Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Netru Naragam Indru Sorkkam
Netru Naragam Indru Sorkkam
Netru Naragam Indru Sorkkam
Ebook145 pages47 minutes

Netru Naragam Indru Sorkkam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Netru Naragam Indru Sorkkam

Read more from Rajeshkumar

Related to Netru Naragam Indru Sorkkam

Related ebooks

Related categories

Reviews for Netru Naragam Indru Sorkkam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Netru Naragam Indru Sorkkam - Rajeshkumar

    18

    1

    இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் பீகாய்ஜி ருஸ்தாம்ஜி.

    நேரம் நள்ளிரவைத் தாண்டியிருக்க, படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடிவைத்த அங்கயற்கண்ணி மணி எவ்வளவு என்பதைத் தெரிந்து கொள்வதற்காக சுவர் கடிகாரத்தைப் பார்த்தாள். நேரம் 12.40. இனியும் கண் விழித்தால் நாளைக்கு காலையில் ஐந்து மணிக்கு எழும்போது கண்கள் தூக்கத்துக்காக கெஞ்சும். படுத்துக் கொள்ள வேண்டியதுதான் என்று யோசித்த விநாடி-

    அறைக் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது.

    அங்கயற்கண்ணியின் புருவங்கள் உயர்ந்தன. குரல் கொடுத்தாள்.

    யாரு...?

    நான்தான் மேடம்... காஞ்சனா... கதவுக்கு வெளியேயிருந்து பதட்டமாய் குரல் வரவும் அங்கயற்கண்ணி எழுந்து போய் கதவின் தாழ்ப்பாளை விலக்கினாள்.

    வெளியே அந்த அழகான காஞ்சனா வியர்த்த முகமாய் தெரிந்தாள். உடம்பில் பதட்டம்.

    என்ன...?

    மேடம்...! ‘இந்துபாலா’வுக்கு மறுபடியும் உடம்புக்கு முடியலை. ஃபிட்ஸ் வந்த மாதிரி உடம்பு தூக்கி தூக்கிப் போட்டது. ‘நான் வரமாட்டேன், நான் வரமாட்டேன்’னு கத்திக்கிட்டே ரூம் மூலையில் போய் முழங்காலைக் கட்டிக்கிட்டு உட்கார்ந்துட்டா. அங்கிருந்து அவளை எழுப்ப முடியலை. நீங்க வந்து கொஞ்சம் பாருங்க மேடம்...

    டாக்டர் கொடுத்த மருந்துகளையெல்லாம் இந்துபாலா ஒழுங்கா சாப்பிட்டாளா...?

    சாப்பிட்டா மேடம்... ரெண்டு ராத்திரி ஒழுங்கா தூங்கி எந்திரிச்சா. இன்னிக்கு சரியா பனிரெண்டு மணிக்கெல்லாம் தூக்கத்துல ஏதோ உளற ஆரம்பிச்சா. அப்புறம் உடம்பை ஒரு மாதிரி முறுக்கிக்கிட்டு உருண்டா. உருளும்போதே ஃபிட்ஸ் வந்தது. இந்தத் தடவை வாய்ல நுரை வரும்போது அதுல ரத்தமும் கலந்து இருந்தது மேடம்... காஞ்சனா சொல்ல அங்கயற்கண்ணி திடுக்கிட்டாள்.

    என்னது... ரத்தமா?

    ஆமா... மேடம்...

    அப்படீன்னா... டாக்டரைக் கூப்பிட வேண்டியதுதான்... சொன்னவள் மேஜையின் மேல் இருந்த செல்போனை எடுத்துக் கொண்டபடி அறையினின்றும் வெளிப்பட்டு வராந்தாவின் மெல்லிய இருட்டில் நடந்தாள். காப்பகத்தின் எல்லா அறைகளும் இருட்டில் இருக்க, வலது கோடியில் இருந்த அறை மட்டும் ட்யூப்லைட் வெளிச்சத்தில் நிரம்பியிருந்தது.

    அங்கயற்கண்ணி வேகமாய் நடை போட்டு அறைக்குள் நுழைய, அந்த அழகான இருபது வயது இந்துபாலா யார்க்கோ பயந்த மாதிரி அறையின் மூலையில் ஒண்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். கண்கள் மிரட்சியோடு அலைபாய்ந்தது. உதட்டோரம் இன்னமும் வலிப்பு நுரை ஒட்டியிருந்தது.

    அவளுக்குப் பக்கத்தில் போய் குனிந்தாள் அங்கயற்கண்ணி. மெல்ல இந்துபாலாவின் தோளைத் தொட்டாள். அவள் உடம்பை சிலிர்த்துக் கொண்டு இன்னமும் பின்வாங்கி சுவர்க்கு சாய்ந்தாள். இரண்டு கைகளையும் வேகமாய் ஆட்டிக் கொண்டு கெஞ்சும் குரலில் சொன்னாள்.

    மே... மேடம்... வேண்டாம் மேடம்... என்னை அவங்ககூட அனுப்பிடாதீங்க மேடம்... ப்ளீஸ் மேடம்... அவங்களை மொதல்ல இந்த இடத்தை விட்டு போகச் சொல்லுங்க... மேடம்...

    இதோ பாரம்மா... இந்து...! ஏன் இப்படி பயப்படறே...? இங்கே உன்னையும் என்னையும் காஞ்சனாவையும் தவிர வேறு யாருமில்லை...

    இல்ல மேடம்...! அவங்க வெளியே விடுதி வாசல்ல காரோட வந்து நிக்கிறாங்க... நாலைஞ்சு தடவை ஹார்ன் அடிச்சு கூப்பிட்டாங்க...

    வா...! வெளியே வந்து நீயே பாரு... விடுதி வாசலில் யாருமேயில்லை... நீ அநாவசியத்துக்கு பயப்படறே இந்து...! ம்... வா...! வாசலுக்கு வந்து பாரு...

    நா... நான்... வரலை மேடம்... நான் வந்தா என்னைத் தூக்கி கார்ல போட்டுக்கிட்டு போயிடுவாங்க மேடம்...

    இந்து...! எல்லாம் உன்னோட பிரமை...! நானும் காஞ்சனாவும் உன்கூடவே வாசலுக்கு வர்றோம். அங்கே நீ நினைக்கிற மாதிரி யாரும் இல்லைங்கிறது உண்மை... அங்கயற்கண்ணி சொல்லிக் கொண்டிருக்கும் போதே இந்துபாலா கண்கள் நிலைத்துப் போய் ஒருக்களித்து விழுந்தாள். உடம்பு வெட்டிக் கொண்டது. வாயில் நுரை தள்ளியது. கூடவே சில துளிகள் ரத்தம்.

    காஞ்சனா பதறிப் போய் இந்துபாலாவைப் பிடித்துக் கொள்ள, அங்கயற்கண்ணி தன் கையில் இருந்த செல்போனை உசுப்பி டயலில் சில எண்களை ஒற்றி எடுத்துவிட்டு காதுக்குப் பொருத்தினாள்.

    மறுமுனையில் ரிங் போய் ரிஸீவர் எடுக்கப்பட்டது.

    ஹலோ...

    டாக்டர் மதுசூதனன்...?

    எஸ்... ஹோல்டிங்...

    டாக்டர்! நான் அங்கயற்கண்ணி. ‘தாய் உள்ளம்’ விடுதி காப்பாளர் பேசறேன்...

    ஓ...! நீங்களா... என்ன விஷயம் சொல்லுங்கம்மா...

    டாக்டர்...! ஸாரி... ஃபார் த டிஸ்டர்பன்ஸ்... நீங்க உடனே புறப்பட்டு விடுதிக்கு வரணும்...

    யார்க்கு என்ன உடம்பு?

    டாக்டர்! நீங்க போன வாரம் வந்து பார்த்தீங்களே... இந்துபாலான்னு ஒரு பொண்ணு...

    ஆமா...

    அந்த பொண்ணுக்கு மறுபடியும் ஃபிட்ஸ் வந்து கண்டபடி உளறிக் கொட்டிகிட்டு இருக்கா...! வாய்ல நுரையும் ரத்தமும் வருது டாக்டர்...

    இதோ... உடனே நான் புறப்பட்டு வர்றேன்...

    ப்ளீஸ்... டாக்டர்...! நீங்க வர்றதுக்குள்ளே நான் ஏதாவது முதல் உதவி பண்ணலாமா டாக்டர்...?

    ஒண்ணும் பண்ண வேண்டாம்... கொஞ்சம் காற்றோட்டமாய் படுக்க வையுங்க போதும்...

    ஓ.கே... டாக்டர்... அங்கயற்கண்ணி செல்போனை அணைத்துவிட்டு சுவரோரமாய் சரிந்து விழுந்து இருந்த இந்துபாலாவைப் பார்த்தாள். அவளுடைய வலிப்பு இப்போது அடங்கியிருக்க, மௌனமாய் மல்லாந்து நெளிந்தாள். காஞ்சனா அவளருகே மண்டியிட்டு உட்கார்ந்து வாயினின்றும் வழிந்த நுரையை ஒரு துணியை வைத்து சுத்தம்

    Enjoying the preview?
    Page 1 of 1