Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Manasellam Maya
Manasellam Maya
Manasellam Maya
Ebook169 pages1 hour

Manasellam Maya

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Manasellam Maya

Read more from Rajeshkumar

Related to Manasellam Maya

Related ebooks

Related categories

Reviews for Manasellam Maya

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Manasellam Maya - Rajeshkumar

    21

    ‘மனவளக் கலை’ என்ற புத்தகத்திலிருந்து:

    இந்த உலகத்தில் 800 கோடி மக்கள் இருந்தாலும் ஒருவரைப் போல் இன்னொருவர் இருப்பது இல்லை. ஒரே தாயின் வயிற்றில் பிறக்கும் இரட்டைக் குழந்தைகளுக்குக்கூட ஒரே மாதிரியான உடலமைப்பு இருந்தாலும் வாழ்க்கை ஒரே மாதிரி அமைவது இல்லை. என்ன காரணம்? ஒரு தாயின் வயிற்றில் இரட்டைக் குழந்தைகள் உருவாகி வளரும் போது அந்த இரண்டு குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான ரத்த ஓட்டம் கிடைப்பது இல்லை. ரத்த ஒட்டத்தில் வித்தியாசம் ஏற்படும். இது தவிர இன்னொரு காரணமும் உண்டு. இரட்டைக் குழந்தைகள் என்றாலும் இரண்டும் ஒரே நேரத்தில் பிறப்பதும் இல்லை. எப்படியும் ஒரு நிமிட வித்தியாசமாவது இருக்கும். அந்த ஒரு நிமிட வித்தியாசத்தில் விண்வெளியில் உள்ள கோள்களின் எல்லாக் கோணங்களும் மாறிப் போய் விடுகின்றன. மனித சிருஷ்டியில் இது ஒரு மிகப்பெரிய மாயாஜாலம்.

    1

    கலிவரதன் தன் பல்சர் பைக்கை ஜுபிடர் நர்ஸிங்ஹோமுக்கு முன்பாய் இருந்த கோல்ட் மெஹர் மரத்துக்குக் கீழே நிறுத்திவிட்டு தோளில் மாட்டிய ஜோல்னாப் பையோடு, ஹாஸ்பிட்டலின் ரிசப்ஷன் கௌண்ட்டரை நோக்கி நடக்க முற்பட்ட போது முதுகில் அந்தக் குரல் கேட்டது. கொஞ்சம் பரிச்சயமான குரல்.

    டேய் வரதா...!

    கலிவரதன் திரும்பிப் பார்த்தான். இருட்டும் வெளிச்சமும் கலந்த பின்னணியில் கைனடிக் ஸ்கூட்டரோடு அந்த இளைஞன் தெரிந்தான். கலிவரதனின் கண்கள் வியப்புக்கு போயிற்று. டேய் பாஸ்கி...! நீயா...?

    அவன் சிரித்தான். நானே தான்...!

    என்னடா இது... ஊர்க்குத் திரும்பிப் போறதா சொன்னே... இன்னமும் மெட்ராஸிலேயே இருக்கே...?

    நீ மட்டும் என்னவாம்...? ‘இனிமே சினிமா சான்ஸ் எல்லாம் கிடைக்காது. வீட்டுக்குப் போய் விவசாயம் பார்க்க வேண்டியதுதான்’னு சொல்லிட்டு கொண்டு வந்த மஞ்சள்பையோடு ஆட்டோவில் ஏறினே.! இப்பப் பார்த்தா... ஒயிட் பைஜாமா; தோள்ல ஜோல்னாப் பை.

    கலிவரதன் சிரித்தான். ஊர்க்கு ரயில் ஏறுறதுக்காக எக்மோர் ஸ்டேஷன்ல நின்னுட்டிருந்தபோது ஒரு பத்திரிகையாசிரியரைப் பார்த்தேன். பேச்சு வாக்கில் ‘என்னோட பத்திரிக்கையில் ரிப்போர்ட்டராய் ஜாய்ன் பண்ணிக்கிறியா’ன்னு கேட்டார். சரின்னு தலையாட்டிட்டேன். ஜாயின் பண்ணி ஒரு வருஷமாச்சு. ஆமா... இப்ப நீ என்ன பண்ணிட்டிருக்கே...?

    எனக்கும் சென்னையை விட்டுப் போக மனசில்லை. ஒரு டைரக்டர்கிட்டே உதவி டைரக்டராய் சேர்ந்துகிட்டேன். அந்த டைரக்டர் இப்ப உடல்நலம் சரியில்லாமே இந்த ஹாஸ்பிட்டல்லதான் அட்மிட்டாகியிருக்கார். பார்த்துட்டு வர்றேன்.

    நானும் ஒரு பேஷண்ட்டைப் பார்க்க வந்தேன் பாஸ்கி.

    அப்படியா...! விசிட்டிங் ஹவர்ஸ் முடியப்போகுது. சீக்கிரம் போ...! நான் அதே ட்ரிப்ளிகேன் லாட்ஜில்தான் தங்கியிருக்கேன். டைம் கிடைக்கும் போது வா... வரதா!

    கண்டிப்பா வர்றேன்! - பாஸ்கியின் கையைப்பற்றிக் குலுக்கிவிட்டு ரிசப்ஷன் கௌண்ட்டரை நோக்கிப் போனான் கலிவரதன். உயர்த்திப் போட்ட கொண்டையோடும் லேசான பௌடர் பூச்சோடும் கண்களுக்கு அழகாய் தெரிந்த அந்த ரிசப்னிஷ்ட் எஸ் என்றாள்.

    நான் ‘புதிய புயல்’ பத்திரிகையின் ரிப்போர்ட்டர்

    யாரைப் பார்க்கணும்?

    ஒரு பேஷண்ட்டை! பேரு மாயா!

    மாயா?

    எஸ்! நேற்று மத்தியானம் ரெண்டு மணிக்கு விஷம் சாப்பிட்டு தற்கொலை பண்ணிக்க முயற்சி செஞ்ச மாயா

    நீங்க அந்தப் பொண்ணுக்கு உறவா?

    இல்லை

    பின்னே?

    அந்தப் பெண் மாயா தற்கொலை பண்ணிக்க முயற்சின்னு பேப்பர்ல செய்தி பார்த்தேன். எதுக்காக அந்த தற்கொலை முயற்சின்னு கேட்டுட்டு போலாம்ன்னு வந்தேன்.

    அதாவது பேட்டி எடுக்கப் போறீங்க?

    அதை பேட்டின்னு சொல்ல முடியாது. ஜஸ்ட் ஒரு என்கொய்ரிதான்!

    என்கொய்ரி பண்ணுறதால என்ன பிரயோஜனம்?

    இதோ பாருங்க மேடம். நான் ரிப்போர்ட்டராய் இருக்கிற ‘புதிய புயல்’ பத்திரிக்கை வெறும் பொழுது போக்குப் பத்திரிகை கிடையாது. இன்றைய இளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும் தன்னம்பிக்கை ஊட்டுகிற பத்திரிக்கை. அந்தப் பத்திரிக்கையில் அச்சாகிற ஒவ்வொரு எழுத்தும் ஒவ்வொரு வைட்டமின் மாத்திரை. மாயா என்கிற அந்தப் பெண் தன்னுடைய வாழ்க்கையை முடித்துக் கொள்கிற எண்ணத்தோடு தற்கொலைக்கு முயற்சி பண்ணியிருக்கா. அதுக்கான காரணத்தைக் கண்டுபிடிச்சு அதுக்கு நிவாரணம் தர்றதுதான் எங்க பத்திரிகையோட வேலை.

    ஸாரி... ஸார்... இப்போ விஸிட்டிங் ஹவர்ஸ் முடிஞ்சு போச்சு. நீங்க நாளைக்கு வாங்க...!

    "என்ன மேடம் இது... நான் ஒரு நல்ல நோக்கத்துக்காக வந்து இருக்கேன். எனக்குப் போய் 144 போடறீங்களே?

    அந்தப் பெண் புன்னகைத்தாள். ஸார்! உங்க நோக்கம் நல்ல நோக்கம்தான். இருந்தாலும் விசிட்டிங் ஹவர்ஸ் முடிஞ்சு போச்சே... இன்னும் கொஞ்ச நேரத்துல டாக்டர் ரவுண்ட்ஸ் போவார். அந்த சமயத்துல அவர் உங்களைப் பார்த்துட்டார்ன்னா திட்டு வாங்கறது நான்தான்...! போய்ட்டு... நாளைக்கு வாங்க ஸார்...

    பத்தே பத்து நிமிஷம்...!

    வெரி... வெரி... ஸாரி... நீங்க கிளம்புங்க ஸார்...! - அவள் சொல்லிவிட்டு கிணுகிணுத்த இண்ட்டர்காம் போனை அட்டெண்ட் பண்ணப் போய்விட, கலிவரதன் சில விநாடிகள் ஏமாற்றமாய் நின்றுவிட்டு நகர்ந்தான். வரவேற்பறையை விட்டு வெளியே வந்து போர்டிகோ படிகளைத் தொட்டபோது பக்கவாட்டில் அந்தக்குரல் கேட்டது.

    ஸார்...!

    கலிவரதன் திரும்பிப் பார்த்தான்.

    நீலநிற யூனிஃபார்மில் அந்த ஹாஸ்பிட்டலைச் சேர்ந்த ஆர்டர்லி நின்றிருந்தான். சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு காதுவரை சிரித்தான்.

    உள்ளே போய் யாரையாவது பார்க்கணுமா ஸார்?

    ஆமா...! மாயான்னு பொண்ணு... தற்கொலை கேஸ்.

    பார்வையாளர்கள் நேரம் முடிஞ்சு போச்சு ஸார். யாரையும் உள்ளே விடமாட்டாங்க... ஆனா நீங்க அந்தப் பொண்ணைப் பார்த்தேயாகணும்ன்னு பிரியப்பட்டா என்னைக் கொஞ்சம் கவனிங்க... நான் இன்னொரு கேட் வழியா உங்களைக் கூட்டிட்டுப் போறேன்.

    கலிவரதனின் சட்டைப் பாக்கெட்டில் இருந்த அந்த ஐம்பது போய் நோட்டு ஆர்டர்லியின் சட்டைப் பாக்கெட்டுக்கு இடம் பெயர்ந்தது.

    எம் பின்னாடியே வாங்க ஸார். ஹாஸ்பிட்டலின் பக்கவாட்டில் இருந்த ‘ரேம்ப்’ வழியாகக் கூட்டிக் கொண்டு போனான். ஹாஸ்பிட்டலுக்கே உரித்தான அந்த நெடி நாசிக்குள் நுழைந்து வயிற்றை இம்சைப்படுத்தியது.

    அந்தப் பொண்ணு உங்களுக்கு வேண்டிய பொண்ணா ஸார்?

    கலிவரதன் ஆமாம் என்று சொல்லி வைத்தான்.

    Enjoying the preview?
    Page 1 of 1