Naangavathu Kuranku
By Rajeshkumar
()
About this ebook
Read more from Rajeshkumar
Irapathu Nee Irupathu Naan Rating: 5 out of 5 stars5/5Thirumarana Azhaippithazh Rating: 5 out of 5 stars5/5Dial For Kill Rating: 4 out of 5 stars4/5Raja Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsPanchavarna Kili Rating: 0 out of 5 stars0 ratingsKondraal Kondraan Kondren Rating: 5 out of 5 stars5/5Konjum vanjanai! Rating: 5 out of 5 stars5/5Vetri Endraal Vivek Rating: 5 out of 5 stars5/5100-Vathu Pournami Rating: 4 out of 5 stars4/5Nanthini Nalai Irakkiral! Rating: 3 out of 5 stars3/5Sivappu November Rating: 0 out of 5 stars0 ratingsIruttil Parakkum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsVidathey Vivek! Vidathey Rating: 4 out of 5 stars4/5Rojakkalum Thottakalum Rating: 0 out of 5 stars0 ratingsUyir Eduppaan Thozhan Rating: 5 out of 5 stars5/5Uyir Veelchi Rating: 0 out of 5 stars0 ratingsVivek Athu Visham Rating: 5 out of 5 stars5/5Piriyamaana Kolaikaran Rating: 5 out of 5 stars5/5Vivek, Vishnu, Oru Vidukathai! Rating: 3 out of 5 stars3/5Neelam Enbathu Niramalla Rating: 0 out of 5 stars0 ratingsKavanam Vivek Rating: 5 out of 5 stars5/5Naan Nalina Nalliravu Rating: 0 out of 5 stars0 ratingsMoondru Vinaadi Mugam Rating: 5 out of 5 stars5/5June, July, Aaa...! Rating: 4 out of 5 stars4/5Karuppu Rattham Rating: 5 out of 5 stars5/5Maranathin Thethi March 7 Rating: 0 out of 5 stars0 ratingsThanga Macham Rating: 5 out of 5 stars5/5Ore Oru Naal Rating: 5 out of 5 stars5/5Theepantham Edu! Theemaiyai Sudu Rating: 0 out of 5 stars0 ratingsEngum Vivek! Ethilum Vivek! Rating: 5 out of 5 stars5/5
Related to Naangavathu Kuranku
Related ebooks
Naangavathu Kurangu Rating: 0 out of 5 stars0 ratingsPoove Neeyum Penthano Rating: 0 out of 5 stars0 ratingsKarkandu Aayutham! Rating: 3 out of 5 stars3/5Velvet Kutram Rating: 0 out of 5 stars0 ratingsவெல்வெட் குற்றம் Rating: 0 out of 5 stars0 ratingsIndia Virpanaiku Alla Rating: 5 out of 5 stars5/5Kuttrala Kolai Season Rating: 4 out of 5 stars4/5Thee. Deepaa.. Deepaavali... Rating: 0 out of 5 stars0 ratingsVer Kooda Poo Pookkum Rating: 0 out of 5 stars0 ratingsVirpanaiku Alla Rating: 5 out of 5 stars5/5Sorgam Rating: 5 out of 5 stars5/5ஷீலா சிம்லா சிறிது ரத்தம் Rating: 0 out of 5 stars0 ratingsSheela, Simla, Sirithu Rattham! Rating: 0 out of 5 stars0 ratingsTheepantham Edu! Theemaiyai Sudu Rating: 0 out of 5 stars0 ratingsAny Time Murder! Rating: 0 out of 5 stars0 ratingsஅதே நிலா! அதே கலா! Rating: 0 out of 5 stars0 ratingsAthe Nila Athe Kala Rating: 0 out of 5 stars0 ratingsUyiril Pooparikkum Devathaiyum Neethan Rating: 0 out of 5 stars0 ratingsVidaisol Vivek Rating: 5 out of 5 stars5/5Kuzhanthaiyai Kappatrungal Rating: 0 out of 5 stars0 ratingsநில்லாமல் ஓடி வா... Rating: 0 out of 5 stars0 ratingsNillamal Odi vaa… Rating: 3 out of 5 stars3/5Kannaley Kollathey...! Rating: 0 out of 5 stars0 ratingsSila Vellai Iravugalum Oru Karuppu Pakalum Rating: 0 out of 5 stars0 ratingsOlivillai Maraivillai Rating: 4 out of 5 stars4/5Yaro Parkkirarkal and Vilaikku Oru Vaanavil Rating: 0 out of 5 stars0 ratingsTheeratha Dhrogam Rating: 5 out of 5 stars5/5Muthal Bullet Rating: 0 out of 5 stars0 ratingsYaaro Oru X Rating: 0 out of 5 stars0 ratingsThalaippu Seithi Rating: 5 out of 5 stars5/5
Related categories
Reviews for Naangavathu Kuranku
0 ratings0 reviews
Book preview
Naangavathu Kuranku - Rajeshkumar
20
1
உலகின் பலம் வாய்ந்த நாடுகளில் நம் இந்தியாவும் ஒன்று. ஆனால் வளர்ந்து வரும் நம் நாட்டுக்கு பெரிய பிரச்னையாக உள்ள ஒரு விஷயம் எரிசக்தி. பிரதான எரிபொருளான பெட்ரோலியப் பொருட்களுக்கு வளைகுடா நாடுகளையே நாம் பெரிதும் நம்பி இருக்கிறோம். இதற்காக கோடிக்கணக்கான ரூபாய்களை வாரி இறைத்து அந்த எரிசக்தியைப் பெறுகிறோம். நம் நாட்டின் நீர், நிலக்கரி வளங்களும் நாளுக்கு நாள் தேய்கிறது. 2050-வது ஆண்டில் ஒரு துளி பெட்ரோல் கூட கிடைக்காமல் போகக் கூடிய ஒரு அபாயம் உருவாகி வருவதாக விஞ்ஞானிகள் சொல்லியுள்ளனர். இந்த அபாயத்திலிருந்து தப்பிக்க ஒரே வழிதான் உள்ளது. அது என்ன வழி? இரண்டாவது அத்தியாயத்தில் பார்ப்போம்.
கர்நாடக மாநிலம். ஹுப்ளி . காலை ஏழு மணி.
இன்ஸ்பெக்டர் மல்லய்யா ராத்திரி ட்யூட்டி பார்த்து விட்டு இனி வீட்டுக்கு கிளம்பிப் போய் ஒரு தூக்கம் போடலாம் என்று நினைத்த வேளையில் அழுக்கான மேஜையின் மேல் இருந்த டெலிபோன் மணியடித்து கூப்பிட்டது.
மல்லய்யா இரண்டு கைகளையும் உயர்த்தி சோம்பல் முறித்துக் கொண்டே போய் ரிசீவரை எடுத்தார்.
எஸ்...
மறுமுனையில் கமிஷனர் ஆபீஸிலிருந்து அஸிஸ்டண்ட் கமிஷனர் கங்கோத்ரி பேசினார். கரகரப்பான கன்னடக் குரல்.
மிஸ்டர் மல்லய்யா...?
குட்மார்னிங்... சார்...!
நீங்கள் இப்போது ஃப்ரீயா?
நேற்று இரவு எனக்கு ட்யூட்டி ஸார்... ‘தாவண்கரே’ ஹைவேஸ் ரோட்டில் விடிய விடிய வாகன சோதனைகளை மேற்கொண்டிருந்துவிட்டு இப்போதுதான் ஸ்டேஷனுக்குத் திரும்பினேன்...!
அப்படியென்றால் இப்போது களைப்பாய் இருப்பீர்கள். ஓ.கே... மிஸ்டர் மல்லய்யா. நீங்கள் வீட்டுக்குப் போய் ஓய்வு எடுத்துக் கொண்டு காலை பத்து மணி சுமார்க்கு கமிஷனர் ஆபீஸ் வர முடியுமா?
எனக்கொன்றும் களைப்பில்லை சார்...! இப்போதே நான் வரத்தயார்.
உங்களுக்கு உடல் உபாதையும் சிரமமும் இல்லையென்றால் வாருங்கள்...!
இதோ... புறப்பட்டேன் ஸார்.
தேங்க்யூ... ஃபார் யுவர் ரெஸ்பான்ஸ்.
அஸிஸ்டெண்ட் கமிஷனர் கங்கோத்ரி மறுமுனையில் இணைப்பைத் துண்டித்துவிட, மல்லய்யா ரிஸீவரை வைத்துவிட்டு பக்கத்தில் நின்றிருந்த சப்-இன்ஸ்பெக்டர் கௌடாவை ஏறிட்டார்.
ஏ.சி. கூப்பிடறார்... போயிட்டு வந்துடறேன்.
சார்...! டீ!
வேண்டாம்...
ரொம்பவும் டயர்டா இருக்கீங்க ஸார்... வீட்டுக்குப் போய் குளிச்சு ரெஸ்ட் எடுத்துட்டு போலாம் ஸார்.
ஏ.சி. கங்கோத்ரி காரணம் இல்லாமல் இவ்வளவு காலையில் என்னைக் கூப்பிட மாட்டார். வர்றேன்.! லாக்கப்ல எத்தனை பேர் இருக்காங்க...?
ஏழு பேர் ஸார்...!
ஏழு பேரையும் விசாரிச்சு வையுங்க போதும். அவசரப்பட்டு எஃப்.ஐ.ஆர். போட்டுட வேண்டாம்.
சப்-இன்ஸ்பெக்டர் கௌடா தலையாட்டிக் கொண்டு இருக்கும் போதே மல்லய்யா தன் தலையில் இருந்த தொப்பியை சரியாய் பொருத்திக் கொண்டு ஸ்டேஷன் வாசலில் நின்றிருந்த ஜீப்பை நோக்கிப் போனார்.
ஜீப்பில் பதினைந்து நிமிஷப் பயணம். ஹுப்ளி நகரின் குளிரான அந்தக் காலை வேளையில் போக்குவரத்தற்ற சாலைகளில் பயணம் செய்து பிராட்வே ரோட்டில் இருந்த கமிஷனர் அலுவலகத்தை தொட்டார். வயர்லஸ் அறைக்கு முன்பாக ஏ.சி. கங்கோத்ரி சற்று பதட்டத்தோடு நின்றிருக்க, மல்லய்யா அவர்க்கு முன்பாய்ப் போய் நின்று சல்யூட் வைத்து தளர்ந்தார். சல்யூட்டை தலையசைப்பால் ஏற்றுக் கொண்ட கங்கோத்ரி புன்னகைத்தார்.
விஷயம் மிக மிக முக்கியமான ஒன்றாக இருந்த காரணத்தால்தான் உங்களைக் கூப்பிட வேண்டியதாயிற்று...
வெல்கம் ஸார்.
வாருங்கள்... என்னுடைய அறைக்குப் போவோம்.
போனார்கள்.
செவ்வக கண்ணாடி ஜன்னல் வழியாக காலை நேர வெளிச்சம் பளிச்சென்று பாய்ந்திருக்க நாற்காலிகளில் எதிர் எதிரே உட்கார்ந்தார்கள். கங்கோத்ரி சில விநாடிகள் மௌனமாய் இருந்து விட்டு மெல்ல பேச்சை ஆரம்பித்தார்.
நீங்கள் ஐந்து வருடங்களுக்கு முன்னால் மாரன்னஹள்ளி ஏரியா போலீஸ் ஸ்டேஷனில் சப்-இன்ஸ்பெக்டராய் இருந்த போது ஒரு புகார் வந்தது. அந்தப் புகாரை தமிழ்நாடு சென்னையைச் சேர்ந்த சௌந்தரா என்கிற பெண் ஒருத்தி கொடுத்து இருந்தாள். அந்தப் புகாரில் தன்னுடைய கணவரான துரைபாண்டியன் டயோட்டா காரில் பெங்களூரிலிருந்து புறப்பட்டு ஹுப்ளி வந்ததாகவும், ஹுப்ளி வந்த பிறகு அவரிடமிருந்து எந்த தகவலும் இல்லையென்றும், அவர் காரோடு காணாமல் போய் விட்டதாகவும், அவரைக் கண்டுபிடித்து தரும்படியும் சொல்லியிருந்தாள். அந்த கேஸை நீங்கள்தான் கையாண்டீர்கள். ஞாபகம் இருக்கிறதா?
நன்றாகவே ஞாபகம் இருக்கிறது சார்... சென்னையைச் சேர்ந்த பெரிய தொழிலதிபர் துரைபாண்டியன். ஐந்து வருடங்களுக்கு முன்பு ஒரு பிசினஸ் விஷயமாய் தன்னுடைய டயோட்டா காரில் ஹுப்ளி வந்தார். காரை அவருடைய டிரைவர் ஓட்டி வந்தார். ஒரு ஹோட்டலில் அறை எடுத்து தங்கியிருந்த துரைபாண்டியன் பெல்காமில் உள்ள ஒரு நண்பரைப் பார்க்க காரில் போனார். போனவர் போனவர்தான். திரும்பவேயில்லை. ஹுப்ளி, பெல்காம் இந்த இரண்டு நகரங்களையும் சல்லடை போட்டு தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஐந்து வருஷ காலமும் ஓடிவிட்டது.
ஏ.சி. கங்கோத்ரி புன்னகைத்தார். இப்போது அந்தப் பிரச்னைக்கு தீர்வு கிடைத்து இருக்கிறது.
மல்லய்யா நிமிர்ந்தார்.
சார்...! அந்த துரைபாண்டியன் கிடைத்து விட்டாரா...? அவர் எந்த ஊரில் இருந்தார்...?
"இந்த போட்டோக்களைப் பாருங்கள். அவர் எங்கே இருந்தார்