Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sahaara Pookkal
Sahaara Pookkal
Sahaara Pookkal
Ebook148 pages43 minutes

Sahaara Pookkal

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Sahaara Pookkal

Read more from Rajeshkumar

Related to Sahaara Pookkal

Related ebooks

Related categories

Reviews for Sahaara Pookkal

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sahaara Pookkal - Rajeshkumar

    18

    1

    நியூயார்க்

    நான் அமெரிக்காவுக்கு வேலை தேட வந்து இன்றோடு சரியாய் ஒரு வாரம். என்னுடைய நண்பன் நரேன் அரங்கனின் ஃப்ளாட்டில்தான் இப்போதைக்கு வாசம். நானும் நரேன் அரங்கனும் பாப்பிரெட்டிபட்டியில் இருக்கும் ‘அபித குஜலாம்பாள் பொறியியல் கல்லூரி’ என்கிற ஒரு மாட்டுக் கொட்டகை காலேஜில்தான் பி.ஈ. முடித்தோம். நான் கையில் பி.ஈ. டிகிரியோடு ‘ஏதாவது வேலை கிடைக்குமா?’ என்று சாஃப்ட்வேர் கம்பெனிகளிலும், ஜாப் மேளாக்களிலும் முயற்சி செய்து பணத்தைக் கரைத்து நாட்களைத் தள்ளிக் கொண்டிருக்க, நரேன் அரங்கன் புத்திசாலித்தனமாய் இண்ட்டர்நெட்டில் அமெரிக்காவில் இருக்கும் ‘வெரோனிகா’ என்ற பெண்ணுக்கு ‘கடலை’ போட்டு லவ்வி, எஸ்.எம். எஸ்.களில் காதலை வளர்த்து, அதை தெய்வீகமாக்கி, அவள் தயவில் அமெரிக்காவில் ‘க்ரிஸ்டல் சொல்யூஷன்ஸ்’ என்ற சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை வாங்கிக் கொண்டு எனக்கு ‘டாட்டா’ ‘பை பை’ காட்டி அமெரிக்காவுக்கு பறந்தான். என் காதுகளில் புகை வருமளவுக்கு பொறாமைப் பட்டேன். பிறகு நரேன் அரங்கன் போன பாதையிலேயே நானும் போக முடிவு எடுத்து, அமெரிக்காவில் இருக்கும் சில பெண்களை இண்ட்டர் நெட்டில் பிடித்து ‘கடலை’ போட்டுப் பார்த்தேன். ஒரு வாரம் ‘கடலை’ போட்டதுக்குப் பலன் அந்த வார இறுதியிலேயே கிடைத்தது. ஆமாம்...! வீட்டு வாசலில் ஒரு போலீஸ் ஜீப் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கி வந்த தொந்தி தள்ளிய இன்ஸ்பெக்டர் ஒருவர் நீங்கதான் செந்தமிழ்ச் செல்வனா? என்று கேட்டார். நான் ஆமாம் என்று சொன்னதும் தன்கையில் வைத்து இருந்த லாட்டியை என் தோளில் வைத்துக் கொண்டே இதோ பார்...! இது உனக்கு ஃபர்ஸ்ட் வார்னிங்...! நீ இண்ட்டர் நெட்டில் ஜொள்ளு விட்டுகிட்டு இருக்கிற விஷயம் பி-2 போலீஸ் ஸ்டேஷன் டேபிள் வரைக்கும் வந்தாச்சு...! இனியொரு தடவை உன்னோட இண்ட்டர்நெட் சில்மிஷம் போலீஸ் ஸ்டேஷன் படியேறினால் நீ இருக்க வேண்டிய இடம் லாக்கப்பாய் இருக்கும்! என்று சொன்னதும் நான் பதறிப் போய் அவருடைய தொந்தியை ஸாரி கைகளைப் பிடித்துக் கொண்டு ஸாரி! சொன்னேன். அவரும் என்னை மன்னித்து விட்டதற்கு அடையாளமாய் லாட்டியால் என் பின்னந் தலையில் ரெண்டு தட்டு தட்டிவிட்டுப் போனார். அதற்கப்புறம் என்னுடைய ‘கடலை’ மூட்டை யைக் கட்டிவைத்துவிட்டு உத்தமபுத்திரனாய் மாறி ஒழுங்காய் வேலை தேடிக்கொண்டிருந்தேன்.

    ஒரு நாள் நரேன் அரங்கன் செல்லில் என்னோடு பேசிக் கொண்டிருந்தபோது டேய்... செந்தமிழ்! உனக்கு நல்ல க்ரியேட்டிவ் மைண்ட். உன்னோட அறிவுஜீவிதனத்துக்கு இந்த அமெரிக்காதான் சரியான இடம். நீ இங்கே வந்து ஸ்டே பண்ணிகிட்டு ஏன் வேலை தேடக்கூடாது...? நீ என்னோட செலவிலேயே தங்கிக்கலாம். சாப்பிடலாம். கார் இருக்கு... ஊர் சுற்றலாம். நீ எப்படியாவது உன்னோட அப்பா அம்மா கிட்டே பேசி கொஞ்சம் டாலர்களை சேகரம் பண்ணிகிட்டு அமெரிக்காவுக்கு வந்துரு! எப்படியும் உனக்கு வேலை கிடைச்சுடும். ஸாஃப்ட்வேர் கம்பெனிகளில் உடனடியாய் வேலை கிடைக்காமல் போனாலும் இருக்கவே இருக்கு... ரெஸ்டாரெண்ட், கேஸ் ஸ்டேஷன்... அங்கே உனக்கொரு வேலை கிடைக்காமலா போயிரும்...? - இப்படி நரேன் அரங்கன் சொன்னதும் நான் என் மனசுக்குள் சாலமன் பாப்பையா இல்லாமலேயே ஒரு பட்டிமன்றம் நடத்திப் பார்த்து அமெரிக்காவுக்குப் போவது என்று முடிவுசெய்து என்னைப் பெற்றவர்களிடமிருந்து ஆசீர்வாதத்தையும், பேங்கிலிருந்து கடனாக பணத்தையும் வாங்கிக் கொண்டு போன வாரம் நள்ளிரவில் ஃப்ளைட் ஏறி 14 மணி நேரம் பயணம் செய்து அமெரிக்க மண்ணை மிதித்தேன். வந்த புதிதில் அமெரிக்கா ஏதோ சுவர்க்கபுரிபோல் இருந்தது. நரேன் அரங்கன் காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து குளித்துவிட்டு வெஜிடபிள் சீஸ் ரோலையும் ஒரு டம்ளர் பாலையும் குடித்துவிட்டு காரை எடுத்துக் கொண்டு 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சாஃப்ட்வேர் கம்பெனிக்கு கிளம்பிவிடுவான். அதற்குப் பிறகு நான் எழுந்து குளித்து ஃப்ரிஜ்ஜில் இருக்கிற எதையாவது எடுத்து காலை உணவாக வயிற்றுக்குள் போட்டுக் கொண்டு, இண்ட்டர் நெட்டில் ஏதாவது ப்ளேஸ்மென்ட் வாய்ப்புக்கள் இருக்கிறதாவென்று பார்த்துவிட்டு டி.வி.க்கு முன்பாய் போய் உட்கார்ந்து கொள்வேன். டி.வி. போர் அடித்தால் ரோட்டோர ஜன்னலைத் திறந்து வைத்துக் கொண்டு வெளியில் கோல மாவாய் கொட்டுகிற பனியையும், அதில் ஜெர்கின் கோட்டுகளை அணிந்து செல்லும் ஆண்- பெண்களையும் பார்த்துக் கொண்டிருப்பேன். இது இரண்டு நாட்களுக்கு சுவாரஸ்யமாய் இருந்தது. பிறகு ஏதோ ஒரு தனிமைச் சிறையில் இருப்பது போல் போர் அடித்தது. சை! இதுதான் அமெரிக்காவா...? கடந்த ஒரு ஐந்து நாட்களாக பகல் பொழுதுகள் இப்படித்தான் ஏதோ ஆயுள் தண்டனை போல் கழிகிறது. கார் இல்லாமல் வெளியே எங்கேயும் போக முடியாது. நரேன் அரங்கன் வேலை முடிந்து ஃப்ளாட்டுக்கு வரும் போது சாயந்தரம் ஏழு மணியாகிவிடும். அதற்குப் பிறகு கார் எடுத்துக் கொண்டு எங்கேயாவது போய் வரலாமென்றால் இந்த நியூயார்க்கில் கார் ஓட்டுவது அவ்வளவு சுலபமில்லையென்றும், அதற்கு தனியாய் லைசன்ஸ் எடுக்க வேண்டும் என்றும் நரேன் அரங்கன் சொன்னான். அதற்கு முன்னால் நான் இந்த நாட்டுக்குரிய சோஷியல் செக்யூர்ட்டி எண்ணை போலீஸ் ஸ்டேஷனிலிருந்து பெற்றுக் கொள்ள வேண்டும். ‘அந்த ஒன்பது இலக்கங்கள்தான் அமெரிக்காவில் உன் அடையாளம். அதைத் தொலைத்தால் நீ தொலைந்தாய்’ என்று நரேன் அரங்கன் அடிக்கடி பயப்படுத்திக் கொண்டிருந்தான்.

    அன்றைக்கும் அப்படித்தான் ஜன்னலுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து

    Enjoying the preview?
    Page 1 of 1