Sivappai Sila Pulligal and Sivappu kavithai
By Rajeshkumar
5/5
()
About this ebook
Read more from Rajeshkumar
Raja Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsThirumarana Azhaippithazh Rating: 5 out of 5 stars5/5Iruttil Parakkum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratings100-Vathu Pournami Rating: 4 out of 5 stars4/5Nanthini Nalai Irakkiral! Rating: 3 out of 5 stars3/5Vidathey Vivek! Vidathey Rating: 4 out of 5 stars4/5Panchavarna Kili Rating: 0 out of 5 stars0 ratingsIrapathu Nee Irupathu Naan Rating: 5 out of 5 stars5/5Dial For Kill Rating: 4 out of 5 stars4/5Vetri Endraal Vivek Rating: 5 out of 5 stars5/5Sivappu November Rating: 0 out of 5 stars0 ratingsKonjum vanjanai! Rating: 5 out of 5 stars5/5Piriyamaana Kolaikaran Rating: 5 out of 5 stars5/5Kondraal Kondraan Kondren Rating: 5 out of 5 stars5/5Irandhu Kidandha Thendral Rating: 0 out of 5 stars0 ratingsUyir Veelchi Rating: 0 out of 5 stars0 ratingsRojakkalum Thottakalum Rating: 0 out of 5 stars0 ratingsNeelam Enbathu Niramalla Rating: 0 out of 5 stars0 ratingsUyir Eduppaan Thozhan Rating: 5 out of 5 stars5/5Kavanam Vivek Rating: 5 out of 5 stars5/5Moondru Vinaadi Mugam Rating: 5 out of 5 stars5/5June, July, Aaa...! Rating: 4 out of 5 stars4/5Maranathin Thethi March 7 Rating: 0 out of 5 stars0 ratingsEngum Vivek! Ethilum Vivek! Rating: 5 out of 5 stars5/5Karuppu Rattham Rating: 5 out of 5 stars5/5Theepantham Edu! Theemaiyai Sudu Rating: 0 out of 5 stars0 ratingsVivek Athu Visham Rating: 5 out of 5 stars5/5Naan Nalina Nalliravu Rating: 0 out of 5 stars0 ratingsOre Oru Naal Rating: 5 out of 5 stars5/5Thanga Macham Rating: 5 out of 5 stars5/5
Related to Sivappai Sila Pulligal and Sivappu kavithai
Related ebooks
Angey... Inkey... Enkey? Rating: 0 out of 5 stars0 ratingsNirangal Rating: 3 out of 5 stars3/5Athe Nila Athe Kala Rating: 0 out of 5 stars0 ratingsPulip Pori Rating: 0 out of 5 stars0 ratingsOndrum Ondrum Moondru Rating: 0 out of 5 stars0 ratingsUllur Sathigal Thani Rating: 0 out of 5 stars0 ratingsAugust Athirchi Rating: 4 out of 5 stars4/5Ini Min Mini Rating: 5 out of 5 stars5/5Nimishathukku Nimisham Rating: 0 out of 5 stars0 ratingsNeethana Nejamthana Rating: 0 out of 5 stars0 ratingsUnakke Uyiraanen Rating: 0 out of 5 stars0 ratingsAadatha Oonjalgal Rating: 0 out of 5 stars0 ratingsUn Nizhalum Naanthaane! Rating: 0 out of 5 stars0 ratingsArugil Miga Arugil... Rating: 5 out of 5 stars5/5Welldone Vivek Rating: 0 out of 5 stars0 ratingsமுத்திரை சதி Rating: 5 out of 5 stars5/5Oru Thuli Kadal! Rating: 0 out of 5 stars0 ratingsKadalorak Kolaikal Rating: 0 out of 5 stars0 ratingsAndre, Appothe, Antha Nimishame! Rating: 0 out of 5 stars0 ratingsNil... Kavani...Kaathiru! Rating: 2 out of 5 stars2/5Oru Maalainera Maranam Rating: 0 out of 5 stars0 ratingsEn Iniya Innaley Rating: 0 out of 5 stars0 ratingsEnakku Mattume Therintha Hema Rating: 0 out of 5 stars0 ratingsMagaa Sathi Rating: 0 out of 5 stars0 ratingsIdi Minnal Indira Rating: 0 out of 5 stars0 ratingsDecember Iravukal Rating: 0 out of 5 stars0 ratingsAayul Aare Naal Rating: 5 out of 5 stars5/5Jeyippathu Nijam Rating: 0 out of 5 stars0 ratingsIruttuku Irandu Niram Rating: 0 out of 5 stars0 ratingsPuthiya Thisaigal Rating: 5 out of 5 stars5/5
Related categories
Reviews for Sivappai Sila Pulligal and Sivappu kavithai
1 rating0 reviews
Book preview
Sivappai Sila Pulligal and Sivappu kavithai - Rajeshkumar
ராஜேஷ்குமார்
இணையதளத்தில் உலா வரும்
இணையற்ற வரிகள்:
பேசிக் கொண்டே இருந்தால்
நம் பலவீனமும்,
மௌனமாக இருந்தால்
அடுத்தவர் பலவீனமும் தெரிய வரும்.
1
என்னங்க!
மனைவி சூடாமணியின் குரல் கேட்டு கண்ணாடியின் முன் நின்று ‘டை’ கட்டிக் கொண்டிருந்த சத்தியமூர்த்தி திரும்பிப் பார்க்காமல் ம்... சொல்லு
என்றான்.
இன்னிக்கு ஸ்கூல் வேன் வராதாம்.. டிரைவர் போன் பண்ணிச் சொன்னான். இனியாவையும் பிரபாவையும் நீங்கதான் ஸ்கூல்ல கொண்டு போய் விட்டுட்டு ஆபீஸ் போகணும்...!
சத்தியமூர்த்தி டையைக் கட்டி முடித்து ஒரு பெருமூச்சோடு திரும்பினான்.
இந்த மாசத்துல மட்டும் அந்த வேன் டிரைவர் மூணு தடவை போன் பண்ணி இப்படி சொல்லியிருக்கான். மொதல்ல வேனை மாத்தணும்
நானும் நாலைஞ்சு வேன் டிரைவர்கள்கிட்டே பேசிப் பார்த்தேன். யாரும் நம்ம ஏரியாவுக்கு வர தயக்கம் காட்டறாங்க... ரோடு சரியில்லையாம். ஸ்கூலுக்குப் பக்கத்துல வீடு பாருங்க... அப்பதான் இந்தப் பிரச்னை ஒரு முடிவுக்கு வரும்...!
சத்தியமூர்த்தி லேசாய் கோபப்பட்டான்.
இதோ பார் சூடாமணி... ஸ்கூலுக்குப் பக்கத்துல வீடு பார்க்கிறதாய் இருந்தா நான் வாங்கற சம்பளத்துல பாதி வீட்டு வாடகைக்கே போயிடும். போன வாரம் நம்ம குழந்தைங்க படிக்கிற ஸ்கூலுக்குப் பக்கத்துல கட்டிகிட்டு இருக்கிற அபார்ட்மெண்ட்டுக்கு போய் வாடகை எவ்வளவுன்னு கேட்டேன். என்ன சொன்னாங்க தெரியுமா?
சொல்லுங்க...
இருபத்தஞ்சாயிரம்
அம்மாடி...!
அது தவிர மெயின்டனென்ஸ்க்கு மாசம் ரெண்டாயிரம் தரணுமாம். நான் வாங்கற சம்பளம் அம்பதாயிரம். வீட்டு வாடகைக்கு இருபத்தேழாயிரம் போயிட்டா.. மீதி பணத்தை வெச்சுகிட்டு எப்படி குடும்பம் நடத்தறது..? ஏதோ இந்த ஏரியாவில் நமக்கு பத்தாயிரம் ரூபாய்க்கு வீடு கிடைச்சதே பெரிய விஷயம்... வீட்டு ஓனர் நல்லவராய் இருக்கப் போய் ரெண்டு வருஷமாய் வாடகையை ஏத்தாமே இருக்கிறது அதை விட பெரிய விஷயம்...!
சரி.. சரி.. நான் அந்த வேன்காரன்கிட்டே பேசி மட்டம் போடாமே ரெகுலராய் வரச் சொல்றேன். நீங்க இன்னிக்கு குழந்தைகளை ஸ்கூல்ல கொண்டு போய் விட்டுடுங்க.. நான் சாயந்தரம் போய் பஸ்ஸுல கூட்டிட்டு வந்துடறேன்.
சூடாமணி படபடவென்று பேசிக் கொண்டே சமையலறைக்குள் நுழைந்தாள். சத்தியமூர்த்தி கால்களுக்கு ஷுக்களைக் கொடுத்து முடிப்பதற்குள் எட்டு வயது இனியாவும், ஆறு வயது பிரபாவும் ஸ்கூல் பைகளோடும், மதிய உணவு டிஃபன் பாக்ஸ்களோடும் அவனுக்கு முன்பாய் வந்து நின்றார்கள்.
அப்பா.. நாங்க ரெடி...!
சத்தியமூர்த்தி அவர்களைப் பார்த்து பெரிதாய் புன்முறுவல் ஒன்றைப் பூத்தான்.
அப்பாவும் ரெடி.. கிளம்பலாமா?
சூடாமணி இன்னொரு டிஃபன் கிட்டோடு கணவனை நெருங்கினாள்.
இந்தாங்க உங்க லஞ்ச்.. மிச்சம் வைக்காமே சாப்டுட்டு வாங்க... கடந்த பத்து நாளா நீங்க சரியாவே சாப்பிடறதில்லை. பாதி சாப்பாட்டை அப்படியே கொண்டு வந்துடறீங்க...
ஆபீஸ் வேலை ஒரே டென்ஷன் சூடாமணி! லஞ்ச் பாக்ஸை ஓப்பன் பண்ணி சாப்பிட உட்கார்ந்தா போதும்... மானேஜர்கிட்டே இருந்து போன் வரும். ‘இன்னும் அஞ்சு நிமிஷத்துல அந்த ஃபைல் என்னோட டேபிள்ல இருக்கணும்’ன்னு சொல்வார். அந்த ஃபைலை தேடி எடுத்து அவர்கிட்டே கொண்டு போய்க் கொடுத்தா அந்த மனுஷன் என்னை உட்கார வெச்சுகிட்டு ஃபைலைப் புரட்டி ஒவ்வொரு பக்கமாய் பார்த்து சந்தேகம் கேட்டு முடிக்கிறதுக்குள்ளே ரெண்டரை மணி ஆயிடும். அதுக்கப்பறம் லஞ்ச் பாக்ஸுக்கு முன்னாடி வந்து உட்கார்ந்தா பசி வயித்தை விட்டு பறந்து போயிருக்கும்..
உங்க மானேஜர்க்கு அது ‘லஞ்ச் டைம்’ ன்னு தெரியாதா?
தெரியாமே என்ன.. நல்லாவே தெரியும்.. வேணும்ன்னே பண்றதுதான்.. ஆபீஸ்ல நடக்கற கூத்தையெல்லாம் பேசிட்டு இருந்தா நேரம் போயிடும். நான் குழந்தைகளை கூப்பிட்டுகிட்டு கிளம்பறேன்.
சத்தியமூர்த்தி வெளியே வந்து வாசல் ஷெட்டுக்குக் கீழே நின்றிருந்த தன்னுடைய ஸ்கூட்டரை உதைத்து உயிரூட்ட அது மெலிதாய் புகை கக்கி இயக்கத்துக்கு தயாரானது.
குழந்தைகள் இருவரும் ஏறிக் கொள்ள சத்தியமூர்த்தி வாசல் கதவருகே நின்றிருந்த சூடாமணியிடம் தலையசைப்பால் விடைபெற்றுக்கொண்டு சாலைக்கு வந்து போக்குவரத்தில் கலந்தான். காலை எட்டு மணிக்கே சென்னையின் வெய்யில் பிடரியைச் சுட்டது.
ஸ்கூட்டரின் பில்லியனில் உட்கார்ந்திருந்த இனியா சத்தியமூர்த்தியின் முதுகை மெள்ள சுரண்டினாள்.
அப்பா..!
என்னம்மா...?
நேத்திக்கு ராத்திரி அம்மா என்னை அடிச்சாங்க!
அம்மா அடிச்சாளா.. ஏன்..?
‘தீபாவளிக்கு இன்னும் பதினைஞ்சுநாள்தானே இருக்கு. எப்ப ட்ரஸ் எடுக்கப் போறது’ன்னு கேட்டேன். இப்படி கேட்டது தப்பாப்பா?
இதுல என்ன தப்பு இருக்கு?
தப்பு இல்லைதானே.. அப்புறம் ஏன் அம்மா என்னை அடிக்கணும்...?
அம்மா ஏதாவது ஒரு முக்கியமான வேலையாய் இருக்கும்போது போய் கேட்டு இருப்பே... அதனாலே மூட் அவுட்டாகிப் போன உங்க அம்மா அடிச்சிருக்கலாம். இன்னும் ரெண்டு நாள்ல நாம தீபாவளி ட்ரஸ் எடுக்கப் போலாம்.
ஸ்கூட்டரின் முன்புறம் நின்றிருந்த பிரபா இப்போது குரல் கொடுத்தாள். அப்பா! போன தீபாவளிக்கு எனக்கு எடுத்த ட்ரஸ் பிடிக்கவேயில்லை.
சத்தியமூர்த்தி சிரித்தான்.
இந்த தடவை நீயே செலக்ட் பண்ணு...!
எனக்கு ரெண்டு ட்ரஸ் வேணும்
எடுத்துக்கோ...
அம்மா திட்டுவாங்களே?
நான் சொல்லிக்கிறேன்.
நல்ல அப்பா.
அம்மாவும் நல்ல அம்மாதான்.
அரை மணி நேரப் பயணம் ஸ்கூல் வாசலில் வந்து முடியும் போது உள்ளே ப்ரேயர் நடந்து கொண்டு இருந்தது. இனியாவும், பிரபாவும் ஸ்கூட்டரினின்றும் இறங்கி புத்தகக்கட்டையும் லஞ்ச் பாக்ஸையும் தூக்கிக் கொண்டு பள்ளிக்குள் ஓட, அவர்கள் பார்வையில் இருந்து மறையும்வரை பார்த்துக் கொண்டிருந்த சத்தியமூர்த்தி ஸ்கூட்டரைத் திருப்பினான்.
ஐந்து நிமிஷத்திற்குப் பிறகு ஒரு குறுக்குச்சாலையில் திரும்பிய சத்தியமூர்த்தி ஆள் நடமாட்டம் இல்லாத இடமாகப் பார்த்து ஒரு மரத்துக்குக் கீழே ஸ்கூட்டரை நிறுத்திக் கொண்டான். தன்னுடைய செல்போனை எடுத்து எண்களைத் தட்டி விட்டு பேசினான்.
மிஸ் மந்த்ரா...! நான் சத்தியமூர்த்தி பேசறேன்!
மந்த்ரா அவன் வேலை செய்யும் கம்பெனியின் டெலிபோன் ஆப்ரேட்டர் கம் ரிசப்ஸனிஷ்ட்.
குட் மார்னிங் சத்தியமூர்த்தி ஸார்..!
மானேஜர் வந்துட்டாரா..?
ம்.. வந்துட்டார்..!
அவர்கிட்டே பேசணுமே!
ஒரு நிமிஷம் ஸார்.. லைன் தர்றேன்...!
ப்ளீஸ்.
சத்தியமூர்த்தி செல்போனை காதில் ஒட்ட வைத்துக் கொண்டு காத்திருந்தான். சரியாய் ஒரு நிமிஷத்துக்குப் பிறகு மானேஜர் வராகசாமியின் குரல் கேட்டது.
எஸ்..
குட்மார்னிங் ஸார். நான் சத்தியமூர்த்தி பேசறேன்!
குட்மார்னிங் .. என்ன விஷயம் சொல்லுங்க...!
ஸார்.. இன்னிக்கு ஒரு ஹாஃப் டே லீவு வேணும் ஸார். மத்தியானம் ரெண்டு மணிக்குள்ளே ஆபீஸ் வந்துடுவேன்.
எதுக்காக லீவு.. எனி அர்ஜன்ஸி?
ஆமா.. ஸார்.. என்னோட மிஸஸ்க்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை. டாக்டர் பதினோரு மணிக்கு அப்பாயிண்ட்மெண்ட் குடுத்து இருக்கார்.
மத்தியானம் ரெண்டு மணிக்கு வந்துடுவீங்கள்ள?
வந்துடுவேன் ஸார்...
சரி.. போயிட்டு வாங்க...! பை.. த.. பை.. இந்த மாசத்துல நீங்க மூணாவது தடவை ஹாஃப் டே பர்மிஷன் கேட்கறீங்க. இனி ஃப்யூச்சர்ல இதை அவாய்ட் பண்ணுங்க...!
ஐ நோ வெரி வெல் ஸார்.. பட்.. எதிர்பாராத விதமாய் என்னோட ஒய்ஃபுக்கு.
ஐ டோண்ட் வாண்ட் எனி எக்ஸ்ப்ளனேஷன்ஸ் ஃப்ரம் யூ... போயிட்டு வாங்க!
தேங்க் யூ ஸார்...!
சத்தியமூர்த்தி செல்போனை அணைத்து சட்டையின் பாக்கெட்டுக்குள் போட்டுக் கொண்டு ஸ்கூட்டரை நகர்த்தினான். அந்த குறுக்குச் சந்தை விட்டு வெளியே வந்து பிரதான சாலைக்கு வந்து போக்குவரத்தில் கலந்தான்.
மீண்டும் ஒரு முப்பது நிமிடப் பயணம்.
பழைய மகாபலிபுர ரோட்டில் ஸ்கூட்டரை விரட்டியவன் ஒரு மண் சாலையில் பிரிந்து இரண்டு கிலோமீட்டர் பயணித்து தகரத்தாலும், பழைய ஆஸ்பெஸ்டாஸ் கூரையாலும் நிர்மாணிக்கப்பட்ட கார் ஒர்க்ஷாப் அருகே வந்து ஸ்கூட்டரை நிறுத்தினான்.
அமர் ஆட்டோமொபைல்ஸ் என்ற பெயர்ப்பலகை சமீபத்திய ஆயுத பூஜையின் வாடிய பூமாலையோடு தெரிய, நிறைய உடம்பு சரியில்லாத கார்கள் ஷெட்டுக்குள் சிகிச்சைக்காக காத்திருந்தன.
சத்தியமூர்த்தியைப் பார்த்ததும் ஒரு காரின் அடியில் ஸ்பேனருடன் படுத்து இருந்த அந்த இளைஞன் எழுந்து வந்தான். ஆயில், க்ரீஸ் கரை படிந்த காக்கி பேண்ட் சர்ட்டோடும், பான் பராக் மெல்லும் வாயோடும் நெருங்கினான்.
என்ன சத்தி.... இன்னிக்கு லேட்?
ஸ்கூல் வேன் வரலை... குழந்தைகளைக் கொண்டு போய் ஸ்கூலில் விட்டுட்டு வர்றேன். ஓ.எம்.ஆர். வர்ற வரைக்கும் பயங்கர ட்ராஃபிக் வேற...!
சரி.. போய் ட்ரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வா.
சத்தியமூர்த்தி தலையசைத்துவிட்டு ஒர்க்ஷாப்பின் உள்ளே இருந்த ஒரு அறையை நோக்கிப் போனான். அடுத்த பத்து நிமிஷத்துக்குள் திரும்பி வந்தான்.
ட்ரஸ் மாறியிருந்தது.
சாயம் போன தினுசில் ஜீன்ஸ் பேண்ட்டும், இள நீலநிறத்தில் டீ சர்ட்டும் சத்தியமூர்த்தியை வித்தியாசமாய் காட்டின. கையில் ஒரு பிளாஸ்டிக் கேரி பேக். அதில் ஒரு பிரபல ஜவுளிக்கடையின் பெயர்.
வாயில் நிரம்பியிருந்த பான்பராக் எச்சிலை ஒரு ஓரமாய் உமிழ்ந்து விட்டு வந்த அமர் தன் சட்டைப் பாக்கெட்டில் வைத்து இருந்த ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை எடுத்து நீட்டினான்.
இன்னிக்கு நீ போட்டுத் தள்ள வேண்டிய ஆள் இவன்தான்!
சத்தியமூர்த்தி அந்த போட்டோவை வாங்கிப் பார்த்தான். இரண்டு புருவங்களும் மேலேறியது.
அமர்!
என்ன?
இந்த ஆள் பேர் என்ன?
ஜானகிராமன். எல்லா விபரமும் இந்த பேப்பர்ல இருக்கு.
வயசு அம்பதுக்கு மேல இருக்கும் போலிருக்கே?
அதனால் என்ன... நமக்கு அவன் வயசா முக்கியம்... உயிர்தான் முக்கியம்... வேலை சரியாய் முடியணும்.
என்னிக்கு என்னோட வேலை சரியாய் இல்லாமே இருந்து இருக்கு?
ஒரு பேச்சுக்கு சொன்னேன் சத்தி.. அதுக்குள்ளே கோபப்படறியே?
இது கோபமில்லை அமர்... என்னோட வேலை என்னிக்குமே துல்லியமாய் இருக்கும்ன்னு சொன்னேன். சரி.. இந்த வேலைக்கு ரேட் பேசிட்டியா...?
பேசிட்டேன்.
எவ்வளவு?
அஞ்சு லட்சம்
அடுத்த தடவை சேர்த்து தர்றதாய் சொன்னாய்.
நான் பேசிப் பார்க்கிறேன்.
எனக்கு இந்த தடவை ஆறு லட்சம் வேணும்!
அமௌண்ட் ஒரு பிரச்னையே இல்லை. நான் பேசி வாங்கித்தர்றேன். நீ வேலையை முடி...!
நான் கிளம்பிட்டா வேலை முடிஞ்ச மாதிரிதான். மத்தியானம் சரியாய் ஒரு மணிக்கு வருவேன். பணம் ரெடியாய் இருக்கணும்!
இருக்கும்...!
நான் எந்தக் காரை எடுத்துக்கட்டும்?
அதோ.. அந்த ரெட் கலர் மாருதியை எடுத்துக்க
- அமர் சொல்ல சத்தியமூர்த்தி ஒர்க் ஷாப்பின் ஓர் ஓரத்தில் நின்றிருந்த சிவப்புநிற மாருதியை நோக்கிப் போனான்.
ஒரு நிமிஷம் சத்தி!
என்ன?
எந்த ரிவால்வரை எடுத்துகிட்டே?
டேண்டம் ரிவால்வர்... ஒரே சமயத்துல ரெண்டு தோட்டா பாயும்! ஒண்ணு இடது மார்பிலேயும், இன்னொண்ணு வலது மார்பிலேயும் பாயும். ஆயுசு எவ்வளவு கெட்டியாய் இருந்தாலும் செத்துடுவான்.
சத்தியமூர்த்தி சொல்லிக் கொண்டே கார்க்குள் ஏறி உட்கார்ந்தான்.
இணையதளத்தில் உலா வரும்
இணையற்ற வரிகள்:
கடலில் இருக்கும் அத்தனை நீரும் ஒன்று சேர்ந்தால் கூட ஒரு கப்பலை மூழ்கடிக்க முடியாது. கப்பலுக்குள் கடல் நீர் புகுந்தால் மட்டுமே அது சாத்தியம்.
வாழ்க்கையின் எந்தப் பிரச்னையும் உங்களை பாதிக்கவே முடியாது.. நீங்கள் அனுமதித்தால் தவிர.
2
காலை பதினோரு மணி
மயிலாப்பூர் லஸ் கார்னரில் இருந்த ஓர் உடுப்பி ஹோட்டலின் உள்ளே மூலையோர மேஜைக்கு முன்பாய் உட்கார்ந்திருந்தான் விஷ்ணு.
அவனுக்கு முன்பாய் இருந்த பிளேட்டில் இரண்டு தயிர்வடை கெட்டியான தயிரைப் பூசிக்கொண்டு தெரிய அவைகளின் மேல் காரா பூந்தியை தூவி ஸ்பூனில் துண்டாடி ஒரு கணிசமான எடையோடு கூடிய துண்டை தன் வாய்க்குக் கொண்டு போக நினைத்த விநாடி அவனுடைய செல்போன் ரிங்டோனை வெளியிட்டது. ஸ்பூனை அப்படியே வைத்துவிட்டு செல்போனை எடுத்து அழைப்பது யார் என்று பார்த்தான்.
‘நெப்ஸ்’ என்ற பெயர் பளிச்சிட்டது.
நெப்ஸ் யாருமில்லை. அவனோடு சி.பி.சி.ஐ.டி.யில் பணி புரியும் நண்பன் நெப்போலியன்.
செல்போனை காதுக்கு ஒற்றினான் விஷ்ணு.
சொல்லு நெப்ஸ்.
இப்ப நீ எங்கே இருக்கே...?
லஸ் கார்னர் உடுப்பி ஹோட்டலில் தயிர்வடைக்கு முன்னாடி உட்கார்ந்துட்டிருக்கேன்.
நீ மூணு நாள் லீவு போட்டிருக்கேன்னு கேள்விப்பட்டேன். உண்மையா...?
ஆமா.. பாஸ் தன் ஃபேமிலியோடு யூரோப் டூர் கிளம்பிவிட்டார். ரெண்டு வாரம் கழிச்சுதான் வரப்போறார். பாஸும், ரூபா மேடமும் இல்லைன்னா சென்னையும், பார்க்கிற வேலையும் போரடிக்குது. அதான் மூணு நாள் லீவு போட்டுட்டு எனக்கு பிடிச்ச ஹோட்டலாய் பார்த்து என்னோட ஃபேவரைட் அயிட்டங்களை சாப்பிட்டு என் சோகத்தை மறந்துட்டு இருக்கேன்.
அப்படியா...! நானும் இப்ப லீவில்தான் இருக்கேன்.
எத்தனை நாள்...?
ரெண்டு நாள்... இன்னியோடு லீவு முடியுது. நாளைக்கு போகணும்!
சரி.. இப்ப எதுக்காக எனக்கு ஃபோன்? நீ காரணம் இல்லாமே ஃபோன் பண்ணமாட்டியே!
போன மாசம் ‘ஸ்கை வாக்’ மாலில் ஐஸ்க்ரீம் பார்லரில் ஒரு ஃபிகரைப் பார்த்தோமே.. ஞாபகம் இருக்கா?
அவளை மறக்க முடியுமா... பத்தடி தள்ளி நின்னு பார்த்தா நயன்தாரா மாதிரியும் பக்கத்துல போய் பார்த்தா அனுஷ்கா மாதிரியும் இருந்தாளே... அவளா?
அவளேதான்... அந்த டூ இன் ஒன்தான்!
அவளுக்கு என்ன இப்போ...?
அதே ‘ஸ்கைவாக்’கில் இப்ப அவளைப் பார்த்துட்டு இருக்கேன்... அன்னிக்கு அவ உன்னைப் பார்த்த லுக்கில் ஒரு டன் காதல் இருந்தது. அந்தக் காதலை நீ கண்ட்டினியூ பண்ண நினைச்சபோதுதான் உன்னோட பாஸ் விவேக் ஸார் உனக்கு அவசரமாய் போன் பண்ண - நீ கிளம்பி போயிட்டே. அதுக்கப்புறம் நீயும் நாலைஞ்சு தடவை மாலுக்குப் போய்ப் பார்த்தும் அந்த டூ இன் ஒன் உன்னோட பார்வையில் தட்டுப்படலை. ஆனா இன்னிக்கு நான் அந்த மாலுக்குப் போயிருந்த போது பார்த்தேன். உடனே எனக்கு உன்னோட நினைப்பு வந்தது. உடனடியாய் நீ புறப்பட்டு வந்தா உன்னோட ஆளைப் பார்த்து காதலை டெவலப் பண்ணிக்கலாம்.
விஷ்ணு தயிர்வடையை மறந்துவிட்டு பரபரத்தான்.
நான் ‘ஸ்கைவாக்’குக்கு வந்து சேர எப்படியும் ஒரு மணி நேரமாயிடும். அதுவரைக்கும் அந்த ‘டூ இன் ஒன்’ இருப்பாளா நெப்ஸ்?
இருப்பான்னுதான் நினைக்கிறேன்.
எப்படி சொல்றே?
இந்த மாலில் இருக்கிற ஒரு ப்யூட்டி பார்லர்க்குள்ளேதான் போயிருக்கா. ஒரு பொண்ணு ப்யூட்டி பார்லர்க்குள்ளே போனா வெளியே வர்றதுக்கு எவ்வளவு நேரம் ஆகும்ன்னு உனக்குத் தெரியாதா... நீ மொதல்ல புறப்பட்டு வா. ஒருவேளை நீ இங்கே வந்து சேர்றதுக்குள்ளே அவ ப்யூட்டி பார்லரிலிருந்து வெளியே வந்துட்டாள்ன்னா நான் அவளை ஃபாலோ பண்ணிட்டே உனக்கு தகவல் தர்றேன்!
நெப்ஸ்!
என்ன?
உன்னை நினைச்சா எனக்குப் பெருமையா இருக்கு...!
எதுக்காக இப்படி உணர்ச்சி வசப்படறே?
கருகி காணாமல் போக இருந்த என்னோட காதலுக்கு மறுபடியும் தண்ணி ஊற்றி துளிர்க்க வெச்சுட்டியே! உனக்கு என்ன கைம்மாறு செய்யப் போறேன்.
நீ சொன்னாலும் சரி சொல்லாமே போனாலும் சரி - கண்டிப்பா நீ எனக்கு இன்னிக்கு ராத்திரி ஒரு கைம்மாறு பண்ணத்தான் போறே!
என்ன சொல்லுற?
நுங்கம்பாக்கம் ஹை ரோட்ல ‘ஹாட் சிக்’ன்னு ஒரு ஹை க்ளாஸ் நான் - வெஜ் ஹோட்டல் இருக்கு. பஃபே சிஸ்டம். ஒரு ஆளுக்கு 1500 ரூபாய் தான். இன்னிக்கு நீ என்னை அங்கே கூட்டிட்டு போகப் போறே?
.........
விஷ்ணு மௌனம் அனுஷ்டித்தான்.
என்னடா பேச்சையே காணோம்?
நுங்கம்பாக்கம் ஏரியாவில் அதுமாதிரியான ஹோட்டலை நான் பார்த்ததே இல்லையே?
இன்னிக்கு நான் காட்றேன். நீ எனக்கு பண்ண வேண்டிய கைமாறை அங்கே பண்ணலாம்... கவலைப்படாமே புறப்பட்டு வா...!
நெப்போலியன் மறுமுனையில் செல்போனை வைத்துவிட விஷ்ணு காராபூந்தி அலங்காரத்தோடு தயிரில் ஊறிக் கொண்டிருந்த வடையை ஒரே நிமிஷத்தில் எட்டு துண்டுகளாக்கி வயிற்றுக்கு அனுப்பிவிட்டு, பில்லுக்குரிய பணத்தைக் கொடுத்து விட்டு வெளியே வந்தான்.
பிளாட்பாரத்தை ஒட்டி நிறுத்தப்பட்டு இருந்த டூ வீலர்களில் தன் ‘தண்டர் பால்’ பைக்கை பொறுக்கிக் கொண்டு போக்குவரத்தில் கலந்தான். பறந்தான்.
சரியாய் நாற்பத்தைந்தாவது நிமிஷம்.
ஸ்கை வாக் மாலின் அண்டர் க்ரௌண்ட் டூ வீலர் பார்க்கிங்கில் தன் பைக்கை நிறுத்திவிட்டு செல்போனில் நெப்போலியனைத் தொடர்பு கொண்டான். நான் மாலுக்கு வந்துட்டேன். நீ இப்ப எங்கே இருக்கே...?
மூணாவது மாடிக்கு வா... ‘எர்த் ஏஞ்சல்ஸ்’ன்னு ஒரு ப்யூட்டி பார்லர் இருக்கு. அதுக்கு நேர் எதிர்ல ‘ஜஸ்ட் ஏ பைட்’ ரெஸ்டாரண்ட். அந்த ரெஸ்டாரண்ட்டுக்குள்ளே உட்கார்ந்துட்டு ப்யூட்டி பார்லரை ‘வாட்ச்’ பண்ணிட்டிருக்கேன்.
இன்னும் என்னோட ஆள் ப்யூட்டி பார்லர்க்குள்ளே தான் இருக்காளா?
ஆமா...!
கொஞ்சம் கவனமாய் இரு. நீ பார்க்காத நேரத்துல அவ வெளியே கிளம்பிப் போயிடப் போறா.
நான் பார்த்துக்கிறேன். நீ வா!
இன்னும் ஒரு ரெண்டு நிமிஷத்துல உம் முன்னாடி இருப்பேன்.
வா.. வா...!
விஷ்ணு ‘ஸ்கைவாக்’கின் நுழைவாயிலுக்குள் நுழைந்து எதிர்பட்ட எஸ்கலேட்டரில் உயர்ந்து மூன்றாவது மாடிக்குப் போய் எர்த் ஏஞ்சல்ஸ் ப்யூட்டி பார்லரைத் தேடினான். உடனே கிடைத்தது.
எதிர்பக்கம் பார்த்தான்.
‘ஜஸ்ட் ஏ பைட்’ என்ற ஆங்கில எழுத்துக்களோடு அந்த ரெஸ்டாரெண்ட் பார்வைக்குத் தட்டுப்பட வேகவேகமாய் உள்ளே போனான்.
கூட்டம் வெகு சொற்பமாய் இருந்த ரெஸ்டாரெண்ட் அது. அநேக மேஜைகள் காலி. கடைசி மேஜையில் நெப்ஸ் தெரிந்தான். கையை உயர்த்தி அசைத்தான். விஷ்ணு அவனை நோக்கி வேகவேகமாய் போனான்.
என்ன நெப்ஸ்... ப்யூட்டி பார்லர் அந்தப் பக்கம் இருக்கு... நீ இந்த ரெஸ்டாரெண்ட்டுக்குள்ளே ஒரு மூலையில் உட்கார்ந்துட்டு வேற யார்க்கோ வெயிட் பண்ற மாதிரி உட்கார்ந்துட்டு இருக்கே?
நெப்போலியன் உதடு பிரியாமல் சிரித்தான்.
நீ சொன்னது உண்மைதான் விஷ்ணு... நான் ஒருத்தரை எதிர்பார்த்துதான் காத்துட்டிருக்கேன்.
அப்போ என்னோட டூ இன் ஒன்?
அது சும்மா...!
விஷ்ணு லேசாய் சூடானான். என்ன விளையாடறியா?
ஸாரி விஷ்ணு... உன்னை சீக்கிரமா இங்கே வரவழைக்க எனக்கு வேற வழி தெரியலை. அதான் அப்படி ஒரு பொய்யைச் சொன்னேன்...!
சரி.. எதுக்காக வரச்சொன்னே?
"நீயும் நானும்