Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

En Iniya Innaley!
En Iniya Innaley!
En Iniya Innaley!
Ebook114 pages43 minutes

En Iniya Innaley!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar is an extremely prolific Tamil novel writer, most famous for his crime, detective, and science fiction stories. Since publishing his first short story "Seventh Test Tube" in Kalkandu magazine in 1968, he has written over 1,500 short novels and over 2,000 short stories.

Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100403353
En Iniya Innaley!

Read more from Rajesh Kumar

Related to En Iniya Innaley!

Related ebooks

Related categories

Reviews for En Iniya Innaley!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    En Iniya Innaley! - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    என் இனிய இன்னலே!

    En Iniya Innaley

    Author:

    ராஜேஷ்குமார்

    Rajesh Kumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    1

    அகில இந்திய மெடிக்கல் சயின்ஸ் இன்ஸ்டிட்யூட் ஏற்பாடு செய்திருந்த செமினாரில் நூற்றுக் கணக்கான வழுக்கைத் தலைகள் வீடியோ வெளிச்சத்தில் மின்னிக் கொண்டிருக்க, மேடையின் மையத்தில் நின்று, தனக்கு முன்பாய் நீட்டிக் கொண்டிருந்த சிறிய எலக்ட்ரானிக் மைக்கில் சயன்டிஸ்ட் கெளரி சங்கர் தெளிவான ஆங்கிலத்தில் நிதானமாய்ப் பேசிக் கொண்டிருந்தார். நேரம் மாலை 6.45

    கடந்த 55 ஆண்டுகளில் இந்தியா மருத்துவத் துறையில், கணிசமான முன்னேற்றம் கண்டுள்ளபோதிலும், சர்வதேசத் தரத்துக்கு நாம் உயரவில்லை என்பதே உண்மை. நாம் இந்தத் துறையில் பின்தங்கியிருப்பதாக WHO எனப்படும் உலக சுகாதாரக் கழகமும் கூறியுள்ளது. இந்தியாவில் உள்ள மருத்துவ மேதைகள் அரும்பாடுபட்டுக் கண்டுபிடித்த 14 புதிய வகை மருந்துகளைச் சர்வதேச மருத்துவ கவுன்ஸில் நிராகரித்து விட்டதாகப் பத்திரிகைகள் கட்டம் போட்டுச் செய்திகளை வெளியிட்டுள்ளன. ஏன் இந்த அவல நிலைமை? இந்த நிலைமைக்கு என்ன காரணம் என்பதை நாம் யோசித்துப் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

    வருடத்துக்கு ரூ. 5000 கோடிகளை இந்தியா தன் மருத்துவ ஆய்வுகளுக்காகச் செலவழித்துக் கொண்டிருக்கிறது. ஆனாலும், சர்வதேச மருத்துவ ஆய்வு இதழ்களில் இந்திய மருத்துவ ஆய்வுகளுக்கு உரிய மரியாதையும் அங்கீகாரமும் கிடைக்காதது ஏன் என நிபுணர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 1998 இல் அகில இந்திய மெடிக்கல் சயின்ஸ் இன்ஸ்டிட்யூட் 338 பரிசோதனை நடத்தி முடித்தது. 2001 வரை 133 பரிசோதனை முடிவுகளின்படி அறிக்கை வெளியிடப்படவில்லை... என்று இந்திய கம்ப்ட்ரோலர் அண்ட் ஆடிட்டர் ஜெனரல் 2001 ஆகஸ்ட் அறிக்கையில் சாடியுள்ளார். இந்திய மருத்துவ விஞ்ஞானம் பல வகைகளிலும் பின்தங்கி இருப்பதற்குக் காரணங்கள் என்னென்ன என்பதை பீப்பிள் ஃபார் அனிமல்ஸ் என்ற அமைப்பைச் சேர்ந்த ஆராய்ச்சி வல்லுநர்கள் பாயிண்ட் பாயிண்ட்டாகச் சொல்லியுள்ளனர்.

    கெளரிசங்கர் பேச்சை நிறுத்தி விட்டு மேஜையின் மேலிருந்த மினரல் வாட்டர் பாட்டிலை எடுத்து ஒரு வாய் நீரைத் தொண்டைக்குக் கொடுத்து விட்டுப் பேச்சைத் தொடர்ந்தார். கைகளில் வைத்து இருந்த கம்ப்யூட்டர் தாள்கள் மெல்லப் புரட்டப்பட்டன.

    ஏப்ரல் 14ஆம் தேதி உலக ஆராய்ச்சிக் கூடப் பிராணிகள் தினமாகக் கொண்டாடப்பட்டது. ஆராய்ச்சிக் கூடங்களில் பரிசோதனைக்காக உபயோகப்படுத்தப்படும் பிராணிகள் நோய்வாய்ப்படாமல் ஆரோக்கியமாக இருந்தால்தான் அவைகளை வைத்துச் சோதனைகளை வெற்றிகரமாய்ச் செய்ய முடியும். அந்த சோதனைகளின் அடிப்படையில் மருந்துகளைத் தயாரிக்க முடியும். ஆனால், தற்போது இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கூடங்களில் பரிசோதனைக்காக உபயோகப்படுத்தப்படும் பிராணிகள் ஆரோக்கியமற்றதாக இருக்கிறது. பொதுவாகத் தெருக்களில் அலைந்து திரியும் பிராணிகளைப் பிடித்து வந்து சோதனைக்கு உட்படுத்துகிறார்கள். இதனால் பரிசோதனைகளின் முடிவில் நமக்கு நல்ல ரிப்போர்ட் கிடைப்பது இல்லை. அந்த ரிப்போர்ட்களை அடிப்படையாக வைத்துத் தயாரிக்கப்படும் மருந்துகள் சர்வதேசத் தரத்துக்கு ஈடு கொடுக்கும்படியாக இல்லை. மருத்துவத் துறையில் இந்தியா பின்னோக்கிப் போய்க் கொண்டிருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

    கெளரிசங்கர் கம்ப்யூட்டர் தாளைப் புரட்டுவதற்காகச் சில விநாடிகள் இடைவெளி விட்டபோது, முன் வரிசையில் இருந்த ஒரு வழுக்கைத் தலை எழுந்தது.

    இந்தியா இந்த மருத்துவத் துறையில் வெற்றி பெற்றுச் சர்வதேச அளவுக்கு உயர உங்களிடம் ஏதாவது வழிமுறைகள் உள்ளதா?

    கெளரிசங்கர் அந்த நபரைப் பார்த்துப் புன்னகைத்தார். "உள்ளது. அந்த வழிமுறைகளைத்தான் இப்போது படிக்கப் போகிறேன். இவைகளைச் செயல்படுத்தக் கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவாகும். செலவைப் பற்றி அரசாங்கம் பயப்பட்டால், நாம் சர்வதேச அளவுக்கு உயர முடியாது. நாம் இந்த மருத்துவத் துறையில் இன்னமும் எல்.கே.ஜி. அளவிலேயே இருக்கிறோம். உதாரணத்துக்கு ஒன்றைச் சொல்ல வேண்டுமென்றால் ரேபிஸ் எனப்படும் வெறி நாய்க்கடிக்கான தடுப்பு மருந்தை ஆட்டு மூளையிலிருந்து எடுக்கும் பழக்கத்தை இந்தியா மற்றும் துனிஷியா ஆகிய 2 நாடுகள் மட்டுமே இந்த 2003லும் கடைப்பிடித்து வருகின்றன. ஆட்டு மூளையிலிருந்து தடுப்பு மருந்தைத் தயாரிக்கும் முறைக்குத் தடை விதித்து 20 ஆண்டுகள் ஆகின்றன. மற்ற நாடுகள் எல்லாம் திசு வளர்ப்பியல் முறையில் தடுப்பு மருந்துகளைத் தயாரித்துச் சர்வதேச மருந்து மார்க்கெட்டில் பெரிய பெரிய வெற்றிகளைப் பெற்றுள்ளன. உலக சுகாதார நிறுவனம் திசு வளர்ப்பியல் முறையில் தடுப்பு மருந்துகளைத் தயாரிக்கும்படி இந்தியாவை அறிவுறுத்தியுள்ளது. இப்போது தான் இந்திய அரசின் சுகாதார அமைச்சகம் ஆண்டுக்கு 35,000 லிட்டர் நியூரல் திசுவைப் பெறுவதற்காக ஒன்பது பயாலஜிக்கல் ப்ரொடக்ஷன் சென்டர்களை நிறுவியுள்ளது. இதன் மூலம் பிராணிகளைச்

    Enjoying the preview?
    Page 1 of 1