Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Andha Naal Andha Nimidam Andha Nodi
Andha Naal Andha Nimidam Andha Nodi
Andha Naal Andha Nimidam Andha Nodi
Ebook147 pages43 minutes

Andha Naal Andha Nimidam Andha Nodi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Andha Naal Andha Nimidam Andha Nodi

Read more from Rajeshkumar

Related to Andha Naal Andha Nimidam Andha Nodi

Related ebooks

Related categories

Reviews for Andha Naal Andha Nimidam Andha Nodi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Andha Naal Andha Nimidam Andha Nodi - Rajeshkumar

    21

    1

    மனிதன் இந்த உலகத்தின் மெய்ஞானத்தோடும் விஞ்ஞானத்தோடும் கட்டாயமாக சம்பந்தப் பட்டவன். அதன் விதிகளுக்கு கட்டுப்பட்டவன். அதன் விதிகளை மீற நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் கடைசியில் காலம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள். காலம் கனிவோடு நடந்து கொள்வதும் கண்டிப்போடு நடந்து கொள்வதும் மனிதனின் கைகளில்தான் இருக்கிறது.

    - மனு தர்மம்.

    குட்மார்னிங் வசந்தகுமார்.

    ‘மென் சைக்காலஜி’ என்ற - தலைப்பில் கனமான காலிகோ பைண்ட் புத்தகத்தை படித்துக் கொண்டிருந்த சைக்யாட்ரிஸ்ட் வசந்தகுமார் அதிலிருந்து விடுபட்டு நிமிர்ந்தார். ஐம்பது வயது. பளீர் வழுக்கை. வெள்ளி பிரேமிட்ட கண்ணாடி.

    அறை வாசலில் லட்சுமிநாராயணன் நின்றிருந்தார். அவரைப் பார்த்ததும் வசந்தகுமார் மலர்ந்தார். படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை கீழே வைத்தார்.

    குட்மார்னிங் லட்சுமிநாராயணன்... உள்ளே வாங்க.

    உள்ளே நுழைந்த லட்சுமிநாராயணனுக்கு நாற்பத்தைந்து வயது இருக்கலாம். க்ரே நிற சபாரிக்குள் நுழைந்து கொஞ்சம் மிடுக்காய் தோற்றம் காட்டியவரின் காதோரங்களில் நரை எட்டிப்பார்த்தது.

    ப்ளீஸ்... ஸீட்டட்...

    லட்சுமிநாராயணன் உட்கார்ந்து கொண்டே பின்னால் திரும்பிப் பார்த்து குரல் கொடுத்தார்.

    வாம்மா கௌசிகா.

    வசந்தகுமார் தன் பார்வையை வாசல் கதவுக்கு கொண்டு போக, அந்த இருபது வயது இளம்பெண் பார்வைக்குக் கிடைத்தாள். வெளிர் மஞ்சள் நிற சுடிதாரில் சமீபத்திய தமிழ் சினிமா கதாநாயகிகளில் ஒருத்தியைப் போல் தோற்றம் காட்டினாள். பெரிய கண்களில் கொஞ்சம் போல் பயம் தெரிந்தது. ெநற்றிப் பரப்பில் மெலிதான வியர்வை.

    லட்சுமிநாராயணன் வசந்தகுமாரைப் பார்த்து சொன்னார்.

    என்னோட பொண்ணு வசந்தகுமார்.

    அப்படியா... உள்ளே வாம்மா...! இப்படி வந்து உட்கார்.

    கௌசிகா தலை குனிந்தபடி உள்ளே வந்து

    நாற்காலிக்கு தன் உடம்பைக் கொடுத்தாள்.

    வசந்தகுமார் கேட்டார்.

    என்னம்மா படிக்கிறே...?

    அவள் பதில் சொல்லாமல் தலை குனிந்து மேஜையின் முனையை தன் ெநய்ல் பாலீஷ் விரல் நகத்தால் சுரண்டிக் கொண்டிருக்க லட்சுமிநாராயணன் குறுக்கிட்டு பதில் சொன்னார்.

    நிர்மலா காலேஜ்ல செக்கண்ட் இயர் பி.ஏ. எக்னாமிக்ஸ் பண்ணிட்டிருந்தா. கடந்த ஒரு மாசமா காலேஜுக்குப் போறது இல்லை...

    ஏன்...?

    "மென்ட்டலி ஷி ஈஸ் டிஸ்டர்ப்ட்... கலகலப்பா

    பேசி பழகிட்டு இருந்தவ கொஞ்சநாளா யார்கிட்டேயும் சரிவரப் பேசறது இல்லை. பட்... சாப்பிடறது... தூங்கறது... ஹால்ல உட்கார்ந்து டி.வி. பார்க்கறது எல்லாமே நார்மல். காலேஜுக்கு போகமட்டும் பிடிக்கிறது இல்லை. அவ மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கிறதுக்காக நானும் என்னோட மனைவியும் என்னோட மகன் கிஷோரும் எவ்வளவோ முயற்சி பண்ணினோம். பட் எங்களால முடியலை. சரி... இவளுக்கு படிப்புல நாட்டம் இல்லைன்னு நினைச்சு கல்யாணத்தை செஞ்சு வைக்க முடிவு பண்ணினோம். அதுக்காக அலையன்ஸ் பார்த்தோம். நல்ல வரன் அமைஞ்சுது. மாப்பிள்ளை ஆஸ்திரேலியா சிட்னியில் சாஃப்ட்வேர் என்ஜினியரா இருக்கார். ஜாதகப் பொருத்தமும் நல்லாயிருக்கு. அடுத்த மாசத்திலேயே ஒரு நல்ல முகூர்த்த நாளா பார்த்து கல்யாணத்தை வெச்சுக்கலாம்ன்னு மாப்பிள்ளை வீட்டுக்காரங்க சொல்லிட்டாங்க. கௌசிகாவுக்கு கல்யாணம் நடக்கப் போறதை நினைச்சு சந்தோஷப்பட்டாலும் அவளோட நடவடிக்கைகள் நார்மலாக இல்லைன்னு நினைக்கும்போது மனசுக்கு கொஞ்சம் கவலையாய் இருக்கு... எனக்குத் தெரிஞ்ச சைக்யாட்ரிஸ்ட் நீங்க ஒருத்தர்தான். அதான் உங்ககிட்டே வந்தேன். கௌசிகா எதனால இப்படி இருக்கான்னு நீங்கதான் கண்டு பிடிக்கணும் வசந்தகுமார்."

    லட்சுமிநாராயணன் கனமான கவலையோடு பேசி முடிக்க, வசந்தகுமார் அதை உன்னிப்பாய்க் கேட்டுவிட்டு கௌசிகாவிடம் திரும்பினார். ஒரு புன்னகையை உதட்டில் நிறுத்திக் கொண்டு கேட்டார்.

    என்னம்மா...! அப்பா சொல்றதெல்லாம் உண்மையா?

    ம்... என்றாள் கௌசிகா.

    ம்ன்னா என்ன அர்த்தம்...?

    உண்மைதான் டாக்டர்...

    காலேஜுக்குப் போக உனக்கு ஏன் பிடிக்கலை...?

    பிடிக்கலை...

    அதான் ஏன்னு கேட்கிறேன்.

    பிடிக்கலைன்னா விடுங்க டாக்டர்... டோன்ட் கம்பெல் மீ.

    காலேஜ்ல யாராவது ஏதாவது சொன்னாங்களா?

    இல்லை...

    கல்யாணம் பண்ணிக்க உனக்கு விருப்பமா?

    விருப்பமில்லை...

    பின்னே ஏன் கல்யாணத்துக்கு ஒத்துகிட்டே?

    அப்பா அம்மாவோட சந்தோஷத்துக்காக.

    லட்சுமிநாராயணன் குறுக்கிட்டார். இப்படித்தான் வசந்தகுமார்... பேச ஆரம்பிச்சா... இப்படி பேசுவா... இல்லேன்னா பேசவே மாட்டா... எங்களாலே எதையுமே புரிஞ்சுக்க முடியலை... இந்த சூழ்நிலையில் கல்யாணம் பண்ணி வைக்கவும் தயக்கமாயிருக்கு. கல்யாணம் நடந்த பின்னாடி மாப்பிள்ளை வீட்ல இப்படியெல்லாம் நடந்துகிட்டா அவங்க சும்மாயிருப்பாங்களா என்ன...?

    படபடத்த லட்சுமிநாராயணனை வசந்தகுமார் கையமர்த்தினார்.

    டோண்ட் கெட் டென்ஷன்... கௌசிகாவுக்கு மனசுக்குள்ளே ஏதோ டிப்ரஷன். அந்த டிப்ரஷனுக்கு என்ன காரணம்ங்கிறதை தெரிஞ்சுகிட்டா அதை சைக்கோ தெரபி மூலமா போக்கிடலாம்.

    கௌசிகா வசந்தகுமாரை ஏறிட்டாள். டாக்டர்! எனக்கு எந்த சைக்கோ தெரபியும் வேண்டாம். அ’யம் பர்ஃபெக்ட்லி நார்மல்.

    நீ நார்மலாயிருந்தா காலேஜுக்கு போயிருக்கணுமேம்மா.

    எனக்குப் பிடிக்கலை...

    அதான் ஏன்...?

    இறுக்கமான முகத்தோடு - கௌசிகா பதில் சொல்லாமல் தலை குனிந்து கொள்ள - வசந்தகுமார் லட்சுமிநாராயணனுக்கு கண்ஜாடை செய்து உள்ளே வரும்படி அழைத்துவிட்டு எழுந்து போனார்.

    அரையிருட்டாய் இருந்த அறைக்குள் ட்யூப்லைட் வெளிச்சத்தை நிரப்பியவர் லட்சுமிநாராயணனை ஏறிட்டார்.

    இது சம் கைண்ட் ஆஃப் டிப்ரஷன்தான். பயப்படாதீங்க லட்சுமிநாராயணன்... கௌசிகாவை குணப்படுத்திடலாம்.

    Enjoying the preview?
    Page 1 of 1