Thappattam
By Rajeshkumar
()
About this ebook
Read more from Rajeshkumar
Irapathu Nee Irupathu Naan Rating: 5 out of 5 stars5/5Panchavarna Kili Rating: 0 out of 5 stars0 ratingsDial For Kill Rating: 4 out of 5 stars4/5Raja Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsThirumarana Azhaippithazh Rating: 5 out of 5 stars5/5Nanthini Nalai Irakkiral! Rating: 3 out of 5 stars3/5Iruttil Parakkum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsUyir Eduppaan Thozhan Rating: 5 out of 5 stars5/5Sivappu November Rating: 0 out of 5 stars0 ratingsVidathey Vivek! Vidathey Rating: 4 out of 5 stars4/5Vetri Endraal Vivek Rating: 5 out of 5 stars5/5Kondraal Kondraan Kondren Rating: 5 out of 5 stars5/5Konjum vanjanai! Rating: 5 out of 5 stars5/5Kavanam Vivek Rating: 5 out of 5 stars5/5Uyir Veelchi Rating: 0 out of 5 stars0 ratings100-Vathu Pournami Rating: 4 out of 5 stars4/5Neelam Enbathu Niramalla Rating: 0 out of 5 stars0 ratingsMella Mella Ennai Kollathey Rating: 0 out of 5 stars0 ratingsJune, July, Aaa...! Rating: 4 out of 5 stars4/5Rojakkalum Thottakalum Rating: 0 out of 5 stars0 ratingsPiriyamaana Kolaikaran Rating: 5 out of 5 stars5/5Thanga Macham Rating: 5 out of 5 stars5/5Moondru Vinaadi Mugam Rating: 5 out of 5 stars5/5Naan Nalina Nalliravu Rating: 0 out of 5 stars0 ratingsUchi Nila Rating: 0 out of 5 stars0 ratingsEngum Vivek! Ethilum Vivek! Rating: 5 out of 5 stars5/5Un Naanum En Neeyum Rating: 5 out of 5 stars5/5Karuppu Rattham Rating: 5 out of 5 stars5/5Vivek, Vishnu, Oru Vidukathai! Rating: 3 out of 5 stars3/5Saagaavaram Rating: 4 out of 5 stars4/5
Related to Thappattam
Related ebooks
Mohana Mupathu Naal Rating: 0 out of 5 stars0 ratingsOru Maalainera Maranam Rating: 0 out of 5 stars0 ratingsEdhuvum Oru Ellai Varai Rating: 5 out of 5 stars5/5Kollamal Varathey Rating: 5 out of 5 stars5/5Veebareethaththirku Oru Visa! Rating: 5 out of 5 stars5/5Irandaavathu Nizhal Rating: 5 out of 5 stars5/5Thisai Thedum Paravai! Rating: 0 out of 5 stars0 ratingsChinna Thappu Periya Thappu Rating: 0 out of 5 stars0 ratingsKannil Theriyatha Vaanam Rating: 0 out of 5 stars0 ratingsMella Mella Ennai Kollathey Rating: 0 out of 5 stars0 ratingsManasellam Maya Rating: 5 out of 5 stars5/5Enakku Mattume Therintha Hema Rating: 0 out of 5 stars0 ratingsRajini Raajyam Rating: 0 out of 5 stars0 ratingsHydrogen Pookkal Rating: 5 out of 5 stars5/5Sivappu Iravu Rating: 0 out of 5 stars0 ratingsAndha Naal Andha Nimidam Andha Nodi Rating: 0 out of 5 stars0 ratingsEnakku Naane Pagaiyaanen and Maranam Sulabam Rating: 0 out of 5 stars0 ratingsSaththamillatha Nayaakara Rating: 0 out of 5 stars0 ratingsMiss Preethi 545 Beach Road Mumbai Rating: 0 out of 5 stars0 ratingsKaraikku Varatha Alaigal Rating: 0 out of 5 stars0 ratingsKuttrangal Kuraivathillai Rating: 5 out of 5 stars5/5November Nalliravu Narmatha Rating: 0 out of 5 stars0 ratingsVellai Roja Karuppu Poonai...! Rating: 0 out of 5 stars0 ratingsReadymade Sorkkam Rating: 5 out of 5 stars5/5Yarum Paarkkatha Vaanam Rating: 0 out of 5 stars0 ratingsYamunavin 48 mani neram Rating: 0 out of 5 stars0 ratingsOtrai Megam Rating: 0 out of 5 stars0 ratingsPiragu Naan Kondren Rating: 4 out of 5 stars4/5Udhaa Nizhal Rating: 0 out of 5 stars0 ratingsNirangal Rating: 3 out of 5 stars3/5
Related categories
Reviews for Thappattam
0 ratings0 reviews
Book preview
Thappattam - Rajeshkumar
ராஜேஷ்குமார்
நான் படித்த அர்த்தமுள்ள வரிகள்:
கடந்து போன நிமிடங்களை விலைக்கு வாங்கி
அனுபவிக்கும் அளவுக்கு
இந்த உலகில் யாரும்
பணக்காரன் கிடையாது.
1
அன்பரசி கம்ப்யூட்டர்க்கு முன்பாய் உட்கார்ந்து ‘வொண்டர்ஸ் ஆஃப் த ஆர்க்கியாலஜி ஆப்ஜெக்ட்ஸ்’ என்ற வெப்சைட்டை மேய்ந்து, முக்கிய குறிப்புகளை எடுத்து டயரியின் ஒரு பக்கத்தில் எழுதிக் கொண்டிருந்த போது அவளுக்குப் பக்கத்தில் இருந்த இண்ட்டர்காம் டெலிபோன் ஒரே முறை ஒலித்து விட்டு மௌனமானது.
ரிஸீவரை எடுத்து காதுக்கு ஒற்றினாள். மறுமுனையில் கன்சர்வேடிவ் டைரக்டர் பொய்யாமொழி பேசினார்.
என்னம்மா அன்பரசி! பிஸியா இருக்கியா?
இல்ல ஸார்...! நாளைக்கு ஒரு டி.வி.யில் என்னோட பேட்டி ரிக்கார்டிங். அதுக்குத் தேவையான விஷயங்களை வெப்சைட்டிலிருந்து கலெக்ட் பண்ணிட்டு இருக்கேன்.
தட்ஸ் குட்...! நீ அந்த வேலையைப் பாரும்மா. நாம ஈவினிங் மீட் பண்ணலாம்!
நோ ப்ராப்ளம் ஸார்... என்னோட வேலை முடிஞ்சுது. எனிதிங்க் இம்பார்ட்டண்ட் ஸார்?
ஒரு அஞ்சு நிமிஷம் என்னோட ரூமுக்கு வந்துட்டு போம்மா...!
இப்ப வர்றேன்... ஸார்...!
சொன்ன அன்பரசி கம்ப்யூட்டரை ஷட்டவுன் செய்துவிட்டு நாற்காலியினின்றும் தன்னை உருவிக் கொண்டு எழுந்தாள். நான்காவது மாடியில் இருந்த கன்சர்வேடிவ் ஆபீஸர் பொய்யாமொழியின் அறையை அவள் அடைந்தபோது செல்போனில் அவர் யாரிடமோ சற்று சத்தமான குரலில் பேசிக் கொண்டிருந்தார்.
பேப்பரில் வந்த செய்திதானே...? அந்த செய்தியில் கொஞ்சம்கூட உண்மையில்லை. பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த பஞ்ச உலோக சிலைகள் மற்றும் செம்பு, தாமிரப் பட்டயங்கள் கொள்ளையடிக்கப்பட்டு விட்டதாய் புரளி கிளப்பி விட்டிருக்காங்க. உண்மையில் என்ன நடந்ததுன்னா முகலாய மன்னர்கள் காலத்தில் புழக்கத்தில் இருந்த செப்பு நாணயங்கள் ரெண்டுதான் காணாமே போயிருக்கு. அது உண்மையிலேயே காணாமே போச்சா... இல்லை... போன மாசம் பொருள்களை மாத்தி வைக்கும் போது கவனக் குறைவால் ஏதாவது ஒரு பக்கம் வெச்சுட்டோமான்னு சரி பார்த்துட்டிருக்கும் வேலையும் இப்போ நடந்துட்டிருக்கு! நீங்க எந்தப் பத்திரிகைன்னு சொன்னீங்க?
.............
அனல் காற்றா...? ஒரு செய்தியை உண்மைன்னு தெரியாமே பப்ளிஷ் பண்ணாதீங்க... நேர்ல வாங்க... விபரமா சொல்றேன். இந்த அருங்காட்சியகத்திலிருந்து எந்த ஒரு பொருளும் திருட்டுப் போக ஒரு சதவீதம் கூட வாய்ப்பு இல்லை. ஏன்னா இந்த அருங்காட்சியகத்தின் முன்பக்க வாசலிலும், பின்பக்க வாசலிலும் 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கு. இந்த பாதுகாப்பையும் மீறி யாரும் உள்ளே போக முடியாது!
பேசி முடித்த பொய்யாமொழி செல்போனை அணைத்து மேஜையின் ஓரத்தில் வைத்து விட்டு அன்பரசியை ஒரு புன்னகையோடு பார்த்தார்.
உட்காரம்மா...!
அன்பரசி உட்கார்ந்து கொண்டே கேட்டாள்.
என்ன ஸார் பிரச்னை?
நம்ம அருங்காட்சியகத்திலிருந்து பஞ்ச உலோகங்கள் காணாமல் போனதாய் போன வாரம் ஒரு பத்திரிகையில் வந்த நியூஸ் இன்னமும் புகைஞ்சுட்டிருக்கு. ‘அது உண்மையில்லை... பொய்’ன்னு இனி எத்தனை பேர்க்குத்தான் சொல்ல வேண்டியிருக்குமோ தெரியலை...
அன்பரசி சிரித்தாள்.
ஸார்.. பத்திரிகைக்காரங்களுக்கு தினசரி இருக்கக்கூடிய ஒரே ஒரு கவலை என்ன தெரியுமா?
சொல்லும்மா...!
ஏதாவது ஒரு செய்தி போட்டு எட்டு பக்கங்களையும் நிரப்பியாகணும்...!
அதுக்கு நாமதானா கிடைச்சோம்...? சரி.. சரி... நான் எதுக்காக உன்னைக் கூப்பிட்டேனோ.. அந்த விஷயத்தைப் பேசிடுவோம்... நேத்து சாயந்தரமே உன்கிட்டே இதைப் பத்திப் பேசணும்னு நினைச்சேன்.
சொல்லுங்க... ஸார்... என்ன விஷயம்?
மொதல்ல இந்த லெட்டரைக் கொஞ்சம் பொறுமையாய் படிம்மா.
- சொன்ன பொய்யாமொழி மேஜையின் இழுப்பறையைத் திறந்து ஒரு கடிதத்தை எடுத்துக் கொடுத்தார்.
அன்பரசி ஒரு சின்ன திகைப்போடு அந்தக் கடிதத்தை வாங்கிப் படிக்க ஆரம்பித்தாள். பால் பாயிண்ட் பேனாவால் கோணல் மாணலாய் எழுதப்பட்ட தமிழ் எழுத்துக்கள்.
மதிப்புக்குரிய அருங்காட்சியக இயக்குநர்
அய்யா
பொய்யா மொழி அவர்களுக்கு,
வணக்கம்.
இந்தக் கடிதத்தை எழுதிக் கொண்டிருக்கும் நான் பள்ளி இறுதி வகுப்பு வரை மட்டுமே படித்தவன். நான் யார் என்பதோ, என்னுடைய பூர்வீகம் என்ன என்பதோ உங்களுக்குத் தெரிய வேண்டிய அளவுக்கு முக்கியத்துவம் இல்லாத ஒன்று. விஷயம் என்ன என்பதை மட்டும் சொல்லிவிடுகிறேன். தென்காசிக்குப் பக்கத்தில் உள்ள குற்றாலம் மலைப் பகுதியில் ‘நாத முழங்கம்’ என்கிற ஒரு மலைக்கிராமம் இருக்கிறது. அந்த கிராமம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டு இருக்கலாமென்று நினைக்கிறேன். அந்த கிராமம் முன்பொரு காலத்தில் ஒரு சமஸ்தான மன்னரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. அந்த மன்னரின் கடைசி வாரிசான ராஜசிம்மய்யா என்பவர் மட்டுமே இப்போது உயிரோடு இருக்கிறார். இவர் கல்யாணம் செய்து கொள்ளவில்லை. தீவிர கிருஷ்ண பக்தரான இவர் தான் வசிக்கும் பங்களாவுக்குள்ளேயே ஒரு அருங்காட்சியகத்தை வைத்து இருக்கிறார். அந்த அருங்காட்சியகத்துக்குள்ளே அவர் சேகரம் பண்ணி வெச்சிருக்கிற பொருள்கள் எல்லாமே மகாபாரத காலத்துடன் சம்பந்தப்பட்டவை. அதில் அதிமுக்கியமான - ஒரு அற்புதமான - உன்னதமான ஒரு பொருள் - பாலின் நிறம் போன்ற வெண்ணிற சங்கு. அந்த சங்கு, ஸ்ரீ கிருஷ்ணரின் கையில் இருந்த சங்குக்கு நிகரான ஒன்று என்று ராஜசிம்மய்யா பெருமையோடு சொல்லிக் கொண்டிருக்கிறார். அது ஆன்மீகம் சம்பந்தப்பட்ட ஒரு அபூர்வமான சங்கு என்பதால் அது நாட்டின் சொத்தாகக் கருதப்பட வேண்டும். அரசின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமாய் ஒரு இந்திய குடிமகன் என்கிற உரிமையோடு உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு
அதிகமாய் படிக்காவிட்டாலும்
விபரம்