Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kasthuri Maane...
Kasthuri Maane...
Kasthuri Maane...
Ebook116 pages55 minutes

Kasthuri Maane...

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

Vidhya Subramaniam born in 1957. She was introduced in Mangaiyar Malar through a story Mudhal Konal in 1982. She has written more than 100 short stories and novels. She has got lots of rewards in her 27 years of career. Rewards like Anandhachari Arakattalai Virudhu for her essay Thennang Kaatru, Tamilnadu government award for her Vanathil Oru Maan short stories, Bharat State Bank's first prize for her Aagayam Arugil Varum essays, Kovai Lilly Deivasigamani Virudhu for her Kanniley Anbirunthal short stories. Beyond the Frontier has her outstanding short stories which are translated to english. Anthology of Tamil Pulp Fiction also has her 2 short stories.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580105703360
Kasthuri Maane...

Read more from Vidya Subramaniam

Related to Kasthuri Maane...

Related ebooks

Reviews for Kasthuri Maane...

Rating: 4.333333333333333 out of 5 stars
4.5/5

3 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kasthuri Maane... - Vidya Subramaniam

    http://www.pustaka.co.in

    கஸ்தூரி மானே...

    Kasthuri Maane…

    Author:

    வித்யா சுப்ரமணியம்

    Vidhya Subramaniam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vidhya-subramaniam-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    1

    எல்லோரும் காத்திருந்தார்கள். அவள் வரவில்லை. உங்க பொண்ணு வருவாளா, மாட்டாளா? வந்தவர்கள் கடிகாரத்தைப் பார்த்தபடி லேசான கோபத்தோடு கேட்டார்கள். செளந்தரம். கணவரைத் திரும்பிப் பார்த்தாள்.

    வந்துடுவா, வழில டிராபிக் பிரச்சனை ஏதாவது ஆயிருக்கும் அவர் பணிவாக பதில் சொன்னார்.

    மணி எட்டாகப் போகுது ஆறு மணிக்கு நாங்க வருவோம்னு தெரிஞ்சுமா? ஒரு வேளை உங்க பொண்ணுக்கு நாங்க வரது பிடிக்கலையா?

    அதெல்லாம் இல்ல, தயவு செய்து தப்பா நினைக்காதீங்க, வந்துடுவா.

    சபாபதி எழுந்து வாசல் பக்கம் வந்தார். காலியாயிருந்த தெருவை இருபக்கமும் நோட்டமிட்டார். படித்துப் படித்து சொல்லியும் கஸ்தூரி இப்படி கழுத்தறுப்பாள் என்று நினைக்கவில்லை.

    எட்டரை மணி வரை பொறுத்துப் பார்த்த அவர்கள் எழுந்தார்கள்.

    நாங்க கிளம்பறோம். நல்லா வளர்த்திருக்கீங்க பொண்ணை அவர்கள் வெளியேறினார்கள்.

    சபாபதி முகம் சிவக்க உள்ளே வந்தார். மனைவியை முறைத்துப் பார்த்தார்.

    என்ன சொல்லிட்டு போறாங்கன்னு கேட்ட இல்ல?

    பொண்ணு பார்க்க வாங்கன்னா வீட்டுக்கு வராம வெளியவே சுத்துன்னு நா சொல்லிக் கொடுத்து வளர்த்தா மாதிரி இல்ல அவங்க பேசிட்டு போறாங்க!

    பேசாம பின்ன என்ன செய்வாங்க? உம்பொண்ணு கழுத்தறுத்துட்டாளே!

    வந்ததும் வெட்டிப் போட்ருங்க.

    செளந்தரம் உள்ளே வந்தாள். செய்து வைத்திருந்த இனிப்பு காரம் எல்லாம் அப்படியே இருந்தது.

    "இந்த பெண்ணுக்கு என்னாயிற்று? கண்டிப்பாக ஆறு மணிக்குள் வீட்டுக்கு வந்து விடுவதாகச் சொன்னதால்தானே எல்லா ஏற்பாடுகளும் செய்தனர். பெண் பார்க்க வருகிறார்கள் என்று சொன்னதும் சிரித்துக் கொண்டுதானே இருந்தாள். வேண்டாம் என்று மறுத்திருந்தாலாவது சந்தேகப்படலாம். அப்படியும் சொல்லவில்லை. பெண் பார்க்க வரும்போது கட்டிக் கொள்வதற்கு புடவை ஜாக்கெட் கூட அயர்ன் பண்ணி தயாராக வைத்து விட்டுப் போனவளுக்கு - சாயங்காலத்திற்குள் என்னாயிற்று? இத்தனைக்கும் மூன்று மணியோடு கல்லூரி முடிந்து விடும். சாதாரணமாக நாலு மணிக்கெல்லாம் வீட்டிற்கு வந்து விட்டால் விடிய விடிய கம்ப்யூட்டரில் என்னதான் செய்வாளோ என்று சலித்துக் கொள்ளும் அளவுக்கு கம்ப்யூட்டர் முன் அமர்ந்து விடுவாள். அப்படிப்பட்டவள் இன்று மணி ஒன்பதாகியும் ஆனைக் காணவில்லை என்றால் என்னவென்று நினைப்பது? அவளுக் கென்று டூவீலர் இருக்கிறது. ஒருவேளை அது வழியில் எங்காவது ரிப்பேராகி விட்டதா அல்லது விபத்து கிபத்து.. ஏதாவது..' செளந்தரத்திற்கு வயிற்றைக் கலக்கியது.

    வாசலில் வண்டி நிற்கும் சத்தம் கேட்டது. வேகமாக வெளியில் வந்தான். கஸ்தூரிதான் வண்டியை உள்ளே ஏற்றி பூட்டிக் கொண்டிருந்தாள். செளந்தரம் எதுவும் பேசாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டு உள்ளே போனாள். வீட்டின் நிசப்தம் பயமுறுத்துவதாயிருந்தது. கஸ்தூரி உள்ளே வந்தாள்.

    செளந்தரம் ஒரு தட்டு நிறைய கேசரியும் பஜ்ஜியும் எடுத்து வந்து நீட்டினாள்.

    சாப்டு.? வந்தவங்கள்ளாம் எதுவும் சாப்ட எங்களுக்கும் சாப்டப் பிடிக்கல. நீதான் எல்லாத்தையும் சாப்ட்டாகணும்.

    கஸ்தூரி எதுவும் பேசாமல் மாடிக்கு செல்ல முயன்றாள்.

    நில்லுடி..! உம்மனசுல என்ன நினைச்சுட்டுருக்க? உங்கிட்ட கேட்டுக்கிட்டுதானே நாங்க அவங்களை வரச் சொன்னோம். அப்பறம் ஏன் இப்டி கழுத்தறுத்த? கழுத்தறுக்கற எண்ணம் காலேலல் போகும்போது சத்தியமா இல்லம்மா, அப்பறம்தான்... கஸ்தூரி சட்டென்று பேச்சை நிறுத்திவிட்டு அம்மாவைப் பார்த்தான்.

    இனிமே எனக்கு வரன் தேடற வேலை எல்லாம் வேண்டாம், ஏன்? எனக்கு கல்யாணம் வேண்டாம்.

    இப்போதைக்கு வேண்டாமா இல்ல எப்பவுமே வேண்டாமா?

    தெரியல...

    என்னடி பதில் இது. ரெண்டுங்கெட்டானா? உங்க பொண்ணு சொல்றது காதுல விழுதா? செளந்தரம் - மெளனமாய் உட்கார்ந்திருக்க புருஷனிடம் கத்தினாள், அவர் கஸ்தூரியை ஏறிட்டுப் பார்த்தார்.

    என்னாச்சு கஸ்தூரி உனக்கு? வேற யாரையாவது நீ விரும்பறயா? எதாயிருந்தாலும் - வெளிப்படையா சொன்னாத்தானே புரியும்.

    அப்டி எதுவும் இல்ல. கஸ்தூரி ஒற்றை வரியில் பதில் சொல்லிவிட்டு மாடிக்கு வந்தாள்.

    நாலெழுத்து படிச்சுட்டு சம்பாதிக்கற திமிர்.

    அம்மாவின் வார்த்தைகள் துரத்தியது.

    கைப்பையை கட்டிலில் எறிந்து விட்டு பாத்ரூமில் நுழைந்தாள், ஷவரை திறந்துவிட்டு அடியில் நின்றாள். சில்லென்று நீர் பட

    உடம்பின் உஷ்ணம் குறைந்தது. அப்போதும் மாசின் உஷ்ணம் குறையவில்லை. எவ்வளவு நேரம் ஷவரின் கீழ் நின்றாளோ, படபடவென்று யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டதும், ஈர உடையோடு வந்து கதவைத்திறந்தாள். அப்பாவின் ஒன்றுவிட்ட தங்கை மகன் வாஞ்சிநாதன் நின்றிருந்தான்.

    என்ன?

    நா வீட்டை விட்டுப் போறேன் கஸ்தூரி?

    திடீர்னு உனக்கென்ன ஆச்சு?

    நீ பண்ணின காரியத்துக்கு எனக்கு கிடைச்ச தண்டனை. என்னை வீட்டை விட்டுப் போகச் சொல்லிட்டார் மாமா.

    கஸ்தூரி திகைப்போடு அவனைப் பார்த்துவிட்டு கீழே இறங்கி வெந்தாள்,

    எதுக்காக வாஞ்சியை வீட்டை விட்டுப் போகச் சொன்னீங்க? அப்பாவிடம் கேட்டான்.

    ஈர உடையோடு எதிரில் நின்றவளை விழித்துப் பார்த்தார் அவர்.

    ஏற்கனவே லவ்வு கிவ்வுன்னு உங்கிட்ட உளறினவன்தானே, இன்னிக்கு நீ செய்த காரியத்தைப் பார்த்தா நீ இவனுக்கு கிரீன் சிக்னல் காட்டிட்டயோன்னு ஒரு சந்தேகம். அதான் போகச் சொல்லிட்டேன்.

    கஸ்தூரி முகச்சுளிப்போடு அவரைப் பார்த்தாள்.

    சபாபதி எம்.ஏ. எம்.ஃபில்.பி.,ஹெச்டி புரொபசர் ஆஃப் இங்கிலீஷ் டிபார்ட்மென்ட் இவ்ளோ படிச்சுட்டு உங்க புத்தி எவ்ளோ சீப்பா யோசிக்குதுப்பா!

    அப்டின்னா ஏன் இன்னிக்கு நீ லேட்டா வீட்டுக்கு வந்த? ஏன் கல்யாணாம் வேண்டான்ற எல்லாத்துக்கும் காரணத்தை சொல்லேன் பார்ப்போம்,

    "காரணம்தானே? போகப் போக நீங்களே புரிஞ்சுப்பீங்க. ஆனா வாஞ்சிக்கும் அதுக்கும் ஒரு சம்பந்தமுமில்ல, அவரை அனாவசியமா கஷ்டப்படுத்த வேண்டாம். சரியா? ஒண்ணு மட்டும் நிச்சயம். நீங்க அவரை வெளில அனுப்பினிங்கன்னா

    அவரோட இறங்கிப் போக. எனக்கு ரெண்டு நிமிஷம் ஆகாது. ஆனா நீங்க நினைக்கறா மாதிரி எனக்குள்ள காதல் கத்திரிக்கா ஏதாவது

    Enjoying the preview?
    Page 1 of 1