Panchavarna Kili
By Rajeshkumar
()
About this ebook
Read more from Rajeshkumar
Irapathu Nee Irupathu Naan Rating: 5 out of 5 stars5/5Thirumarana Azhaippithazh Rating: 5 out of 5 stars5/5Dial For Kill Rating: 4 out of 5 stars4/5Raja Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsVetri Endraal Vivek Rating: 5 out of 5 stars5/5100-Vathu Pournami Rating: 4 out of 5 stars4/5Iruttil Parakkum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsKonjum vanjanai! Rating: 5 out of 5 stars5/5Vidathey Vivek! Vidathey Rating: 4 out of 5 stars4/5Nanthini Nalai Irakkiral! Rating: 3 out of 5 stars3/5Kondraal Kondraan Kondren Rating: 5 out of 5 stars5/5Sivappu November Rating: 0 out of 5 stars0 ratingsPiriyamaana Kolaikaran Rating: 5 out of 5 stars5/5Rojakkalum Thottakalum Rating: 0 out of 5 stars0 ratingsUyir Veelchi Rating: 0 out of 5 stars0 ratingsKavanam Vivek Rating: 5 out of 5 stars5/5Moondru Vinaadi Mugam Rating: 5 out of 5 stars5/5Uyir Eduppaan Thozhan Rating: 5 out of 5 stars5/5Karuppu Rattham Rating: 5 out of 5 stars5/5June, July, Aaa...! Rating: 4 out of 5 stars4/5Neelam Enbathu Niramalla Rating: 0 out of 5 stars0 ratingsVivek Athu Visham Rating: 5 out of 5 stars5/5Ore Oru Naal Rating: 5 out of 5 stars5/5Vivek, Vishnu, Oru Vidukathai! Rating: 3 out of 5 stars3/5Thanga Macham Rating: 5 out of 5 stars5/5Naan Nalina Nalliravu Rating: 0 out of 5 stars0 ratingsMaranathin Thethi March 7 Rating: 0 out of 5 stars0 ratingsEngum Vivek! Ethilum Vivek! Rating: 5 out of 5 stars5/5Theepantham Edu! Theemaiyai Sudu Rating: 0 out of 5 stars0 ratings
Related to Panchavarna Kili
Related ebooks
Kaatru Urangum Neram... Rating: 5 out of 5 stars5/5Kolai Vallal Rating: 0 out of 5 stars0 ratingsUyir Meethu Thaagam Rating: 4 out of 5 stars4/5Vivek VS Vivek Rating: 5 out of 5 stars5/5Oru Viyalakkilamai Vidintha Pothu Rating: 0 out of 5 stars0 ratingsVidaisol Vivek Rating: 5 out of 5 stars5/5Thanga Macham Rating: 5 out of 5 stars5/5Nandhini 440 Volts Rating: 4 out of 5 stars4/5Pagai Enakku Pagai Rating: 0 out of 5 stars0 ratingsMonday Murder Day Rating: 0 out of 5 stars0 ratingsHongkong Athirchi Rating: 0 out of 5 stars0 ratingsPoo! Puyal! Rating: 5 out of 5 stars5/5Parappatharku Oru Vanam Vendum Rating: 4 out of 5 stars4/5Karuppu Udai Devathai! Rating: 5 out of 5 stars5/5Natchathiram Illaatha Iravu Rating: 5 out of 5 stars5/5Konjum vanjanai! Rating: 5 out of 5 stars5/5Enna Satham Indha Neram? Rating: 4 out of 5 stars4/5Sivappu November Rating: 0 out of 5 stars0 ratingsVivek Never Out Rating: 5 out of 5 stars5/5Kovaiyil Oru Kutram Rating: 5 out of 5 stars5/5Nanthini Nalai Irakkiral! Rating: 3 out of 5 stars3/5Thirakkaatha Kathavugal! Rating: 5 out of 5 stars5/5Maaya Hospital, Marupadiyum Iranthavan and Oru latsam Vinaadikal Rating: 2 out of 5 stars2/5August 5 Athikaalai Rating: 5 out of 5 stars5/5Maranathin Thethi March 7 Rating: 0 out of 5 stars0 ratingsThodarnthu Vaa Thottu Vidathea Rating: 4 out of 5 stars4/5Vidathey Vivek! Vidathey Rating: 4 out of 5 stars4/5Evan Avan and Poovil Seitha Aayutham! Rating: 4 out of 5 stars4/5Sorkkathin Savee Rating: 0 out of 5 stars0 ratings1+1=0 Rating: 5 out of 5 stars5/5
Related categories
Reviews for Panchavarna Kili
0 ratings0 reviews
Book preview
Panchavarna Kili - Rajeshkumar
22
1
தமிழ் பழமொழி ஆங்கிலம் பேசினால் எப்படியிருக்கும்?
இதோ...! ஒவ்வொரு அத்தியாயத்தின் ஆரம்பத்திலும்!
* நெருப்பு இல்லாமல் புகையாது.
* NO SMOKE WITHOUT FIRE.
அந்த நள்ளிரவு ஹைவேஸ் சாலையில் பயணம் செய்த போலீஸ் ஜீப் அரசுக்கு சொந்தமான மயானத்துக்குள் நுழைந்து நின்றது.
ஒரு இன்ஸ்பெக்டரும் சப்-இன்ஸ்பெக்டரும் இறங்கினார்கள். மரங்கள் அடர்ந்து காணப்பட்டதால் அந்த இடம் இருட்டை பூசிக் கொண்டு சிதிலமான கல்லறைகளை மட்டும் காட்டியது. மயானத்தின் கோடியில் இருந்த தகரக் கொட்டகையிலிருந்து நேற்று மாலை எரியூட்டப்பட்ட உடல் இன்னமும் எரிவதற்கு அடையாளமாய் லேசாய்ப் புகைந்து கொண்டு இருந்தது.
இன்ஸ்பெக்டர் ஜீப்புக்கு சாய்ந்து நின்று கொண்டு ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டிருக்க, சப்-இன்ஸ்பெக்டர் மெல்ல நடந்து போய் வெட்டியானின் குடிசைக்குப் பக்கத்தில் போய் நின்று குரல் கொடுத்தார்.
செந்தட்டி...!
பதிலுக்கு குடிசையிலிருந்து எந்த சத்தமும் வராமல் போகவே சப்-இன்ஸ்பெக்டர் தன் பூட்ஸ் காலால் கதவை எட்டி உதைத்தார். ‘டொம்’ என்ற சத்தத்தோடு அந்தத் தகரக் கதவு அதிர்ந்தது. உள்ளேயிருந்து சாராயம் நிரம்பிய குழறல் வார்த்தை வெளியே வந்தது.
யாழது...?
செந்தட்டி... கதவைத் திற...!
பூட்ஸ்கால் மறுபடியும் கதவை உதைக்க, செந்தட்டி கயிற்றுக் கட்டிலிலிருந்து அரக்கப்பரக்க எழுந்து, தரையில் அவிழ்ந்து கிடந்த லுங்கியை எடுத்துச் சுற்றிக் கொண்டு தள்ளாட்ட நடையோடு கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தான். சப்-இன்ஸ்பெக்டரைப் பார்த்ததும் பாதி போதை தெளிந்து போய் மார்புக்கு குறுக்காக பவ்யமாய் கைகளைக் கட்டிக் கொண்டு அய்யா!
என்று பம்மினான்.
என்னடா... பேட்ரி செல் சாராயமா...? இந்த நாறு நாறுது...!
இல்லீங்கய்யா... கொஞ்சம் போல...!
உன்னையெல்லாம் திருத்த முடியாதுடா... எண்பது வயசுல சாக வேண்டியவன், ஐம்பது வயசிலேயே மண்டையைப் போட்டுடுவே போலிருக்கு... சரி... சரி... வந்து ஒரு குழியை வெட்டு... பாடி ஒண்ணு வருது...!
செந்தட்டி தன் பரட்டைத் தலையைச் சொறிந்தான்.
அய்யா...! இந்நேரத்துக்கு... பாடியா...?
டேய்...! போன வாரம் ரெட்டிகுப்பம் கிராமத்துல ஒரு ஜாதிச்சண்டை வந்து ஏழெட்டு பேர் செத்துப் போனாங்களே... அதுல ஒருத்தன் பாடி அடையாளம் தெரியாமலேயே மார்ச்சுவரியில் இருந்தது. ஒரு வாரம் வெச்சுப் பார்த்தோம். யாரும் வரலை... உடம்பை அடக்கம் பண்ணச் சொல்லி கோர்ட் உத்தரவிட்டு இருக்கு. பாடியை பகல்ல கொண்டு வந்தா அந்த கிராமத்துக்காரங்க ஏதாவது பிரச்னை பண்ணு வாங்கன்னுதான் ராத்திரியில் கொண்டு வந்துட்டு இருக்கோம். இந்தா... ஆஸ்பத்திரி சீட்டு. போய்க் குழியை வெட்டு
அய்யா...!
என்ன...?
வந்து... வந்து...
சொல்லுடா...!
ராத்திரி பத்து மணிக்கு மேல் எந்த ஒரு பாடியையும் மயானத்துல புதைக்கவோ எரிக்கவோ கூடாதுன்னு ஒரு சட்டம் இருக்கு.
சப்-இன்ஸ்பெக்டர் வெகுண்டார்.
சாராய நாயே...! சட்டமா பேசறே...? மறுபடியும் அந்தக் கிராமத்துல ஜாதிச் சண்டை எங்கே ஸ்டார்ட் ஆயிடுமோன்னு பயந்து போய் நாங்க இந்த ஏற்பாட்டை பண்ணியிருக்கோம். நீ என்னடா பம்மறே...?
ஜீப்புக்கு சாய்ந்து சிகரெட்டைப் புகைத்துக் கொண்டு இருந்த இன்ஸ்பெக்டர் குரல் கொடுத்தார்.
என்ன... முரளி... அங்கே என்ன பிரச்னை?
செந்தட்டி சட்டம் பேசறான் ஸார்...
சட்டமா...?
ம்... ராத்திரி பத்து மணிக்கு மேல எந்த ஒரு பாடியையும் மயானத்துல புதைக்கவோ எரிக்கவோ கூடாதாம்.
சட்டம் பேசற அந்த நாயைத் தூக்கி ஜீப்ல போடு. ஸ்டேஷனுக்குக் கொண்டு போய் லாக்கப்புல வெச்சு சட்டத்தோட அகல நீளம் எவ்வளவுன்னு காட்டலாம்.
அய்யா...! வேண்டாங்கய்யா...! நான் தெரியாமே பேசிட்டேன்யா. பொதுவாய் இருக்கிற வழக்கத்தை சொன்னேன். அவ்வளவு தான்ய்யா...!
செந்தட்டி அழுகிற குரலில் சொல்லிக் கொண்டே கைகளை தலைக்கு மேல் உயர்த்தி கும்பிட்டான்.
சரி... சரி... போய் குழியை வெட்டு...
செந்தட்டி மறுபடியும் ஒரு கும்பிடைப் போட்டுவிட்டு குடிசைக்குள் போய் ஒரு பெரிய கடப்பாரையையும் மண் வெட்டியையும் எடுத்து வந்தான். அதே விநாடி-
மயானத்தின் பிரதான கேட் வழியாக அந்த மார்ச்சுவரி வேன் உள்ளே வந்தது. ஹெட் லைட்டுகளை அணைத்துக் கொண்டு நின்றது.
அய்யா...!
செந்தட்டி கூப்பிட்டான்.
என்னடா...?
பாடி சைஸ் பார்த்துட்டு குழியை வெட்டினா சரியாய் இருக்கும்...
அப்படியா... போய்ப்பாரு...!
சப்-இன்ஸ்பெக்டர் சொல்ல, செந்தட்டி கடப்பாரையையும் மண் வெட்டியையும் ஓரமாய் வைத்துவிட்டு சற்றுத் தொலைவில் நின்றிருந்த மார்ச்சுவரி வேனை நோக்கிப் போனான்.
வேனின் பின்பக்கக் கதவைத் திறந்து உள்ளே எட்டிப் பார்த்தான். லேசாய் திகைத்தான்.
உள்ளே-
இரண்டு பேர் உட்கார்ந்திருந்தார்கள். தடித்தடியாய் உடம்பு. கைகளில் பீர் பாட்டில்கள். இரண்டு பேரில் ஒருவன் சிரித்தான். கரகரப்பான குரலில் கேட்டான்.
என்ன செந்தட்டி சௌக்கியமா...?
செந்தட்டி அவர்களை ஒரு குழப்பப் பார்வை பார்த்துக் கொண்டே உள்ளே எட்டிப் பார்த்தான். இரண்டாமவன் கேட்டான்.
என்ன பார்க்கிறே...?
உள்ளே பாடி...?
பாடி உள்ளேயும் கிடையாது. வெளியேயும் கிடையாது.
இன்ஸ்பெக்டரய்யா சொன்னாங்களே...?
அவர் தப்பா சொல்லியிருப்பார்.