Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Indhuvin Irandavathu Idhayam and Sinthu Raththam Sinthu...
Indhuvin Irandavathu Idhayam and Sinthu Raththam Sinthu...
Indhuvin Irandavathu Idhayam and Sinthu Raththam Sinthu...
Ebook245 pages1 hour

Indhuvin Irandavathu Idhayam and Sinthu Raththam Sinthu...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Indhuvin Irandavathu Idhayam and Sinthu Raththam Sinthu...

Read more from Rajeshkumar

Related to Indhuvin Irandavathu Idhayam and Sinthu Raththam Sinthu...

Related ebooks

Related categories

Reviews for Indhuvin Irandavathu Idhayam and Sinthu Raththam Sinthu...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Indhuvin Irandavathu Idhayam and Sinthu Raththam Sinthu... - Rajeshkumar

    14

    கணவாய் என்றவகை மீன் இனத்திற்கு மூன்று இதயங்கள் உள்ளன. செவுள்களுக்கு அடியில் உள்ள இரண்டு இதயங்கள் ஆக்ஸிஜனை உறிஞ்சுவதற்குப் பயன்படுகின்றன. ரத்தத்தை மற்ற பகுதிகளுக்குச் செலுத்துவது மூன்றாவது இதயத்தின் வேலை.

    1

    ஜெயம் இன்ஜினியரிங் வொர்க்ஸ்.

    இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்டின் மையத்திலிருந்து கொஞ்சம் விஸ்தாரமான இடப்பரப்பை சுற்றிலும் வாங்கியிருந்தது, வொர்க்ஷாப். அட்மினிஸ்ட்ரேட்டிவ் கட்டிடங்களைச் சுற்றிலும் கூபா புல்வெளியும், ரோஜா பதியன்களும் ஆரோக்கியமாய் தெரிந்தன. அஸ்பெஸ்டாஸ் கூரைக்கு மேலிருந்த சிம்னியிலிருந்து அடர்த்தியான கரும்புகை இருபத்திநாலு மணி நேரமும் வெளியேறி வானப்பரப்பை கறுப்பாக்கிக் கொண்டிருந்தது.

    சிவப்பு நிற மார்பிள் கல் பதித்த அந்த வராந்தா நிறைய அறைகளை எதிரெதிராய் வைத்திருக்க - மேனேஜிங் டைரக்டர் - என்ற பித்தளை எழுத்துக்கள் பதித்திருந்த நாலாவது அறைக்குள் நமக்குத் தேவையான தீபன் இருந்தான்.

    இருநூற்றியிருபத்தைந்து ஸ்கொயர் ஃபீட் அறைக்குள் சற்று சாய்வான கோணத்தில் போடப்பட்டிருந்த கடல் மாதிரி பரந்த டேபிளுக்குப் பின்னால் சுழல் நாற்காலியில் நிரம்பித் தெரிந்தான். கண்களுக்குக் கண்ணாடி அணிவித்திருந்தான். நிர்வாகத் திறமை முகத்தில் உட்கார்ந்திருந்தது. எத்தனை முயற்சி செய்தும், எப்படி மூளையைக் கசக்கியும் கடந்த ஒரு வருஷமாக பிஸ்னெஸ் டல் அடித்துக்கொண்டிருப்பது அவன் முகத்தில் சோகத்தைத் தோய்த்திருந்தது.

    அந்த நிமிஷம் -

    ஃபைல்களை பார்வையிட்டு கையெழுத்துக்களைப் பதித்துக்கொண்டிருந்தான்.

    கையெழுத்து வாங்கிய ஃபைல்களை ஒரு பக்கமாய் தொப்பென வீசினான்.

    பார்த்துக்கொண்டிருந்த அந்த ஃபைலில் பேனா சட்டென்று ஓட்டத்தை நிறுத்திக்கொள்ள -

    நிமிர்ந்து இன்டர்காமிலிருந்து ரிஸீவரையெடுத்து பட்டனை அழுத்தினான். குட்மார்னிங் சார்...

    மறுமுனையில் ரிஸீவர் எடுக்கப்பட்டு - பதில்வர -

    யார் ஹரிகுமாரா...? என்றான் தீபன்.

    ஆமா ஸார்...

    கொஞ்சம் என் ரூம் வரைக்கும் வந்துட்டு போறீங்களா...?

    எஸ் ஸார்...

    ரிஸீவரைக் கவிழ்த்தான் தீபன்.

    அடுத்த ஃபைலைப் பார்த்து முடித்தபோது - அறைக் கதவு தட்டப்பட்டது.

    கமின்

    தீபன் சொல்ல -

    ஹரிகுமார் உள்ளே வந்தான். உடல் பூராவும் இளமை தத்தளிக்கும் தோற்றம். ஆறடி உயரத்துக்குப் போயிருந்தான். ஜெயம் என்ஜினியரிங் வொர்க்ஸின் மார்க்கெட்டிங் மேனேஜராக கம்பெனி தொடங்கிய காலத்திலிருந்து இருக்கிறான்.

    ஹரிகுமார் மேஜையை நெருங்கியதும் உட்கார இருக்கையைக் காட்டினான் தீபன். ஹரிகுமார் இருக்கையை நிறைத்ததும் - கையிலிருந்த ஃபைலைத் திருப்பி அவனுக்கு நேரே போட்டான்.

    இதைக் கொஞ்சம் பாருங்க ஹரிகுமார்...

    ஹரிகுமாரின் முகத்தில் குழப்பம் வந்து உட்கார்ந்தது. பார்வையை ஃபைலுக்குள் போட்டான். சில விநாடிகளுக்குப் பின் - நிமிர்ந்தான்.

    ஸார்...?

    எச்.பி.எஃப் லிமிடெட்டுக்கு பிரேம் ட்ரம் பீஸஸுக்கு எவ்வளவு சார்ஜ் போட்டிருக்கீங்க...?

    பர் பீஸ் டு ஃபிஃப்டி ருபீஸ்...

    தீபன் முகம் மாறினான்.

    இப்படி ரேட் போட்டுக்கொடுத்தீங்கன்னா கம்பெனி ஏன் நஷ்டம் காட்டாது?

    ஸார்...?

    போன வாரம் எச்.பி. எஃப்ல நான் கலந்துகிட்ட மினிட்ஸ் ஆஃப் டிஸ்கஷனைப் படிச்சீங்களா?

    ஹரிகுமார் தலையாட்டினான்.

    படிச்சேன் ஸார்...

    படிச்ச லட்சணம்... பர் பீஸுக்கு டூ சிக்ஸ்டி ருபீஸ் சார்ஜ் பண்றதுக்கு அவங்களை ஒத்துக்க வச்சிட்டு வந்திருக்கேன்... முழுசா பத்து ரூபாயை குறைச்சு நீங்க சார்ஜ் பண்ணியிருக்கீங்க... டோட்டல் ஆர்டர்ல எவ்வளவு ஆயிரம் குறையுதுன்னு கணக்குப் போட்டுப் பாருங்க...

    அவஸ்தையாய் நெற்றியைத் தேய்த்து அவன் தீபனைப் பார்த்தான்.

    ஸாரி ஸார்...

    ஐ டோன்ட் வான்ட் தட் பிளடி ஸாரி... தப்புப் பண்ணிட்டு ஸாரின்னு சொல்லிட்டா முடிஞ்சு போச்சா? கம்பெனில உங்களையெல்லாம் எதுக்காக ஹை அஃபிஷியல்ஸா வச்சிருக்கு...? உங்களை நம்பி நானும் இதை மேலோட்டமா பார்த்து கையெழுத்துப் போட்டு அனுப்பியிருந்தா என்னாகறது...?

    இனிமே இப்படி தப்பு வராது ஸார்...

    ஏகப்பட்ட தடவை நீங்க இந்த மாதிரி சொல்லியாச்சு...

    ஹரிகுமார் பதில் பேசாமல் உட்கார்ந்திருந்தான். சில விநாடி அவகாசத்துக்குப் பின் - தீபனே பேசினான்.

    ஓகே... மறுபடியும் ஒரு தடவை நான் இப்படி சொல்ற மாதிரி வச்சுக்காதீங்க... போய்ட்டு வாங்க...

    எஸ் ஸார்...

    தலையாட்டிவிட்டு எழப் போன ஹரிகுமார் மறுபடியும் அமர்ந்தான்.

    ஸார்...

    சொல்லுங்க...

    இன்னிக்கு ஈவ்னிங் என்னை பெங்களூர் போகச் சொல்லியிருக்கீங்க...

    சாரதா டூல்ஸ்ல கான்ட்ராக்ட் போடத்தானே...?

    ஆமா ஸார்...

    ஃபிப்டி தவ்சன்ட் டெபாசிட் கட்டணும் இல்லே...?

    ஆமா ஸார்...

    ஒன் மன்த் அவங்க பொறுத்துக்க மாட்டாங்களா?

    உள்ளே இருக்கற பெரிய ஆளுங்களை விசாரிச்சாச்சு ஸார்... ஃபிப்டி தவ்சன்ட் கட்டினாத்தான் முடியும்; அதுவும் நமக்கு கன்சஷன்... அந்த கான்ட்ராக்ட் போட்டாத்தான்... நமக்கு கொஞ்சம் இம்ப்ரூவ்மென்ட் கிடைக்கும் ஸார்...

    தீபன் மோவாயைத் தேய்த்தபடி - யோசித்தான்.

    இப்ப நம்ம கம்பெனியோட பாங்க் பாலன்ஸ் எவ்வளவு?

    தயக்கத்தோடு ஹரிகுமார் சொன்னான்.

    கிட்டத்தட்ட ட்வென்ட்டி தௌசன்ட் இருக்கும் ஸார்... வர்ற பேமென்ட்ஸெல்லாம் மாசா மாசம் அப்படியே ஸ்டாஃப்ஸோட சேலரிக்கு போயிடுது...

    தீபனுக்கு கவலை பனிப் புகை மாதிரி பரவியது.

    ‘சாயந்தரத்துக்குள் முப்பதாயிரம் ரூபாயை எப்படி புரட்டுவது?’

    விலங்குகளில் மிகச்சிறிய இதயம் கொண்டது சிங்கம்.

    2

    ரெஜிதா ஸ்டுடியோ.

    ஐந்தாவது ஃப்ளோர். ஒரு விசாலமான செயற்கைப் புல்வெளியின் மேல் அந்த சினிமா யூனிட் காமிரா, ரிஃப்ளெக்டர் சகிதமாய்க் குழுமியிருந்தது. டைரக்டர், காமிராமேன், அஸிஸ்டென்ட்டுகள், மற்றும் பலரும் சுறுசுறுப்பாய் இயங்கிக்கொண்டிருந்தார்கள். பரஸ்பரம் ‘அண்ணே அண்ணே’ போட்டுக்கொண்டிருந்தார்கள்.

    டீபாயின் மேல் வைக்கப்பட்ட ஃபாரின் கேஸட் ப்ளேயர் ‘அல்லி விழி ஜாலம் இங்கு அரங்கேறும் நாள் வருமா? மன்னவரின் மாளிகையில் விளக்கேற்ற ஆள் வருமா?’ என்று சோகமாய்க் கேட்டுக்கொண்டிருக்க - புல்வெளி மத்தியில் நின்றிருந்த நடிகை இந்துவுக்கும் ஹீரோ ரதீஷுக்கும் டைரக்டர் வர்த்தன் காட்சிப்படி என்ன செய்ய வேண்டும் என்று சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்தார்.

    இந்து ‘இம்போர்ட்டட் ஃப்ரம் தேவலோகம்’ என்று சீல் குத்தின மாதிரி பிரகாசமான அழகோடு இருந்தாள். கூந்தல் சவுரியை புறக்கணித்து கட்டுப்பாடில்லாமல் வளர்ந்திருந்தது. அன்றைக்கு பிசி நடிகையான இந்துவின் அம்மா இந்துவை குழந்தை வயசிலேயே சினிமாத் துறைக்குள் இழுத்துவிட்டு விட்டு - இந்துவுக்கு ஏழு வயசாய் இருக்கும்போதே - திடீர்க் காய்ச்சலில் செத்துப் போய்விட - சித்தியின் வளர்ப்பில் பெரியவளாகி இப்போது ஃபீல்டை மொத்தமாய் வளைத்துப் போட்டுக்கொண்டிருக்கிறாள். பேட்டிக்குப் பேட்டி ‘எங்கள் குடும்பமே கலைக் குடும்பம்’ என்று தம்பட்டம் அடித்துக்கொண்டிருந்தாள்.

    ரதீஷ் விக்கின் உபயத்தில் அடர்த்தியான தலை முடியில் தெரிந்தான். போன வருஷம் டைரக்டர் வர்த்தன் அவுட்டோர் ஷூட்டிங் வந்திருந்தபோது வேடிக்கை பார்க்கிற பொது மக்களிடையே கண்டுபிடித்த கோபாலனை ஃபீல்டுக்குள் நுழைக்க - இப்போது அவன் ரதீஷ்! ஆரம்ப காலத்தில் விஸ்கியை விஷமாய் பாவித்தவன் இப்போது விஸ்கி இல்லாமல் தூக்கமே வருவதில்லை என்று சொல்லிக்கொண்டிருக்கிறான்.

    இந்து...

    கூப்பிட்டார் வர்த்தன்.

    ம்...

    சோகமான எக்ஸ்ப்ரெஷனை முகத்தில் மட்டும் காண்பிச்சா பத்தாது... நடையிலும் அதே சோகம் தெரியணும்.

    வெளிச்சமடிக்க சிரித்தாள் இந்து.

    அவ்வளவுதானே... இப்ப பாருங்க ஸார்...

    நடந்து காண்பித்தாள். புன்னகையோடு வர்த்தன் தலையாட்டினார்.

    இனஃப்

    இருவரையும் பொஸிஷனில் நிற்க வைத்து -

    ஸ்டார்ட் சொல்ல - காமிரா இயங்க ஆரம்பித்தது.

    அந்த ஷாட் முடிந்தபோது -

    யூனிட் ஆள் ஒருவன் இந்துவை நெருங்கினான்.

    அம்மா. உங்களுக்கு ஃபோன் வந்திருக்குமா...

    எனக்கா?

    ஆமாம்மா...

    அவன் நகர்ந்ததும் - டைரக்டரிடம் சொல்லிவிட்டு யூனிட்டை விட்டு விலகி வந்தாள். கொஞ்ச தூரத்தில் அறைகள் வைத்திருந்த வராந்தா தெரிந்தது. வராந்தா படிகளில் உயர்ந்து - மொசைக் பரப்பில் நடந்து டெலிபோன் இருந்த ரூமைத் தொட்டாள். ரிஸீவர் தனியே பிரித்து டேபிள் விரிப்பின் மேல் வைக்கப்பட்டிருந்தது.

    தொட்டு எடுத்து - காதுக்கு கொடுத்தாள் இந்து.

    ஹலோ?

    பேசறது இந்துவா...?

    ஆமா... நீங்க யாரு?

    என்னோட குரலைத் தெரியலையா இந்து?

    - சொல்லிட்டு குரல் சிரித்தது.

    குரலுக்கு சொந்தக்காரன் அவளுக்கு தாலி கட்டிய கணவன்.

    இந்து உதட்டை சுழித்தாள்.

    சலிப்பான குரலில் -

    என்ன? என்றாள்.

    உனக்கு எப்போ ஷூட்டிங் முடியும்?

    அதைக் கேக்கறதுக்காக ஒரு ஃபோனா? ஏன் இப்படியெல்லாம் பேசி என்னோட நேரத்தைப் பாழாக்கறீங்க? ஷூட்டிங் முடிஞ்சா வீட்டுக்கு வர மாட்டேனா?

    "இந்து! நான் ஒரு கேள்வி கேட்டதுக்காக நீ ஒன்பது கேள்வி அடுக்கறே... ஒரு

    Enjoying the preview?
    Page 1 of 1