Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Dollar Mazhai
Dollar Mazhai
Dollar Mazhai
Ebook152 pages46 minutes

Dollar Mazhai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Dollar Mazhai

Read more from Rajeshkumar

Related to Dollar Mazhai

Related ebooks

Related categories

Reviews for Dollar Mazhai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Dollar Mazhai - Rajeshkumar

    27

    1

    அந்த அதிகாலை வேளையில் அலாரம் கிணு கிணுக்க ஆரம்பித்த அடுத்த விநாடியே கண் விழித்து எழுந்து உட்கார்ந்தாள் சாருப்ரபா. நேரம் பார்த்தாள்.

    மணி 4.30.

    மெலிதான ரோஜா வண்ண நைட்டியில் தன் அழகான 51 கிலோ எடை உடம்பை நுழைத்து இருந்த சாருப்ரபாவுக்கு உண்மையிலேயே சந்தன நிறம். (சந்தன நிறத்தில் சேலையையோ சுடிதாரையோ சாருப்ரபா அணிந்து கொள்ளும் போதெல்லாம் அவளுடைய அறைத்தோழிகள் கண்ணைச் சிமிட்டிக் கொண்டே அடிக்கிற கமெண்ட் ‘ஏய்... சாரு... நீ ட்ரஸ் போட்டுகிட்டு இருக்கியா இல்லையா?’)

    இருபத்தியோரு வயதை போன மார்ச் மாதம் முடித்துக் கொண்ட சாருப்ரபா அரசு பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் படிக்கும் நான்காவது ஆண்டு மாணவி.

    குட்மார்னிங் சாரு...

    பக்கத்து கட்டிலில் போர்வைக்குள் சுருண்டிருந்த அறைத் தோழி பவித்ரா குரல் கொடுத்தாள்.

    குட்மார்னிங் பவி...

    என்ன சாரு! நாலரை மணிக்கே அலாரம்...? படிக்கப் போறியா?

    இல்ல...

    பின்னே...?

    ஒரு கல்யாணத்துக்குப் போகணும். அப்பாவோட ஃப்ரண்ட் பஞ்சாட்சரம்ன்னு ஒருத்தர். அவர் வீட்டு கல்யாணம். அப்பா அமெரிக்காவில் இருக்கிறதால நான் அட்டெண்ட் பண்ணியாகணும். ரொம்பவும் எர்லி முகூர்த்தம்.

    மேரேஜ் எங்கே...?

    பீளமேட்டில் இருக்கிற பத்மாவதி கல்யாண மண்டபம். இப்பவே குளிச்சு ரெடி பண்ணிகிட்டு கிளம்பினாத்தான் ஆறு மணி முகூர்த்தத்துக்கு போய்ச் சேர முடியும்... சாருப்ரபா சொல்லிக் கொண்டே வாஷ்பேசினுக்குப் போய் டூத் ப்ரஷ்ஷில் ‘க்ளோஸ் அப்’பை அரையங்குல நீளத்துக்கு பிதுக்கிக் கொண்டாள்.

    பவித்ரா போர்வைக்குள்ளிருந்தபடியே கேட்டாள்.

    இன்னிக்கு எட்டு மணிக்கு கம்யூனிகேஷன் ப்ராசஸ் ஸ்பெஷல் கிளாஸ் இருக்கு. வந்துடுவியா...?

    வராமே...? ஆறு மணிக்கு முகூர்த்தம் முடிஞ்சுடும். ஏழு மணிக்குள்ளே டிஃபன் முடிஞ்சுடும். அதுக்கப்புறம் அங்கே எனக்கென்ன வேலை? நேரா காலேஜுக்கு வந்துடுவேன்...

    ஸ்கூட்டர் எடுத்துட்டு போறியா?

    ஆமா...

    பார்த்துப்போ... கோயமுத்தூர் முன்னே மாதிரி கிடையாது.

    பவித்ரா சொன்னதைப் பொருட்படுத்தாமல் பல் தேய்த்துக் கொண்டே குளியலறைக்குள் நுழைந்தாள்.

    அதே விநாடி -

    ஹாஸ்டலுக்கு வெளியே ரோட்டின் எதிர் பக்கத்தில் ஒரு மரத்துக்குக் கீழே நின்றிருந்த ஒருவன் தன்னுடைய செல்போனில் கிசுகிசுப்பாய் பேசிக் கொண்டிருந்தான்.

    தியாகு...! நான் மைக்கேல்...

    சொல்லு...

    ஹாஸ்டலுக்கு எதிரே இருக்கிற ஒரு மரத்துக்கு கீழே நின்னு பேசிகிட்டிருக்கேன்... சாருப்ரபாவோட ரூம்ல லைட் எரியுது.

    ஸோ... எந்திரிச்சுட்டா...?

    ஆமா...

    இப்ப மணி எவ்வளவு...?

    நாலு முப்பத்தஞ்சு...

    எப்படியும் அஞ்சு மணிக்குள்ளே புறப்பட்டுடுவான்னு நினைக்கிறேன்...

    ஆமா...

    நம்ம வேன் எங்கே நிக்குது...?

    ஹாஸ்டலைவிட்டு இருநூறு மீட்டர் தூரம் தள்ளி ஸ்ட்ரீட் லைட் எரியாத ஒரு இருட்டான பகுதிக்குள் வேன் நின்னுகிட்டிருக்கு.

    வேன்ல யார் யார் இருக்காங்க...?

    சலீமும் சுப்ரமண்யனும்...

    வேன் ஓட்டப் போறது யாரு...?

    சலீம்...

    சரி... சாருப்ரபா ஹாஸ்டலைவிட்டு புறப்பட்டதுமே சலீமுக்கு செல்போன் மூலமா தகவல் கொடுத்துடு.

    அதைப்பத்தியெல்லாம் நீ கவலைப்படாதே தியாகு. திட்டம் போட்டபடி எல்லாம் நடக்கும்... மறுபடியும் பத்து நிமிஷம் கழிச்சு போன் பண்றேன். நீ ஸ்பாட்லயே இரு...

    மைக்கேல் பேசிவிட்டு செல்போனை அணைத்து சர்ட் பாக்கெட்டுக்குள் போட்டுக் கொண்டவன் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு கண்ணாடி ஜன்னலில் ட்யூப்லைட் வெளிச்சம் ஒட்டியிருந்த சாருப்ரபாவின் அறையையே இமைக்காமல் பார்த்தான்.

    குளித்துவிட்டு வாசனையோடு வெளிப்பட்டாள் சாருப்ரபா.

    பவித்ரா போர்வையைப் போர்த்துக் கொண்டு எழுந்து உட்கார்ந்திருந்தாள். பெரிய டவல் ஒன்றை மார்பு வரைக்கும் ஏற்றிக் கட்டியிருந்த சாருப்ரபா கண்ணாடிக்கு முன்பாய் போய் நின்றபடியே கேட்டாள்.

    என்ன பவி... எந்திரிச்சு உட்கார்ந்துட்டே...?

    இனி தூக்கம் வராது... உன்னால தூக்கம் போச்சு!

    ஸாரிடி பவி... இது ஒரு முக்கியமான கல்யாணம்...! போகாமே இருக்க முடியாது. ஸ்கிப் பண்ணினா அப்பாவுக்கு தெரிஞ்சுடும். அவர்கிட்டே திட்டு வாங்கணும்ன்னா எனக்கு எக்ஸ்ட்ராவா இன்னொரு ஜோடி காது வேண்டியிருக்கும்...

    உன்னை நினைச்சா எனக்கு ஆச்சர்யமாயிருக்குடி சாரு.

    எதுக்கு ஆச்சர்யம்...?

    உன்னோட அப்பா பெரிய பிசினஸ்மேன். கோடிக்கணக்கான ரூபாய்க்கு சொத்து இருக்கு. இந்த கோயமுத்தூரிலிலேயே பெரிய பங்களா இருக்கும்போது இந்த புறாக்கூண்டு ஹாஸ்டல்ல வந்து தங்கி கொசுக்கடிக்கு மத்தியில் தூங்கி எதுக்காக கஷ்டப்பட்டு படிக்கணும்...? வாழ்க்கைங்கிறது அனுபவிக்கத்தான். கஷ்டப்படறதுக்கு இல்லை. சொல்லிக் கொண்டே போய் ஜன்னலைத் திறந்து வைத்தாள் பவித்ரா.

    சரி... பாட்டியம்மா... உன்னோட அட்வைஸுக்கு நன்றி!

    உன்னை மாதிரி எனக்கு வசதியிருந்தா நான் என்ன பண்ணுவேன் தெரியுமா...?

    என்ன பண்ணுவே...? தலைக்கு ஒரு கிரீடத்தை வெச்சுகிட்டு ஏழு குதிரை பூட்டின ரதத்துல காலேஜுக்கு வருவியா...?

    சாரு...! ஒரு பெரிய கோடீஸ்வரியான உன்னால எப்படி இவ்வளவு சிம்பிளா இருக்க முடியுது...?

    நீ கேட்டது... ரெண்டு மார்க் கொஸ்டியனா... இல்லை பத்து மார்க் கொஸ்டியனா...? சாருப்ரபா ஒரு நீல நிற மைசூர் சில்க் சேலைக்கு மாறிக் கொண்டே கேட்ட விநாடி -

    அவளுடைய கட்டிலின் தலைமாட்டில் இருந்த ‘நோகியா’ செல்போன் ஊதா நிறமாய் ஒளிர்ந்து முணுமுணுத்தது.

    சாருப்ரபா எடுத்து பேசினாள்.

    ஹலோ...

    ......

    Enjoying the preview?
    Page 1 of 1