Maranathai Varainthavan
By Rajeshkumar
5/5
()
About this ebook
Read more from Rajeshkumar
Raja Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsThirumarana Azhaippithazh Rating: 5 out of 5 stars5/5Konjum vanjanai! Rating: 5 out of 5 stars5/5Kondraal Kondraan Kondren Rating: 5 out of 5 stars5/5Panchavarna Kili Rating: 0 out of 5 stars0 ratings100-Vathu Pournami Rating: 4 out of 5 stars4/5Nanthini Nalai Irakkiral! Rating: 3 out of 5 stars3/5Irapathu Nee Irupathu Naan Rating: 5 out of 5 stars5/5Dial For Kill Rating: 4 out of 5 stars4/5Vetri Endraal Vivek Rating: 5 out of 5 stars5/5Iruttil Parakkum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsSivappu November Rating: 0 out of 5 stars0 ratingsPiriyamaana Kolaikaran Rating: 5 out of 5 stars5/5Vidathey Vivek! Vidathey Rating: 4 out of 5 stars4/5Uyir Veelchi Rating: 0 out of 5 stars0 ratingsJune, July, Aaa...! Rating: 4 out of 5 stars4/5Neelam Enbathu Niramalla Rating: 0 out of 5 stars0 ratingsUyir Eduppaan Thozhan Rating: 5 out of 5 stars5/5Rojakkalum Thottakalum Rating: 0 out of 5 stars0 ratingsIrandhu Kidandha Thendral Rating: 0 out of 5 stars0 ratingsNaan Nalina Nalliravu Rating: 0 out of 5 stars0 ratingsKavanam Vivek Rating: 5 out of 5 stars5/5Engum Vivek! Ethilum Vivek! Rating: 5 out of 5 stars5/5Moondru Vinaadi Mugam Rating: 5 out of 5 stars5/5Vivek Athu Visham Rating: 5 out of 5 stars5/5Ore Oru Naal Rating: 5 out of 5 stars5/5Karuppu Rattham Rating: 5 out of 5 stars5/5Mella Mella Ennai Kollathey Rating: 0 out of 5 stars0 ratingsThanga Macham Rating: 5 out of 5 stars5/5Maranathin Thethi March 7 Rating: 0 out of 5 stars0 ratings
Related to Maranathai Varainthavan
Related ebooks
Poovey… Poovey! Rating: 5 out of 5 stars5/5Menmaiyaai Oru Vanmurai Rating: 0 out of 5 stars0 ratingsInimel Indira… Rating: 0 out of 5 stars0 ratingsVarnaavin Maranam Rating: 0 out of 5 stars0 ratingsAntha 69 Naatkal! Rating: 0 out of 5 stars0 ratingsThappithe Aaga Vendum Rating: 5 out of 5 stars5/5Idi Minnal Indira Rating: 0 out of 5 stars0 ratingsIppadikku Oru Indian Rating: 0 out of 5 stars0 ratingsManasellam Maya Rating: 5 out of 5 stars5/5Tajmahal Nizhal Rating: 0 out of 5 stars0 ratingsAngey... Inkey... Enkey? Rating: 0 out of 5 stars0 ratingsEthayum Oru Thadavai! Rating: 0 out of 5 stars0 ratingsKaruppu Neruppu! Rating: 3 out of 5 stars3/5Oru Sanikkilamai Iravu Rating: 0 out of 5 stars0 ratingsVellai Nirathil Oru Vaanavil and Matravai Neril Rating: 5 out of 5 stars5/5Xerox Kathali Rating: 5 out of 5 stars5/5Udhaa Nizhal Rating: 0 out of 5 stars0 ratingsMannikkathey Marakkathey Rating: 0 out of 5 stars0 ratingsRoja Mul Thurogam! Rating: 0 out of 5 stars0 ratingsPuthiya Paadal Paadu Rating: 5 out of 5 stars5/5Indre Kadaisi! Rating: 0 out of 5 stars0 ratingsHello Dead Morning Rating: 5 out of 5 stars5/5Aduththa Ilakku Rating: 0 out of 5 stars0 ratingsRattham Sinthum Rojakkal Rating: 0 out of 5 stars0 ratingsVaikarai Nila Rating: 0 out of 5 stars0 ratingsIthu Sathivelai Rating: 5 out of 5 stars5/5En Nizhalukkum Urakkamillai Rating: 0 out of 5 stars0 ratingsThazhambu Naagangal! and Irandavathu Mugam Rating: 0 out of 5 stars0 ratingsUyiroduthan Vilaiyaduven! Rating: 5 out of 5 stars5/5Oru Ponmaanai Thedi... Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Maranathai Varainthavan
1 rating0 reviews
Book preview
Maranathai Varainthavan - Rajeshkumar
ராஜேஷ்குமார்
1
உன்னைத் தவிர வேறு யாரும் உனக்கு அமைதியைத் தர முடியாது.
- கீதை.
டி.வி.யின் நியூஸ் சேனலில் அந்த நியூஸ் ரீடர் பெண் தன் உதட்டுச்சாயம் அழிந்து விடக் கூடாது என்கிற கவலையோடு செய்தி படித்துக் கொண்டு இருந்தாள்.
"மத்திய அரசின் புலனாய்வுத்துறை ஒரு பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளது. டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை நகரங்களில் தற்கொலைப்படைத் தீவிரவாதிகள் புகுந்து இருப்பதாகவும், அதன் தொடர்ச்சியாக முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியிருப்பதாகவும் அந்தத் தகவலில் சொல்லப்பட்டு இருக்கிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பாகிஸ்தானில் இருந்து வந்த தீவிரவாதிகள் மும்பை நகரில் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்தி பலத்த உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தினார்கள். அதேபோல் இந்த வருடமும் அது போன்று ஒரு தாக்குதலை நடத்த ‘லாஸ்ட் ப்ரீத்’ (கடைசி மூச்சு) என்ற இயக்கத்தைச் சேர்ந்த தற்கொலைப்படைத் தீவிரவாதிகள் நாட்டின் முக்கிய நகரங்களில் ஊடுருவியிருப்பதாக மத்திய புலனாய்வுத்துறை எச்சரிக்கை விடுத்து இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவர் நேற்று டெல்லியில் நிருபர்களிடம் தெரிவித்தார். தற்கொலைப் படைத் தீவிரவாதிகள், அமர்நாத் யாத்திரையில் கலந்து கொள்ளும் சந்நியாசிகள் போன்ற தோற்றத்தில் இருப்பதாகக் கருதப்படுவதாகவும் கூறினார். மேலும் தீவிரவாதிகள் ஊடுருவுவதற்கு சில நாட்களுக்கு முன்பே அவர்களுடைய கூட்டாளிகளில் சிலர் மும்பைக்கு வந்து தீவிரவாதிகள் எந்த எந்த ஹோட்டல்கள், விருந்தினர் மாளிகைகளில் தங்கலாம் என்று நோட்டம் பார்த்துவிட்டுச் சென்றதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார். இது குறித்து நம்முடைய டெல்லி தொலைக்காட்சி நிருபர் கணேச மூர்த்தியை நாம் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அவர் கூறியதாவது...
டி.வி. திரையில் நியூஸ் ரீடர் பெண்ணின் முகம் காணாமல் போக, கையில் மைக் பிடித்தபடி ஒரு இளைஞன் தெரிந்தான். பின்பக்கம் பாராளுமன்றக் கட்டிடம் தெளிவாய் பார்வைக்குக் கிடைத்தது. அவன் பேசினான்.
"தீவிரவாதிகள் இந்தியாவின் பல நகரங்களில் ஊடுருவியிருப்பது குறித்து மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளது. அதன் காரணமாக நகரில் பதட்டம் அதிகரித்துள்ளது. இந்தத் தற்கொலைப் படைத் தீவிரவாதிகள் பாபா அணு ஆராய்ச்சி மையம், மும்பை பங்குச் சந்தை, நாக்பூரில் உள்ள ஹிந்து சேவா மையக் கட்டிடம், கொல்கத்தா துறைமுகம், கொல்கத்தாவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மற்றும் ராணுவநிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்தும் நோக்கத்தில் நுழைந்து இருப்பதாகப் புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது. டெல்லியில் அடுத்த மாதம் உலக உயிரியல் விஞ்ஞானிகள் மாநாடு சண்டீகரில் நடைபெற உள்ளது. அந்த இடமும், அமிர்தசரஸில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களும் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்காகலாம் என்றும் புலனாய்வுத்துறை எச்சரித்துள்ளது. இது குறித்து உள்துறை அமைச்சரிடம் பேட்டி கண்டபோது அவர் கூறியதாவது...
இளைஞன் மைக்கோடு மெல்ல நடந்து போய் காரினின்றும் இறங்கிக் கொண்டிருந்த - வெய்ஸ்ட் கோட்டும், பைஜாமாவும் அணிந்த - பப்பாளிப் பழ நிறத்தில் இருந்த ஒரு வழுக்கைத்தலை மனிதரிடம் போய் நின்றான். மைக்கை அவர் முகத்துக்கு நேரே நீட்டி ஆங்கிலத்தில் கேள்வி கேட்டான்.
இந்த தீவிரவாதிகளின் ஊடுருவலைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
உள்துறை அமைச்சர் தன் மீசையில்லாத மேல் உதட்டை இடதுகையின் ஆட்காட்டி விரலால் நிரடிக் கொண்டே பேசினார்.
இது ஒரு கவலைக்குரிய செய்தி. தீவிரவாதத்தை வேரோடு பிடுங்கி எறியாமல் அதன் கிளைகளை மட்டும் அவ்வப்பொழுது வெட்டிக் கொண்டு இருக்கிறோம். அதன் விளைவுதான் இந்த ஊடுருவல். இப்போது நமக்கு இந்தப் பிரச்னை பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. விஸ்வரூபம் எடுத்துள்ள இந்த அரக்கனை நாம் ஒழித்துக்கட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இதனால் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து விமான நிலையங்கள், பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், நட்சத்திர ஓட்டல்கள் ஆகிய இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்துமாறு மராட்டியம், மேற்கு வங்காளம், டெல்லி, குஜராத் மாநில அரசுகளை உள்துறை அமைச்சகம் உஷார்படுத்தி இருக்கின்றது.
கையில் மைக் வைத்து இருந்த இளைஞன் அடுத்த கேள்வியைக் கேட்டான். நாட்டில் உள்ள அணுமின் நிலையங்கள் தீவிரவாதிகளின் தாக்குதல் இலக்காக இருப்பது உண்யைா?
உண்மைதான்...! உளவுத்துறை அந்த செய்தியையும் ஊர்ஜிதம் செய்துள்ளது.
அப்படிப்பட்ட தாக்குதல்களைத் தடுக்க மத்திய அரசு என்ன ஏற்பாடு செய்துள்ளது?
நாட்டில் உள்ள எல்லா அணுமின் நிலையங்களுக்கும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சில முக்கிய அணுமின் நிலையங்களுக்கு இந்த பாதுகாப்போடு வான்வெளி பாதுகாப்புக்காக ராணுவ பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இந்தியாவில் ஊடுருவியுள்ள தற்கொலைப்படைகளை முறியடிப்பதுதான் இப்போதைய குறிக்கோள்.
தீவிரவாதிகளின் இந்த ஊடுருவலுக்கு பாகிஸ்தான் தான் காரணமாய் இருக்கமுடியும் என்று சொல்லப்படுவது உண்மையா?
வேறு எந்த நாடு காரணமாய் இருக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்...? கைப் புண்ணைப் பார்க்க கண்ணாடி தேவையில்லை. ‘லாஸ்ட் ப்ரீத்’ என்ற புரட்சி இயக்கம் குழந்தையாய் இருந்த போதே அதை மார்பிலும் தோளிலும் போட்டுக் கொண்டு வளர்த்த நாடு பாகிஸ்தான். இந்தியாவில் தீவிரவாதத்தை தூண்டிவிடும் நாடு பாகிஸ்தான்தான் என்பது உலகத்தில் பிறந்த குழந்தைக்கும் தெரியும். பிறக்கப் போகிற குழந்தைக்கும் தெரியும். ஆனால் இந்த அநியாயத்தை எந்த ஒரு நாடும் தட்டிக் கேட்க முன் வராதது உலகத்தின் எட்டாவது அதிசயமாக நான் நினைக்கிறேன்.
இது பற்றி அமெரிக்காவின் கருத்து என்ன?
நிருபர் கேட்ட கேள்விக்கு அமைச்சர் பதில் சொல்லும் முன்பு சட்டென்று டி.வி. அணைந்து போயிற்று.
டி.வி. பார்த்துக் கொண்டிருந்த மாலதியும், லீலாவும் டி.வி. அணைந்து போனதற்குக் காரணம் தெரியாமல் திகைத்துக் கொண்டு இருக்கும்போதே ஹாஸ்டல் வார்டன் நீலவேணியின் குரல் பின்னாலிருந்து கேட்டது.
இப்ப மணி என்ன... ராத்திரி பத்தரை. டி.வி. பார்க்கிற நேரமா இது..? எந்த ரூமிலாவது லைட் எரியுதான்னு பாருங்க. உங்க ரூம்ல மட்டும்தான்... தினசரி பதினோரு மணிவரைக்கும் லைட் எரியும். டி.வி. ஓடும்.
மாலதியும் லீலாவும் திரும்பிப் பார்த்தார்கள். ஹாஸ்டல் வார்டன் நீலவேணியின் கையில் டி.வி.யின் ரிமோட் கண்ட்ரோலும் முகத்தில் கோபமும் இருந்தது.
ஸாரி மேடம்...! நியூஸ் பார்த்துட்டிருந்தோம். இந்தியாவுக்குள்ளே தீவிரவாதிகள் ஊடுருவியிருக்கிறதாய் சொல்லிட்டு இருந்தாங்க. அதான் அப்படியே... உட்கார்ந்துட்டோம். அதுவுமில்லாமே நாளைக்கு சண்டே... எங்க ரெண்டு பேர்க்கும் ஆபீஸ் கிடையாது.
"உங்க ரெண்டு பேர்க்கும் ஆபீஸ் கிடையாதுன்னா டி.வி.யைப் போட்டுக்க வேண்டியதா..? நீங்க ரெண்டு பேரும் இந்த வொர்க்கிங் வுமன் ஹாஸ்டலுக்கு வந்து ஒரு