Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Monday Murder Day
Monday Murder Day
Monday Murder Day
Ebook155 pages46 minutes

Monday Murder Day

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Monday Murder Day

Read more from Rajeshkumar

Related to Monday Murder Day

Related ebooks

Related categories

Reviews for Monday Murder Day

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Monday Murder Day - Rajeshkumar

    23

    1

    ஆக்ஸிஜனுக்கு நம் முன்னோர்கள் சூட்டிய அழகான - பொருத்தமான பெயர் பிராணவாயு. நாம் பிராணனுடன் (அதாவது உயிரோடு) இருக்கத் தேவையான வாயு என்பதால் இந்தப் பெயர். இந்த ஆக்ஸிஜன் வாயுவைக் கண்டு பிடித்தவர் யார் தெரியுமா? இரண்டாவது அத்தியாயத்தின் பாக்ஸில் அவர் காத்துக் கொணடிருக்கிறார்.

    திருமண அழைப்பிதழ்களை கவர்க்குள் போட்டு கவரின் நான்கு மூலைகளிலும் மஞ்சள் தடவிக் கொண்டிருந்த, அந்த அழகான திலோத்தமாவை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிற ஒரு திங்கட்கிழமையின் காலை நேரத்தில் இந்த நாவல் ஆரம்பமாகிறது.

    ‘யாருடைய திருமண அழைப்பிதழ்’ என்று கேட்கிறீர்களா...?

    கல்யாணம் திலோத்தமாவுக்குத்தான். இப்போது ‘மிஸ்’ ஆக இருப்பவள் பதினைந்து நாள் கழித்து நீங்கள் பார்க்கும்போது ‘மிஸஸ்’ ஆக இருப்பாள். அவளைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போகிற மாறன் இப்போது அமெரிக்காவின் டெக்சாஸில் ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில் தன் மூளையை உருக்கி வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான். ஆறு மாதங்களுக்கு முன்பே பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட கல்யாணம் இவ்வளவு லேட்டாக கெட்டி மேளம் கொட்டப்படுவதற்குக் காரணம் மாறனுக்கு லீவு கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல்தான்.

    இந்த ஆறுமாத காலத்தில் திலோத்தமாவும் மாறனும் செல்போனில் பேசிப் பேசியே பணத்தை ஆயிரக் கணக்கில் கரைத்துவிட்டார்கள். இந்த நேரம் என்று இல்லை... எப்போது வேண்டுமானாலும் பேசிக் கொண்டிருப்பார்கள்.

    பார்த்தீர்களா...? நான் இப்படி சொல்லிக் கொண்டிருக்கும்போதே திலோத்தமாவின் செல்போன் சிணுங்குகிறது. சென்னையில் இப்போது காலை நேரம் என்றால் டெக்சாஸில் இப்போது ராத்திரி நேரம். இது மாறன்தான்.

    திலோத்தமா செல்போனை எடுத்து டிஸ்ப்ளேயில் அழைப்பது யார் என்று பார்த்துவிட்டு சந்தோஷமாய் காதுக்கு ஒற்றினாள்.

    திலோ...! குட்மார்னிங்...

    நீங்க ஒண்ணும் என்கூட பேச வேண்டாம்.

    அட... ஏன்...?

    உங்க கூட நான் டூ... அதாவது காய்.

    நான் பழம்...

    நேத்திக்கு போன் பண்றதா சொல்லிட்டு ஏன் போன் பண்ணலை...?

    போலீஸ் சார்ஜெண்ட் என்னோட செல்போனை வாங்கி வெச்சுகிட்டு பனிரெண்டு மணி நேரம் கழிச்சுத்தான் கொடுத்தார்.

    ஏன்... என்னாச்சு...?

    கார்ல நூறு கிலோ மீட்டர் வேகத்துல போக வேண்டிய ரோட்ல நான் எண்பது கிலோ மீட்டர் வேகத்துல போயிட்டேனாம். போலீஸ் பேட்ரோல் வேன் பின்னாடியே வந்து மென்னியைப் பிடிச்சுட்டான்... ஸ்பாட் ஃபைன் நூறு டாலர் போட்டான். கையில பணமில்லைன்னு சொன்னேன். செல்போனை வாங்கிட்டுப் போய்ட்டான். கோர்ட்டுக்கு போய் பணம் கட்டின பிறகுதான் செல்போன் கைக்கு வந்தது...

    சத்தம் ரொம்ப அதிகமா இருக்குங்க...

    என்ன சத்தம்...?

    ரீல் விடற சத்தம்தான்...

    திலோ! இது ரீல்ன்னு சொல்றியா?

    பின்னே...! எனக்கு போன் பண்ண நேரமில்லைன்னு டைரக்டா சொல்லிட்டு போக வேண்டியதுதானே... அதை விட்டுட்டு டெக்சாஸ் போலீஸை ஏன் இழுக்கறீங்க...?

    சரி...! ஃபேக்ஸ் பண்ணட்டுமா?

    எதை...?

    நான் கோர்ட்ல கட்டின நூறு டாலர் ஃபைனுக்கு டெக்சாஸ் டிராஃபிக் கோர்ட் ஒரு ரசீது கொடுத்து இருக்காங்க. அதை ஒரு பத்து நிமிஷத்துக்குள்ளே ஃபேக்ஸ் பண்றேன். பார்த்துக்க... நான் எப்பவும் எதுக்காகவும் பொய் சொல்லமாட்டேன்... தெரியுமா...?

    சரிங்க...! நான் உங்களை நம்பறேன்...

    அப்படி... வா... வழிக்கு...! மறுமுனையில் வாய்விட்டு சிரித்த மாறன் கேட்டான்.

    உன் வீட்ல இப்போ யாரும் இல்லை போலிருக்கே?

    அட... எப்படிக் கண்டு பிடிச்சிங்க...?

    வீட்ல யாராவது இருந்தா செல்போன்ல இவ்வளவு சத்தமா நீ பேச மாட்டியே... கம்பளியைப் போர்த்திகிட்டு தூங்கற மாதிரி கமுக்கமா பேசுவியே...!

    அப்பாவும் அம்மாவும் கல்யாண அழைப்புக்காக காஞ்சிபுரம் போயிருக்காங்க... திரும்ப ராத்திரியாயிடும். தங்கச்சி கண்மணி காலேஜுக்குப் போயிருக்கா... அவளும் காலேஜைவிட்டு வர எப்படியும் சாயந்தரமாயிடும்... வீட்ல இப்ப வேலைக்காரி கோகிலா மட்டும்தான். அவளுக்கும் ஒரு காதுதான் கேட்கும்...

    அப்படீன்னா இன்னிக்கு பூராவும் செல்போன்ல பேசிட்டிருக்கலாம்...

    நோ...

    ஏன் திலோ...?

    இனிமே நீங்க போன் பண்ணினாலும் சரி! நான் போன் பண்ணினாலும் சரி... பத்து நிமிஷத்துக்கு மேல பேசக்கூடாது...

    அதுதான் ஏன்...?

    அநாவசிய செலவுகளைக் குறைக்கணும்...

    என்ன திலோ...! கல்யாணம் பக்கத்துல வர வர புதுசு புதுசா கண்டிஷன் போடறே...?

    கண்டிஷன்ஸ் லிஸ்ட் இதோடு முடியலை... கைவசம் நிறைய இருக்கு...! கல்யாணம் முடிஞ்சு ஃபர்ஸ்ட் நைட்ல எல்லாத்தையும் சொல்றேன்...

    சரி... ஃபர்ஸ்ட் நைட்ல ‘அது’வாவது உண்டா?

    எது...?

    சத்தமா சொல்லட்டுமா... மெதுவா சொல்லட்டுமா?

    சத்தமாவே சொல்லுங்க...

    எம்.ஆர். ப்ளே...

    அப்படீன்னா...?

    ‘எம்’ன்னா மன்மதன். ‘ஆர்’ ன்னா ரதி. ‘ப்ளே’ன்னா என்னான்னு உனக்கு தெரியும்...

    டேய்...!

    என்னது டேயா...?

    எனக்கு கெட்ட வார்த்தை பேசினா பிடிக்காது.

    இது கெட்ட வார்த்தையா...? கேட்டுவிட்டு மாறன் சிரித்தான்.

    திலோத்தமா பதில் சொல்வதற்குள் - வாசலில் காலிங்பெல் சத்தம் கேட்டது.

    யாரோ காலிங் பெல் தர்றாங்க... நான் பார்த்துட்டு வந்து உங்களுக்கு போன் பண்றேன்.

    யார் அந்த பூஜை வேளைக் கரடி...?

    பார்த்துட்டு வந்து சொல்றேன்... திலோத்தமா செல்போனை அணைத்து உள்ளங்கையில் வைத்து அதக்கியபடியே எழுந்து அறையினின்றும் வெளிப்பட்டு வாசல் கதவை நோக்கிப் போனாள். வேலைக்காரி கோகிலாவும் உள்ளேயிருந்து ஓடி வந்தாள்.

    இருங்கம்மா... நான் பார்க்கிறேன்...

    போய்க் கதவைத் திறந்தாள்.

    வெளியே -

    ஒரு இளைஞன். அழகாய் இருந்தான். கழுத்தில் டை. கையில் ஒரு ப்ரீப்கேஸ். கோகிலாவிடம்

    Enjoying the preview?
    Page 1 of 1