100-Vathu Pournami
By Rajeshkumar
4.5/5
()
About this ebook
Read more from Rajeshkumar
Irapathu Nee Irupathu Naan Rating: 5 out of 5 stars5/5Thirumarana Azhaippithazh Rating: 5 out of 5 stars5/5Dial For Kill Rating: 4 out of 5 stars4/5Raja Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsPanchavarna Kili Rating: 0 out of 5 stars0 ratingsKondraal Kondraan Kondren Rating: 5 out of 5 stars5/5Konjum vanjanai! Rating: 5 out of 5 stars5/5Vetri Endraal Vivek Rating: 5 out of 5 stars5/5Vidathey Vivek! Vidathey Rating: 4 out of 5 stars4/5Nanthini Nalai Irakkiral! Rating: 3 out of 5 stars3/5Sivappu November Rating: 0 out of 5 stars0 ratingsIruttil Parakkum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsPiriyamaana Kolaikaran Rating: 5 out of 5 stars5/5Rojakkalum Thottakalum Rating: 0 out of 5 stars0 ratingsUyir Veelchi Rating: 0 out of 5 stars0 ratingsKavanam Vivek Rating: 5 out of 5 stars5/5Moondru Vinaadi Mugam Rating: 5 out of 5 stars5/5Uyir Eduppaan Thozhan Rating: 5 out of 5 stars5/5Karuppu Rattham Rating: 5 out of 5 stars5/5June, July, Aaa...! Rating: 4 out of 5 stars4/5Neelam Enbathu Niramalla Rating: 0 out of 5 stars0 ratingsVivek Athu Visham Rating: 5 out of 5 stars5/5Ore Oru Naal Rating: 5 out of 5 stars5/5Vivek, Vishnu, Oru Vidukathai! Rating: 3 out of 5 stars3/5Thanga Macham Rating: 5 out of 5 stars5/5Naan Nalina Nalliravu Rating: 0 out of 5 stars0 ratingsMaranathin Thethi March 7 Rating: 0 out of 5 stars0 ratingsEngum Vivek! Ethilum Vivek! Rating: 5 out of 5 stars5/5Theepantham Edu! Theemaiyai Sudu Rating: 0 out of 5 stars0 ratings
Related to 100-Vathu Pournami
Related ebooks
1+1=0 Rating: 5 out of 5 stars5/5Vivek! Un Ethiril Oor Ethiri Rating: 0 out of 5 stars0 ratingsAthirum Uthiram Rating: 0 out of 5 stars0 ratingsThalai Illaatha Silai Rating: 5 out of 5 stars5/5Kolai Thodarbukku Appal… Rating: 4 out of 5 stars4/5Muththam Thedum Mugam! Rating: 4 out of 5 stars4/5Uyir Veelchi Rating: 0 out of 5 stars0 ratingsSaagaavaram Rating: 4 out of 5 stars4/5Ippadikku Oru Indian Rating: 0 out of 5 stars0 ratingsPoruthathu Pothum Vivek Rating: 5 out of 5 stars5/5Monalisa (Punnagai) Azhugai Rating: 0 out of 5 stars0 ratingsVirpanaiku Alla Rating: 5 out of 5 stars5/5Vetri Endraal Vivek Rating: 5 out of 5 stars5/5Iravu Thamarai Rating: 3 out of 5 stars3/5Vivek, Vishnu, Oru Vidukathai! Rating: 3 out of 5 stars3/5Kolai Vallal Rating: 0 out of 5 stars0 ratingsVidathey Vivek! Vidathey Rating: 4 out of 5 stars4/5Evan Avan and Poovil Seitha Aayutham! Rating: 4 out of 5 stars4/5Vivek Never Out Rating: 5 out of 5 stars5/5Meendum Vivekin Visparoopam Rating: 3 out of 5 stars3/5Virainthu Vaa, Vivek! Rating: 5 out of 5 stars5/5Kaatru Urangum Neram... Rating: 5 out of 5 stars5/5Maaya Hospital, Marupadiyum Iranthavan and Oru latsam Vinaadikal Rating: 2 out of 5 stars2/5Vivek Athu Visham Rating: 5 out of 5 stars5/5Thirakkaatha Kathavugal! Rating: 5 out of 5 stars5/5Nanthini Nalai Irakkiral! Rating: 3 out of 5 stars3/5Vida Maattan Vivek Rating: 0 out of 5 stars0 ratingsVivekum 41 Nimishangalum Rating: 3 out of 5 stars3/5Kovaiyil Oru Kutram Rating: 5 out of 5 stars5/5Minnalaai vaa vivek Rating: 4 out of 5 stars4/5
Related categories
Reviews for 100-Vathu Pournami
3 ratings0 reviews
Book preview
100-Vathu Pournami - Rajeshkumar
ராஜேஷ்குமார்
1
எப்போதோ நடந்தது
"அரசர் பெருமானுக்கு என் வணக்கம்...!"
அமைச்சர் மதியூகியின் குரல் கேட்டு ஆழ்ந்த சிந்தனையோடு அரண்மனையின் உப்பரிகையில் அமர்ந்து இருந்த மன்னன் நந்தபாலன் திரும்பினான். ஆறடி உயர ஆஜானுபாகுவான உடம்போடு இருந்த நந்தபாலன் அந்த நொடி சர்வாங்கமும் தளர்ந்து போயிருந்தான். அவனுடைய வீரியம் மிக்க விழிகளில் இப்போது கலவரம் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது.
வாருங்கள் அமைச்சரே!
மன்னா...! என்னை அவசரமாய் அழைத்தீர்களாமே?
ஆமாம்... அமைச்சரே... உங்களிடம் சில விஷயங்களை மனம் விட்டுப் பேசவேண்டியுள்ளது. எனவேதான் இந்த மூன்றாம் ஜாம ராத்திரி நேரத்தைத் தேர்ந்து எடுத்தேன். உங்களுடைய நித்திரையைக் கெடுத்தமைக்காக என்னைப் பொறுத்துக் கொள்ளுங்கள்.
அமைச்சர் மதியூகி பதறிப்போய் இரண்டடி முன்னால் வந்தார்.
மன்னா...! என்ன பேச்சு பேசுகிறீர்கள்...? நீங்கள் ஏதோ ஒரு குழப்பத்தில் இருக்கும் போது என் உறக்கம்தானா பெரிது...? நீங்கள் அழைக்கிறீர்கள் என்று பணிப் பெண் வந்து சொன்னதும் பதறிப் போய் வருகிறேன். மன்னர் பெருமானுக்கு ஒரு கலக்கம் என்றால் அது இந்த வலம்புரி தேசத்தின் ஒட்டு மொத்த மக்களுக்கும் உண்டான கலக்கம் அல்லவா...! சொல்லுங்கள் மன்னா... தங்களுடைய அவசர அழைப்புக்கு என்ன காரணம்?
மன்னன் நந்தபாலன் உப்பரிகையின் மேல் மாடத்தில் சிந்தனையோடு சில நொடிகள் நடந்துவிட்டு அமைச்சர்க்குப் பக்கத்தில் வந்து நின்றான்.
அமைச்சரே...! நான் இப்போது உங்களிடம் சொல்லப் போகின்ற செய்தி என்னைத் தவிர வேறு யார்க்கும் தெரியாது. அரசிக்கும் தெரியாது. நீங்கள் என் நம்பிக்கைக்குரியவர் என்கிற ஒரே ஒரு காரணத்தினால்தான் அழைத்துள்ளேன். நமக்குள் நடக்கப் போகும் இந்தப் பேச்சு எந்த ஒரு காரணத்தை முன்னிட்டும் வெளியே கசிந்து விடக்கூடாது.
கசியாது மன்னா...! என் மேனியில் இருக்கும் உதிரம் வேண்டுமானால் கசியலாம். நீங்கள் என்னிடம் கூறப் போவது எதுவாக இருந்தாலும் அது என் உயிரோடு உறைந்து போய்விடும். என் உயிர் பிரியும் போதுதான் அதுவும் பிரியும்.
உங்களுடைய உறுதிமொழிக்கு நன்றி அமைச்சரே! நான் உங்களிடம் விஷயத்தைத் தொடங்கும் முன்பாக இந்த ஓலையைப் படித்துப் பாருங்கள்...
மன்னன் நந்தபாலன் தன் இடுப்பில் பத்திரப்படுத்தி வைத்து இருந்த அந்த ஓலையை எடுத்துக் கொடுத்தான்.
அமைச்சர் மதியூகி குழப்பத்தோடும் கலக்கத்தோடும் அந்த ஓலையை வாங்கி பிரித்துப் பார்த்தார். அவருடைய விழிகள் வியப்பால் விரிந்தன.
கங்கண தேசத்து மன்னன் கஜபதிராயன் அந்த ஓலையை அனுப்பியிருந்தான். அந்த நாட்டு அமைச்சர் ஓலையை எழுதியிருந்தார்.
வலம்புரி தேசத்து மன்னன் நந்தபாலனுக்கு எங்கள் சக்கரவர்த்தி கஜபதிராயன் தெரிவித்துக் கொள்வது.
ஆண்டாண்டு காலமாய் தங்களுடைய வலம்புரி நாடு எங்கள் நாட்டுக்கு அடிமையாய் இருப்பதும், அதற்கு அடையாளமாய் நீங்கள் கப்பம் கட்டி வருவதும் நாடறிந்த செய்தி. அண்மைக் காலமாய் நீங்கள் கப்பம் கட்டும் தொகை போதுமானதாக இல்லை. எங்கள் படை பலத்தைப் பெருக்கிக் கொள்ளவும், நாட்டின் வளர்ச்சிப் பணிகளில் கவனம் செலுத்தவும் கப்பம் கட்டும் தொகையை எங்கள் மன்னர் அதிகப்படுத்தியுள்ளார். எனவே அடுத்த முறை நீங்கள் கப்பம் செலுத்தும் போது மூன்று மடங்கு அதிகமாக செலுத்தவும். இது எங்கள் நாட்டு மன்னரின் அன்பு நிறைந்த கோரிக்கை. இந்த கோரிக்கை அலட்சியப்படுத்தப்பட்டாலோ அல்லது நிராகரிக்கப்பட்டாலோ அதனுடைய விளைவுகள் மிகவும் கடுமையானதாக இருக்கும் என்பதை நீங்கள் அறியாதவர் அல்ல. இந்த ஓலை உங்களுக்குக் கிடைத்த பத்து நாட்களுக்குள் உங்களிடமிருந்து எங்களுடைய மன்னர்க்கு சாதகமான பதில் வரவேண்டும். அப்படி பதில் வரவில்லையென்றால் எங்கள் படை வரும். அறிவு பூர்வமாய் யோசித்து உங்களுடைய நாட்டையும் உங்களுடைய நாட்டு மக்களையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.
ஓலைச் செய்தி முடிந்து போயிருக்க, அதற்குக் கீழே கங்கண நாட்டின் இலச்சினையான ஓநாயின் பல்லிளித்த முகம் தெரிந்தது.
அமைச்சர் மதியூகி பதறிப் போனவராய் நிமிர்ந்தார்.
என்ன மன்னா இது...? இப்படியொரு அதர்மமான ஓலை உங்களுக்கு எப்போது வந்தது...?
இரண்டு நாழிகைக்கு முன்பு...
யார் கொண்டு வந்து கொடுத்தது?
ஒரு ரகசிய ஒற்றன்...!
ஓலைச் செய்தி என் இதயத்தை வாள் கொண்டு அறுக்கிறதே மன்னா...!
எனக்கும் அதே உணர்வுதான்...!
என்ன செய்யலாம் மன்னா?
உங்கள் கருத்து என்ன அமைச்சரே?
கங்கண தேசத்து மன்னனின் இந்த அநியாய கோரிக்கைக்கு நாம் செவிசாய்க்கக் கூடாது மன்னா...
சரி... செவி சாய்க்காமல்...?
இந்த அநியாயத்தை எதிர்த்துப் போராட வேண்டும்
எப்படி...?
எ... எ... எப்படியென்றால்... அது... அது... அது குறித்து ஆலோசனை செய்ய வேண்டும்.
மன்னன் நந்தபாலன் விரக்தியாய் சிரித்தான்.
அமைச்சரே...! கங்கண தேசத்து மன்னன் கஜபதிராயன் எவ்வளவு கொடூரமானவன் என்பது உங்களுக்குத் தெரியும். அவனுடைய படைபலம் என்ன என்பதும் தெரியும். படைபலத்தில் அவன் யானை என்பதும் நாம் பூனை என்பதும் நம் நாட்டில் உள்ள நான்கு வயது பாலகனுக்குக் கூடத் தெரியுமே...?
உண்மைதான் அரசே!
பின் எப்படிப் போராட வேண்டும் என்று சொல்கிறீர்?
மன்னிக்கவேண்டும் மன்னா...! ஏதோ கோபத்திலும் உணர்ச்சி வேகத்திலும் சொல்லிவிட்டேன்.
"அமைச்சரே! இப்போது நமக்கு கோபம் உதவாது. கஜபதிராயன் சொல்லியபடி நாம் மூன்று மடங்கு கப்பம் கட்டத்தான்