Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thattaamaalai
Thattaamaalai
Thattaamaalai
Ebook169 pages1 hour

Thattaamaalai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை ‘ரன் மெஷின்’ என்றால், 83 வயதிலும் ஓயாமல் எழுதி வரும், மூத்த படைப்பாளர் மகரிஷியை, ‘எழுத்து இயந்திரம்’ என்றே சொல்லலாம். இதுவரை, 130 நாவல்கள், 5 சிறுகதை தொகுப்புகள், 60க்கும் மேற்பட்ட கட்டுரைகள் என 22 ஆயிரம் பக்கங்களுக்குமேல் எழுதிக் குவித்துள்ளார். இன்றும் அவரது பேனா மையின் ஈரம் காயவே இல்லை.

இவர் எழுதிய பல நாவல்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டு உள்ளன. ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய, ‘புவனா ஒரு கேள்விக்குறி’ (1977) படத்தின் கதை மகரிஷியுடையது.

தவிர, ‘பனிமலை’ என்ற நாவல், ‘என்னதான் முடிவு?’ (1965) படமாக ஆக்கம் பெற்றது. ‘பத்ரகாளி’ (1976), ‘சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு‘ (1977), ‘வட்டத்துக்குள் சதுரம்‘ (1978), ‘நதியை தேடிவந்த கடல்’ (1980) ஆகிய திரைப்படங்களும் மகரிஷியின் நாவல்களை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்பட்டன.

தமிழில் கல்கி, ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், சுஜாதா போன்ற நாவலாசிரியர்களின் படைப்புகளில் ஒருசில, திரைப்படமாக உருவாக்கம் பெற்றுள்ளன. எனினும், தனிப்பட்ட ஒரு எழுத்தாளரின் நாவல்கள் அதிக எண்ணிக்கையில் திரைமொழியில் சொல்லப்பட்டது என்றால் அது மகரிஷி உடையது மட்டுமே. இதை பெருமைக்குரியதாக சொல்லும் அதேநேரம், அதிகளவில் கதை திருட்டுக்கு உள்ளானதும் மகரிஷியின் படைப்புகள்தான்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580123803370
Thattaamaalai

Read more from Maharishi

Related to Thattaamaalai

Related ebooks

Reviews for Thattaamaalai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thattaamaalai - Maharishi

    http://www.pustaka.co.in

    தட்டாமாலை

    Thattamaalai

    Author:

    மகரிஷி

    Maharishi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/maharishi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    1

    அது ஒரு பிரபலமான மனநோய் மருத்துவமனை. தன் நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர் ஒருவருக்குத் திடீரென்று சித்த சுவாதீனம் கெட்டு விட்டதால் அவருடைய உறவினர்கள் அவரை அங்கே சேர்த்திருந்தார்கள்.

    பிரும்மாண்டமான அந்த மருத்துவமனையில் ஊழியரை அன்று பார்த்துவிட்டு டாக்டரிடம் சொல்லி ஒரு பிரத்யேக கவனிப்புக்கு ஏற்பாடு செய்துவிட்டுத் திரும்பும்போதுதான் அந்த வாலிபனைப் பார்த்தான் விஸ்வம்.

    மற்ற நோயாளிகளுக்கு இருப்பதுபோல அதிகப் பாதுகாப்பு ஏதுமின்றித் தனியே மருத்துவமனை வெளிப் புற பூங்காவொன்றில் அமர்ந்திருந்தான்.

    அவனுடைய தோற்றம் விஸ்வத்தைச் சில கணங்கள் ஸ்தம்பிக்க வைத்துவிட்டது.

    யார் இவன்?

    பார்வையை அவனிடமிருந்து திருப்பாமலே அவனருகில் வந்து நின்றான்.

    புதியவன் ஒருவன் தன்னை ஏதோ வினோதப் பொருளைப் பார்ப்பதுபோல பார்ப்பதை அவன் விரும்பாமல் கத்தினான்.

    என்ன வேணும் உனக்கு? பைத்தியங்களை வேடிக்கை பார்க்கவேண்டுமென்றால் அதோ அங்கே போ... அறைகளில் நிறைய - பைத்தியங்கள் இருக்கிறார்கள்.

    விஸ்வம் பதில் ஒன்றும் பேசவில்லை. அந்த மனநோய் வாலிபன் தன் இடதுகையை ஆட்டிப் பேசினான்.

    சலிப்புடன் அவன் திரும்பிக்கொண்டான்.

    "நான் இங்கே பைத்தியங்களைப் பார்க்க வரவில்லை. மனிதர்களைப் பார்க்க வந்தேன். பார்க்கிறேன்' என்றான்.

    உன் பெயர் என்ன?

    மோகன் அவன் வெறுப்புடன் கூறினான்.

    என் பெயர் விஸ்வம்.

    நான் கேட்கவில்லை. உன்னைத் தெரிந்து கொண்டு எனக்கு என்ன ஆகவேண்டும்?

    நீ எப்படி இங்கே வந்தாய்?

    மோகன் பேசவில்லை!

    அனுதாபிகளை விரோதத்துக்கொள்ளாதே. உன் மேல் எனக்கு அனுதாபம் உண்டு.

    காரணம்?

    விஸ்வம் அதை காதில் வாங்கிக் கொள்ளவில்லை. "உன்னைப் பிறகு வந்து பார்க்கிறேன். எனக்குச் சரியாக ஆறுமணிக்கு ஒரு போர்டு மீட்டிங் இருக்கிறது.

    மோகனைத் திரும்பித்திரும்பிப் பார்த்துக் கொண்டே விஸ்வம் போய்விட்டான்.

    மிகப்பெரிய இரும்புகேட் அருகில் போகும்வரை அவனைப்பார்த்தான்.

    பிறகு மறைந்தான்.

    யார் இவன்?

    அன்று அவன் மோகனைப்பார்க்க வந்தபோது இளம்பெண் ஒருத்தி அவன் எதிரே உட்கார்ந்து கொண்டிருந்தாள்.

    அழகாக இருந்தாள். நல்ல சிவப்பாக இருந்தாள். உயரம் அதிகமில்லா விட்டாலும் அந்த உடல்வாகுக்கு அது ஒரு குறையாகப் படவில்லை

    விஸ்வம் போனசமயம் அவள் அவனுடன் பேசாமல் அழுது கொண்டிருந்தாள்.

    அவன் அவளைச் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தான்.

    உடம்பு சரியில்லை என்று வேறு மருத்துவமனைக்குப் போயிருந்தால் நான் அழமாட்டேன். வருத்தப்படவும் மாட்டேன். சித்தம் சரியில்லை என்று உங்களை இங்கே கொண்டுவந்து சேர்த்துவிட்டார்களே என்றுதான்.

    "இப்போ இங்கே வந்துவிட்டதால் நான் பைத்தியமாயிட்டேனோ.'

    உங்களை எல்லோரும் அப்படித்தானே நினைக்கறா. அதனுடைய எதிரொலிதானே இது...

    இருக்கட்டுமே... கொஞ்ச நாளைக்கு இந்த அட்மாஸ்பியரையும் பார்த்து ரசித்துவிட்டுத்தான் வருகிறேனே... என்றான். அவள் விசித்துக்கொண்டே எழுந்தாள்.

    விஸ்வம் அருகில் வந்தான்.

    சரஸ்வதி. இவர் பெயர் விஸ்வம். என் நண்பராக முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.விஸ்வம் இவள் என் மனைவி. பெயர் சரஸ்வதி.

    பரஸ்பரம் மரியாதை செலுத்திக் கொண்டனர். சரஸ்வதி விடைபெற்றாள்.

    இரண்டு நாட்களுக்குப் பின் மீண்டும் விஸ்வம் பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு வந்தபோது, அவன் பரபரவென்று மோகனைத் தேடினான்.

    மோகன் மரத்தடியில் இருந்த சிமெண்ட் மேடையொன்றில் கால்மேல் கால் போட்டுக்கொண்டு படுத்திருந்தான்.

    'குட்மார்னிங்" என்றான் அவனிடம் வந்து நின்று.

    குட்மார்னிங் என்று கூறிய மோகன் அப்படியே படுத்திருந்தான்.

    என்னைப்பற்றி டாக்டரிடம் நீ ரொம்ப நேரம் அக்கறையுடன் விசாரித்தாயாமே என்றான் காலை ஆட்டிக்கொண்டே,

    உனக்கெப்படித் தெரியும்.

    "டாக்டர் தான் சொன்னார். உன்னுடைய அந்தஸ்து பற்றியும், உன்னுடைய செல்வாக்கு பற்றியும் கூறினார்.

    அப்படியா?

    "நீ ஏன் அனுபவிக்கமாட்டாய்? உன் அப்பன் தேடிவைத்த சொத்து இருக்கும்போது நீ எதற்குக் கஷ்டப்பட வேண்டும்? உன் படிப்பு, உன் திறமை இவை பற்றி யாருக்குக் கவலை? உன்னிடம் பணம் இருக்கிறது; உன் இஷ்டத்திற்கு இந்த உலகை அனுபவிக்கலாம்; ஆட்டிப் படைக்கலாம்... போ...போ... உனக்கு என்னிடம் என்ன வேலை? என்னை எதற்கு அடிக்கடி பார்க்க வருகிறாய்...... நான் யார்... உன் உடன்பிறந்தவனோ, உறவினனோ இல்லை. எனக்கு உன்போன்ற அறிவற்ற பணக்காரர்களைக் கண்டாலே பிடிக்காது. அறிவுள்ள பணக்காரனைவிட, மனிதாபிமானம் மிக்க பணக்காரணை மட்டுமே என்னால் நேசிக்கமுடியும்..

    விஸ்வம் ஒன்றும் பேசாமல் சிரித்துக்கொண்டு நின்றான்.

    பிறகு?

    நான் போய்வருகிறேன். நாளைக்கு மீண்டும் வருவேன்.

    எதற்கு?

    உன்னிடம் திட்டுவாங்க. உன் வசைமொழிகளை நான் ரசிக்கிறேன்! எனக்கும் புத்திகூர்மையுள்ள கோபக்ரானைப் புரிந்துகொள்ள முடியும்... பை...பை... கையை ஆட்டிக்கொண்டே போய்விட்டான்.

    மீண்டும் அடுத்த நாள் வந்தான்.

    இன்று அவன் வருகையை எதிர்பார்த்தவன் போலக் காணப்பட்டான் மோகன்..

    இன்று விஸ்வம் அவனைப் பார்க்க மட்டுமே வந்தான். அவனுக்காக மட்டுமே வந்தான். வரும்போதே ஒரு முடிவுடன் வந்தான். மற்றவர்கள் நினைப்பது போல மோகன் பைத்தியம் அல்லன என்பது அவன் முடிவு.

    அவன் மனநோய் மருத்துவமனையில் இருக்க வேண்டியவனில்லை என்று அவன் முடிவு செய்து விட்டான். அதைச் செயல்படுத்தவே வந்தான். அவன் வெறும் விஸ்வமாக வரவில்லை, மோகனின் பாது காவலனாக வந்தான்.

    மோகன் ஒரு 'Perverted' அல்லன்! அவன் உண்மையிலேயே ஒரு ஜீனியஸ்; அவனை நன்கு அறிந்தவர்களுக்கு இது தெரியும்.

    ஆசிரியர் கரும்பலகையில் கணக்கைப் போட ஆரம்பிக்கும்போதே அதன் விடையை அவன் கூறி விடுவான்.

    இது கொஞ்சம் கடினமான கவிதை. கவனமாகப் படிக்கவேண்டும்' என்று வகுப்பாசிரியர் அந்த ஆங்கிலக் கவிதையைப் படிக்க ஆரம்பிக்கும்போதே. மோகனுக்குச் சினம் வந்துவிடும். இடத்தைவிட்டு எழுந்து நின்று விடுவான். அவன் எழுந்து நிற்பதைப் பார்த்தவுடனே ஆசிரியருக்கு அதிர்ச்சியாக இருக்கும்.

    எந்தக் கவிதையும் யாருக்கும் கடினமில்லை ஸார். போதிப்பவர்கள் இப்படிக் கூறுவதை என்னால் ஏற்க முடியவில்லை. எல்லோருக்கும் எல்லா நிலைகளிலும் அந்தந்தப் பருவத்திற்கே உண்டான அடிப்படை அறிவு ஒன்று உண்டு. அந்த அடிப்படை அறிவு மழுங்கவிடாமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களுடையது என்பான்.

    ஆசிரியருக்குக் கோபம் வந்துவிடும். பல மாணவர்களுக்கு முன்னால் தன்னை எதிர்த்துப் பேசி விட்ட மோகனை அவர்கள் முன்னால் அவமானப் படுத்தவேண்டும் என்கிற நோக்கத்துடன்.

    சரி, இக்கடினமான ஆங்கிலக் கவிதையைப் புரிந்து கொள்ளக்கூடிய அளவுக்கு உன்னுடைய அடிப்படை அறிவு இருக்கிறதா என்பதை நான் எப்படித் தெரிந்து கொள்வது? நான் இதை ஒரேயொரு தடவைதான் படித்துக்காட்டுவேன். பிறகு புத்தகத்தைப் பார்க்காமல் அதை உடனே நீ 'கோலன்' குறிகளுடன் திருப்பிச் சொல்லவேண்டும். சொல்லவில்லை என்றால் இன்று பூராவும் பெஞ்சின்மேல் நிற்கவேண்டும். நீ அதிகப் பிரசங்கித்தனமாகப் பேசியதற்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றார்.

    மாணவர்களும் ஆசிரியர் பக்கம் சேர்ந்துகொண்டு கத்துவார்கள்.

    "நீங்கள் எனது ஆசான். அந்த மரியாதையை நான் எந்த இடத்திலும் குறைத்து மதிப்பிடவில்லை' என்றாலும் உங்கள் நிபந்தனைகளை நான் ஏற்கிறேன்.

    அவர் அந்த நெருடலான ஆங்கில கவிதையைப் படிக்க ஆரம்பிப்பார்.

    வேண்டாம் ஸார். நீங்கள் அதை எனக்குப் படித்துக் காட்டக்கூட வேண்டாம். நானே ஒரு முறை பார்த்து விட்டேன் என்று கூறிவிட்டு ஆசிரியரின் மேஜை அருகில் வந்து நின்று கொண்டு ஐந்து பாராக்கள் உள்ள அக்கவிதையை கோலன், செமிக்கோலன், கமா, ஃபுல்ஸ்டாப் ஆகியவற்றுடன் மடை திறந்தார்ப்போலச் சொல்லுவான்.

    மாணவர்கள் வியப்புடன் ஆரவாரம் செய்ய, ஆசிரியரும் அதே மனோநிலையில் ஸ்தம்பித்துப் போய் உட்கார்ந்திருப்பார்.

    அவன் தோள்பட்டையில் கையை வைத்து இவ்வளவு கடினமான கவிதையை உன்னால் எப்படிச் சுலபமாக சொல்லமுடிந்தது என்று கேட்பார்.

    "எனக்கு இக்கவிதை மட்டும் இல்லை ஸார்! நீங்கள் நடத்துகிற பாடங்கள் எல்லாம் கூட பரிச்சயமானதாகவே இருக்கிறது. இவை எனக்குப் புதியனவாக தோன்ற வில்லை.'

    அவனுடைய இந்தப் போர், அவன் பள்ளி நாட்களிலேயே தொடங்கி விட்டது.

    அதற்காக அவன் சலிப்படையவில்லை.

    அத்தனை போராட்டங்களிலும் அவன் ஒரு வெற்றி வீரனைப்போலவே வெளிப்பட்டுக் கொண்டிருந்தான்.

    இந்தப் போராட்டத்தில் அவன் அவனமானப் படுத்தப்பட்டிருக்கின்றான்.

    இந்தப் போராட்டத்தில் அவன் சில சமயம் ஒதுக்கப் பட்டவனாகப் போயிருக்கிறான்.

    சிறுமைகள் சீற்றமடைய வைத்தனவேயன்றிச் சலிப்படைய வைக்கவில்லை.

    எல்லா சூழ்நிலைகளிலும் தானே உயர்ந்தவன் தானே புத்திசாலி என்கிற இந்த அறிவுபூர்வமான எண்ணமே, அவனைத் தாக்கும் சிறுமைகளினின்று அவனைக் காக்கும் கவசமாக இருந்தது.

    பள்ளிப்படிப்பை முடிக்கிறவரையில் அவன் யாராலும் புரிந்து கொள்ளப்படாதவனாக இருந்தான்.

    Enjoying the preview?
    Page 1 of 1