Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Roja Malarae
Roja Malarae
Roja Malarae
Ebook110 pages46 minutes

Roja Malarae

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Vidhya Subramaniam born in 1957. She was introduced in Mangaiyar Malar through a story Mudhal Konal in 1982. She has written more than 100 short stories and novels. She has got lots of rewards in her 27 years of career. Rewards like Anandhachari Arakattalai Virudhu for her essay Thennang Kaatru, Tamilnadu government award for her Vanathil Oru Maan short stories, Bharat State Bank's first prize for her Aagayam Arugil Varum essays, Kovai Lilly Deivasigamani Virudhu for her Kanniley Anbirunthal short stories. Beyond the Frontier has her outstanding short stories which are translated to english. Anthology of Tamil Pulp Fiction also has her 2 short stories.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580105703373
Roja Malarae

Read more from Vidya Subramaniam

Related to Roja Malarae

Related ebooks

Reviews for Roja Malarae

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Roja Malarae - Vidya Subramaniam

    http://www.pustaka.co.in

    ரோஜா மலரே

    Roja Malarae

    Author:

    வித்யா சுப்ரமணியம்

    Vidhya Subramaniam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vidhya-subramaniam-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    1

    பத்தரை மணிக்கு கான்ஃபரன்ஸ். சிங்கப்பூர்காரனும் ஜப்பான்காரனும் குறித்த நேரத்துக்கு வந்துவிடுவார்கள். அவர்களுக்கு முன்னால் நேரம் தவறிப் போனால் கேவலம். ஒரு சின்ன விஷயத்திற்கே காலம் தவறுகிறவர்களை நம்பி எப்படி பிஸினஸ் கான்ட்ராக்டில் கையெழுத்துப் போடுவது என்று கேட்கக்கூடும். பாபு காரின் வேகத்தைக் கூட்டியபடி மணியைப் பார்த்தான்.

    இன்னும் பதினைந்தே நிமிடம்தான் இருந்தது. சிக்னல்களில் சிக்காமல் இருந்தால் போய் விடலாம். இல்லையென்றால் நிச்சயம் பத்து நிமிடமாவது தாமதமாகும். எதையாவது சொல்லி சமாளித்து அசடு வழிய வேண்டியதுதான், சென்னை நகரம் பாதி மும்பையாகிவிட்டது. கார்களும்,டூவீலர்களும் பெருத்து விட்டன. ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனும் ஒரு வாகனம் வைத்துக் கொள்ள விரும்புவது வளர்ச்சியின் அடையாளம்தான். ஆனால் அதற்கேற்றவாறு சாலைகள் திட்டமிடப்படாமைதான் நெருக்கடிக்குக் காரணம். நிமிடத்திற்கு நூறு வாகனம் போய்க் கொண்டிருந்த சாலைகளில் இப்போது ஆயிரம் வாகனங்கள் போகிறது. இன்னும் பத்து வருடத்தில் இன்னும் பல மடங்காகும். அதற்குள் வேறு எதாவது மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டால் சரி, இல்லாவிடில் நடந்து செல்வதே உத்தமம் என்றாகி விடும்.

    அடுத்த சிக்னல் நெருங்கியது. பச்சை விளக்கு மாறுவதற்குள் கடந்து விட வேண்டும் என்ற எண்ணத்தோடு இன்னும் சற்று வேகம் கூட்டி ஒட்டிய போது சாலையோரத்தில் இருந்த சிறிய பள்ளத்தில் கார்ச்சக்கரம் ஏறி இறங்கியதில் அதில் நிரம்பியிருந்த நீரும் சகதியும் சளக்கென்று யார் மேலோ தெறிக்க பாபு ஒரு வினாடி திகைத்தான். விரைந்து சென்றுவிடுவதா அல்லது நிறுத்தி மன்னிப்புக் கேட்பதா என்று யோசிப்பதற்குள் காரை ஓரமாக நிறுத்திவிட்டு எட்டிப் பார்த்தான்.

    சகதி தெறித்த புடவையோடு ஆத்திரமும் அழுகையுமாய் எரித்து விடுவது போல் பார்த்தாள் அந்தப் பெண், பாதிக்கப்பட்டது ஒரு பெண்ணாயிருக்கும் என்று பாபு எதிர்பார்க்கவில்லை. தர்மசங்கடத்தோடு காரை விட்டு இறங்கி அவளிடம் வந்தான்.

    சாரி... ஐ ஆம் வெரி சாரி... பள்ளத்தை நான் கவனிக்கல...

    அவள் இன்னும் அதிக ஆத்திரத்தோடு அவனைப் பார்த்தாள்.

    நீங்க சாரி சொல்லிட்டா என் சாரி சரியாய்டுமா...?

    மறுபடியும் சாரி! யாரும் வேணும்னு இப்படி செய்யறதில்ல.

    திமிர் கால் போற திமிர், பொறுக்கித்தனம்!

    மேடம், அவசரப்பட்டு வார்த்தைகளைக் கொட்ட வேண்டாம், ஐ ஹாவ் டூ சிஸ்டர்ஸ்! போற போக்குப் பொறுக்கித்தனம் பண்ற சீப்பான ஆள் இல்ல நான். இப்ப என்ன வேணும்னு சொல்லுங்க. அதோ ஒரு ஜவுளிக்கடை இருக்கு. வேணும்னா வாங்க. ஒரு புது சாரியே வாங்கித் தந்துடறேன். அங்கயே நிச்சயம் டிரெஸ்ஸிங் ரூம் இருக்கும் சேஞ்ச் பண்ணிக்கிட்டு போங்க!

    ஷட் அப்...! உங்க வேயையை வேற எங்கயாவது போய் வீசுங்க. அதுல சிக்கறதுக்குன்னு நிறைய மீன் காத்துட்ருக்கும்! அவள் திரும்பிப் பார்க்காமல் நடக்க, அவன் திகைத்துப் போய் அவளையே பார்த்தான். இப்படி ஒரு அவமானம் இந்த இருபத்தி எட்டு வயது வரை ஒரு முறை கூட ஏற்பட்டதில்லை. நல்ல குடும்பத்தில் பிறந்து, அக்கா தங்கையோடு அன்போடு வளர்ந்து, படித்து கெளரவமான நிலையில் இருப்பவனை ஒரே வினாடியில் பொறுக்கி விஸ்ட்டில் சேர்த்து விட்டுப் போய் விட்டாள் ஒரு பெண் என்பது அவனை நிலைகுலைய வைத்தது. சுற்றிலும் வேடிக்கை பார்த்த ஒரு சிலர் நமுட்டு சிரிப்போடு அவனைப் பார்த்தபடி நகர், பாபு கூசிப்போய் தன் காரில் ஏறினான்.

    இருபது நிமிடம் தாமதமாக அவன் கார் அந்த நட்சத்திர ஹோட்டலுக்குள் நுழைந்து நின்றது. தாமதத்திற்கு மனம் வருந்தி அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு தன் இருக்கையில் அமர்ந்தான். கான்பரன்ஸ் துவங்கியது. தங்கள் கருத்துக்களை ஒவ்வொருவராக தங்கள் முன்னிருந்த சிறிய மைக்கில் பேச, பாபுவின் கவனம் சிதறியது. என்ன முயன்றும் கான்பரன்ஸில் மனசு செல்லவில்லை. பொறுக்கி என்று பட்டம் கொடுத்து விட்டுப்போன அந்தப் பெண்ணினால் மனசு முழுக்க உளைச்சல் ஏற்பட சற்று நேரத்தில் அது தலைவலியாய் உருவெடுத்தது.

    வாட் மிஸ்டர் பாபு. ஆர் யு நாட் ஃபீலிங் வெல்? மும்பையிலிருந்து வந்திருந்த சந்திப் பாட்டியா சற்றே நெருங்கிக் கேட்க பாபு பரிதாபமாக அவரைப் பார்த்தான்.

    யெஸ் சார். கடுமையான தலைவலி

    முடியலன்னா பொய் ரெஸ்ட் எடுங்க மிஸ்டர் பாபு எப்படியும் நாளைக்குதான் பைனல் டிஸிஷன், கான்ட்ராக்ட் பைனிங் எல்லாம் உங்க அஸிஸ்டண்ட் மினிட்ஸ் கொண்டு வந்து கொடுப்பார் கிளம்புங்க

    தேங்ஸ்... தேங்ஸ் சார்... பாபு எழுந்தான். இன்னும் சற்று நேரம் அங்கிருந்தால் மண்டை வெடித்து விடும் போலிருந்தது. ஏஸி ஹாலிலிருந்து வெளியில் வந்தான், நட்சத்திர ஹோட்டலின் ஐந்தாவது மாடியின் காரிடாரில் மெல்ல நடந்து லிஃப்ட்டை அடைந்தான். காலையில் கண் விழித்த நேரமே சரியில்லை போலிருக்கிறது.

    இரவு முழுக்க கரண்ட் இல்லாமல் ஏஸி ரூம் புழுங்கி வியர்த்ததில் தூக்கம் கெட்டுப் போய் மூன்று மணி வரை தூங்கவில்லை. அதன் பிறகுதான் கரண்ட் வந்தது. அப்பாடா என்று படுத்தவன் தூங்கியே போனான. ஒன்பது மணிக்குக் கண் விழித்தவன் பதறிப் போனான். பத்தரைக்குள் ஹோட்டலில் இருக்க வேண்டுமே என்ற கவலையில் எழுந்து பாத்ரூமுக்குள் நுழைய, கரண்ட் மீண்டும் கழுத்தறுத்தது. குளித்து விட்டு வரும் போதே வியர்த்தது. வியர்வையோடு டைனிங் ஹாலுக்கு வந்தான். டேபிளில் சுடச்சுட பொங்கலை வைத்தாள் அம்மா,

    "ப்ஸ்... ஏற்கனவே வேர்க்குது. சூடா சாப்ட்டா இன்னும் வியர்த்து

    Enjoying the preview?
    Page 1 of 1