Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Karkandu Ayutham
Karkandu Ayutham
Karkandu Ayutham
Ebook170 pages1 hour

Karkandu Ayutham

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Karkandu Ayutham

Read more from Rajeshkumar

Related to Karkandu Ayutham

Related ebooks

Related categories

Reviews for Karkandu Ayutham

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Karkandu Ayutham - Rajeshkumar

    ராஜேஷ்குமார்

    நமக்குப் புரியாத விஷயங்கள்: 1

    பூமியில் உயிரினங்கள் இருப்பது போல் இந்த பிரபஞ்சத்தில் உள்ள வேறு ஏதாவது கிரகத்தில் உயிரினம் உள்ளதா இல்லையா என்பதுதான் இன்றைக்கு புவியியல் விஞ்ஞானிகளுக்கு இடையில் விஸ்வரூபம் எடுத்து நிற்கும் ஒரு மில்லியன் டாலர் கேள்வி. இந்தக் கேள்விக்கான பதிலை உலகத்தில் உள்ள வல்லரசு நாடுகள் பலகோடி டாலர்கள் செலவு செய்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. பல விஞ்ஞானிகள் இதற்காகவே தங்களுடைய ஆயுளின் 75 சதவீத நாட்களை செலவழித்துள்ளார்கள். இந்த பிரபஞ்சத்தின் ஆரம்பம் என்ன, இது எப்படி உருவாயிற்று என்கின்ற கேள்விகளுக்கு புவியியல் வல்லுநர்கள் யூகத்தின் அடிப்படையில்தான் தங்களுடைய பதில்களைச் சொல்லி வந்திருக்கிறார்கள். இந்த விஷயத்தில் தீர்க்கமான உண்மை இல்லை என்பதே நிஜமான நிதர்சனம். சில வருடங்களுக்கு முன்பு பன்னாட்டு விஞ்ஞானிகள் பலரும் இணைந்து இந்த பிரபஞ்சத்தின் ரகசியத்தைக் கண்டுபிடிப்பதற்காக ‘கடவுளின் துகள்’ என்ற ஒன்றை உருவாக்கினார்கள். அது என்ன ‘கடவுளின் துகள்’ என்று கேட்கிறீர்களா? இரண்டாவது அத்தியாயத்தில் பார்ப்போம்.

    1

    அஸிஸ்டண்ட் போலீஸ் கமிஷனர் நமோ நாராயணன் தன்னுடைய பைக்கை ஈ.சி.ஆர். ரோட்டின் வளைவில் இருந்த ஒரு சவுக்குமரத் தோப்புக்குப் பக்கத்தில் மறைவாய் நிறுத்திவிட்டு அந்த அந்திவேளையில் பார்வைக்குக் கிடைத்த ஒற்றையடிப் பாதையில் நடக்க ஆரம்பித்தார். யூனிஃபார்மை தவிர்த்துவிட்டு கறுப்பு நிற பேண்ட்டிலும் வெள்ளை சர்ட்டிலும் தெரிந்தார்.

    ஐம்பதடி தூரம் நடந்திருப்பார்.

    சிவப்பு லுங்கி கட்டிய ஒரு நபர் பரட்டைத் தலையோடு எதிர்பட்டு பவ்யமாய் கும்பிடு போட்டு ஒதுங்கி நின்று ஆச்சர்யமான குரலில் கேட்டான்.

    அய்யா! நீங்க இந்த நேரத்துக்கு... இங்கே?

    நமோ நாராயணன் நிற்காமல் நடந்து கொண்டே பேசினார். சிக்கந்தரைப் பார்க்க வந்தேன்... ரொம்பவும் முக்கியமான விஷயம். சிக்கந்தர் கூட வேற யாராவது இருக்காங்களா...?

    யாரும் இல்லீங்கய்யா.. சும்மா உட்கார்ந்து டி.வி.யில் படம் பார்த்துகிட்டு இருந்தாரு...

    சரி...! நான் பேசிட்டு ஒரு பத்து நிமிஷத்துல கிளம்பிடுவேன்...

    அய்யா! ஏதாவது பிரச்னையா?

    எப்பவும் வர்ற பிரச்னைதான்...! இந்த தடவை கொஞ்சம் கூடுதல் ஜாக்கிரதை வேணும்... சொல்லிக் கொண்டே நமோ நாராயணன் ஒரு சவுக்கு மரத்தின் தாழ்ந்த கிளைக்கு கீழே குனிந்து நடந்தார்.

    சற்று தூரத்தில் பங்களாவின் வெள்ளை உடம்பு தெரிந்தது. போர்டிகோவில் ஒரு டவேராவும் இன்னோவாவும் பக்கம் பக்கமாய் நின்றன. மாடியில் ட்யூப்லைட் வெளிச்சம். வேகமாய் வீசும் கடல்காற்று. வாசற்படி அருகே கண்மூடிப் படுத்து இருந்த டாபர்மேன் நாய் நமோ நாராயணனின் வருகையை மோப்பம் பிடித்துக் கொண்டு விருட்டென்று எழுந்தது. குரைக்கலாமா என்று ஒரு விநாடி யோசித்துவிட்டு - இவர் அடிக்கடி வருகிற நபர்தானே என்ற எண்ணத்தில் - விசுவாசமாய் வாலை ஆட்டியது.

    சார்லி! எப்படியிருக்கே...? நாயின் கழுத்தை தடவி குசலம் விசாரித்துக் கொண்டே படியேறி உள்ளே போனார் நமோ நாராயணன்!

    சோபாவில் புதைந்து டி.வி. பார்த்துக் கொண்டிருந்த சிக்கந்தர் திரும்பிப் பார்க்காமலேயே வாங்க! ஏ.சி. ஸார் என்றான்.

    ‘பரட்டைத்தலை அதற்குள் தகவல் கொடுத்து இருக்கிறான்.’

    நமோ நாராயணன் சிரித்துக் கொண்டே அவன் எதிரில் போய் நின்றார்.

    என்ன சிக்கந்தர்! பொழுது போகலையா...? டி.வி. பார்த்துகிட்டு இருக்கே...?

    உண்மையிலேயே பொழுது போகலை ஏ.சி. ஸார். ஏதாவது அசைன்மெண்ட் கிடைச்சாத்தானே எனக்கு வேலை...? சொல்லிவிட்டு சிரித்த சிக்கந்தர்க்கு முப்பத்தைந்து வயது. ஒரு காட்டெருமைக்கு இணையான உடம்பு. நீள்வட்ட முகத்தில் சிறிய கண்கள். தாடியும் மீசையும் ட்ரிம் செய்யப்பட்டு பாதி முகம் ரோமமாய் தெரிந்தது. கழுத்தில் சுண்டு விரல் பருமனுக்கு ஒரு தங்கச் சங்கிலி பளபளப்பாய் புரண்டது.

    நமோ நாராயணன் அவனுக்கு எதிராய் இருந்த நாற்காலிக்கு போய் சாய்ந்தார். சிக்கந்தர் டி.வி.யை அணைத்துவிட்டு நிமிர்ந்தான்.

    பொதுவாய் இந்த மாதிரியான நேரத்துல நீங்க என்னைப் பார்க்க வரமாட்டீங்க.. இன்னிக்கு வந்து இருக்கீங்க... என்ன விஷயம் ஏ.சி.ஸார்?

    ஏ.சி. பெருமூச்சு விட்டார். சின்ன விஷயம்தான்...! இருந்தாலும் கொஞ்சம் சீரியஸ்.

    சிக்கந்தர் லேசாய் முகம் மாறினான். என்ன ஸார் சொல்றீங்க...?

    வர்ற வாரத்துல ரெண்டு நாள் நம்ம பிரதமரும், ஜனாதிபதியும் சென்னைக்கு வர்றாங்க. பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கறாங்க... அவங்க எல்லா நிகழ்ச்சிகளையும் முடிச்சுகிட்டு மறுபடியும் டெல்லி திரும்பற வரை லா அண்ட் ஆர்டர் பொறுப்பை கமிஷனர் என்கிட்டே ஒப்படைச்சிருக்கார். எந்தவிதமான ஒரு சின்ன அசம்பாவிதமும் நிகழக்கூடாதுன்னு ஸ்டிரிக்டா ஆர்டர் போட்டிருக்கார்.

    இது வழக்கமாய் நடக்கிற ஒண்ணுதானே...?

    வழக்கமாய் நடக்கறதுதான்! பிரஸிடெண்ட்டும் ப்ரைம்மினிஸ்டரும் தமிழ்நாட்டுக்கு வரும் போதெல்லாம் லா அண்ட் ஆர்டர் பொறுப்பு ஒரு குறிப்பிட்ட போலீஸ் ஆபீஸர்கிட்டே ஒப்படைப்பாங்க. அந்த ஆபீஸர் உடனடியாய் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாய் சென்னையில் உள்ள நூற்றுக்கணக்கான சமூக விரோதிகளைக் கைது பண்ணி சிறையில் அடைப்பாங்க. பிரஸிடெண்ட்டும், ப்ரைம் மினிஸ்டரும் டெல்லிக்குத் திரும்பிப் போனதும் கைது பண்ணின எல்லோரையும் விடுதலை பண்ணிடுவாங்க.

    சிக்கந்தர் சிரித்தான்.

    இப்பவும் நீங்க அதைத்தானே பண்ணப் போறீங்க ஏ.சி. ஸார்?

    அதைத்தான் பண்ணப் போறேன்... ஆனா...

    என்ன ஆனா...?

    சிக்கந்தர்...! போன வருஷம் வரைக்கும் சென்னையில் உள்ள சமூக விரோதிகள் லிஸ்டில் உன்னோட பெயர் இல்லை. இந்த வருஷம் க்ரைம் பிராஞ்ச் உளவுத்துறை உன்னையும் அந்த லிஸ்ட்ல சேர்த்து இருக்காங்க...

    சிக்கந்தரின் சின்னக் கண்களில் இப்போது சிவப்பு பரவியது. சோபாவுக்குள் புதைந்து போயிருந்த உடம்பு கோபத்துக்கு உட்பட்டு நிமிர்ந்தது.

    "என்ன ஏ.சி. ஸார்... என்னோட பேர் சமூக விரோதிகள் லிஸ்டில் இருக்கா...? நான் ஒரு தாதா மாதிரி நடிச்சிட்டு இருக்கேன். நான் உண்மையில் ஒரு போலீஸ் இன்ஃபார்மர் என்கிற விஷயம் டிபார்ட்மெண்ட்டில் இருக்கிற எல்லா உயர் அதிகாரிகளுக்கும்

    Enjoying the preview?
    Page 1 of 1