Sivappu November
By Rajeshkumar
()
About this ebook
Read more from Rajeshkumar
Raja Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsThirumarana Azhaippithazh Rating: 5 out of 5 stars5/5Konjum vanjanai! Rating: 5 out of 5 stars5/5Vidathey Vivek! Vidathey Rating: 4 out of 5 stars4/5Dial For Kill Rating: 4 out of 5 stars4/5100-Vathu Pournami Rating: 4 out of 5 stars4/5Nanthini Nalai Irakkiral! Rating: 3 out of 5 stars3/5Irapathu Nee Irupathu Naan Rating: 5 out of 5 stars5/5Panchavarna Kili Rating: 0 out of 5 stars0 ratingsVetri Endraal Vivek Rating: 5 out of 5 stars5/5Kondraal Kondraan Kondren Rating: 5 out of 5 stars5/5Iruttil Parakkum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsUyir Eduppaan Thozhan Rating: 5 out of 5 stars5/5Piriyamaana Kolaikaran Rating: 5 out of 5 stars5/5Neelam Enbathu Niramalla Rating: 0 out of 5 stars0 ratingsUyir Veelchi Rating: 0 out of 5 stars0 ratingsRojakkalum Thottakalum Rating: 0 out of 5 stars0 ratingsJune, July, Aaa...! Rating: 4 out of 5 stars4/5Irandhu Kidandha Thendral Rating: 0 out of 5 stars0 ratingsKavanam Vivek Rating: 5 out of 5 stars5/5Vivek Athu Visham Rating: 5 out of 5 stars5/5Moondru Vinaadi Mugam Rating: 5 out of 5 stars5/5Engum Vivek! Ethilum Vivek! Rating: 5 out of 5 stars5/5Karuppu Rattham Rating: 5 out of 5 stars5/5Mella Mella Ennai Kollathey Rating: 0 out of 5 stars0 ratingsOre Oru Naal Rating: 5 out of 5 stars5/5Naan Nalina Nalliravu Rating: 0 out of 5 stars0 ratingsThanga Macham Rating: 5 out of 5 stars5/5Maranathin Thethi March 7 Rating: 0 out of 5 stars0 ratings
Related to Sivappu November
Related ebooks
Monday Murder Day Rating: 0 out of 5 stars0 ratingsParappatharku Oru Vanam Vendum Rating: 4 out of 5 stars4/5Ootha Nira Devathai Rating: 5 out of 5 stars5/5Kolai Vallal Rating: 0 out of 5 stars0 ratingsPoo! Puyal! Rating: 5 out of 5 stars5/5Rosap Poovu Lesaai Saavu Rating: 5 out of 5 stars5/5Thanga Macham Rating: 5 out of 5 stars5/5Maranam Unnai Mannikkattum Rating: 5 out of 5 stars5/5Paatharasa Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsMugamatra Nizhalgal Rating: 0 out of 5 stars0 ratingsSathamillamal Oru Satham Rating: 0 out of 5 stars0 ratingsThigil Kaalam Rating: 5 out of 5 stars5/5Inba Athirchi Nilaiyam Rating: 0 out of 5 stars0 ratingsThedu Kidaikathu Rating: 0 out of 5 stars0 ratings11 Mani 59 NImidangal 59 Vinaadigal Rating: 5 out of 5 stars5/5Enna Satham Indha Neram? Rating: 4 out of 5 stars4/52000 Sathura Adi Sorkkam Rating: 0 out of 5 stars0 ratingsNew Delhi 2001 Rating: 0 out of 5 stars0 ratingsSendra Idamellam Irappu and Kannukkul Oru Mul Rating: 0 out of 5 stars0 ratingsAgalyavin Ayulregai Rating: 0 out of 5 stars0 ratingsMaaya Hospital, Marupadiyum Iranthavan and Oru latsam Vinaadikal Rating: 2 out of 5 stars2/5Abaayam Thodu...! Rating: 4 out of 5 stars4/5Vidaisol Vivek Rating: 5 out of 5 stars5/5Sinnaj Siru Kiliye Rating: 0 out of 5 stars0 ratingsOru Everst Thavaru Rating: 5 out of 5 stars5/5Avenue Marangal Rating: 5 out of 5 stars5/5Ezhavathu Arivu Rating: 2 out of 5 stars2/5Ore Oru Naal Rating: 5 out of 5 stars5/5Andha Naal... Andha Nimidam... Andha Nodi! Rating: 0 out of 5 stars0 ratingsThanga Sorkkam Rating: 5 out of 5 stars5/5
Related categories
Reviews for Sivappu November
0 ratings0 reviews
Book preview
Sivappu November - Rajeshkumar
14
ஜோதியின் டைரியிலிருந்து.
'சூரியனைப் பார்க்க நாம் விளக்கு எடுத்துக்கொண்டு போவது இல்லை. சூரியனின் ஒளியிலேயே நாம் சூரியனைப் பார்க்கிறோம். அதே போல் கடவுளைக் காண நிமக்கு கடவுளின் அருள்தான் தேவை. பிற சாதனங்களால் நாம் கடவுளைக் காண இயலாது.' - சத்ய சாயிபாபா சொன்ன இந்த பொன் மொழியை ஒரு நூறு தடவையாவது படித்துப் பார்த்திருப்பேன். எனக்குப் புரியவில்லை. எனக்கு தோன்றிய ஒரே ஒரு எண்ணம்: ‘கடவுள் எதற்காக நம்மைப் படைக்க வேண்டும்? படைத்துவிட்டு அவரை நாம் வணங்க வேண்டும்; அவரையே நினைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று அவர் ஏன் விரும்ப வேண்டும்..? மனிதனை படைப்பானேன்..? அவன் நல்லவனாக இருக்க வேண்டும் என்று நினைப்பானேன்..?’ கடவுள் என்கிற ஒரு விஷயம் என்னுடைய மனசுக்குள் ஒரு பெரிய குழப்பம்.
நவம்பர் 1
முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சர் காசிராஜனின் பங்களா.
காலை மணி ஒன்பது.
பூஜையறையிலிருந்து வெளிப்பட்ட காசிராஜன் தன் மனைவி துளசி நீட்டிய காப்பி டம்ளரை வாங்கிக் கொண்டே கேட்டார்.
கட்சித் தொண்டர்கள் யாராவது வந்து இருக்காங்களா..?
எவனும் வரலை... நீங்க பதவியில் இல்லாதபோது எந்த தொண்டன் வருவான்..?
பத்திரிகைக்காரங்க..?
யாரும் வரலை...
காசிராஜன் மெல்ல நடந்து போய் சோபாவுக்கு சாய்ந்து உட்கார்ந்து ஒரு வாய்க் காப்பியை உறிஞ்சினார். அறைக்குள் நுழைந்தான் அவருடைய மகன் சிட்டிபாபு. வயது முப்பது. அப்படியே அப்பாவின் சாயல். வலது கை மணிக்கட்டில் தங்கத்தாலான ப்ரேஸ்லெட் பளபளத்தது.
அப்பா..!
என்ன சிட்டி..?
நிச்சயதார்த்தம் பண்ண ஒரு பார்ட்டி வருது...
காசிராஜன் நிமிர்ந்து உட்கார்ந்தார். ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு நிச்சயதார்த்தம்.
காப்பியை ஒரே மூச்சில் குடித்தார்.
துளசி கேட்டாள்.
பார்ட்டி யார்ரா..?
துவாரகா பிரசாத்ன்னு பேர்... சேட்டு..! சௌகார் பேட்டையில் டைமண்ட் பிசினஸ்...
பார்ட்டி எப்ப வருது..?
பத்து நிமிஷத்துக்குள்ளே வர்றதா சொன்னார்...
சரி... வந்தா... மாடி ரூமுக்கு கூட்டிட்டுப் போயிடு. அப்புறமா எனக்கு தகவல் கொடு...
சிட்டிபாபு தலையை ஆட்டிவிட்டு வெளியே போனான். சரியாய் பத்து நிமிஷம் கழித்ததும் இன்டர்காம் கூப்பிட்டது. காசிராஜன் ரிஸீவரை எடுத்தார். சிட்டிபாபு பேசினான்.
அப்பா...! பார்ட்டி வந்தாச்சு...
கூட யாராவது வந்து இருக்காங்களா..?
இல்லை...
சரி... வந்துடறேன்...
ரிஸீவரை வைத்த காசிராஜன் துளசி எடுத்துக் கொடுத்த ஜிப்பாவை மாட்டிக்கொண்டு மாடிப்படிகள் ஏறி அறைக்குள் நுழைந்தார்.
டால்டாவை சாப்பிட்டு சாப்பிட்டு டால்டாவின் நிறத்திலேயே இருந்த சேட் துவாரகா பிரசாத் எழுந்து நின்று கை கூப்பினார். பெரிய தொப்பையோடு நமஸ்கார்...
சொன்னார்.
உட்கார்ங்க... சேட்...
துவாரகா பிரசாத் உட்கார்ந்தார். எனக்கு ஒரு பிராப்ளம். அதை நீங்கதான் சுத்தம் பண்ணணும்...
காசிநாதன் சிரித்தார். சுத்தம் பண்ணத்தானே நாங்க இருக்கோம்... என்ன பிரச்னை...! சொல்லுங்க சேட்.
துவாரகா பிரசாத் தன் கையில் வைத்து இருந்த ஒரு இளைஞனின் போட்டோவைக் காட்டினார்.
இவன் பேரு கலைச்செல்வன். வேலையில்லா பட்டதாரி. பொழைப்புக்கு பானி பூரி வியாபாரம் பண்றான். நம்ம பங்களா இருக்கிற தெருமுனையில்தான் வியாபாரம். எப்படியோ என்னோட பொண்ணு சந்தியாவை மடக்கிட்டான். ரெண்டு பேரும் லவ் பண்றாங்க... என் பொண்ணுக்காக அமெரிக்க மாப்பிள்ளையை பார்த்து வெச்சிருக்கிற இந்த நேரத்துல இப்படியொரு இடி என் தலைமேல் இறங்கியிருக்கு... முளை விட்டிருக்கிற இந்த காதலை உடனடியா சுத்தம் பண்ணணும்... நம்ம தொகுதி எம்.எல்.ஏ.கிட்டே போய் விஷயத்தை சொன்னேன். அவர்தான் உங்களைப் பார்க்கச் சொன்னார்...
காசிநாதன் அந்த போட்டோவை வாங்கிப் பார்த்தார். கலைச்செல்வன் என்கிற அந்த இளைஞன் ஒரு ஹீரோவின் கெட்டப்பில் இருந்தான். பெண் காதலித்ததில் தப்பில்லை.
சேட்...! இந்த காதல் விவகாரம் சம்பந்தமாய் உங்க பெண்ணை கண்டிச்சீங்களா..?
இல்லை... எனக்கு இந்த விஷயமே தெரியாதது போல்தான் காட்டிக்கொண்டு இருக்கிறேன்... என்னுடைய மனைவிக்கும் கூட தெரியாது...
நல்ல வேலை பண்ணியிருக்கீங்க... காதும் காதும் வெச்ச மாதிரி பிராப்ளத்தை சுத்தம் பண்ணிடலாம்... கலைச்செல்வன் அடுத்தவாரம் இந்நேரத்துக்கெல்லாம் உயிரோடு இருக்கமாட்டான். அவனோட ஃபேமிலி பேக்க்ரௌண்ட் என்னான்னு தெரியுமா?
தெரியும்...
சொல்லுங்க...
பெரிய மேட்டுக் குப்பத்துல வீடு. சாராயம் குடிச்சு குடிச்சே அப்பன் செத்துப் போயிட்டான். இப்போ வீட்ல அம்மாவும் ஒரு தங்கச்சியும் மட்டும்தான். கலைச்செல்வன் எம்.ஏ. வரைக்கும் படிச்சுட்டு வேலை கிடைக்காததால பானிபூரி வண்டியைத் தள்ள ஆரம்பிச்சுட்டான்.
நீங்க சொல்றதைப் பார்த்தா அடிச்சுப் போட்டாலும் ஏன்னு கேட்க நாதியில்லை..?
கண்டிப்பா...
அப்படீன்னா... முடிச்சுடுவோம்...
என் மேல சந்தேகம் வந்துடாதே..?
வராது சேட்...! என்னோட ஆட்கள் பானிபூரி சாப்பிட அவனோட வண்டிகிட்டே போவாங்க... அவன் போட்டுக் கொடுத்த பேல்பூரியில் கரப்பான் பூச்சி இருந்ததாய் சொல்லி தகராறு பண்ணுவாங்க. கலைச்செல்வனை வம்புக்கு இழுப்பாங்க. அவன் ஏதாவது பேசாமே இருப்பானா? பேசுவான். அதையே காரணமா வெச்சு எங்க ஆட்கள் போட்டுத் தள்ளிட்டு போயிடுவாங்க... ஏதோ சண்டை சச்சரவால ஏற்பட்ட கொலைன்னு போலீஸ் கேஸை ஃபைல் பண்ணி ஆட்களை தேடுவாங்க... என்னோட ஆட்கள் கிடைக்க மாட்டாங்க. இதுவரைக்கும் பதிமூணு பேரை சுத்தம் பண்ணியிருக்கோம்... போலீஸ் எங்க பக்கம் திரும்பிக்கூட பார்த்தது இல்லை. ஏன்னா எங்க நெட் வொர்க் அப்படி...
எம்.எல்.ஏ. எல்லாத்தையும் சொல்லிட்டார். அதான் உங்ககிட்டே வந்தேன்...
ரேட் சொன்னாரா..?
சொல்லலை...
காசிநாதன் தன் மகன் சிட்டிபாபுவைப் பார்த்தார். சிட்டி! சேட்டுக்கு ரேட் சொல்லிடு...
சிட்டிபாபு துவாரகா பிரசாத்தை ஏறிட்டான். இருபது லட்சமாகும் சேட்...! அட்வான்ஸ் பத்து லட்சம்... வேலை முடிஞ்சதும் பத்து லட்சம்...
கொடுத்துடலாம்...
சொல்லிக் கொண்டே தான் கொண்டு போயிருந்த ப்ரீப்கேஸைப் பிரித்தார் துவாரகா பிரசாத்.