Anjathe Anju
By Rajesh Kumar
4/5
()
About this ebook
Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.
Read more from Rajesh Kumar
Vivek, Vishnu, Oru Vidukadhai Rating: 4 out of 5 stars4/5Vivek Thotrathillai Rating: 5 out of 5 stars5/5Kuttralathil Oru Kutram Rating: 0 out of 5 stars0 ratingsSorgam Rating: 5 out of 5 stars5/5Mathangalil Aval Margazhi Rating: 5 out of 5 stars5/5Karuppu Udai Devathai! Rating: 5 out of 5 stars5/5Manidhan Rating: 5 out of 5 stars5/5Mella Mella Oru Thigil Rating: 5 out of 5 stars5/5Puthiya Abaayam Rating: 4 out of 5 stars4/5Theeratha Dhrogam Rating: 5 out of 5 stars5/5Sivappai Oru Pournami Rating: 4 out of 5 stars4/5Nalliravu Seithi Rating: 4 out of 5 stars4/5Naan Naaneythaan Rating: 4 out of 5 stars4/5Uyir Urugum Satham Rating: 5 out of 5 stars5/5Sorry Wrong Number Rating: 4 out of 5 stars4/5Dinasari Moondru Kolaigal Rating: 4 out of 5 stars4/5Uyir Meethu Thaagam Rating: 4 out of 5 stars4/5Vendru Vaa Vivek Rating: 3 out of 5 stars3/5Shimla Ramya Rating: 5 out of 5 stars5/5Isai Kolai Rating: 5 out of 5 stars5/5Vivek, Roopala Thuppariyum Novelgal Thoguthi 1 Rating: 4 out of 5 stars4/5Oru Kulir Kaala Kutram Rating: 5 out of 5 stars5/5Thavarukkum Thavarana Thavaru! Rating: 5 out of 5 stars5/5Only Vivek! Rating: 5 out of 5 stars5/5Antha 69 Naatkal! Rating: 5 out of 5 stars5/5‘Sorry... Konnuttean..!’ Rating: 0 out of 5 stars0 ratingsUravugal Pirivathillai Rating: 5 out of 5 stars5/5Good Night Krotham! Rating: 5 out of 5 stars5/5Oru Everest Thavaru! Rating: 5 out of 5 stars5/5
Related to Anjathe Anju
Related ebooks
Mella Mella Oru Thigil Rating: 5 out of 5 stars5/5Vivekum 41 Nimishangalum Rating: 3 out of 5 stars3/5Pathinooravathu Avatharam Rating: 4 out of 5 stars4/5Nenjellam Nerunji Mul Rating: 0 out of 5 stars0 ratingsAinthaam Pirai Rating: 0 out of 5 stars0 ratingsKonjam Kadhal Vendum Rating: 4 out of 5 stars4/5Iruttil Oru Vaanampaadi Rating: 5 out of 5 stars5/5Jeeva Jeeva Jeeva Rating: 0 out of 5 stars0 ratingsAabathu Ingey Aarambam Rating: 5 out of 5 stars5/5Iravu Thamarai Rating: 3 out of 5 stars3/5Thik… Thik… Thilaka Rating: 5 out of 5 stars5/5Minnalaai vaa vivek Rating: 4 out of 5 stars4/5Sivappai Oru Pournami Rating: 4 out of 5 stars4/5Virpanaiku Alla Rating: 5 out of 5 stars5/5Muthal Pagal Rating: 5 out of 5 stars5/5Vivek VS Vivek Rating: 5 out of 5 stars5/5Moodupani Veedu Rating: 5 out of 5 stars5/5Thavarukkum Thavarana Thavaru! Rating: 5 out of 5 stars5/5Shimla Ramya Rating: 5 out of 5 stars5/5Vivek Athu Visham Rating: 5 out of 5 stars5/5Sorry Wrong Number Rating: 4 out of 5 stars4/5Raja Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsVidathey Vivek! Vidathey Rating: 4 out of 5 stars4/5August 5 Athikaalai Rating: 5 out of 5 stars5/5Maaya Hospital, Marupadiyum Iranthavan and Oru latsam Vinaadikal Rating: 2 out of 5 stars2/5Singapore Vinaadigal and Thigil Kaalam Rating: 4 out of 5 stars4/5Oru Thuli Kadal Rating: 2 out of 5 stars2/5Karuppu Pournamigal Rating: 5 out of 5 stars5/5Nooru Degree Thendral Rating: 0 out of 5 stars0 ratingsThirumarana Azhaippithazh Rating: 5 out of 5 stars5/5
Related categories
Reviews for Anjathe Anju
1 rating0 reviews
Book preview
Anjathe Anju - Rajesh Kumar
http://www.pustaka.co.in
அஞ்சாதே அஞ்சு
Anjathe Anju
Author:
ராஜேஷ்குமார்
Rajesh Kumar
For more books
http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 29
அத்தியாயம் 30
அத்தியாயம் 31
அத்தியாயம் 32
என்னுரை
அன்புள்ள வாசக நெஞ்சங்களுக்கு,
வணக்கம்!
பெண்கள் எப்போதும் மென்மையானவர்கள், இயல்பாகவே பயந்த சுபாவம் கொண்டவர்கள். எளிதில் ஏமாந்து போய்விடுபவர்களும் கூட இந்த அடிப்படை குணங்களை வைத்துத்தான் பெண்களை இந்த சமூகம் 'வீக்கர் செக்ஸ்' (Weaker Sex) என்று சொல்லி வருகிறது. ஒரு எழுத்தாளனான எனக்கு இதில் உடன்பாடு கிடையாது. உடலைப் பொருத்தவரை பெண்கள் மென்மையானவர்களாக இருக்கலாம். ஆனால் உள்ளத்தைப் பொருத்தவரை அவர்கள் எதற்கும் அஞ்சாத 'இரும்பு மனம்' கொண்டவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் யாருக்கும் எதற்காகவும் பயப்படக் கூடாது. பிரச்னை எதுவாக இருந்தாலும் அதைத் துணிவோடு பாதிர்கொள்ளப் பழகிக் கொள்ள வேண்டும்.
'அஞ்சாதே அஞ்சு' என்னும் தலைப்பில் வந்துள்ள இந்த நாவல் அப்படிப்பட்ட ஒரு பெண்ணின் கதையைத் தான் சொல்கிறது. நாவலில் வரும் அஞ்சு எதற்கும் அஞ்சுவது இல்லை. பிரச்சனை அவள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு பக்கமும் பரபரப்பு நிறைந்தவை.
மிக்க அன்புடன்,
ராஜேஷ்குமார்
1
கைத்தட்டல் உண்மையாகவே கலைவாணர் அரங்கத்தை அதிர வைத்தது. கைத்தட்டல் ஓய்வதற்காக காத்திருந்துவிட்டு மறுபடியும் பேச்சை ஆரம்பித்தார் டைரக்டர் ஜெயன்.
டைரக்டர் பிரசன்னா திடீரென்று இந்த சினிமா துறைக்கு வந்தவரில்லை... வீட்டை விட்டு, கிராமத்தை விட்டு, பெற்றவர்களிடம் கோபித்துக் கொண்டு பிழைப்புக்காக சென்னை வந்து- பெரிய டைரக்டர்களுக்கு சிகரெட் வாங்கிக் கொடுத்தது- காப்பி வாங்கிக் கொடுத்து, காக்கா பிடித்து டைரக்டர் ஆனவரில்லை... பிரசன்னா ஓரளவுக்கு வசதியான குடும்பத்தில் பிறந்தவர். தான் பார்த்துக் கொண்டிருந்த மூவாயிரம் ரூபாய் சம்பள வேலையை ராஜினாமா செய்துவிட்டு சினிமா படத்தை டைரக்டு செய்யவேண்டும் என்கிற ஆசையில் சென்னைக்கு வந்தவர். இந்த ஐந்து வருட காலத்தில் ஆறு படங்களை டைரக்டு செய்து வெளியிட்டுள்ளார். இதில் முதல் ஐந்து படங்கள் வெள்ளி விழா படங்கள். ஆறாவது படத்தின் நூறாவது நாள் விழா விழாவைத்தான் நாம் இப்போது கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இதுவும் வெள்ளி விழா படம்தான் என்பதில் சந்தேகமில்லை.
அரங்கத்தில் மறுபடியும் கைத்தட்டல் எழுந்தது.
டைரக்டர் ஜெயன் தொடர்ந்தார். இவ்வளவு திறமைசாலியான இவரிடம் எனக்குப் பிடிக்காத ஒரு அம்சமும் உண்டு. இவர் இந்த சமுதாயத்திற்கும்- மக்கள் நலனுக்கும் பயன்படக்கூடிய வகையில் நல்ல கருத்துக்களைக் கொண்ட படங்களைத் தயாரிப்பதில்லை, அதற்கு மாறாக வன்முறையைத் தூண்டும் க்ரைம் சம்பந்தப்பட்ட படங்களை மட்டுமே தயாரிக்கிறார். டைரக்டர் பிரசன்னாவுக்கு க்ரைம் கதைகளில் விருப்பம் இருக்கலாம். அதில் தப்பில்லை. க்ரைம் கதைகளை வைத்து இரண்டு மூன்று படம் எடுக்கலாம். அதிலும் தப்பில்லை. ஆனால் தொடர்ந்து அவர் அதே மாதிரியான படங்களைத் தரத்தான் வேண்டுமா...? நல்ல கதையம்சம் கொண்ட சமூகக் கதைகளையும் படமாக எடுக்கலாமே...? என் கருத்தை டைரக்டர் பிரசன்னா ஏற்றுக்கொள்வார் என்று நினைத்து, அவர் மேன்மேலும் பேரும் புகழும் பெற விரும்பி வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.
கையொலிக்கு நடுவில் பேச்சை முடித்துக் கொண்டு தன் இருக்கைக்குத் திரும்பினார் டைரக்டர் ஜெயன். மேடை வெளிச்சத்தில் அவருடைய பின்னந்தலை வழுக்கை பூர்ண சந்திரனாய் மின்னியது.
விழா தலைவர் மைக்கைப் பிடித்தார். அவருக்குப் பின்னால் மேடையில் நீளமான மஞ்சள்நிற வெல்வெட் துணியில் 'அந்த ராத்திரிகள் அர்த்தமுள்ளவை' 100-வது நாள் விழா. அனைவரும் 'வருக வருக' என்று ஜிகினா எழுத்துக்களைக் காட்டியது. மேடையின் போகஸ் விளக்கு வெளிச்சத்தில், அந்த எழுத்துக்கள் கண்களைப் பறிக்கிற மாதிரி மின்னியது.
விழாத்தலைவர் மைக்கில் சொல்லிக் கொண்டிருந்தார். இதுவரையிலும் தன்மேல் பொழியப்பட்ட பாராட்டுதல்களுக்கு நன்றி தெரிவித்து டைரக்டர் பிரசன்னா அவர்கள் பேசுவார்கள்.
பிரசன்னா தான் உட்கார்ந்திருந்த நாற்காலியில் இருந்து எழுந்தான். கரகோசம் பிய்த்துக் கொண்டு போயிற்று.
முழுக்கை வெள்ளை சர்ட்டும், வெள்ளைப் பேண்ட்டும் அணிந்து பிரசன்னாவுக்கு முப்பது வயதிருக்கலாம். கொஞ்சம் சதை போட்ட மாதிரி உடம்பு. அடர்த்தியான தலைமுடியை கோணல் வகிடெடுத்து- வலது பக்கமாய் புஸ்சென்று சீவியிருந்தான். மெலிதான இள நீல நிற குளிர் கண்ணாடி கண்களை இறுக்கமாய்ப் போர்த்தியிருந்தது.
மைக்கை இடதுகையால் பற்றிக்கொண்டு கணீரென்ற குரலில் பேச்சை ஆரம்பித்தான் பிரசன்னா.
என்னை வாழ்த்த வந்திருக்கும் திரையுலகப் பெரியவர்களே! உங்கள் பொற்பாதங்களுக்கு என் பணிவான வணக்கம். டைரக்டர் ஜெயன் என்னைப் பற்றிப் பேசும் போது நான் க்ரைம் படங்களை மட்டுமே இயக்குவதாக சொன்னார். அது உண்மைதான். நாம் எந்தக் காரியத்தை செய்தாலும் அதில் ஒரு தனித்துவம் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறவன் நான். இந்த சினிமாத் துறையில் சமூகப் படங்களை இயக்குவதற்காக - திறமை வாய்ந்த அநேக டைரக்டர்கள் இருக்கிறார்கள். ஆனால் க்ரைம் கதைகளைப் படமாக்குபவர் யாருமில்லை. எனவேதான் நான் இந்தக் கதையில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தேன். நான் இந்த சென்னைக்கு வந்த புதிதில்...
பிரசன்னா நிற்காமல் பொழியும் மழையைப் போல் ஒரு அரை மணி நேரம் பேசினான். அவன் முகம் திரும்பின பக்கமெல்லாம்... வீடியோ காமிராவும் திரும்பியது. பிளாஷ் காமிராக்கள் ஓயாமல் மின்னிக் கொண்டிருந்தன.
அவன் பேச்சை முடித்துக்கொண்டு, மேடையை விட்டு இறங்கி- வந்திருந்த நடிகர் நடிகையர்கனிடமும், டைரக்டர்களிடம் ஓரிரண்டு நிமிடம் பேசிக் கொண்டிருந்து விட்டு, கலைவாணர் அரங்கிலிருந்து வெளியே வந்து காரை நோக்கி நடந்தான்.
முதுகில் கை விழுந்தது.
திரும்பினான்.
அந்த இளைஞன் புல்சூட்டில் நின்றிருந்தான். பிரசன்னா முகம் மலர்ந்தான்.
அலோ... கிருஷ்ணசந்தர்... விழாவுக்கு இப்பத்தான் வர்றீங்களா?
அவன் சிரித்தான். சரியாபோச்சு... டைரக்டர் ஜெயன் உங்களைப் பாராட்டிப் பேசிட்டிருக்கும்போதே, வந்துட்டேன்...
ரொம்ப நன்றி... நான் கொடுத்த அழைப்புக்கு மதிப்பு கொடுத்து வந்திருக்கீங்க... ரொம்ப நன்றி...
நான் வரமாட்டேன்னு நினைச்சீங்களா...?
பின்னே... நீங்க பெரிய வியாபாரி... இந்த மாதிரி சினிமாக்காரங்க விழாவுக்கெல்லாம் வர நேரமிருக்குமா...? நம்பும் காருக்கு வாங்களேன், பேசிட்டே போகலாம்...
பிரசன்னா சொல்ல- கிருஷ்ணசந்தர் தயக்கமாய் ஒரு சின்ன உதவி...
என்றான்.
என்ன...?
நீங்க ஒரு பேட்டி தரணும்...
யாருக்கு? உங்களுக்கா...?
நோ... நோ... எனக்கில்லை... எனக்குத் தெரிந்த ஒரு பத்திரிகை ரிப்போர்ட்டருக்கு... உங்க கிட்டே ஒரு பேட்டி எடுக்கணுமாம்... ரொம்ப நாளா ஒரே நச்சரிப்பு...
என்ன பத்திரிகை...?
குட் சொசைட்டி...
இங்கிலீஷ் பத்திரிகையா...?
ஆமாம்...
சரி... ரிப்போர்ட்டரையும் கார்ல ஏறச் சொல்லுங்க... வீட்டுக்குப் போற வழியிலேயே பேட்டியை முடிச்சிக்கலாம்...
உங்க கார் வேண்டாம்... பிரசன்னா... என்னோட அம்பாசிடர் காரிலேயே போயிடலாம்... வாங்க...
பேட்டியை நாளைக்கு வெச்சுக்கக் கூடாதா...?
ஏதோ சிறப்பு மலராம்... உடனே பேட்டி எடுத்து அனுப்பணுமாம்... சிரமம் பார்க்காமே ஒத்துழைக்கணும், பிரசன்னா...
சரி இருங்க... டிரைவர்கிட்டே சொல்லிட்டு வந்துடறேன்
பிரசன்னா நகர்ந்து போய்- தன்னுடைய கார் டிரைவரைக் கூப்பிட்டு விசயத்தைச் சொல்லிவிட்டு திரும்பவும் கிருஷ்ணசந்தரிடம் வந்தான்.
வாங்க... போகலாம்...! ரிப்போர்ட்ட ர் எங்கே...?
காரில்...
காரை நெருங்கினார்கள். அதே விநாடி
காரின் பின்சீட்டுக் கதவைத் திறந்து கொண்டு- அந்த அழகான பெண் இறங்கினாள். பாப் தலை. முகம் பொன்னிறம் என்று சொல்லத் தோன்றியது. உடம்பின் ஏற்ற இறக்கங்களில்- சைனா சில்க்சேலை ஒன்று ஆலிவ் நிறத்தில் படர்ந்திருந்தது. இடுப்பில் சேலைக்கட்டு வெகுவாய்த் தாழ்ந்திருக்க தொப்புள் சுழி பளிச்சென்று இருக்குமிடத்தைக் காட்டிக் கொடுத்தது.
பிரசன்னா! மீட் மிஸ் பவித்ரா! 'குட் சொசைட்டி' ரிப்போர்ட்டர்... உங்களைப் பேட்டி காணப்போறது இவங்கதான்...
கிருஷ்ணசந்தர் சொல்ல, பிரசன்னா சிரித்தான்.
நான் எதிர்பார்க்கவேயில்லை...
எதை...?
ஒரு அழகான பெண் ரிப்போர்ட்டரை...
வணக்கம் சார்...
என்றாள் பவித்ரா. வரிசை பிறழாத பற்கள் ஒரு விநாடி நேரம் தெரிந்து மறைந்தது.
வணக்கம்...
பிரசன்னாவும் கை குவித்தான்.
கிருஷ்ணசந்தர் டிரைவிங் சீட்டுக்குத் தாவியபடியே சொன்னான். இரண்டு பேரும் பின்னாடி சீட்ல வசதியா உட்கார்ந்து பேட்டியை நடத்துங்க... நான் காரை மெதுவா ஓட்டறேன்...
பவித்ராவும், பிரசன்னாவும் காரின் பின்சீட்டில் ஏறி கொஞ்சம் இடைவெளிவிட்டு உட்கார்ந்தார்கள்.
கார் புறப்பட்டது.
கார் கிளம்பி அண்ணாசாலையின் போக்குவரத்து நெரிசலில் கலந்ததும். பவித்ரா தன் பாப் தலையைக் கோதிக் கொண்டே பிரசன்னாவிடம் திரும்பினாள்.
சார்... நான் இன்னிக்குத்தான் முதல் முதலா பார்க்கிறேன்... பொதுவா நான் சினிமா நடிகர்களையோ, நடிகைகளையோ பார்த்துப் பேசறதுல ஆர்வம் காட்ட மாட்டேன்... ஆனால் உங்களை மட்டும் பார்த்து பேசி ஒரு பேட்டி எடுக்கணும்ன்னு கடந்த ஒரு மாசமாவே என் மனசுக்குள்ளே ஒரு ஆசை...
பிரசன்னா சிரித்தான்.
காரணம்...?
காரணம் உங்க படம் ஒன்னை வீடியோவில் பார்த்தேன்... கதை விறுவிறுப்பாகவும் நறுக்கு தெரிச்ச மாதிரியும் கொண்டு போயிருந்தீங்க...
நன்றி...
அவசரப்பட்டு நன்றி சொல்லிடாதீங்க... இனிமேதான் உங்களைத் திட்டப் போறேன்...
என்ன திட்டப் போறீங்க...?
மக்களுக்குப் புரியற மாதிரி கதை சொல்ற திறமை உங்ககிட்ட இருக்கு... நீங்க எழுதற வசனங்களில் பிளேடோட கூர்மை தெரியுது... ஆனால் இந்தத் திறமையெல்லாம் ஒரு சமூகநலத்துக்கு உபயோகப்படணும்... இந்த சமுதாய அமைப்புல எத்தனையோ குறைபாடுகள் இருக்கு. தீர்க்கப்படாத பிரச்சினைகள் இருக்கு... மக்கள் நல்லதையெல்லாம் மறந்துட்டு வர்றாங்க... அவங்களைத் திருத்தற மாதிரி நீங்க ஏன் படம் பண்ணக்கூடாது...?
பிரசன்னா சிரித்தான்.
ஒரு சினிமா படத்தைப் பார்த்து மக்கள் திருந்துவாங்கன்னு நான் நினைக்கலை.
எப்படி சொல்றீங்க...?
சினிமா பார்க்க மக்களுக்கு நாம் போதனை பண்ற மாதிரி படம் எடுத்தா... அதைப் பார்க்க எவனும் வர மாட்டான்... 'காந்தி' படத்துக்கு வரிவிலக்கு கொடுத்தாதானே பார்க்க வர்றாங்க... அதே ஒரு செக்ஸ் படத்தைத் தியேட்டர்ல போட்டுப் பாருங்க... நூறு ரூபாயானாலும் பிளாக்ல டிக்கெட் வாங்கிட்டுப் போவாங்க...
அதுக்குக் காரணம் உங்களை மாதிரியான டைரக்டர்ஸ்தான்... க்ரைம் கதைகளைப் பார்க்கிறதுனால என்ன பயன்...?
இரண்டரை மணி நேரம் பொழுதுபோகும்...
பொழுதுபோகும்... ஒத்துக்கிறேன். ஆனால் படத்தைப் பார்க்கிற இளைஞர்கள் மனசுல ஒரு விஷச் செடியை வளர்த்திட்டு வர்றீங்க...
விஷச் செடியா...?
ஆமா, விஷச் செடிதான்... கொலை செய்யறது எப்படி...? ஒரு பெண் தனியா இருந்தால் அவளைக் கற்பழிக்கிறது எப்படி...? ஒரு வீட்டைக் கொள்ளையடிக்கிறது எப்படி...? இதைத்தான் உங்க படங்கள்ல நீங்க செஞ்சுட்டு வர்றீங்க... இது நீங்க வளர்த்துவிடற விஷச்செடி இல்லையா...?
காரை ஓட்டிக்கொண்டிருந்த கிருஷ்ணசந்தர் திரும்பினான். பவித்ராவைப் பார்த்துப் புன்னகைத்தான்.
கேள்வியெல்லாம் ரொம்ப சூடா இருக்கே...?
சூடாத்தான் இருக்கும். ஏன்னா... எம் மனசில எரிஞ்சிட்டிருக்கிற நெருப்பு ஜூவாலைதான் கேள்வியா வருது...
பிரசன்னா இறுக்கமான முகத்தோடு பவித்ராவை ஏறிட்டான். இதோ பாருங்க மிஸ் பவித்ரா... க்ரைமும் செக்ஸும் மனித வாழ்க்கையில் மேஜர் பாயிண்ட்ஸ், செக்ஸ் என்கிற உணர்ச்சியில்லாத ஜீவராசி உலகத்துல. கிடையாது... அதே மாதிரிதான் க்ரைம். க்ரைம் கிராமத்திலேயும் இருக்கு... நகரத்திலேயும் இருக்கு. நான் இதுவரைக்கும் ஆறு படம் எடுத்திருக்கிறேன். இந்த ஆறு படத்திலேயும் கொலையாளி போலீஸ் மாட்டிக்கிறான்... என்னுடைய படங்களெல்லாம் பார்க்கிற மக்களுக்கு ஒரு பாடம்... குற்றம் பண்ணினவன் சட்டத்தோட தண்டனையிலிருந்து தப்பிக்கவே முடியாதுன்னு ஆணித்தரமா சொல்றேன்... இது சமுதாயத்துக்கு நான் செய்யற நன்மையில்லையா...?
நீங்க ஆயிரம்தான் சொல்லுங்க... நான் ஒத்துக்க மாட்டேன்...
பிரசன்னா லேசாய்க் கோபத்துக்குப் போனான். உங்களை மாதிரி சிலர் ஒத்துக்காததைப் பத்தி எனக்குக் கவலையில்லை... நான் என்னோட மனத்திருப்திக்காகவும்- என்னோட படங்களை விரும்பற மக்களுக்காகவும்தான் படம் எடுக்கிறேன்... நீங்க பேட்டியை இத்தோடு முடிச்சிக்கலாம்... இனிமே உங்க கேள்விக்கு நான் பதில் சொல்லத் தயாராயில்லை...
பிரசன்னா முகத்தைத் திருப்பிக் கொண்டான். காரில் புழுக்கமான சூழ்நிலை உலவியது,
பத்து நிமிடங்களுக்குப் பிறகு பவித்ரா சிவந்துபோன முகத்தோடு- நந்தனம் அருகே இறங்கிக் கொண்டாள். 'சாரி' சொல்லிவிட்டு அவள் நகர்ந்து போனதும் கிருஷ்ணசந்தர் காரைக் கிளப்பினான்.
ராங்கிகாரி
பிரசன்னா திட்டினான்.
அவள் கேட்டது நியாயமான கேள்விதானே, மிஸ்டர் பிரசன்னா?
எப்படி நியாயம்? எந்தக் குற்றத்தை எவன் பண்ணினாலும் கடைசியில் சட்டத்தோட பிடியில் மாட்டித்தான் ஆகணும் என்கிற கருத்தைச் சொல்றேனே... அது தப்பா...?
நீங்க சொல்றபடி பார்த்தால் குற்றம் பண்ணினவன் யாருமே தப்பிக்க முடியாதுன்னு சொல்றீங்க...?
ஆமா...
கிருஷ்ணசந்தர் சிரித்தான். கொஞ்சம் முன்யோசனையும் ஜாக்கிரதையும் இருந்தால் அழகா ஒரு கொலையைப் பண்ணிட்டு - சட்டத்துக்கு டாட்டா காட்டிட்டே போயிட்டிருக்கலாம்...
அப்படி இல்லை... காதலையும், இருமலையும் மறைக்க முடியாதுன்னு சொல்லுவாங்க... அதேமாதிரிதான் செஞ்ச கொலையும்... சட்டத்தோட இரும்புப் பிடிக்கு அவன் சிக்காமே போகமாட்டான்...
காரை ரோட்டோரமாய் நிறுத்தினான் கிருஷ்ணசந்தர். புன்னகையோடு திரும்பிப் பார்த்தான்.
பிரசன்னா... நீங்களும் நானும் ஒரு பந்தயம் போட்டுக்கலாமா...?
பந்தயமா... என்ன பந்தயம்...?
அழகா... அற்புதமா... நான் ஒரு கொலை பண்றேன்... சட்டத்தோட கண்ணைக் கட்டிட்டு - அதனோட பிடிக்குச் சிக்காமே தப்பிக்கிறேன்... பந்தயம் வெச்சுக்கலாமா...?
பிரசன்னா திடுக்கிட்டான்.
2
காருக்குள் சரியாய் அரை நிமிட நேரம் மவுனம் நிலவியது. கிருஷ்ணசந்தர் பின் சீட்டிலிருந்து பிரசன்னாவைத் திரும்பிப் பார்த்து சிரித்தார்.
என்ன பிரசன்னா... மவுனமாயிட்டீங்க?
நீங்க சொன்னது எனக்கு அதிர்ச்சியா இருக்கு...
இதிலென்ன அதிர்ச்சி இருக்கு? எவ்வளவோ விஷயங்களுக்குப் பந்தயம் வெச்சுக்கிறோம். நான் ஒரு வியாபாரி. எந்த நேரத்துல எதை செஞ்சா லாபம் வரும்னு யோசிக்கிறவன். நீங்க உங்களோட வாதத்துல் பிடிவாதமா இருக்கீங்க. நான் என்னோட வாதத்துல பிடிவாதமாயிருக்கேன். இதுல யார் ஜெயிக்கப் போறாங்கன்னு பார்க்க வேண்டாமா?
பிரசன்னா கைத் துண்டால் தன் வியர்த்த முகத்தைத் துடைத்துக் கொண்டார். காய்ந்து போன உதடுகளை ஈரப்படுத்திக் கொண்டு பேச ஆரம்பித்தார்.
இது கோலி விளையாட்டு இல்லை கிருஷ்ணசந்தர், பந்தயம் வெச்சுக்க. கொலை பண்றது அவ்வளவு சுலபமில்லை. அப்படியே பண்ணிட்டாலும், சட்டத்தோட பிடியிலிருந்து தப்பிக்கிறது அவ்வளவு சுலபமில்லை. இன்னொரு தடவை இதையெல்லாம் மனசாலே நினைச்சுக் கூட பார்க்காதீங்க, காரை விடுங்க, போலாம்...
அப்போ நீங்க தோல்வியை ஒத்துக்கணும்...
தோல்வியை ஒத்துக்கணுமா...?
ஆமா... ஒரு கொலையாளி சட்டத்தோட பிடியிலிருந்து சுலமா தப்பிக்க முடியும்ன்னு நீங்க ஒத்துக்கணும்...
நோ... அதை என்னாலே ஒத்துக்க முடியாது. சட்டம் ஏதாவது ஒரு உருவத்தில் அவனைத் தண்டிச்சுதான் தீரும்... உப்பைத் தின்னவன் தண்ணீரைக் குடிச்சேயாகணும் என்கிற மாதிரி தப்பு பண்ணினவன் தண்டனையை அனுபவிச்சே யாகணும்...