Jannalkal Thirakkinrana
By Rajeshkumar
()
About this ebook
Read more from Rajeshkumar
Dial For Kill Rating: 4 out of 5 stars4/5Panchavarna Kili Rating: 0 out of 5 stars0 ratingsRaja Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsNanthini Nalai Irakkiral! Rating: 3 out of 5 stars3/5Thirumarana Azhaippithazh Rating: 5 out of 5 stars5/5Iruttil Parakkum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsVidathey Vivek! Vidathey Rating: 4 out of 5 stars4/5100-Vathu Pournami Rating: 4 out of 5 stars4/5Konjum vanjanai! Rating: 5 out of 5 stars5/5Irapathu Nee Irupathu Naan Rating: 5 out of 5 stars5/5Sivappu November Rating: 0 out of 5 stars0 ratingsVetri Endraal Vivek Rating: 5 out of 5 stars5/5Engum Vivek! Ethilum Vivek! Rating: 5 out of 5 stars5/5Piriyamaana Kolaikaran Rating: 5 out of 5 stars5/5Kondraal Kondraan Kondren Rating: 5 out of 5 stars5/5Uyir Eduppaan Thozhan Rating: 5 out of 5 stars5/5Rojakkalum Thottakalum Rating: 0 out of 5 stars0 ratingsNeelam Enbathu Niramalla Rating: 0 out of 5 stars0 ratingsJune, July, Aaa...! Rating: 4 out of 5 stars4/5Uyir Veelchi Rating: 0 out of 5 stars0 ratingsMella Mella Ennai Kollathey Rating: 0 out of 5 stars0 ratingsKavanam Vivek Rating: 5 out of 5 stars5/5Naan Nalina Nalliravu Rating: 0 out of 5 stars0 ratingsUchi Nila Rating: 0 out of 5 stars0 ratingsOre Oru Naal Rating: 5 out of 5 stars5/5Karuppu Rattham Rating: 5 out of 5 stars5/5Thanga Macham Rating: 5 out of 5 stars5/5Oru Viyalakkilamai Vidintha Pothu Rating: 0 out of 5 stars0 ratingsVivek, Vishnu, Oru Vidukathai! Rating: 3 out of 5 stars3/5Moondru Vinaadi Mugam Rating: 5 out of 5 stars5/5
Related to Jannalkal Thirakkinrana
Related ebooks
Aadatha Oonjajkal Rating: 4 out of 5 stars4/5Oru Everest Thavaru! Rating: 5 out of 5 stars5/5Avan Aval Avargal Rating: 0 out of 5 stars0 ratingsNetru Naragam Indru Sorkkam Rating: 0 out of 5 stars0 ratingsEnakku Mattume Therintha Hema Rating: 0 out of 5 stars0 ratingsNeeya? Naana? Rating: 0 out of 5 stars0 ratingsMiss Bharatha Maathaa Rating: 5 out of 5 stars5/5Ellorum Nallavare Rating: 0 out of 5 stars0 ratingsMugamatra Nizhalgal Rating: 0 out of 5 stars0 ratingsPuthiya Paadal Paadu Rating: 5 out of 5 stars5/5Sivappaai Sila Kanavukal Rating: 0 out of 5 stars0 ratingsPesum Rojakkal! Rating: 0 out of 5 stars0 ratingsUchi Nila Rating: 0 out of 5 stars0 ratings5am to 5pm Rating: 0 out of 5 stars0 ratingsPuthithu, Puthithu, Kutram Puthithu! Rating: 0 out of 5 stars0 ratingsTheeratha Dhrogam Rating: 5 out of 5 stars5/5Onbathaavathu Thisai Paththavathu Giragam Rating: 0 out of 5 stars0 ratingsNillamal Odi vaa… Rating: 3 out of 5 stars3/5Malivu Vilaiyil Oru Maranam Rating: 5 out of 5 stars5/5Maha sathi Rating: 5 out of 5 stars5/5Vaa En Muthal Ethiriye Rating: 5 out of 5 stars5/5Mudhal Nimisham Rating: 2 out of 5 stars2/5Naan Naanalla... Rating: 0 out of 5 stars0 ratingsIthu Thadai Seiyapatta Paguthi Rating: 4 out of 5 stars4/5Sorkka Vasal Rating: 0 out of 5 stars0 ratingsAbayam, Abaayam, Aruna! and Valaivukal Abaayam! Rating: 0 out of 5 stars0 ratingsIndhu Sirikkiraal Rating: 0 out of 5 stars0 ratingsPaathi Rajyam Rating: 0 out of 5 stars0 ratingsUnnaik Kondra Naal Muthalaai Rating: 0 out of 5 stars0 ratingsRoja Mul Kireedam Rating: 4 out of 5 stars4/5
Related categories
Reviews for Jannalkal Thirakkinrana
0 ratings0 reviews
Book preview
Jannalkal Thirakkinrana - Rajeshkumar
எடுக்கப்படும்.
1
டெலிபோன் விடாமல் துடித்துக் கொண்டிருக்க - மத்தியான தூக்கத்தின் சுகமான பிடியில் சிக்கியிருந்த தனுஷ் எரிச்சலோடு எழுந்து உட்கார்ந்து ரிஸீவரை எடுத்தான்.
ஹலோ...
என்னடா கண்ணா...? பகல் தூக்கமா...?
- மறுமுனையில் கேட்டவள் நிகிலா. அவனுடைய காதலி. சந்தோஷம் அதிகமாய் இருக்கும்போது பேச்சில் ‘டா’ சேர்த்துக் கொள்வது வழக்கம்.
ரிஸீவரிலேயே கொட்டாவி விட்டான். தனுஷ். அழகான இளைஞன். உடற்பயிற்சி உடம்பு. தலை கொள்ளாத கேசம். நாசிக்குக் கீழே கறுப்புக் பெயிண்டைத் தொட்டு பட்டையாய் கோடு இழுத்தமாதிரி மீசை. மார்பின் ரோமக் காட்டில் ஸ்வஸ்திக் தங்க டாலர் பத்து சவரன் செயினில் தொங்கியது.
என் பகல் தூக்கத்தைக் கெடுத்த பாதகியே... எதுக்காக இந்த மத்தியான போன்...?
சாயந்திரம் சினிமாவுக்குப் போறேண்டா கண்ணா.
எந்த சினிமா...?
அலங்கார்ல ஒரு இங்கிலீஷ் படம். க்ரீன் ஏஞ்சல்ஸ். உன்னை மாதிரியான ஆம்பிளைங்க ‘ஜொள்ளு’விடற சீன் எல்லாம் உண்டு.
ரிசர்வ் பண்ணிட்டியா...?
ஆமா...
நான் வரமுடியாதே.
என்னது வரமுடியாதா?
ஆமா...
ஏன்...?
"சாயந்திரம் ஆறு மணிக்கு நான் ஹாஸ்பிடல் போகணும்.
ஹாஸ்பிடல் போகணுமா...? எதுக்கு?
நேத்து ராத்திரி பூராவும் காய்ச்சல். இருமல். காலையில டாக்டர் ஹரிஹரேஷ் கிட்டே போனேன். என்ன காய்ச்சல்ன்னு அவர்க்கு பிடிபடலை. டெஸ்ட்டெல்லாம் பண்ணினார். சாயந்தரம் வரச் சொல்லியிருக்கார்...
"மறுமுனையில் நிகிலாவின் உற்சாகம் வடிந்து போயிற்று
என்ன தனுஷ்...! உடம்பு சரியில்லைன்னா எனக்கு போன் பண்ணிச் சொல்ல வேண்டாமா...?
சாதாரண காய்ச்சலையெல்லாம் பெரிசு படுத்தணுமான்னு சொல்லலை!
இப்ப எப்படியிருக்கு...?
காய்ச்சல் போயே போச்சு... நவ் ஐயாம் ஆல்ரைட். மத்தியான சாப்பாட்டை ஒரு பிடி பிடிச்சிட்டு நிம்மதியா ஒரு தூக்கம் போட்டுக்கிட்டிருந்தேன்...
சரி... இன்னிக்கு சினிமா போலாமா வேண்டாமா?
டாக்டர் ஆறு மணிக்கு வரச் சொல்லியிருக்கார். வேணும்னா நாம அஞ்சரை மணிக்கே போய் டாக்டரைப் பார்த்துட்டு, அங்கிருந்து அப்படியே தியேட்டர்க்குப் போயிடலாமா...?
போயிடலாம். ஆனா ஒரு கண்டிஷன்.
என்ன...?
நான் சினிமாவுக்கு வர்றது உன்னோட வருங்கால மாமனார், மாமியாருக்கு - அதாவது என்னோட அப்பா, அம்மாவுக்குத் தெரியக்கூடாது.
டன்... அஞ்சு மணிக்கெல்லாம் காரை எடுத்துக்கிட்டு ஸ்பென்சர்கிட்டே வந்துடறேன். நீ வெயிட் பண்ணிட்டிரு.
லேட் பண்ணிடாதே தனுஷ்.
மண்டு...! உன் விஷயத்துல லேட் பண்ணுவேனா? சரி, குடுக்கிறதைக் குடுத்துட்டு ரிசீவரை வெச்சுடு.
ப்ச்...
போதாது... ஸ்ட்ராங்கா குடு.
அறைக்குள் தனுஷின் அம்மா பர்வதவர்த்தினி ‘ஜான்ஸன் பட்’டால் காதைக் குடைந்துகொண்டே நுழைந்தாள்.
யார்கிட்ட எதை ஸ்ட்ராங்கா கேட்டுக்கிட்டு இருக்கே தனுஷ்?
அம்மா... அது வந்து...
நிகிலாதானே...
ஆமா...
பர்வதவர்த்தினி ரிஸீவரைப் பறித்துக் காதுக்குக் கொடுத்தாள்.
ஹலோ...
அ... அத்தே...
"அடுத்த வாரம் நிச்சயதார்த்தம் வெச்சிருக்கோம்.
அடுத்த மாசம் முகூர்த்தம் வச்சிருக்கோம். முகூர்த்தம் முடிஞ்சதும் உங்களைக் கட்டுப்படுத்தி வைக்க முடியாதுங்கிறதுக்காக அன்னிக்கு ராத்திரியே சாந்தி முகூர்த்தத்துக்கும் ஏற்பாடு பண்ணியிருக்கு. அதுக்குள்ளே டெலிபோனை எச்சில் பண்ணணுமா...? ஆமா எதுக்காக போன்?"
அது வந்து... அத்தே... உங்க மகனுக்கு உடம்பு சரியில்லைன்னு கேள்விப்பட்டேன்.
உனக்கு யார் சொன்னது?
அவரை ஹரிஹரேஷ் ஹாஸ்பிடல்ல பார்த்ததாய் என் ஃப்ரெண்ட் ஒருத்தி சொன்னா. அதைத்தான் விசாரிக்கலாம்னு போன் பண்ணினேன்...
அவனுக்குக் காய்ச்சல் வர்றதுக்கு காரணமே நீதான்.
நானா...?
பின்னே...? போன வாரம் ஐஸ்க்ரீம் பார்லர்க்கு கூட்டிட்டு போய் போட்டிங்கிற பேர்ல ரெண்டு பேரும் ஆளுக்கு பத்து கப் ஐஸ்க்ரீம் சாப்பிட்டிருக்கீங்க.
உங்க மகன்தான் பத்து கப் ஐஸ்க்ரீமை உன்னால சாப்பிட முடியுமான்னு பந்தயம் வெச்சார்.
உங்க ரெண்டு பேரையும் கட்டி வெச்சு உதைக்கணும். இனி கல்யாணம் முடியற வரைக்கும் ரெண்டு பேரும் சேர்ந்து வெளியே போகக் கூடாது.
சரி அத்தே...
டெலிபோன் பண்ணைக் கூடாது...
சரி அத்தே...
அப்படியே திருட்டுத்தனமாய் போன் பண்ணிப் பேசினாலும்...
பேசினாலும்...
ரிஸீவரை எச்சில் பண்ணக்கூடாது...
சொன்ன பர்வதவர்த்தினி பொய்க் கோபத்தோடு ரிஸீவரை வைத்தாள்.
தனுஷைத் பார்த்தாள்.
எப்படிடா என் மாமியார் தோரணை?
தூள்ம்மா.
நீ ஒழுங்கா மாத்திரை சாப்பிட்டியா...?
இனிமேத்தான் சாப்பிடணும்.
கட்டிலின் தலை மாட்டில் இருந்த மாத்திரைப் பட்டையை எடுத்தான் தனுஷ்.
மாலை ஐந்து மணி.
ஸ்பென்சர்க்குப் பக்கத்தில் இருந்த பஸ் ஸ்டாண்டில் காத்திருந்தான் நிகிலா. வயலட் மெட்டல் ஷிபான் சேலையில் மஞ்சள் பூக்கள் இறைந்திருக்க, அவளுடைய இருபத்தொரு வயது உடம்பு கச்சிதமாய் சிக்கியிருந்தது. உடம்பின் வளைவுகளில் அற்புதம் தெரிந்தது. எல்லா வயது ஆண்களும் அவளைப் பார்வையால் கற்பழித்தபடி - ஸ்கூட்டர், சைக்கிளில் போய்க் கொண்டிருக்க அவள் கர்ப்பம் தரிப்பதற்குள் தனுஷ் கடல் வண்ண காரில் வந்தான்.
ஹேய் நிகில்... கெட் இன்.
கதவைத் திறந்துவிட, நிகிலா உள்ளே வந்தாள்.
ஆஹா...
என்றான் தனுஷ் காரை நகர்த்தியபடி
என்ன ஆஹா?
இந்த வயலட் சேலையில உன்னைப் பார்க்கிறப்போ...
பார்க்கிறப்போ...?
ஊதாநிற தேவதை’ங்கற தலைப்புல கவிதை எழுதலாம் போலிருக்கு.
தனுஷ்... நான் ஒண்ணு சொல்லட்டுமா?
என்ன?
வர வர என்னைப் பார்த்து நீ ரொம்ப ‘ஜொள்ளு’ விடறே! கவிதையெல்லாம் உனக்கு எதுக்கு, உன்னால இப்ப ஒழுங்கா அ... ஆ... இ... ஈ... எழுத முடியுமா?
ஏய்... நீ ரொம்பவும்தான் வார்றே! ஏதோ பாக்குரதுக்குக் கொஞ்சம் சுமாரா இருக்கேன்னு காதலிச்சா ரொம்பவும்தான் அலட்டிக்கிறியே. இந்த தனுஷைக் காதலிக்க எத்தனை பேர் போட்டி போட்டாங்க தெரியுமா?
பேத்தாம காரை ஒட்டு.
மத்தியானம் டெலிபோனால எங்க அம்மா விட்ட டோஸ் எப்படி...?
கணக்குல வெச்சுகிட்டேன்.
கணக்குல வெச்சுக்கிட்டியா...?
அந்த வீட்டுக்கு நான்தானே மருமகளா வர்றேன்? வந்ததும் கணக்க நேர் பண்ணிக்கிறேன்.
பாவி...
ஆமா... உனக்குக் காய்ச்சல் வந்ததுக்கு நான் காரணம்னு உங்கம்மாகிட்ட நீ சொன்னியா?
இல்லையே...
பின்னே எப்படி நீயும் நானும் போட்டி போட்டுகிட்டு ஆளுக்கு பத்து கப் ஐஸ்க்ரீம் சாப்பிட்டது தெரிஞ்சுருக்கும்?
எனக்குத் தெரியாது...
பொய் வேறே...! கல்யாணம் ஆகட்டும். ஃபர்ஸ்ட் நைட்ல என்ன பண்றேன் பார்.
"ஃபர்ஸ்ட் நைட்ல நீ என்ன பண்ணாலும் சரி. சந்தோஷமே. உன்னைய ஏத்துக்கக் காத்துட்டிருக்கே ன்
கெட்ட பையா...!
நிகிலா மெல்ல தனுஷின் தலையில் குட்டிக் கொண்டிருக்கும் போதே - க்ரீன்வேஸ் சாலையின் ஆரம்பத்தில் இருந்த டாக்டர் ஹரிஹரேஷின் ஹாஸ்பிடலுக்குள் கார் நுழைந்தது.
டாக்டர் ஹரிஹரேஷ் தன்னுடைய அறையில் உட்கார்திருந்த டாக்டர் ஒருவரோடு பேசிக் கொண்டிருக்க, மெல்லத் திறந்து எட்டிப் பார்த்தான் தனுஷ்.
எக்ஸ்க்யூஸ் மி டாக்டர்... மே ஐ கம் இன்."
"அந்த இளமையான டாக்டர் மலர்ந்தார்.
தனுஷ், வா... வா..."
கண்களுக்குக் கொடுத்திருந்த குளிர் கண்ணாடியைக் கழற்றிக் கொண்டே உள்ளே போனான் தனுஷ். நிகிலா தொடர்ந்தாள்.
ஹரிஹரேஷ் சிரித்தார்.
என்ன தனுஷ்... ஜோடியோடு வந்திருக்கே?"
டாக்டர்...! நாங்க ரெண்டு பேரும் இப்போ சினிமா போயிட்டிருக்கோம். நீங்க சாயந்தரம் வரச் சொன்னீங்கன்னு வந்தேன்."எதிரே காலியாய் இருந்த பாலிமர் நாற்காலிகளில் இருவரும் உட்கார்ந்தார்கள்.
வந்திருக்க வேண்டியதே இல்லை. போன் பண்ணி சொல்லலாமே? உனக்கு எடுத்த எல்லா டெஸ்ட் ரிப்போர்ட்டும் நார்மல். சாதாரண காய்ச்சல், இருமல்தான். நான் கொடுத்த மருந்தையே கண்டினியூ பண்ணு. வெளியே ரொம்ப அலையாதே...! அலைஞ்சே, சாதாரண ஃபீவர் வைரல் ஃபீவரா மாறிவிடும். அப்புறம் கஷ்டப்பட வேண்டும்."
நிகிலா கேட்டாள்.
இப்ப நாங்க சினிமாவுக்குப் போகலாமா டாக்டர்?"
இன்னிக்கு மட்டும்."
தாங்க்யூ டாக்டர்...! தனுஷ் கிளம்பு.
என்னம்மா நீ... கல்யாணம் பண்ணிக்கப் போகிறவனை ஏக வசனத்துல கூப்பிடறே...?
ஹரிஹரேஷ் கேட்க - தனுஷ் சிரித்தான்.
இது பரவாயில்லை டாக்டர். சமயத்துல ‘வாடா போடா’ன்னு கூப்பிடுவா."
நிகிலா புன்னகைத்தாள். ஸாரி டாக்டர்... நாங்க இரண்டு பேரும் ஃப்ரண்ட்ஸாயிருந்து காதலர்களா மாறினதாலதான் இப்படி. கல்யாணத்துக்கு அப்புறம் என்னை மாத்திக்குவேன்...
நிகிலா என்னை இப்படி ஒருமையில கூப்பிடறது எனக்குப் பிடிச்சிருக்கு டாக்டர். இதுலதான் ஒரு அன்யோன்யமே தெரியுது..."
டாக்டர் சிரித்தார்.
அப்படின்னா சரிதான்...
தனுஷ் எழுந்தான். நாங்க கிளம்பறோம். அதே மருந்துகளை நான் கண்டினியூ பண்ணினா போதுமா?
போதும்.
டாக்டரிடம் விடைபெற்றுக் கொண்டு வெளியே வந்தார்கள். பேசிக்கொண்டே காருக்கு வந்து - சீட்டை ஆக்ரமித்து தனுஷ் சட்டென்று கையை உதறி அடடே...!
என்றான்.
என்ன தனுஷ்...
கூலிங்கிளாஸை டாக்டரின் டேபிள் மேலே வெச்சுட்டேன்.
"நீ உட்கார். நான் போய் எடுத்துட்டு வர்றேன் என்றவள் வராந்தாவில் நடந்து,
டாக்டரின் அறையை நெருங்கியவள் - சாத்திய கதவைத் தொட்டுத் திறக்க முயன்ற வினாடி -
டாக்டர் ஹரிஹரேஷ் தன் சக டாக்டரிடம் பேசிக் கொண்டிருந்தது காதில் விழுந்தது.
பாவம் தனுஷ்! அவன்கிட்ட இந்த விஷயத்தை எப்படிச் சொல்றதுன்னு தெரியலை. அடுத்த வாரம் நிச்சயதார்த்தம். அடுத்த மாசம் கல்யாணம். இந்த நிமிஷம் இந்த ப்ளட் கான்ஸர்.
2
டாக்டர் ஹரிஹரேஷ் சொன்னதைக் கேட்டு வெளியே நிமிஷ நேரத்துக்கு உறைந்துபோய் நின்றாள் நிகிலா தன் தோள்பட்டையை யாரோ தொடும் உணர்ச்சியில் திரும்பினாள்.
நர்ஸ்.
கேட்டாள், டாக்டரை மறுபடியும் பார்க்க வந்தீங்களா?
நிகிலா தன் கையில் வைத்திருந்த சிறிய கர்சிப்பால் நெற்றி வியர்வையை ஒற்றிக்கொண்டபடி - காய்ந்து போன உதடுகளை அசைத்தாள். "டா... டாக்டர் டேபிள் மேல கூலிங்க்ளாஸை மறந்து வெச்சுட்டு போயிட்டோம்... அதை எடுக்கத்தான் வந்தேன். என்றவள் கதவை மெல்லத் தட்டினாள்.
டொக்... டொக்.
எஸ்... கம் இன்.
உள்ளே நுழைந்தாள். ஹரஹரேஷ் நெற்றியை சுருக்கினார். என்ன நிகிலா...?
தனுஷோட கூலிங்க்ளாஸ்.
ஓ...! அதை வெச்சுட்டுப் போயிட்டானா?
நிகிலா எடுத்துக்கொள்ளத் தயங்கி நின்றாள்.
டா...க்...ட... ர்..."
என்ன...?
த... தனுஷோட உடம்புக்கு...?
ஒண்ணுமில்லை. ஹி ஈஸ் ஆல்ரைட். அவன் கல்லு மாதிரி ஸ்ட்ராங்கா... அது வெறும் ஐஸ்க்ரீம்மால் வந்தது. மூணு வேளையும் சூடா முத்தம் குடு. சரியாய் போயிடும்.
‘டாக்டர் என்னமாய் நடிக்கிறார்!’
டாக்டரையே பார்த்தாள் நிகிலா. அவள் கண்களை பார்க்க திராணியின்றி அவஸ்தையாய்ப் புன்னகைத்தார். என்ன நிகிலா, அப்படிப் பார்க்கிறே?
ஒண்ணுமில்லை...
- சொன்னவள் கூலிங் க்ளஸோடு அறையினின்றும் வெளிப்பட்டாள்.
காரில் காத்திருந்த தனுஷ் நிகிலாவைப் பார்த்ததும் என்ன நிகிலா... டாக்டர் டேபிள்மேல இருக்கிற கூலிங்கிளாஸை எடுத்துகிட்டு வர்றதுக்கு இவ்வளவு நேரமா?
நிகிலா ஒன்றும் பேசாமல் எந்திரத்தனமாய் காருக்குள் உட்கார்ந்தாள். முகத்தில் கான்க்ரீட் இறுக்கம்.
தனுஷ் ஆச்சரியப்பட்டான். அட! என்னாச்சு உனக்கு? மூஞ்சியில் ஏன் இந்த நரசிம்மராவ்தனம்?
த...னு...ஷ்...
என்ன
இன்னிக்கு சினிமா வேண்டாம்!
ஏன்...?
எனக்குத் தலையை வலிக்குது!"
அது என்ன திடீர்த் தலைவலி?
என்னமோ தெரியலை - ஹாஸ்பிடல் ஸ்மெல் அலர்ஜி மாதிரி ஆயிடுச்சு. ஒரு ரெண்டு நிமிஷம் சேர்ந்த மாதிரி ஆஸ்பத்திரிக்குள்ளே இருந்தா தலைவலி வந்துடும்
இதை அப்பவே சொல்லியிருந்தா, உன்னை காருக்குள் இருக்கச் சொல்லிட்டு - நான் மட்டும் டாக்டரைப் போய் பார்த்திருப்பேன் இல்லையா...?"
நிகிலா ஒன்றும் பேசாமல் நெற்றியைப் பிடித்துக் கொண்டாள். தனுஷ் அவளுடைய தோளைத் தொட்டான்.
"ஏதாவது