Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vivek, Vishnu, Oru Vidukathai!
Vivek, Vishnu, Oru Vidukathai!
Vivek, Vishnu, Oru Vidukathai!
Ebook151 pages57 minutes

Vivek, Vishnu, Oru Vidukathai!

Rating: 3 out of 5 stars

3/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Vivek, Vishnu, Oru Vidukathai!

Read more from Rajeshkumar

Related to Vivek, Vishnu, Oru Vidukathai!

Related ebooks

Related categories

Reviews for Vivek, Vishnu, Oru Vidukathai!

Rating: 3.1666666666666665 out of 5 stars
3/5

6 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vivek, Vishnu, Oru Vidukathai! - Rajeshkumar

    22

    விஷ்ணுவின் கேள்வி: பாஸ்! ‘ககுயா’ன்னா... என்ன?"

    விவேக்கின் பதில்: அது ஜப்பான் அனுப்பிய ஒரு விண்கலத்தின் பெயர். சந்திரனின் மேற்பரப்பு, ஈர்ப்பு சக்தி உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்யும் விதத்தில் 3 டன் எடை கொண்ட இந்த ககுயா விண்கலத்தை ஒரு ராக்கெட் சுமந்து சென்றது.

    1

    விவேக்கும் விஷ்ணுவும் வேப்பேரியில் இருந்த ஃபாரன்ஸிக் லாபரட்ரிக்குப் போய் ஒரு கேஸ் சம்பந்தப்பட்ட முக்கியமான ரிப்போர்ட்டை சேகரித்துக் கொண்டு மரத்தடியில் நின்றிருந்த கார்க்குத் திரும்பினார்கள்.

    பாஸ்...

    ம்...

    இந்த விமலா கேஸ் கோர்ட்ல நிக்குமா...?

    ஏன் நிக்காது...? தன்னோட புருஷன் சின்ன வீடு வெச்சிருக்கான்னு தெரிஞ்சதுமே கைக்கு கிடைச்ச அரிவாளை எடுத்து விமலா புருஷன் மீது வீசியிருக்கா...! அரிவாள் போய் துல்லியமாய் கழுத்தைப் பதம் பார்க்க, மொத்த ரத்தத்தையும் கொட்டி ஆள் அவுட்...! இது திட்டமிட்ட கொலை இல்லைதான்... இருந்தாலும் கொலை கொலை தான். கோர்ட் மன்னிக்காது. நிச்சயம் தண்டனை உண்டு...!

    பாஸ்...! இது அநியாயம்

    நீ எதைச் சொல்றே...? விமலாவுக்கு தண்டனை தர்றது அநியாயமா?

    அது இல்லை பாஸ்...

    பின்னே...?

    இந்த கேஸ்ல ஆண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கு பாஸ்!

    அநீதியா...?

    ம்...

    என்ன அநீதி...?

    பாஸ்! பெண்களுக்கு மட்டும் பிறந்த வீடு, புகுந்த வீடுன்னு ரெண்டு வீடு இருக்கலாம். ஆண்களுக்கு பெரிய வீடு, சின்ன வீடுன்னு இருக்கக்கூடாதா...?

    டேய்ய்...!

    ஸாரி... பாஸ்... ஒரு சின்ன ஆதங்கம்... அவ்வளவுதான்...! இதுக்காக நான் போராட்டமெல்லாம் நடத்த மாட்டேன்... கவர்னரோட அப்பாய்ண்ட்மெண்ட் கிடைச்சா ஒரு மகஜர் கொடுக்கலாம்ன்னு இருக்கேன்...! கவர்னர்கிட்டே அப்பாயிண்ட்மெண்ட் வாங்கணும்ன்னா யாரை காண்டாக்ட் பண்ணணும் பாஸ்...? விஷ்ணு சீரியஸாய் கேட்டுக் கொண்டு இருக்கும்போது விவேக்கின் செல்போன் ரிங்டோனை வெளியிட்டது. விவேக் எடுத்து அழைப்பது யார் என்று பார்த்தான். செல்லின் டிஸ்ப்ளேயில் ஐ.ஜி. சொர்ணலிங்கம். செல்போனை காதுக்குப் பொருத்தி குட்மார்னிங் ஸார்... என்றான்.

    விவேக்! இப்போ நீங்க எங்கே இருக்கீங்க...?

    ஸார்... ஒரு கேஸ் விஷயமாய் வேப்பேரி ஃபாரன்ஸிக்கிற்குப் போய் ரிப்போர்ட்டை கலெக்ட் பண்ணிட்டு ஆபீஸ் புறப்பட்டுப் போயிட்டிருக்கேன். எனி திங்க் இம்பார்ட்டன்ட் ஸார்?

    எஸ்...! நீங்க உடனடியாய் வந்து என்னைப் பாருங்க.

    வந்துட்டேயிருக்கேன் ஸார்...

    ப்ளீஸ்...

    - விவேக் செல்போனை அணைத்து பாக்கெட்டுக்குள் போட்டுக்கொள்ள, விஷ்ணு கேட்டான். யார் பாஸ்...?

    ஐ.ஜி...

    ஏதோ ஒரு கேஸை உப்பு மூட்டை தூக்கப் போறோம்ன்னு நினைக்கறேன்.

    நான் அப்படி நினைக்கலை...

    பின்னே தயிர்வடையும் காப்பியும் சாப்பிடவா கூப்பிடுவார்! என்ன பாஸ்... நீங்க...? எத்தனை வருஷ சர்வீஸ் உங்களுக்கும் எனக்கும்! போய்ப் பார்த்தாதான் தெரியும்... வாங்க... போலாம்... பாஸ்

    விவேக்கும் விஷ்ணுவும் ஐ.ஜி. ஆபிஸ் போய் சேர்ந்தபோது ஐ.ஜி. சொர்ணலிங்கத்துக்கு எதிரில் ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி கலங்கிப் போன கண்களோடு உட்கார்ந்திருந்தாள். சொர்ணலிங்கம் விவேக்கையும் விஷ்ணுவையும் கை கொடுத்து வரவேற்று, எதிரிலிருந்த நாற்காலிகளைக் காட்டினார். உட்கார்ந்தார்கள் இருவரும். ஐ.ஜி. கேட்டார்.

    மிஸ்டர் விவேக்...! இவங்க யார்ன்னு உங்களுக்குத் தெரியுதா?

    விவேக் அந்தப் பெண்மணியைப் பார்த்துவிட்டு தலையை ஆட்டினான். ஸாரி... ஸார்... தெரியலை...

    இவங்க மிஸஸ் கஸ்தூரி. டி.ஐ.ஜி பால்ராஜின் மனைவி...!

    ஓ...! இப்ப ஞாபகம் வருது ஸார். போலீஸ் சம்பந்தப்பட்ட ஒரு விழாவில் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி பார்த்து இருக்கேன். வணக்கம்மா...!

    கஸ்தூரியும் சோர்வான குரலில் வணக்கம் சொல்லிவிட்டு கண்ணீரோடு தலையைக் குனிந்து கொள்ள, ஐ.ஜி சொர்ணலிங்கம் சில விநாடிகள் கழித்து மெல்லப் பேச்சை ஆரம்பித்தார்.

    மிஸ்டர் விவேக்! இவங்களுக்கு ஒரு பிரச்னை...

    என்ன ஸார்...?

    இதைக் கொஞ்சம் பாருங்க...! சொன்னவர் தன் கையில் வைத்து இருந்த சாணி நிறத் தாள் ஒன்றை நீட்டினார். விவேக் அதை வாங்கிப் பார்த்தான்.

    அது ஒரு போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்.

    ஸ... ஸார்... இது... யாரோடது...?

    ரிப்போர்ட்ல யார் பேரு போட்டிருக்குன்னு பாருங்க...

    பார்த்தான். திகைத்தான்.

    என்ன ஸார் இது... டி.ஐ.ஜி. பால்ராஜோட பேர் போட்டிருக்கு...! அவர்க்கு என்ன... ஏதாவது ஆக்ஸிடெண்ட்டா...?

    அப்படி ஏதாவது ஆக்ஸிடெண்ட்டாகியிருந்தால் உங்களுக்குத் தகவல் வந்து இருக்குமே...?

    பின்னே எப்படி ஸார்... இது...? பால்ராஜ் உயிரோடு இருக்காரா... இல்லையா...?

    உயிரோடுதான் இருக்கார். ரெண்டு நிமிஷத்துக்கு முன்னாடி கூட செங்கல்பட்டில் இருக்கிற அவரோடு செல்போனில் பேசினேன். செங்கல்பட்டில் ஃப்ரண்ட் ஒருத்தர் ஜவுளிக்கடை திறக்கிறார். அந்த ஃபங்க்ஷனுக்காக போயிருக்கார்.

    அப்படீன்னா... இந்த போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்?

    இன்னிக்குக் காலையில் தபாலில் வந்து இருக்கு... தபாலைப் பிரிச்சுப் பார்த்த மிஸங் கஸ்தூரி பதறிப்போய் மொதல்ல எனக்கு போன் பண்ணினாங்க. நான் விஷயத்தைக் கேள்விப்பட்டதும் உடனே செல்போனில் செங்கல்பட்டில் இருக்கிற பால்ராஜைத் தொடர்பு கொண்டு பேசினேன்.

    நீங்க இந்த போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டைப் பத்தி மிஸ்டர் பால்ராஜ் கிட்டே சொன்னீங்களா ஸார்...?

    சொல்லலை... ஆனா ‘உங்களுக்கு கொலை மிரட்டல் வந்து இருக்கு... கொஞ்சம் எச்சரிக்கையாய் இருங்க’ன்னு சொன்னேன். அவர் அதைப் பொருட்படுத்தலை. ‘கடந்த ஒரு வருஷ காலத்துல எனக்கு எத்தனையோ கொலை மிரட்டல்கள் - மொட்டைக் கடிதங்கள் மூலமா வந்தாச்சு... ஒரு போலீஸ் அதிகாரி சமூகவிரோதிகளிடம் ஸ்டிரிக்டாய் இருந்தாலே இப்படிப்பட்ட மிரட்டல்களை சந்திக்க வேண்டியிருக்கும்’ன்னு சொல்லிட்டார்.

    விவேக்கிடம் திரும்பிய கஸ்தூரி இப்போது அழுகையோடு

    Enjoying the preview?
    Page 1 of 1