Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Engum Vivek! Ethilum Vivek!
Engum Vivek! Ethilum Vivek!
Engum Vivek! Ethilum Vivek!
Ebook142 pages52 minutes

Engum Vivek! Ethilum Vivek!

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Engum Vivek! Ethilum Vivek!

Read more from Rajeshkumar

Related to Engum Vivek! Ethilum Vivek!

Related ebooks

Related categories

Reviews for Engum Vivek! Ethilum Vivek!

Rating: 4.5 out of 5 stars
4.5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Engum Vivek! Ethilum Vivek! - Rajeshkumar

    16

    1.

    விவேக்கின் டயரியிலிருந்து:--

    கிளி ஜோசியத்தில் எனக்கு நம்பிக்கையில்லை. இருந்தாலும் 25 பைசா கொடுத்து நான் கிளி ஜோசியம் பார்த்தேன். ஏன் தெரியுமா...? அந்த இரண்டு நிமிடமாவது கிளி கூண்டை விட்டு வெளியே வந்து சுதந்திரக் காற்றை சுவாசிக்கட்டுமே என்றுதான்!

    மெரீனா பீச்சில் மறு ஜென்மம் எடுத்து வந்து அதே ஆக்ரோஷத்தோடு நின்று இருந்த கண்ணகி சிலைக்குப் பின்னால் தப்பு செய்யக் காத்து இருந்தார்கள் தெய்வீக காதல் ஜோடிகள். பானி பூரியும், பாப்கார்னும் அமோக விற்பனையில் இருந்தன. அண்ணா சதுக்கத்திலும், எம்.ஜி.ஆர்.நினைவிடத்திலும் வெளியூர் ஜனங்கள் சூட்கேஸும் பைகளுமாய் தெரிந்தார்கள். பஸ்சைவிட்டு இறங்கிய ஒரு சுடிதார் பெண்ணுக்கு எவ்வளவு மார்க் போடலாம் என்று விஷ்ணு யோசித்துக் கொண்டிருந்த விநாடி - பக்கவாட்டில் அந்தக் குரல் கேட்டது.

    ஸார்!

    விஷ்ணு திரும்பிப் பார்த்தான்.

    ஒரு பூக்காரி. இடுப்பில் இடம் பிடித்து இருந்த கூடையில் நெருக்கமாய்க் கட்டிய மல்லிகை மணத்தது.

    என்ன?

    பூ வேணுமா ஸார்...?

    உன் பேர் என்ன...?

    சாந்தி ஸார்...

    சாந்தின்னு பேர் வெச்சிருக்கிற எந்த பொண்ணுகிட்டேயிருந்தும் நான் எதையும் வாங்க மாட்டேன்... போய்ட்டு வா...

    சரியான லொள்ளுதான்...! பூக்காரி முணுமுணுத்துக் கொண்டே நடக்க - விஷ்ணு குரல் கொடுத்தான்.

    என்னது...! லல்லுபிரசாத் யாதவ் உனக்கு சொந்தமா? இதை நீ மொதலிலேயே சொல்லக் கூடாதா...? சொல்லியிருந்தா இந்த கூடை பூவையும் வாங்கியிருப்பேனே...!

    யோவ்...! இந்த நக்கல் பேச்சையெல்லாம் என்கிட்டே வெச்சுக்காதே...! நான் யார் தெரியுமில்ல...?

    அதான் சாந்தின்னு சொன்னியே...?

    நான் சாதாரண சாந்தி இல்லேய்யா... சைதை சாந்தி...! ராத்திரி பத்து மணிக்கு மேல என் கையில் பூக்கூடை இருக்காது. அரிவாள்தான் இருக்கும். பூ வேணுமான்னு கேட்டா வேணும் வேணாம்ன்னு சொல்லுவியா...! அத்த உட்டுட்டு நக்கலா பண்றே...! மவனே...! நரம்பை எடுத்துடுவேன்...!

    ஸாரி சைதை சாந்தி...! நீங்க ஒரு பொம்பளை ‘தாதா’ன்னு தெரியாமே பேசிட்டேன். என் தொடையைப் பார்த்தீங்களா... எப்படி ஆடுதுன்னு

    ம்... இந்த பயம் எப்பவும் இருக்கட்டும். பீச்சுக்கு வந்தமா... காத்தை வாங்கினமான்னு போய்கிட்டே இருக்கணும்.

    சரிங்க... சாந்தி மேடம்...!

    சைதை சாந்தி மல்லிப்பூவேய்ய்ய்ய்...! என்று குரல் கொடுத்துக் கொண்டே நகர்ந்து போய்விட விஷ்ணுவின் முதுகில் ஒரு கை விழுந்தது.

    திரும்பினான்.

    விவேக்!

    பாஸ்...!

    அந்த பூக்காரிக்கும் உனக்கும் என்னடா சண்டை...?

    அது ஒண்ணுமில்லை பாஸ்... நீங்க வர்ற வரைக்கும் எனக்கு பொழுது போகலை. அதான் பூக்காரிகிட்டே ஒரு வீடியோ கேம் விளையாடினேன்...

    ஏன்டா...! வாயை வெச்சுக்கிட்டு உன்னால சும்மாவே இருக்க முடியாதா...?

    தூங்கும் போது என்னோட வாய்க்கு ஃபுல் ரெஸ்ட் குடுத்துடறேன் பாஸ்...

    விவேக் முறைக்க ஸாரி பாஸ்...! நீங்க என்னை அவசரமா புறப்பட்டு வரச்சொன்னீங்க... இதோ... வந்துட்டேன்...! என்ன விஷயம் சொல்லுங்க...? என்றான்.

    வா... அப்படி நடப்போம்...!

    மணலில் நடந்தார்கள். இப்போது இருட்டின் அடர்த்தி கூடியிருந்தது. தொலைவில் கடல் ‘உஷ்... உஷ்...!’ என்றது.

    சொல்லுங்க பாஸ்...!

    இந்திய உளவுத்துறையின் தலைவர் சக்கரவர்த்தி சென்னைக்கு வந்து இருக்கிறார். அது உனக்குத் தெரியுமா...?

    தெரியாது பாஸ்...

    அவரை நீ நேர்ல பார்த்து இருக்கியா?

    இல்லை பாஸ்... இந்திய உளவுத்துறையில் அவர்தான் சுப்பீரியர்...! அவரை நம்ம மாதிரியான ‘க்ரைம் ப்ராஞ்ச்’ ரேஞ்சில் உள்ளவர்கள் பார்க்க முடியாதே!

    பார்க்க முடியும்...

    அது எப்படி பாஸ்...?

    விவேக் சிரித்தான். நீயோ நானோ அவரைப் பார்க்க விரும்பினா பார்க்க முடியாதுதான். ஆனா... அவர் நம்மை பார்க்க விரும்பினால் அது முடியுமே?

    விஷ்ணுவின் விழிகள் வியப்பில் வங்காள விரிகுடாவாய் விரிந்தது.

    பாஸ்...! நீங்க என்ன சொல்றீங்க...? இந்திய உளவுத்துறையின் தலைவர் சக்கரவர்த்தி உங்களையும் என்னையும் பார்க்க விரும்பறாரா?

    எஸ்...! சரியாய் ஏழு மணிக்கு இதே இடத்துக்கு வரப்போகிறார்.

    வந்து...?

    நம்ம ரெண்டு பேர்கிட்டேயும் பேசப் போறார்...

    எதைப்பற்றி...?

    தெரியலை... அவர் எனக்கு போன் பண்ணி பேசும் போது அஞ்சு மணி இருக்கும். சரியாய் ஏழு மணிக்கு கண்ணகி சிலைக்குப் பக்கத்தில் இருக்கச் சொன்னார்...

    பாஸ்...!

    என்ன...?

    ஏதோ பனங்காயைத் தூக்கி நம்ம தலையில் வைக்கப் போறார்ன்னு நினைக்கிறேன்.

    மே... பி...! - விவேக் தலையாட்டிக் கொண்டிருக்கும் போதே அவனுடைய செல்போன் கத்தியது. விவேக் எடுத்து - அழைப்பது யார் என்று பார்த்தான்.

    இந்திய உளவுத்துறை அதிகாரி சக்கரவர்த்தி.

    விவேக் குரல் கொடுத்தான்.

    குட் ஈவினிங் ஸார்...

    குட் ஈவினிங் மிஸ்டர் விவேக்...! இப்போது எங்கே இருக்கிறீர்கள்...?

    நீங்கள் சொன்னது போல் கடற்கரையில்... கண்ணகி சிலைக்குப் பக்கத்தில்...

    தட்ஸ் குட்...! இப்போது நேரம் ஆறு நாற்பத்தைந்து. இன்னும் பதினைந்து நிமிடத்தில் உங்கள் முன்னால் இருப்பேன்.

    வாருங்கள் ஸார்...! உங்களுக்காக காத்துக் கொண்டு இருக்கிறோம்...

    விஷ்ணு...?

    இதோ என் பக்கத்தில்...!

    ஓ.கே...! இன்னும் சற்று நேரத்தில் சந்திப்போம். உங்களிடம் கவலைக்குரிய சில விஷயங்களைப் பற்றி பேச வேண்டியிருக்கிறது...!

    வீ... ஆர்.. வெயிட்டிங் ஃபார் யூ ஸார்...

    Enjoying the preview?
    Page 1 of 1