Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Irapathu Nee Irupathu Naan
Irapathu Nee Irupathu Naan
Irapathu Nee Irupathu Naan
Ebook124 pages39 minutes

Irapathu Nee Irupathu Naan

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Irapathu Nee Irupathu Naan

Read more from Rajeshkumar

Related to Irapathu Nee Irupathu Naan

Related ebooks

Related categories

Reviews for Irapathu Nee Irupathu Naan

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Irapathu Nee Irupathu Naan - Rajeshkumar

    20

    1

    கணவர் செண்பகராமனின் கன்னத்தை மெதுவாய் தட்டினாள். டாக்டர் தொழில் பார்த்தாலும்... உங்களுக்கு கூட இதிலெல்லாம் ரசனை இருக்கே...?

    செண்பகராமன் சிரித்தார். என்னை... என்னதான்... நினைச்சுகிட்டே...? டாக்டர் தொழில் பார்த்தா எல்லாமே வறண்டுடுமா என்ன? பத்து பதினைஞ்சு கடையேறி நானே செலக்ட் பண்ணின டிசைன் இது...! உனக்கும் எனக்கும் இந்த டிசைன் பிடிச்சிருக்கு. ஓ...கே...! ஆனா, இது வாஹினுக்குப் பிடிக்கணுமே?

    அவளுக்கு இது நிச்சயமா பிடிக்கும்.

    எப்படி சொல்றே...?

    அவ என்னோட தங்கச்சியாச்சே... என்னோட டேஸ்ட் தானே அவளுக்கும் இருக்கும்...

    ஹாஸ்டலுக்கு போய் காட்டிட்டு வரலாமா...?

    நினைச்ச நேரத்துக்கு ஹாஸ்டலுக்கு போயிட முடியுமா...? போன் பண்ணி வார்டன்கிட்டே டைம் ஃபிக்ஸ் பண்ணுங்க...

    நீ தான் போன் பண்ணேன்...

    நீங்க வரவர மகா சோம்பேறியாயிட்டீங்க... - சலித்துக் கொண்டே லீலா - ஹால் சுவரோரமாய் இருந்த டெலிபோனைத் தொட்டு - ரிஸீவரை எடுத்துக் கொண்டு டயலைச் சுழற்றி விட்டு பேசினாள்.

    கஸ்தூரிபாய் டீச்சர்ஸ் ட்ரெய்னிங் காலேஜ் ஹாஸ்டல்?

    ஆமா...

    குட் ஐ ஸ்பீக் வித் மிஸ் வாஹினி...?

    நீங்க யாரு...?

    நான் அவளோட சிஸ்டர்...

    டாக்டர் செண்பகராமனின் ஒய்ஃப்... மிஸஸ் லீலாவா?

    ஆமா...

    வாஹினி கிளாஸில் இருக்கா...! அவசர விஷயம் ஏதாவது இருக்கா...?

    நோ... நோ... பார்த்து கொஞ்ச நேரம் பேசணும். இன்னிக்கு ஈவினிங் ஒரு மணி நேரம் பர்மிஷன் கிடைக்குமா...?

    விஸிட்டர்ஸ் டே சண்டேதான். மத்த நாட்கள்ல நாங்க யாரையும் அலவ் பண்றதில்லை.

    மேடம்! வாஹினிக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணியிருக்கோம். கல்யாண ஏற்பாடுகளைப் பத்தி - அவகிட்ட பேசணும்.

    மறுமுனையில் வார்டன் ஆச்சர்யப்பட்டாள்.

    வாஹினிக்கு கல்யாணமா...?

    ஆமா... மேடம்... வர்ற மாசம் இருபத்தியேழாம் தேதி முகூர்த்தம் வெச்சிருக்கோம்.

    மாப்பிள்ளை யாரு...?

    என் கணவரோட ஃபிரண்ட். பேரு கைலாஷ் குமார். அவரும் ஒரு டாக்டர்தான்.

    வாஹினி பி.எட்.கோர்ஸ் இன்னம் அஞ்சு மாசம் இருக்கே. அதுக்குள்ளே ஏன் கல்யாணத்தை முடிக்கறீங்க...?

    மாப்பிள்ளையோட ஜாதகப்படி... வர்ற மாசக் கடைசிக்குள்ளே கல்யாணம் முடியணுமாம்...

    அப்படீன்னா வாஹினியோட பி.எட்.கோர்ஸ்?

    கல்யாணத்துக்கப்புறமும் தொடரும்...

    சந்தோஷம்... ஆனா... அவ காலேஜ் ரூல்ஸ்படி ஹாஸ்டலில் தங்கியிருந்துதான் படிக்கணும்.

    கல்யாணமானாலும்... அவ ஹாஸ்டலில் தங்கித்தான் படிப்பா.

    சரி... சாயந்திரம் அஞ்சு மணியிலிருந்து ஆறு மணிக்குள்ளே ஹாஸ்டலுக்கு வாங்க. வாஹினியோடு பேசிட்டுப் போலாம்.

    தாங்க்யூ... மேடம்...

    லீலா ரிஸீவரை வைத்துவிட்டு - சேலைத் தலைப்பால் நெற்றி வியர்வையை ஒற்றிக் கொண்டாள். அந்த வார்டன் அம்மாவுக்கு ஹாஸ்டல் கட்டடம் பெரிய ராஷ்ட்ரபதிபவன்-ன்னு நினைப்பு. ரொம்பவுந்தான் பிகு பண்ணிக்கிறா...

    அந்த அம்மா அவ்வளவு ஸ்ட்ரிக்ட்டா இருக்கிறதுனாலதான் காலேஜ்க்கும் ஹாஸ்டலுக்கும் தமிழ்நாடு பூராவும் நல்ல மதிப்பு. வாஹினிக்கு அந்த காலேஜில் சீட் வாங்கறதுக்குள்ளே... என்ன பாடு பட்டுட்டேன்.

    வாஹினுக்கு அந்த டீச்சர் வேலையில் அப்படி என்னதான் ஒரு இண்ட்ரஸ்ட்டோ...?

    ஏன்... டீச்சிங் ப்ரொபஷனுக்கு என்ன குறைச்சலாம்? டாக்டர் தொழில் மாதிரி அதுவும் ஒரு நோபிள் ப்ரொபஷன் தான்...

    பி.எஸ்.ஸி. ஜுவாலஜியில் ஃபர்ஸ்ட் கிளாஸ் எடுத்து பாஸ் பண்ணினது... மெடிக்கல் சீட்டுக்கு ட்ரை பண்ணுவான்னு நினைச்சேன். கடைசியில் பார்த்தா... ‘டீச்சர் தொழில் பார்க்க ஆசையா இருக்கு... அதுக்குத்தான் படிக்கப் போறேன்’னு சொல்லிட்டா... நீங்களும் அதுக்கு தலையை தலையை ஆட்டிக்கிட்டு - சீட் வாங்கி குடுத்துட்டீங்க.

    இதோ பார் லீலா! வாஹினி உனக்கு எப்படி தங்கச்சியோ... அதே மாதிரிதான் எனக்கும். அவ எனக்கு மச்சினிச்சி இல்லை... என்னோட ஃப்ரெண்ட். அப்பா, அம்மா இல்லாத அவளுக்கு நான் தான் காட் ஃபாதர். உங்கப்பா சாகும் போது என்கிட்டே என்ன சொன்னார் தெரியுமா...?

    போதும்...

    இரண்டு கைகளாலும் தன் காதுகளை மூடிக் கொண்டாள் லீலா. போதும்... கேட்டு... கேட்டு... காது நரம்பெல்லாம் தளர்ந்து போச்சு. நீங்க போய் ட்ரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வாங்க. சாப்பிடலாம். எனக்கு ஆர்ப்பாட்டமான பசி. நீங்க ஹாஸ்பிடல் கான்டீனிலேயே எதையாவது முழுங்கிட்டு வந்திருப்பீங்க.

    லீலா பொரிந்து கொண்டே டைனிங் டேபிளை நோக்கிப் போக - செண்பகராமன் - சர்ட் பட்டன்களை கழற்றிக் கொண்டே தன் அறைக்குள் நுழைய முயன்றார்.

    Enjoying the preview?
    Page 1 of 1