Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ettu Vanna Vanavil
Ettu Vanna Vanavil
Ettu Vanna Vanavil
Ebook140 pages37 minutes

Ettu Vanna Vanavil

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Ettu Vanna Vanavil

Read more from Rajeshkumar

Related to Ettu Vanna Vanavil

Related ebooks

Related categories

Reviews for Ettu Vanna Vanavil

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ettu Vanna Vanavil - Rajeshkumar

    20

    1

    விநாயக்...!

    கூப்பிட்டவள் 23 - வயது சுடர் ஒளி.

    என்ன சுடர்...?

    கேட்டவன் 27 வயது விநாயக்.

    இரண்டு பேருமே அழகாயிருந்தார்கள்.

    இன்னிக்கு நம்ம ப்ரோக்ராம் என்ன...?

    இடம் கடற்கரை.

    ஏதாவது ஒரு தமிழ் படத்துக்கு போலாமா...?

    நேரம் - சாயந்தர ஐந்தரை.

    பட்ஜெட் உதைக்குது. வேண்டாம்.

    நீங்கள் யூகம் பண்ணியது சரிதான். இருவரும் காதலர்கள். சென்ற ஜூலை மாதத்தில் இருந்து பஞ்சபூதங்களை ‘ஐ’ விட்னஸ்களாக வைத்துக் கொண்டு சின்ஸியராய் காதலித்துக் கொண்டிருப்பவர்கள். ஒவ்வொரு சனிக்கிழமையும் கடற்கரை மணலில் நடப்பவர்கள். விநாயக் எம்.பி.ஏ.வை முடித்துவிட்டு ஒரு நல்ல வேலைக்காக எம்ப்ளாய்மெண்ட் நியூஸ் பேப்பர்களை விரல் தேய புரட்டிக் கொண்டிருப்பவன்.

    சுடர் ஒளி ஒரு தமிழ்வாத்தியாரின் மகள். அப்பாவும் அம்மாவும் போய்ச் சேர்ந்த பிறகு அண்ணன் அண்ணியின் கட்டுப்பாட்டில் இருப்பவள். ஒரு ஜுவல்லரி மார்ட்டில் சேல்ஸ் கேர்ளாக உத்தியோகம்.

    சரி... சினிமா வேண்டாம். எங்கே போலாம் சொல்லு... தேனாம்பேட்டையில் பொருட்காட்சி?

    நான் ஸ்கூல் ஃபைனல் படிக்கும்போதே பொருட்காட்சிக்கும் சர்க்கஸுக்கும் போறதை விட்டுட்டேன்.

    இனி நான் எதுவும் சொல்லமாட்டேன். சாய்ஸ் ஈஸ் யுவர்ஸ்... நீ எங்கே கூப்பிட்டாலும் வர்றேன்.

    ஒரு சேன்ஜுக்கு கோயில் போலாமா...?

    எந்த கோவில்...?

    கபாலீஸ்வரர்...

    கூட்டம் அதிகமாக இருக்கும்... நீயும் நானும் தனியா உட்கார்ந்து பேசமுடியாது.

    ஹலோ மிஸ்டர்... நாம ரெண்டு பேரும் கோயிலுக்குப் போறது தனியா உட்கார்ந்து பேசறதுக்காக இல்லை... கடவுளைக் கும்பிட...

    சரி...! எந்தக் கோயிலுக்கு போலாம்ன்னு நீயே சொல்லு...

    அஷ்டலட்சுமி கோயிலுக்குப் போயிடலாமா?

    எனக்கு எந்த அப்ஜெக்ஷனும் கிடையாது... ம் கிளம்பு...

    இப்பவே வேண்டாம்... ஆறு மணிக்கு மேல் போகலாம்...

    அதுவரைக்கும்...?

    சுண்டல் சாப்பிடலாம்... ஐஸ்க்ரீம் சாப்பிடலாம்... போய் ரெண்டு பிக் சைஸ் வெனிலா வாங்கிட்டு வா.

    நீயும் வா...

    என்னால நடக்க முடியாது... நீயே போய் வாங்கிட்டு வந்துருடா கண்ணா...!

    விநாயக் எழுந்தான். பேண்ட்டின் பின் பக்கம் ஒட்டியிருந்த மணலைத் தட்டிவிட்டு தொலைவில் தெரிந்த ஐஸ்க்ரீம் ஸ்டாலை நோக்கி நடந்தான்.

    ஒரு ஐந்து நிமிஷ நடை.

    ஐஸ்க்ரீம் ஸ்டால் வந்தது. குண்டு குண்டாய் இரண்டு கல்லூரி மாணவிகள் கோன் ஐஸ்க்ரீமை முழு மூச்சாய் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

    அந்த மைதிலி உனக்கும் எனக்கும் புதுசா ஒரு பேரை வெச்சு கூப்பிடறா... நீ நோட் பண்ணினியா மாலு...

    நோட் பண்ணாமே இருப்பேனா...? பாகிஸ்தானை அழிக்கிறதுக்கு நாம ரெண்டு பேர் போதுமாம்... நாம ‘ட்வின்ஸ்’ அணுகுண்டாம்...!

    அவ கண்ணு வெச்சதுதான் காரணமோ என்னவோ... நேத்திலிருந்து சரியா சாப்பிட முடியலை...

    விநாயக் ஐஸ்க்ரீம் ஸ்டாலை நெருங்கி உள்ளே இருந்த நபரிடம் கேட்டான்.

    ரெண்டு வெனிலா...

    ஸாரி ஸார்...! வெனிலா ஓவர்... ரச்சி ரச்சி இருக்கு...!

    வேண்டாம்...!

    அந்த ஐஸ்க்ரீம் ஸ்டால்ல ட்ரை பண்ணிப் பாருங்க ஸார்...

    விநாயக் அவன் கை காட்டிய பக்கம் நடந்தான். நடக்கும்போதே ஒருமுறை சுடர்ஒளி உட்கார்ந்திருந்த இடத்தைப் பார்த்தான். அவளுடைய குங்கும நிற சேலை காற்றுக்கு அலைந்து கொண்டிருந்தது. தொலைவில் கடல் அடர்த்தியான நீல நிறத்தில் ஒரு ராட்சஸ ரிப்பன் மாதிரி புரண்டது.

    ஐஸ்க்ரீம் ஸ்டாலை நோக்கி நடைபோட்ட விநாயக்கை யாரோ முதுகில் தொட்ட உணர்வு ஏற்பட திரும்பிப் பார்த்தான்.

    பளீரென்ற ஐவரி நிற சஃபாரி அணிந்த அந்த ஐம்பது வயது மனிதர் நின்றிருந்தார்.

    நீங்க மிஸ்டர் விநாயக்...?

    எஸ்...

    உங்க கிட்ட நான் கொஞ்சம் பேசணும்...!

    என்ன பேசணும்...?

    பர்சனல்...

    சொல்லுங்க...

    இங்கே இப்படி நின்னுகிட்டு பேச முடியாது. வாங்க கார்க்குப் போயிடலாம்...

    ஸாரி... நீங்க யார்ன்னு தெரியாமே நான் எப்படி கார்க்கு வர முடியும்..?

    சஃபாரி புன்னகைத்தார். நீங்க எம்.பி.ஏ. படிச்சுட்டு ஒரு நல்ல வேலைக்கு ட்ரை பண்ணிகிட்டு இருக்கீங்க இல்லையா?

    ஆமா...

    அந்த நல்ல வேலை சம்பந்தமாத்தான் பேசப்போறோம்.

    விநாயக்கின் விழிகளில் இப்போது சந்தோஷ ஒளி. என்னோட வேலை விஷயமாவா...?

    ஆமா...

    வாங்க... கார்க்கு போயிடலாம்.

    இருவரும் பீச்ரோட்டில் நிறுத்தியிருந்த ஐகான் காரை நோக்கி நடந்தார்கள்.

    ஸார்...! உங்களை இதுக்கு முன்னாடி நான் பார்த்தது இல்லை... நீங்க யார்ன்னு தெரிஞ்சுக்கலாமா...?

    எல்லாத்தையும் கார்ல போய்ப் பேசிக்கலாம். வாங்க விநாயக்...!

    மௌனமாய் நடந்தார்கள். ஒரு நிமிஷ நடையில் ஐகான் வந்தது.

    சஃபாரி கதவைத் திறந்துவிட - விநாயக் உள்ளே போனான். தொடர்ந்து அவரும் உள்ளே வந்தார். காரின் கண்ணாடிக் கதவுகள் ஏற்றப்பட்டிருக்க உள்ளே ஏ.ஸி.யின் குளிர் உறைந்து போயிருந்தது.

    அவர் மெல்ல பேச்சை ஆரம்பித்தார்.

    "என்னோட பேர் தாமோதர். ஆந்திராவில் எனக்கு சொந்தமான காப்பர் வயர் ஃபேக்டரி ஒண்ணு இருக்கு. 150 கோடி ரூபாய் முதலீட்டில் உருவாக்கப்பட்ட ஃபேக்டரி அது. ஃபேக்டரி இன்னும் ஃபங்க்ஷனுக்கு வரலை... வர்ற மாசம் ப்ரொடக்ஷன் எடுக்க

    Enjoying the preview?
    Page 1 of 1