டி அம்மா மூஞ்சிவ முழிப்பேன்னு தெரியல.

    அவன் ரொம்ப பழகினாற்போல் தன் பிரச்சனையை படபட வென்று சொல்ல அவன் இரக்கத்தோடு பார்த்தான்.

    அதுக்கென்ன செய்ய முடியும்? அம்மாகிட்ட விஷயத்தைச் சொல்லிடு. யாரோ ஏமாத்தினதுக்கு நீ என்ன செய்வ?

    அம்மா ஒண்ணும் சொல்ல மாட்டாங்க எனக்குத் தான் கஷ்டமாயிருக்கு என்றவள் ஏதோ யோசனையோடு தயங்கியபடி அவனைப் பார்த்தாள்.

    நீங்க இதே ஊர் தானா

    ஆமா எதுக்குக் கேக்கற?

    உங்களுக்குத் தெரிஞ்சவங்க யார்கிட்டயாவது சொல்லி எனக்கொரு வேலை வாங்கித்தர முடியுமா?

    எனக்கு யாரையும்... அவன் அசட்டு சிரிப்பு சிரித்தான்.

    உம் பேரென்ன..?

    சம்யுக்தா

    அழகான பேர். எம்பேர் ஆனந்தன் நா எப்பவும் ஆனந்தமா இருக்கணும்னு நினைச்சு அப்பாவும் அம்மாவும் இப்டி பேர் வெச்சிருப்பாங்க. ஆனா ஆனந்தம்னா வீசை என்ன விலைன்னு கேக்கற வாழ்க்கை என்னது. எனக்கே இன்னும் நல்ல வேலை தேடிக்க என்னால் முடியல, நா எங்கேர்ந்து உனக்கு வேலை வாங்கித் தருவேன்?

    அவள் முகம் வாடிப் போயிற்று.

    சாரி, நா வரேங்க அவள் திரும்பி நடந்தாள்.

    ஒரு நிமிஷம் அவன் திடீரென்று அழைக்க சற்று தூரம் சென்று விட்டவள் நின்று ஆவலோடு அவனைப் பார்த்தாள்.

    உன் விலாசம் கொடுத்துட்டு போ பயோடேட்டாவோட, ஏதாவது வேலையிருந்தா கார்டு போடறேன்.

    அவள் தன் கைப்பையைத் திறந்து துண்டு பேப்பரில் விலாசம் எழுதி பயோடேட்டாவின் நகலும் ஒன்று எடுத்து கொடுத்தாள்.

    ப்ளிஸ் மறந்துடாம ஹெல்ப் பண்ணுங்க.

    நிச்சயமா அவன் தன் பர்ஸ் திறந்து தன்னுடைய அலுவலக விலாச அட்டையை அவளிடம் கொடுத்தான்…

    ஒரு வேலை நல்ல வேலை கிடைச்சுட்டா தகவல் கொடு

    நா வரேன். அவன் புன்னகையோடு தலையசைத்தான்.

    அவள் சாலையைக் கடந்து செல்லும் வரை நின்று பார்த்தான் ஏதா ஒரு கரப்பான் பூச்சி காரணமாக ஒரு பெண்ணின் அறிமுகம் என்பது இன்றைய ராசிபலனோ? பாவம் பார்த்தால் நல்ல பொண்ணாக தெரிகிறாள்.

    ச்சட் அப்பாவுக்கு என்ன உடம்பு என்று கேட்க மறந்து விட்டேனே...! அது சரி, ஐந்து நிமிடப் பழக்கத்தில் அவ்வளவு என்ன அக்கறை..? உனக்கு இருக்கற பிரச்சனைகளை முதலில் கவனி. அப்புறம் ஊருக்கு உதவுவாய்! உள்ளே ஒரு குரல் இடிக்க ஆனந்த் புன்னகையோடு தன் அலுவலகம் நோக்கி நடந்தான்.

    எங்க போய்ட்ட ஆனந்தா? உனக்கு போன் வந்தது.

    யாரு..?

    உங்க வீட்லேர்ந்து தான்.

    என்ன சொன்னாங்க..?

    எங்கிட்ட எப்டி சொல்லுவாங்க..? அரைமணி நேரம் கழிச்சு பண்ணுங்கன்னேன்.

    யார் பேசினது?

    உன் சிஸ்டர்னு நினைக்கறேன்

    ஆனந்தன் தன் இருக்கையில் அமர்ந்தான். அன்றைக்கு அனுப்பப்பட வேண்டிய டெலிவரி செலான்கள் டேபிளில் குவிந்திருந்தது. இத்தனையும், சரிபார்த்து ஸ்டோர்ஸ்க்கு அனுப்ப வேண்டும். ஆள் இல்லாததால் அவன் தான் எடுத்துச் சென்று பொருட்களை அனுப்பி விட்டு வர வேண்டும். இப்போது கிளம்பினால் தான் சரியாக இருக்கும், இங்கிருந்து அரைமணி தூரமுள்ள இடத்தில் தான் குடோன் இருக்கிறது. இனி சைக்கிளை மிதித்து செல்ல வேண்டும். அக்கா எதற்கு போன் பண்ணினாள் என்று தெரியவில்லை. வெயிட் பண்ணி பார்ப்பதா, அல்லது கிளம்புவதா? என்ன பெரிய விஷயமாக இருக்கப் போகிறது பணப்பிரச்சனையைத் தவிர..? வீட்டுக்குப் போய் கேட்டுக் கொண்டால் போதும்,

    ஆனந்தன் செலான்களை அடுக்கி எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

    படியிறங்கி கீழே

    Enjoying the preview?
    Page 1 of 1