Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

India Virpanaiku Alla
India Virpanaiku Alla
India Virpanaiku Alla
Ebook154 pages50 minutes

India Virpanaiku Alla

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
India Virpanaiku Alla

Read more from Rajeshkumar

Related to India Virpanaiku Alla

Related ebooks

Related categories

Reviews for India Virpanaiku Alla

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    India Virpanaiku Alla - Rajeshkumar

    19

    1

    யுரேக்யம் ஒரு அற்புதமான மூலகம். கதிரியக்கம் கொண்ட உலோகம். இந்த பிரம்மாண்டமான பூமிப்பரப்பில் ஐந்து சதவீதம் மட்டுமே அது ஒளிந்திருப்பதாக ஜியாலஜி வல்லுநர்கள் உறுதிபட சொல்லுகிறார்கள். இன்றைய நிலஅரப்படி இது உலோகங்களில் சூப்பர் ஸ்டார்.

    காலை மணி 9.45. டி.எஸ்.பி அலுவலகம். எஸ்.பி. நம்பெருமாள் தன்னுடைய பைக்கை வேகமாய் உள்ளே விரட்டி டூ வீலர்ஸ் பார்க்கிங்கில் நிறுத்தி ஸ்டாண்ட் போட, ஒரு எஸ்.ஐ. ஓடிவந்து சல்யூட் அடித்து நின்றார். நம்பெருமாள் தன்னுடைய அடர்த்தியான மீசையை இடது கை ஆட்காட்டி விரலால் நிரடிக் கொண்டே அந்த எஸ்.ஐ.யை ஏறிட்டார்.

    கனகவேல்...

    ஸார்...

    இன்னிக்குத்தானே குறை தீர்க்கும் நாள்...?

    ஆமா... ஸார்...

    பப்ளிக் எத்தனை பேர் வந்து இருக்காங்க?

    போன வாரத்தைக் காட்டிலும் அதிகம் ஸார்.

    அதிகம்ன்னா எவ்வளவு...?

    போன வாரம் அம்பத்தொன்பது பேர் வந்து இருந்தாங்க ஸார். இந்த வாரம் தொண்ணூற்றி ஆறு பேர் ஸார்... லேடீஸ் இன்னிக்கு அதிகம்.

    அரசியல்வாதிகள் யாரும் உள்ளே இல்லையே?

    இல்ல ஸார்... எல்லாரையும் சரியானபடி விசாரிச்சு தான் உள்ளே அனுப்பியிருக்கேன்.

    வாங்க... பார்த்துடலாம்... சொன்ன நம்பெருமாள் வேகவேகமாய் நடை போட்டு வராந்தாவின் கோடியில் இருந்த அந்த ஹாலுக்குள் நுழைந்தார். காத்திருந்த பத்திரிகை நிருபர்கள் எதிர்கொண்டார்கள். சூழ்ந்து கொண்டார்கள்.

    ஸார்... சின்னதாய் ஒரு பேட்டி...

    நம்பெருமாள் அவர்களைப் பார்த்து புன்னகைத்தார். ஸாரி... இந்த வெட்டிப் பேட்டிக்கெல்லாம் எனக்கு நேரமில்லை. மக்கள் தங்களோட குறைகளைச் சொல்றதுக்காக வெயிட் பண்ணிட்டிருக்காங்க. அவங்களை காக்க வைக்க நான் பிரியப்படலை...

    ப்ளீஸ் ஸார்... சுருக்கமா நாலைஞ்சு கேள்வி மட்டுமே...! உங்களைப் போன்ற போலீஸ் அதிகாரிகள் மக்கள் நலனுக்கான காரியங்களை செய்யும்போது ப்ரஸ் மீடியா அதை பார்த்துக்கிட்டு சும்மா இருக்க முடியாதே..? அதை பெரிய அளவில் பப்ளிஷ் பண்ண வேண்டாமா...?

    ஓ.கே... ஓ.கே... இப்ப என்ன கேட்கப் போறீங்க...?

    ஸார்... ஒவ்வொரு வாரமும் மக்களை இங்கே வரவழைச்சு அவங்க குறைகளைக் கேட்டு உடனடியாய் நடவடிக்கை எடுக்கறீங்க...! இதுவரைக்கும் எடுத்த நடவடிக்கைகளால் ஏதாவது பயன் கிடைச்சிருக்கா... ஸார்...?

    கண்டிப்பா...! நான் அரசியல்வாதி கிடையாது. ஒரு போலீஸ் அதிகாரி. சூப்ரிண்டெண்ட் ஆஃப் போலீஸ். ஒரு எஸ்.பி.யின் எல்லைக்கு உட்பட்டு என்னென்ன சட்ட நடவடிக்கைகள் எடுக்கலாமோ அதையெல்லாம் எடுத்து பொதுமக்களோட பிரச்னைகளைத் தீர்த்து வைச்சிருக்கேன்...

    நீங்க ஒருத்தர் மட்டும் இப்படி செயல்படறதால எல்லாப் பிரச்னைகளும் தீர்ந்துடும்னு நினைக்கறீங்களா ஸார்?

    நீங்க ஒரு விஷயத்தைப் புரிஞ்சுக்கணும்...! ஏதோ நான் ஒருத்தன் மட்டும்தான் கடமை தவறாத போலீஸ் அதிகாரி மாதிரி செயல்படறதாய் நீங்க நினைக்கக் கூடாது. எல்லா போலீஸ் அதிகாரிகளும் தங்களுடைய கடமைகளில் கண்ணும் கருத்துமாய் இருக்கத்தான் செய்யறாங்க... புகார்களின் பேரில் நடவடிக்கை எடுக்கறாங்க... குற்றவாளிகளை திறம்பட கண்டுபிடிக்கறாங்க... எனக்குள்ளே இருக்கற ஒரு மனக்குறை என்னன்னா பொதுமக்கள் போலீஸைப் பார்த்து அநாவசியத்துக்கு பயப்படறதுதான். ஒரு புகார் கொடுக்கிறதுக்குக் கூட தைரியமா யாரும் முன்வர்றது இல்லை. இதுல படிக்காதவங்களைவிட படிச்சவங்க அதிகம். போலீஸ் ஸ்டேஷன் வாசற்படி ஏறினாலே மானம் மரியாதை போயிட்டதாய் நினைக்கறவங்களும் இருக்கிறாங்க. அப்பேர்ப்பட்டவங்க எல்லாம் மாறணும். போலீஸைப் பார்த்து யாரும் பயப்படக் கூடாது. ஒரு நண்பன் கிட்டே தன்னோட மனக்குறைகளை சொல்ற மாதிரி ஒரு போலீஸ் அதிகாரி கிட்டே பிரச்னைகளை சொல்லணும். பொதுமக்களில் பலர் கோழைகளாய் இருக்கிறதாலதான் சமூக விரோதிகள் தைரியமாய் சட்டத்தை தன்னோட கையில் எடுத்துக்கிட்டு அராஜகம் பண்றாங்க. யாரோ என்னமோ பண்ணிட்டு போறாங்க என்கிற மனப்பான்மையில் பொதுமக்களும் இருக்காங்க... இந்த நிலையைச் சரிப்படுத்தணும்னா அதுக்கு ஒரே வழி பொதுமக்கள் போலீஸ் கிட்டே பயமில்லாமே வரணும்... புகார்களைச் சொல்லணும். அந்த புகார்களின் பேரில் உடனடியாய் உறுதியாய் நடவடிக்கை எடுக்கப்படும் போது, பொதுமக்களுக்கு போலீஸ் துறை மேல் ஒரு நம்பிக்கை ஏற்படும். அதைத்தான் நான் இப்போ பண்ணிட்டிருக்கேன்...

    ஸார்...! நான் ஒரு கேள்வி கேட்டா நீங்க கோபப்படக் கூடாது...

    சட்டத்தை யாராவது மீறினாத்தான் எனக்கு கோபம் வரும். நீங்க ப்ரஸ் பீப்பிள். தாராளமாய் எந்த ஒரு கேள்வியையும் தயக்கம் இல்லாமே கேட்கலாம்... ப்ளீஸ், உங்க கேள்வி என்ன...?

    அந்த நிருபர் சில விநாடிகள் தயங்கிவிட்டு கேட்டார். ஸார்... இந்த குறை தீர்க்கும் நாளை ஒரு பப்ளிசிட்டிக்காகத்தான் பண்றீங்கன்னு உங்க டிபார்ட்மெண்ட்டில் இருக்கிற சில அதிகாரிகளே பேசிக்கிறது உங்களுக்குத் தெரியுமா...?

    எஸ்.பி. நம்பெருமாள் அண்ணாந்து வாய்விட்டு சிரித்தார். நல்லாவே தெரியும்...! அதையெல்லாம் நினைச்சு கவலைப்படறதுக்கோ சங்கடப்படறதுக்கோ எனக்கு நேரம்கூட இல்லை. என்னைப் பொறுத்த வரைக்கும் ஏழை மக்களுக்கும் அபலைப் பெண்களுக்கும் சட்டமும் போலீஸும் பாதுகாப்பாய் இருக்கணும். நூறு குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் போனாலும் பரவாயில்லை. ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதில் நான் உறுதியாய் இருப்பவன். பொதுமக்கள் வரியாக செலுத்தும் பணத்தில்தான் எங்களைப் போன்ற அதிகாரிகளுக்கு சம்பளம் கொடுக்கப்படுகிறது. அதற்கு விசுவாசமாய் நாங்கள் வேலை பார்க்க வேண்டாமா...? பணம் படைத்தவர்கள் திறமையான வக்கீல்களை வைத்துக் கொண்டு, சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி தாங்கள் செய்த குற்றங்களில் இருந்து தப்பித்துக் கொள்கிறார்கள். ஆனால் ஏழை மக்கள் தப்பு செய்யாத போதும்கூட மாட்டிக் கொள்கிறார்கள். அவர்களையெல்லாம் அடையாளம் தெரிந்து கொண்டு போலீஸார் காப்பாற்ற முன்வர வேண்டும்...

    இனி ஒரே ஒரு கேள்வி ஸார்... நிருபர்களில்

    Enjoying the preview?
    Page 1 of 1