Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Monalisa (Punnagai) Azhugai
Monalisa (Punnagai) Azhugai
Monalisa (Punnagai) Azhugai
Ebook179 pages58 minutes

Monalisa (Punnagai) Azhugai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Monalisa (Punnagai) Azhugai

Read more from Rajeshkumar

Related to Monalisa (Punnagai) Azhugai

Related ebooks

Related categories

Reviews for Monalisa (Punnagai) Azhugai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Monalisa (Punnagai) Azhugai - Rajeshkumar

    ராஜேஷ்குமார்

    1

    ஒரு பஸ் டிக்கெட்டின் பின்னால் எழுதப்பட்டிருந்த வாசகங்கள்:

    கல்லூரியில் படிக்கும் பெண்களின் பார்வையில் இளைஞர்கள்....

    * அதிகமாகப் பேசினால் - அறுவை.

    * சிரித்து சிரித்துப்பேசினால் - ஜொள்ளு.

    * பேசாமல் இருந்தால் - ஜடம்.

    * அளவாகப் பேசினால் - ரோபோட்.

    * தமிழில் பேசினால் - ஞானப்பழம்.

    * ஆங்கிலத்தில் பேசினால் - பீட்டர்.

    * படித்துக் கொண்டே இருந்தால் - கிறுக்கு.

    * படிக்காமல் இருந்தால் - மக்கு.

    * சண்டை போட்டால் - ரௌடி.

    * போடாவிட்டால் - பயந்தாங்குள்ளி.

    *அக்கா என்று கூப்பிட்டால் - சின்னப்பையன்.

    * தங்கச்சி என்று கூப்பிட்டால் - பாசமலர்.

    ஆனால் இளைஞர்களின் பார்வையில் கல்லூரியில் படிக்கும் பெண்கள் இரண்டே இரண்டு விதமாகத்தான் பேசப்படுகிறார்கள்.

    1. சூப்பர் ஃபிகர்.

    2. சப்ப ஃபிகர்.

    போலீஸ் ஹெட் க்வார்ட்டர்ஸ். காலை ஆறு மணி.

    கண்ணாடி டம்ளரில் இருந்த மசாலா டீயைத் துளித்துளியாய் ரசித்துக் குடித்துக் கொண்டிருந்த கண்ட்ரோல் ஆபீஸர் சிவராஜ் டெலிஃபோன் ஒலிக்கும் சத்தம் கேட்டு ஹெட்ஃபோனை எடுத்து காதுகளில் மாட்டிக் கொண்டு தனக்கு முன்பாய் இருந்த மைக்கில் மெல்ல குரல் கொடுத்தார்.

    எஸ்..!

    ஒரு பெண் குரல் கேட்டது.

    போலீஸ் ஹெட்க்வார்ட்டர்ஸ் கண்ட்ரோல் ரூம்?

    எஸ்...

    ஸார்..! என்னோட பேர் ராஜலட்சுமி. அண்ணா நகர் கிழக்கில் இருக்கிற அஷ்டலட்சுமி அபார்ட் மெண்ட்டுக்குப் பக்கத்திலிருக்கிற ஒரு வீட்டிலிருந்து பேசறேன். உங்ககிட்ட ஒரு தகவல் சொல்லணும்.

    சொல்லுங்கம்மா... என்ன விஷயம்..? ஏதாவது தெஃப்டா?

    இல்ல...ஸார்...! ஒரு பொண்ணு எங்க வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கிற செல்ஃபோன் டவர் மேல ஏறிட்டிருக்கா!

    என்னது...! செல்ஃபோன் டவர் மேலே ஏறிட்டிருக்காளா?

    ஆமா...ஸார்... பத்து நிமிஷத்துக்கு முன்னாடி நான் என் வீட்டு வாசலில் கோலம் போட்டுகிட்டு இருந்தப்ப ஒரு பொண்ணு அழுதுகிட்டே என்னைக் கடந்து போனா. அவளுக்கு என்ன பிரச்னையோன்னு நான் பார்த்துகிட்டு இருக்கும்போதே பக்கத்து காலியிடத்தில் கட்டப்பட்டு இருந்த செல்ஃபோன் டவர் மேல ஏற ஆரம்பிச்சா. நான் சத்தம் போட்டேன். ஆனா அவ என்னோட சத்தத்தைப் பொருட்படுத் தாமே டவர் மேல ஏறிட்டு இருந்தா...

    இளம் பெண்ணா?

    ஆமா... ஸார்

    டவரோட உச்சிக்குப் போயிட்டாளா?

    இல்ல ஸார்... பாதி டவர் வரைக்கும் போயிருக்கா. மேலேயிருந்து குதிச்சு தற்கொலை பண்ணிக்கிற எண்ணத்தில்தான் அவ டவரோட உச்சிக்குப் போயிட்டிருக்கான்னு நினைக்கிறேன் ஸார். போலீஸ் உடனடியாய் ஸ்பாட்டுக்கு வந்தா பரவாயில்லை ஸார்...

    சரியான அட்ரஸையும் ஏதாவது ஒரு லேண்ட்மார்க்கையும் சொல்லுங்கம்மா...

    அந்த ராஜலட்சுமி சொன்னாள்.

    அட்ரஸை வெள்ளைத்தாளில் குறித்துக் கொண்ட கண்ட்ரோல் ஆபீஸர் சிவராஜ் வயர்லஸ்ஸை ஆன் செய்து அண்ணாநகர் கிழக்கு போலீஸ் ஸ்டேஷனைத் தொடர்பு கொண்டார். ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் கலிய பெருமாள் விஷயத்தை வாங்கி காக்கி உடைக்குள் பதட்டமானார். சுவர் ஆணியில் ஓய்வெடுத்துக் கொண்டு இருந்த தொப்பியை எடுத்து தலைக்குக் கொடுத்தவர், லாக் - அப் அறையில் ஒரு பிக்பாக்கெட் பேர்வழியை மிதித்து துவம்சம் செய்து கொண்டிருந்த சப் - இன்ஸ்பெக் டரைக் கூப்பிட்டார்.

    சேது மாதவன்...!

    ஸார்..!

    அவனை வந்து மிதிக்கலாம்... ஜீப்பை ரெடி பண்ணுங்க... ரெண்டு நிமிஷத்துல நாம புறப்படணும்

    என்ன பிரச்னை ஸார்..?

    அஷ்டலட்சுமி அபார்ட்மெண்ட்டுக்குப் பக்கத்தில் இருக்கிற ஒரு செல்ஃபோன் டவர்மேல- தற்கொலை செய்து கொள்கிற எண்ணத்தோடு இளம்பெண் ஒருத்தி ஏறிட்டு இருக்காளாம்... போய்த் தடுக்கணும்... கண்ட்ரோல் ரூமிலிருந்து தகவல்...

    சப் - இன்ஸ்பெக்டர் சேதுமாதவன் லாக்கப் செல்லிலிருந்து வெளிப்பட்டு இன்ஸ்பெக்டர் கலிய பெருமாளோடு இணைந்து கொண்டார். ஸ்டேஷன் வாசலில் நின்றிருந்த ஜீப்பில் ஏறிக்கொண்டார்கள். ட்ரைவர் திரும்பிப் பார்க்க, கலியபெருமாள் சொன்னார்.

    வேலு...!

    ஸார்..!

    அண்ணாநகர் ஈஸ்ட்ல அஷ்டலட்சுமி அபார்ட் மெண்ட்ஸ் எங்கேயிருக்குன்னு தெரியுமா...?

    தெரியும் ஸார்.. மல்லிகை டிபார்ட்மெண்ட்டல் ஸ்டோர்ஸுக்குப் போற வழியில் ஃபிப்த் க்ராஸ் ரோட்ல ஒரு க்ரௌண்டுக்குப் பக்கத்துல இருக்கு ஸார்...

    ஜீப்ல இப்போ புறப்பட்டா அங்கே போய்ச் சேர எவ்வளவு நிமிஷம் பிடிக்கும்...?

    ஒரு பத்து நிமிஷத்துல போயிடலாம் ஸார்.

    அஞ்சு நிமிஷத்துல போய்ச் சேர முடியுமான்னு பாரு. அங்கே ஒரு பொண்ணு தற்கொலை பண்ணிக்கிறதுக்காக செல்ஃபோன் டவர் மேல ஏறிக்கிட்டு இருக்காளாம்.... இப்பத்தான் கண்ட்ரோல் ரூமிலிருந்து தகவல் வந்தது.

    ரோட்ல ட்ராஃபிக் இல்லை ஸார். ஒரு ஏழெட்டு நிமிஷத்துக்குள்ளே ஸ்பாட்டுக்குப் போய்ச் சேர்ந்துடலாம்.

    சொல்லாதே... செய்...

    ஜீப் உண்மையிலேயே பறந்தது.

    சரியாய் எட்டு நிமிஷம்...!

    மல்லிகை டிபார்ட்மெண்ட்டல் ஸ்டோர்ஸுக்குப் பக்கத்தில் இருந்த ஃபிப்த் க்ராஸ் ரோட்டில் ஜீப் நுழைந்து ரோட்டை புழுதி பறக்கத் தேய்த்து அஷ்டலட்சுமி அபார்ட்மெண்ட்டை நெருங்கியது. அபார்ட்மெண்ட்டையொட்டிய பக்கத்துத் திடலில் ஒரு செல்ஃபோன் டவர் முளைத்திருக்க - அதைச் சுற்றிலும் ஒரு பெரிய கும்பல். கும்பலில் இருந்த சில ஆண்களும் பெண்களும் மேலே அண்ணாந்து பார்த்தபடி கைகளை அசைத்து சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்கள்.

    இந்தாம்மா.. கீழே இறங்கு...!

    குதிச்சுடாதே...! உனக்கு என்ன பிரச்னை இருந்தாலும் அதை நாங்க தீர்த்து வைக்கிறோம்.

    குதிக்காதே!

    குதிக்காதே...!

    ஒட்டு மொத்த கும்பலும் கைகளை ஆட்டிக் கொண்டிருக்க இன்ஸ்பெக்டர் கலியபெருமாளும் சப் - இன்ஸ்பெக்டர் சேது மாதவனும் ஜீப்பிலிருந்து இறங்கி செல்ஃபோன் டவரை அண்ணாந்து

    Enjoying the preview?
    Page 1 of 1