Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Theepantham Edu! Theemaiyai Sudu
Theepantham Edu! Theemaiyai Sudu
Theepantham Edu! Theemaiyai Sudu
Ebook157 pages56 minutes

Theepantham Edu! Theemaiyai Sudu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Theepantham Edu! Theemaiyai Sudu

Read more from Rajeshkumar

Related to Theepantham Edu! Theemaiyai Sudu

Related ebooks

Related categories

Reviews for Theepantham Edu! Theemaiyai Sudu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Theepantham Edu! Theemaiyai Sudu - Rajeshkumar

    16

    1

    பத்திரிகைகள் பொதுவாக விபத்துக்கள், தவறான நடத்தைகள் போன்றவற்றை மட்டுமே எழுதக்கூடிய சாக்கடைகளாக மாறிவிட்டன. முன்பு காதரின் மேயோ என்ற ஆங்கிலேயப் பெண்மணி, நம் நாட்டில் நடக்கும் தவறுகளை எல்லாம் தொகுத்து ஒரு புத்தகமாக எழுதியிருந்தார். அவரை மகாத்மா காந்தி ‘சாக்கடையை சோதனை செய்பவர்’ என்று வர்ணித்தார். நம் நாட்டில் தவறான செய்திகளை மட்டுமல்ல - பொய்யான செய்திகளையும்கூட கூசாமல் வெளியிட்டு தலைக்குனிவை ஏற்படுத்துகின்றன பத்திரிகைகள்.

    - எஸ்.குருமூர்த்தி.

    "ராஜ கம்பீரம்...!"

    பஸ் வேகமாக போய்க் கொண்டிருக்க கண்டக்டர் குரல் கொடுத்தார். பஸ்ஸின் மையத்தில் உட்கார்ந்திருந்த அவன் எழுந்து நின்றான். இளைஞன். தாடி ட்ரிம் செய்யப்பட்ட முகம். பிடரி வழிய தலை முடி. முழுக்கை வெள்ளை சர்ட். வேஷ்டி. கையில் சின்னதாய் ஒரு லெதர் பை. தோளில் முரட்டு கதர் துணியிலான ஒரு ஜோல்னா பை.

    பஸ் அந்த மத்தியான நேரத்தில் புழுதி பறக்க ராஜ கம்பீரம் பஸ் ஸ்டாப்பில் நின்றது. கண்டக்டர் அந்த இளைஞனைப் பார்த்து கோபமாய்க் கத்தினார்.

    சீக்கிரம் வாய்யா.... என்னமோ சட்டசபையில் வெளிநடப்பு பண்ற மாதிரி மெதுவா எந்திரிச்சு வர்றே...?

    அவன் கண்டக்டரின் கத்தலைப் பொருட்படுத்தாமல் நடையின் வேகத்தை கொஞ்சமும் அதிகப்படுத்தாமல் அதே மெதுவான நடைபோட்டு கீழே இறங்கினான்.

    ராஜ கம்பீரம் கிராமம் லேசான மழைத்தூறலில் இருந்தது. பஸ் நிலையம் சேறாய் தெரிந்தது. பயணிகள் பஸ் ஷெல்டர்களில் ஒதுங்கி நின்றுகொண்டு பஸ்ஸுக்காக காத்திருந்தார்கள். அவன் பெய்கிற மழைத்தூறலைப் பொருட்படுத்தாமல் மெதுவாய் நடந்து பஸ் ஷெல்டர்க்குள் நுழைந்து பேப்பரைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு பயணியிடம் கேட்டான்.

    நாடி ஜோஸ்யம் பார்க்கிற ‘ஜலகண்டர்’ வீட்டுக்கு எந்தப் பக்கம் போகணும்...?

    பேப்பர் ஆசாமி பார்வையை உயர்த்தி அவனைப் பார்த்தார்.

    ஊருக்குப் புதுசா...?

    ஆமா...

    அதோ அங்கே ஒரு கோயில் தெரியுதே...! அதுக்குப் பக்கத்துல ஒரு மண்ரோடு போகும். அந்த ரோட்ல ரெண்டு கிலோ மீட்டர் தூரம் நடந்து போனா வயல்வெளிக்கு மத்தியில் ஒரு பெரிய வீடு தெரியும். அதுதான் நாடி ஜோஸ்யர் ஜலகண்டர் வீடு. என்ன... நாடி ஜோஸ்யம் பார்க்க வந்தீங்களா?

    ஆமா...

    எந்த ஊரு...?

    சேலம்...! நாடி ஜோஸியர் வீட்டுக்குப் போக வண்டி வசதி ஏதாவது கிடைக்குமா?

    குதிரை வண்டியில் போலாம்... பஸ் ஸ்டாண்ட் வெளியே போனீங்கன்னா... குதிரை வண்டி கிடைக்கும். ஜலகண்டர் வீட்டுக்குப் போக பத்து ரூபாய் கேட்பான். பேரம் பேசினால் அஞ்சு ரூபாய்க்கு வருவான்...

    பேப்பர் ஆசாமிக்கு நன்றி தெரிவித்துவிட்டு அவன் மழையில் நனைந்து கொண்டே பஸ் ஸ்டாண்ட்டுக்கு வெளியே வந்தான். ஒரே ஒரு குதிரை வண்டி மட்டும் நின்றிருக்க, வண்டிக்காரனிடம் பேசினான்.

    நாடி ஜோசியர் ஜலகண்டர் வீட்டுக்குப் போகணும்.

    பதினஞ்சு ரூபாய் ஆகும்...

    பேரம் பேசாமல் ஏறிக் கொண்டான் அவன். வண்டிக்காரன் லாட்டரியில் ஒரு கோடி ரூபாய் பரிசு பெற்றவனைப்போல் வண்டியின் முன்பக்கம் தாவி ஏறி உட்கார்ந்தான். குதிரையை சாட்டையால் சொடுக்க, அது நடந்தது. சிறிது நேரத்திலேயே மழை நின்று போய் வெய்யில் அடித்தது.

    என்ன ஸார்... நாடி ஜோஸ்யம் பார்க்கவா?

    ம்...

    எந்த ஊரு...?

    சேலம்... சொன்ன அவன் கேட்டான்.

    இந்த ஊர்ல எத்தனை நாடி ஜோஸ்யர்கள் இருக்காங்க...?

    நிறைய பேர் இருக்காங்க ஸார்... திருப்பூர்ல பனியன் ஃபேக்டரி மாதிரி இங்கே நாடி ஜோஸ்யம்.

    நாடி ஜோஸ்யம் உண்மையா பொய்யா...?

    என்ன ஸார்... இப்படி ஒரு கேள்வியைக் கேட்டுட்டீங்க... உண்மை ஸார்... பக்கா உண்மை ஸார்...

    நீ பார்த்திருக்கியா...?

    பார்த்திருக்கேன் ஸார்... திருமேற்றினிவீதியில் மெய்கண்டநாத ஸ்வாமிகள்ன்னு ஒரு நாடி ஜோஸ்யர் இருந்தார். அவர்கிட்டே நூறு ரூபாய் கொடுத்து ஒரு காண்டம் பார்த்தேன். அப்ப நான் ஒரு காட்டன் மில்லுல வேலைக்குப் போய்ட்டிருந்தேன். மில்லு நல்லா ஓடிட்டிருந்தது. கைநிறைய சம்பளம். ஏடு எடுத்து ஸ்வாமிகள் படிச்சாரு... என்னான்னு படிச்சாரு தெரியுமா ஸார்?

    சொல்லு...

    அப்ப நான் என்ன வேலை பார்த்துட்டிருந்தாலும் அது நிரந்தரம் இல்லையாம். ஒரு வருஷத்துக்குள்ளே தொழில் மாறுமாம். ஒரு நாலுகால் பிராணியின் உழைப்பில்தான் நான் மூணு வேளையும் சாப்பிடணுமாம்.

    அடடே...! அவர் சொன்ன மாதிரியே நடந்ததா...?

    வார்த்தை பிசகாமே நடந்தது ஸார். சரியா ஒரு வருஷம்...! நல்லா ஓடிட்டிருந்த மில், பார்ட்னர்ஸ் தகராறாலே லாக்-அவுட் ஆச்சு... வேலை போச்சு... வேற வேலைக்கு போக எவ்வளவோ முயற்சி பண்ணினேன். வேலை கிடைக்கலை ஸார். குதிரை வண்டி ஓட்டிகிட்டு இருந்த என்னோட சிநேகிதன் ஒருத்தன் திடீர்ன்னு இறந்துபோனதால அவனோட வண்டியை விலைக்கு வாங்கி ஓட்ட ஆரம்பிச்சேன். ஆரம்பத்துல கொஞ்சம் வெட்கமாகவும் கஷ்டமாகவும் இருந்தது. போகப் போக பழகிடுச்சு... நாடி ஜோஸ்யத்துல சொன்னபடி இப்ப இந்த நாலுகால் பிராணிதான் என்னோட வயித்தை மூணுவேளையும் காயாமே பார்த்துக்குது...

    உனக்கு நாடி ஜோஸ்யம் பார்த்தவரோட பேர் என்னான்னு சொன்னே...?

    மெய்கண்டநாத ஸ்வாமிகள்.

    அவர்கிட்டயே என்னைக் கூட்டிட்டு போயேன்...! உனக்கு கரெக்டா சொன்னவர் எனக்கும் கரெக்டா சொல்லுவார் இல்லையா...?

    இப்ப... அவர் உயிரோடு இல்லையே ஸார். ரெண்டு வருஷத்துக்கு முந்தி ஹார்ட் அட்டாக்ல போய்ட்டார். தன்னோட மரணத்தைப் பத்தி எப்போ எந்த தேதியில் எத்தனை மணிக்குங்கிறதை முன்னமேயே டயரியில் குறிச்சு வெச்சிருந்தாராம் ஸார்...

    நாடி ஜோஸ்யத்துல ஜலகண்டர் எப்படி...?

    "இன்னிக்கு அவரை மிஞ்ச ஆள் கிடையாது ஸார். தேர்தல்

    Enjoying the preview?
    Page 1 of 1