Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sorkkathin Savee
Sorkkathin Savee
Sorkkathin Savee
Ebook159 pages53 minutes

Sorkkathin Savee

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Sorkkathin Savee

Read more from Rajeshkumar

Related to Sorkkathin Savee

Related ebooks

Related categories

Reviews for Sorkkathin Savee

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sorkkathin Savee - Rajeshkumar

    13

    1

    அம்மா...!

    வி.சி.டி.யில் பத்மா சுப்ரமண்யத்தின் நாட்டிய நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த சமுத்ரா வேலைக்காரியின் குரல் கேட்டு கலைந்தாள்.

    என்ன பொன்னி...?

    உங்களைப் பார்த்து பேசறதுக்காக போலீஸிலிருந்து ஒருத்தர் வந்து இருக்கார்ம்மா... பெரிசா மீசையெல்லாம் வெச்சுகிட்டு பார்க்கிறதுக்கே பயமாயிருக்கம்மா...

    சமுத்ரா வி.சி.டி.யை அணைத்துவிட்டு எழுந்தாள். இருபத்திமூன்று வயது. ஒடிசலான உடம்பு வாகு. பெரிய கண்கள். அடர்த்தியான தலைமுடி ஒற்றை ஜடையாக மாறி பின்பக்கம் ஒரு கறுப்பு அருவியாய் வழிந்து ரம்யமாய் அசைந்தது. சமுத்ரா கடந்த இரண்டு வருஷ காலமாய் எல்லா நாளிதழ்களிலும், டி.வி.சானல்களிலும் தன்னுடைய பரத நாட்டிய திறமைக்காக ஒரு நிரந்தர இடம் பிடித்து இருந்தாள். சமீபத்தில் ஜனாதிபதி கையால் வாங்கிய பட்டம் ‘பரதநாட்டிய பொக்கிஷம்’. அடுத்த வருஷம் கண்டிப்பாய் ஒரு ‘பத்மஸ்ரீ’ உண்டு என்பது கலை இலக்கிய விமர்சகர்களின் அசாத்திய நம்பிக்கை.

    சமுத்ரா தன் அறையினின்றும் வெளிப்பட்டு மாடி வராந்தாவில் நடந்து சிவப்பு கார்ப்பெட் போர்த்தியிருந்த மாடிப்படிகளில் இறங்கி ஹாலுக்குள் நுழைந்தபோது சோபாவில் அந்த போலீஸ் அதிகாரி ஒரு வார இதழை புரட்டியபடி தெரிந்தார்.

    சமுத்ராவைப் பார்த்ததும் புன்னகையுடன் எழுந்தார்.

    ஸாரி...! ஓய்வாய் இருக்கிற நரத்தில் வந்து உங்களுக்கு தொல்லை கொடுத்துட்டேன்...

    சமுத்ராவும் புன்னகைத்தாள்.

    காரணம் இல்லாமே வரமாட்டீங்களே... டிபார்ட்மெண்ட் சார்பா ஏதாவது கலை நிகழ்ச்சியா...?

    அதெல்லாம் இல்லை... உங்ககிட்டே ஒரு அஞ்சு நிமிஷம் தனியா பேசணும்...

    தாராளமா பேசலாம்... இந்த பங்களாவில் என்னையும் வேலைக்காரியையும் தவிர வேறு யாரும் கிடையாது. நீங்க எதைப் பேசறதாயிருந்தாலும் இங்கேயே பேசலாம்...

    நான் அஸிஸ்டண்ட் கமிஷனர் ஆப் போலீஸ். என்னோட பேர் வகுளாம்பரன். உங்களை பார்க்கச் சொல்லி கமிஷனரோட உத்தரவு.

    உங்களுக்கு சொந்த ஊர் கும்பகோணமா?

    ஆமா... எப்படி கண்டுபிடிச்சீங்க...?

    நீங்க பேசற தமிழ்...! எனக்கும் பூர்வீகம் கும்பகோணம்தான்... சரி...! என்ன விஷயமா வந்திருக்கீங்க... சொல்லுங்க...

    அஸிஸ்டண்ட் போலீஸ் கமிஷனர் வகுளாம்பரன் தன் காக்கிச்சட்டையின் பாக்கெட்டுக்குள் கையை நுழைத்து ஒரு கடிதக் கவரை எடுத்து சமுத்ராவின் கையில் கொடுத்தார்.

    இந்த லெட்டரைக் கொஞ்சம் படிச்சுப் பாருங்க.

    சமுத்ரா குழப்பமாய் அந்த கடிதத்தை வாங்கிப் பிரித்தாள். கடிதம் முதல் பத்து வரிகள் உருது மொழியிலும் அதற்குக் கீழே உள்ள பத்து வரிகள் ஆங்கில மொழியிலும் எழுதப்பட்டு இருந்தது. சமுத்ரா ஆங்கில வாக்கியங்களைப் படித்தாள்.

    தமிழக போலீஸ்துறைக்கு எங்கள் இயக்கத்தின் சார்பாக வேண்டுகோள்கள் சில. இந்த வேண்டுகோள்கள் என்கிற வார்த்தையை நீங்கள் எச்சரிக்கைகள் என்று எடுத்துக் கொண்டாலும் தப்பில்லை.

    வேண்டுகோள் - 1: ‘லிட்டில் டெவில்ஸ்’ என்கிற எங்கள் புனித இயக்கத்தைச் சேர்ந்த மூன்றுபேர் சென்னை ‘க்யூ பிராஞ்ச்’ போலீஸாரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அவர்களை இன்னும் 24 மணி நேரத்துக்குள் விடுதலை செய்யாவிட்டால் உங்கள் போலீஸ் துறையைச் சேர்ந்த மூணு பேர் வெட்டி சாய்க்கப்படுவார்கள். இது விளையாட்டான மிரட்டல் இல்லை. விபரிதம் வேண்டாம் என்று நினைத்தால் எங்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களை விடுதலை செய்யவும்.

    வேண்டுகோள் - 2: ‘லிட்டில் டெவில்ஸ்’ என்கிற எங்களுடைய புனித இயக்கத்தை தீவிரவாதிகளின் இயக்கம் என்று போலீஸ் கமிஷனர் பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்து இருக்கிறார். அந்த வார்த்தைகளை அவர் வாபஸ் பெறவேண்டும். இதற்கும் 24 மணி நேர கெடு. அவர் வாபஸ் வாங்கவில்லை என்றால் அவருடைய குடும்பம் அவர்க்காக கண்ணீர் வடிக்க வேண்டியிருக்கும்.

    வேண்டுகோள் - 3: அடுத்த மாதம் பதினாலாம் தேதி பாகிஸ்தானின் கராச்சியில் இன்டர்நேஷ்னல் கல்ச்சுரல் ப்ரோக்ராம் ஒன்று நடக்க உள்ளது. மொத்தம் 50 நாடுகள் பங்கு கொள்ளும் அந்த சர்வதேச கலை விழாவில் உங்கள் நாடான இந்தியாவும் கலந்து கொள்கிறது. பாகிஸ்தான் அரசு இதை அனுமதித்தாலும் நாங்கள் இதை அனுமதிக்கத் தயாராக இல்லை. எனவே அந்த கலைவிழாவில் பரத நாட்டியம் ஆடுவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நாட்டியப் பெண் சமுத்ரா கராச்சியில் காலடி எடுத்து வைக்கக்கூடாது. மீறி காலடி எடுத்து வைத்தால் இரண்டு கால்களையும் இழந்து, சமுத்ரா, சக்கர நாற்காலியில் ஊர் திரும்ப வேண்டியிருக்கும்.

    இப்படிக்கு,

    புனித இயக்கம், லிட்டில் டெவில்ஸ்.

    லெட்டரைப் படிக்க படிக்கவே சமுத்ராவின் அழகான சிறிய நெற்றியில் நீர்த்திவலைகளாய் வியர்வை. உலர்ந்து போன உதடுகளோடு நிமிர்ந்து வகுளாம்பரனைப் பார்த்தாள் சமுத்ரா.

    என்ன ஸார்... இப்படி எழுதியிருக்காங்க...?

    தீவிரவாதிகளோட கடிதம் இப்படித்தான் இருக்கும்.

    சமுத்ராவின் வியர்வை அதிகமாயிற்று. வகுளாம்பரன் புன்னகைத்தார். என்ன மிஸ் சமுத்ரா! பயந்துட்டீங்களா?

    பின்னே பயம் இல்லாமே இருக்குமா...? கராச்சியில் காலடி எடுத்து வெச்சா என்னோட ரெண்டு கால்களையும் இழந்து சக்கர நாற்காலியில் திரும்பி வரவேண்டியிருக்கும்ன்னு லெட்டர் எழுதியிருக்காங்களே...?

    இது மாதிரியான லெட்டர்ஸ் போலீஸ் டிபார்ட்மெண்ட்டுக்கு நிறைய வரும்... எங்களைப் பொறுத்தவரைக்கும் இது வேஸ்ட் பேப்பர். எங்களுக்கு மட்டும் மிரட்டல் வந்திருந்தால்... இந்நேரம் இந்த லெட்டர் குப்பைக்கூடைக்குள் ஒரு உருண்டைக் காகிதமாய் மாறியிருக்கும். ஆனா இந்த லெட்டர்ல உங்களைப் பற்றியும் ஒரு எச்சரிக்கை இருந்ததினால லெட்டரை உங்ககிட்டே காட்ட வேண்டிய கட்டாயம். அதனால்தான் வந்தேன். லெட்டர்ல இருக்கிற எச்சரிக்கையை பொருட்படுத்தறதும் படுத்தாததும் உங்க விருப்பம்... நீங்க விரும்பினால் கராச்சியில் நடக்கிற இன்டர்நேஷ்னல் கல்ச்சர் ப்ரோக்ராமுக்கு போகலாம். இல்லேன்னா கான்ஸல் பண்ணிடலாம்...

    என்னது? கான்ஸல் பண்றதா...?

    ஆமா... நீங்கதானே பயமாயிருக்குன்னு சொன்னீங்க?

    எதுக்காக அப்படி சொன்னேன் தெரியுமா ஸார்?

    சொல்லுங்க...

    "நான் உயிர்க்கு பயந்துட்டு அப்படி சொல்லலை. என்னோட கால்களை மட்டும் வெட்டிட்டான்னா அதுக்கப்பறம் என்னால டான்ஸ் பண்ண முடியாமே சக்கர நாற்காலிக்குள்ளேயே முடங்கிப் போய்விடுவோமோ என்கிற பயம்தான். மற்றபடி நான் கோழை கிடையாது. என்னோட

    Enjoying the preview?
    Page 1 of 1