Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Naan Nalina Nalliravu
Naan Nalina Nalliravu
Naan Nalina Nalliravu
Ebook143 pages45 minutes

Naan Nalina Nalliravu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Naan Nalina Nalliravu

Read more from Rajeshkumar

Related to Naan Nalina Nalliravu

Related ebooks

Related categories

Reviews for Naan Nalina Nalliravu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Naan Nalina Nalliravu - Rajeshkumar

    23

    மனிதனின் உடம்பில் நோய்கள் தோன்றுவதற்குக் காரணம், கிருமிகள்தான் என்கிற உண்மையை முதன்முதலில் கண்டுபிடித்த அறிஞர் யார்?

    கிரேக்க விஞ்ஞானி: ஹிப்போகிரேட்டஸ்.

    1

    டாக்டர் ஓம்பிரகாஷ் மேஜையின் மேல் இருந்த மினரல் வாட்டர் பாட்டிலை எடுத்து ஒரு வாய்த் தண்ணீரைத் தொண்டைக்குள் இறக்கிக் கொண்டு அட்டெண்டர் ரகுராமிடம் கேட்டார்:

    பேஷண்ட்ஸ் இன்னும் எவ்வளவு பேர் இருக்காங்க?

    அஞ்சு பேர் டாக்டர்...

    நெற்றி வியர்வையை ஒற்றி எடுத்த ஓம்பிரகாஷ், தன் மணிக்கட்டில் நேரம் பார்த்தார். ராத்திரி மணி பத்தரை. வயிறு பசித்து, உடல் களைத்து கண்கள் தூக்கத்திற்காக கெஞ்சின. இப்போது புறப்பட்டால்தான் அவுட்டரில் இருக்கும் தன்னுடைய பங்களாவுக்குப் போய் பதினோரு மணிக்குள் சேர முடியும். பேஷண்ட்ஸ் இன்னமும் நான்கு பேர் இருக்கிறார்கள். ஒரு நபர்க்கு பத்து நிமிஷம் என்று கணக்கிட்டால் கூட முக்கால் மணி நேரம் ஓடிப்போகும். அட்டெண்டரை மறுபடியும் ஏறிட்டார்:

    ரகுராம்...!

    டாக்டர்...

    அந்த பேஷண்ட்ஸ் புதுசா... இல்ல... பழசா...?

    புதுசுதான் டாக்டர்... நாலு பேர்களில் மூணு ஆண்கள். ஒரு பெண்...

    சரி... எல்லாரையும் நாளைக்குக் காலையில் பார்த்துடலாம். இப்ப போகச் சொல்லிடு... நான் வீட்டுக்குக் கிளம்பறேன்... நீயும் க்ளீனிக்கைப் பூட்டிகிட்டு புறப்படு...

    அட்டெண்டர் ரகுராமன் தலையாட்டிவிட்டு அறையினின்றும் வெளியேற ஓம்பிரகாஷ் தன்னுடைய எக்ஸிக்யூடிவ் நாற்காலியினின்றும் தன்னை உருவிக் கொண்டு எழுந்தார். வாஷ்பேசினில் முகம் கழுவி, கண்ணாடியில் முகம் பார்த்து ஈரத்தை டவலால் ஒற்றிக் கொண்டிருந்தபோது ரகுராமன் உள்ளே வந்தான்.

    டாக்டர்...!

    என்ன... சொல்லிட்டியா...? அந்த நாலு பேரும் போயிட்டாங்க...?

    ஜெண்ட்ஸ் மூணு பேரும் போயிட்டாங்க டாக்டர். அந்தப் பொண்ணு மட்டு போகாமே உட்கார்ந்துட்டிருக்கு... உங்களைப் பார்த்துட்டுத்தான் போவேன்னு அடம்பிடிக்குது...!

    ஓம் பிரகாஷ் சில விநாடிகள் யோசிப்பாய் இருந்துவிட்டு பக்கவாட்டு ஜன்னலுக்குப் போய் அதை மெல்லத் திறந்து பார்வையை மட்டும் துரத்தி வரவேற்பறையைப் பார்த்தார்.

    அந்த இளம்பெண் பார்வைக்குக் கிடைத்தாள். நெற்றிப் பொட்டில் சின்னதாய் ஒரு காயம். அதன்மேல் எக்ஸ்குறியாய் ஒரு பிளாஸ்திரி. சேலைத்தலைப்பைத் திருகியபடி ஏதோ யோசனையில் இருந்தாள்.

    ரகுராமன்! அந்தப் பெண்ணை உள்ளே அனுப்பிவை...! நீ வீட்டுக்குக் கிளம்பு...! நான் க்ளீனிக்கைப் பூட்டிக்கிறேன்...

    ஓம்பிரகாஷ் சொல்லிவிட்டு மறுபடியும் தன்னுடைய எக்ஸிக்யூடிவ் நாற்காலிக்குப் போய் சாய்ந்தார்.

    ஒரு இளம்பெண் இந்த ராத்திரி வேளையில் தனியாய்... அதுவும் நெற்றியில் காயத்தோடு...

    ஏதோ பிரச்னை!

    டாக்டர் யோசித்துக் கொண்டிருக்கும்போதே அந்தப் பெண் உள்ளே வந்தாள். ட்யூப்லைட்டின் வெளிச்சத்தில் இப்போது அழகாய்த் தெரிந்தாள். பெரிய கண்களில் ஒரு பயமும் மிரட்சியும் தெரிந்தன.

    உட்கார்ம்மா...

    அவள் உட்கார்ந்தாள். உடம்பு மெலிதாய் நடுங்கிக் கொண்டு இருந்தது. டாக்டர் அதைக் கவனித்தவராய் சொன்னார்:

    "இதோ பாரம்மா...! நீ யார்க்காகவும் எதுக்காகவும் பயப்பட வேண்டியது இல்லை... பி... ரிலாக்ஸ்...! உன்னோட பிரச்னை என்ன...?

    அந்தப் பெண் மௌனமாமய் தலைகுனிந்து மேஜையின் ஓரத்தைக் கீறிக் கொண்டிருந்தாள்.

    சொல்லும்மா...! உன்னோட பிரச்னை என்ன...?

    சில விநாடிகள் கழித்து - அந்தப் பெண் நிமிர்ந்தாள். உதடுகள் துடித்தன.

    டா... க்... ட... ர்...! என்று பேச ஆரம்பித்தவளின் கண்களில் நீர் நிரம்பியது. தொண்டை அழுகையில் அடைத்துக் கொண்டது. டாக்டர் எழுந்தார் பதற்றமாய்.

    அடேடே! என்னம்மா நீ...! டோண்ட் பி எமோஷனல். பிரச்னை எதுவாயிருந்தாலும் பரவாயில்லை... சொல்லும்மா...!

    அவள் கண்ணீரைக் கட்டுப்படுத்திக் கொண்டு மெல்ல பேச்சை ஆரம்பித்தாள்: டாக்டர்...! என்னோட பிரச்னை விசித்திரமானது. நான் யார்ன்னு எனக்கே தெரியலை. என்னோட பேர் என்ன... என்னோட ஊர் எது... என்னோட ரிலேட்டீவ்ஸ் யாரு... இது மாதிரியான எந்த ஒரு விபரமும் எனக்குத் தெரியலை... நான் யார்ன்னு யோசிச்சுப் பார்த்தா என்னோட மூளை குழம்புது. தொடர்ந்து யோசனை பண்ணினால் பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கு... நான் ஒரு பெண் என்கிற உண்மை மட்டும் தெரியுது. இந்த ஊர் சென்னைன்னு தெரியுது... ஆனால், இந்த ஊர் எனக்கு பழக்கப்பட்ட ஊர் மாதிரி தெரியலை...

    ஓம்பிரகாஷ் சற்றே அதிர்ந்து போனவராய் அந்தப் பெண்ணையே பார்த்தார்.

    நீ யார்ன்னு உனக்கே தெரியலையா...?

    தெரியலை...

    சரி...! உன்னோட நெற்றியில் இருக்கிற காயம் எப்படி ஏற்பட்டது...?

    அதுவும் தெரியலை டாக்டர்... இந்த நெற்றிக் காயம் எப்படி ஏற்பட்டது... இந்த காயத்துக்கு யார் பிளாஸ்திரி போட்டாங்க... இது மாதிரியான கேள்விகளுக்கும் என்னால பதில் கண்டுபிடிக்க முடியலை...

    சரி...! என்னைப் பார்க்கணும்ன்னு உனக்கு எப்படி தோணுச்சு...?

    நான் ரோட்ல நடந்து வந்துகிட்டு இருக்கும்போது உங்க க்ளீனிக்கைப் பார்த்தேன். க்ளீனிக் வாசலில் ‘டாக்டர் ஓம்பிரகாஷ். ‘சைக்யாட்ரிஸ்ட்’ மனநல மருத்துவர்’ன்னு போர்டு மாட்டியிருந்தது. உங்ககிட்டே என்னோட பிரச்னையை சொன்னா தீர்வு கிடைக்கலாம் என்கிற நம்பிக்கையில் வந்தேன். என்னோட பிரச்னையை உங்களால சால்வ் பண்ண முடியுமா டாக்டர்?

    "தாராளமாய் சால்வ் பண்ணலாம். அதுக்கு உன்னோட ஒத்துழைப்பு எனக்கு வேணும்... நான் கேட்கப் போகிற கேள்விகளுக்கு நீ நிதானமாய் யோசனை பண்ணி பதில்

    Enjoying the preview?
    Page 1 of 1