Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Yarum Paarkkatha Vaanam
Yarum Paarkkatha Vaanam
Yarum Paarkkatha Vaanam
Ebook154 pages38 minutes

Yarum Paarkkatha Vaanam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Yarum Paarkkatha Vaanam

Read more from Rajeshkumar

Related to Yarum Paarkkatha Vaanam

Related ebooks

Related categories

Reviews for Yarum Paarkkatha Vaanam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Yarum Paarkkatha Vaanam - Rajeshkumar

    17

    1

    இன்றைக்கு பரபரப்பாய் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் பல விஷயங்களில் ஒன்று கச்சத்தீவு. கடல் கொந்தளிப்பு, புயல் போன்ற இயற்கை சீற்றங்களோடு இப்போது கச்சத்தீவு கூட்டணி வைத்துக் கொண்டு தமிழக மீனவர்களை பாடாய் படுத்தி வருகிறது. எங்கே இருக்கிறது இந்த கச்சத்தீவு?

    இதோ பதில்: இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் 21 சின்னஞ்சிறு தீவுகள் உள்ளன. இந்தக் குட்டித் தீவுகளில் ஒன்று தான் வளம் கொழிக்கும் கச்சத்தீவு. இது ராமேஸ்வரத்தில் இருந்து 12 மைல் தூரத்தில் உள்ளது. இந்தத் தீவுக்கு மட்டும் ஏன் இவ்வளவு மதிப்பு....? இரண்டாவது அத்தியாயத்தின் ஆரம்பத்தில் பார்க்கலாம்.

    காலை நேர அலுவலகம்.

    கம்ப்யூட்டர்க்கு முன்பாய் உட்கார்ந்திருந்த நேத்ரா தன் ப்ராஜக்ட் சம்பந்தப்பட்ட வேலைகளை முடித்துவிட்டு தன் கையில் இருந்த அந்த கவிதைப் புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தாள்.

    எல்லாமே குட்டி குட்டிக் கவிதைகள். ஒவ்வொரு கவிதையும் பெப்பர்மிண்ட் மிட்டாயாய் இனித்தது.

    இதோ ஒரு சாம்பிள்:

    கட்டி அணைத்தது போதும்!

    விலகி விடுங்கள்.

    விடிந்து விட்டது,

    என்

    செல்ல இமைகளே!

    மேடம்....! ப்யூன் வேலுச்சாமியின் குரல் கேட்டு புத்தகத்திலிருந்து நேத்ரா நிமிர்ந்தாள்.

    என்ன வேலுச்சாமி....?

    உங்களைப் பார்க்கிறதுக்காக ஒருத்தர் வந்து இருக்கார். பேரு உசிலம்பட்டி மாயாண்டின்னு சொன்னார்.

    என்னது... உசிலம்பட்டி மாயாண்டியா...?

    ஆமா... மேடம்...

    அந்த பேர்ல எனக்கு யாரையும் தெரியாதே....? தன் இடது கையின் ஆட்காட்டி விரலால் நெற்றிப் பொட்டைத் தேய்த்தாள் நேத்ரா.

    பேர்தாம்மா... கேட்கிறதுக்கு ஒரு மாதிரியிருக்கு. ஆள் பார்க்கிறதுக்கு டீசண்டாய்த்தான் இருக்கார்.

    நல்லா கேட்டியா....? என்னைத்தான் பார்க்கணும்ன்னு சொன்னாரா...?

    ஆமாங்கம்மா....! நேத்ரான்னு உங்க பேரைத்தான் சொன்னார்.

    நேத்ரா எழுந்தாள். யார்ன்னு தெரியலையே... போய்ப் பார்க்கலாம்.

    பக்கத்து மேஜையில் கம்ப்யூட்டர்க்கு முன்பாய் உட்கார்ந்திருந்த ரேவதி சிரித்தாள்.

    உசிலம்பட்டி மாயாண்டியா....? ஏதோ தமிழ் பட தலைப்பு மாதிரி இருக்கு.....? பார்த்து நேத்ரா.... முதுகுல மூணடி நீளத்துக்கு அரிவாள் வெச்சிருக்கப் போறான். எதுக்கும் ப்யூன் வேலுச்சாமியை பக்கத்துல வெச்சுகிட்டே பேசு.....!

    ஆமாம்மா..... நானும் உங்க கூட வர்றேன்....!

    நேத்ரா கண்ணாடிக் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள். நீளமான வராந்தாவில் நடந்து ரிசப்ஷனுக்கு வந்தாள். சோபாவில் உட்கார்ந்து பேப்பரைப் புரட்டிக் கொண்டிருந்த அந்த இளைஞனைப் பார்த்ததும் லேசாய் முகம் மாறினாள்.

    வேலுச்சாமி!

    அம்மா....

    நீ போய் உன்னோட வேலையைப் பாரு..... நான் அவர்கிட்ட பேசிக்கறேன்....

    உங்களுக்கு இவர் தெரிந்தவராம்மா...?

    ஆமா.....

    அப்படீன்னா சரிம்மா.....! வேலுச்சாமி போய்விட நேத்ரா அந்த இளைஞனுக்கு முன்பாய் நின்றாள். தன் மார்புக்கு குறுக்காக கைகளைக் கட்டிக் கொண்டபடி கேட்டாள்.

    மாயாண்டி! உசிலம்பட்டியிலிருந்து எப்ப வந்தே?

    நேத்து சாயந்தரம்...

    ஊர்ல மழையெல்லாம் எப்படி?

    செம மழை.....

    ஊர்ல அரச மரம், ஆட்டுக்குட்டி, கோழிக்குஞ்சு, எல்லாரும் சௌக்யமா?

    பரம சௌக்யம்..... அவன் சிரிப்போடு தலையாட்டிக் கொண்டு இருக்கும் போதே நேத்ரா குரலைத் தாழ்த்தினாள்.

    பிரேம்! இப்ப எதுக்காக இங்கே வந்தே...? இங்கேயெல்லாம் வரக்கூடாதுன்னு நான் சொல்லியிருக்கேனா இல்லையா?

    ஸாரி... நேத்ரா.... ரொம்பவும் அவசரமான விஷயம். உன்னோட செல்லுக்கு ட்ரை பண்ணினேன். நீ ஸ்விட்ச் ஆஃப் பண்ணியிருந்தே. உன்னை சந்திக்கணும்ன்னா சாயந்திரம் ஆறு மணி வரைக்கும் வெயிட் பண்ணனும். அதான் நேர்ல பார்த்துட்டு போலாம்ன்னு வந்தேன். ஸாரி.... எனக்கு வேற வழி தெரியலை....

    பிரேம்...! இந்த கம்பெனியின் எம்.டி.க்கு காதல்ன்னா அறவே பிடிக்காது. இங்கே வேலை பார்க்கிற எந்த பொண்ணுக்காவது காதல் விவகாரம் இருக்குனு கன்ஃபர்மா தெரிஞ்சா நேரிடையா டிஸ்மிஸ் ஆர்டர்தான். சஸ்பெண்ட் ஆர்டர் கூட கிடையாது. மனசுக்குள்ளே காதல் இருந்தா வேலையை சரியா செய்ய முடியாதுங்கிறது அவரோட வாதம். நீ என்னைப் பார்க்க வந்து இருக்கிற விஷயம் இந்நேரம் என்னோட டீம் லீடர் காதுக்குப் போயிருக்கும். அவர் சாயந்தரத்துக் குள்ளே என்னைக் கூப்பிட்டு என்கொய்ரி பண்ணுவார். இதெல்லாம் தேவையா....?

    அப்படி எதுவும் உன் பேர்ல சந்தேகம் வந்துடக்கூடாதுன்னுதான் என்னோட பேரை உசிலம்பட்டி மாயாண்டின்னு சொன்னேன்.

    சரி... வந்தது... வந்துட்டே....! இனிமே அதைப்பத்திப் பேசி என்ன பிரயோஜனம்..? என்ன விஷயம் சொல்லு...!

    நான் இன்னிக்கு மத்தியான ஃப்ளைட்டில் கொச்சி போறேன்...

    கொச்சியா... எதுக்கு....?

    இந்த லெட்டரைப்படி... புரியும்.... சொன்ன பிரேம் தன் சர்ட் பார்க்கெட்டில் இருந்த ஒரு கடிதக் கவரை எடுத்துக் கொடுத்தான். நேத்ரா குழப்பத்தோடு வாங்கி பிரித்தாள்.

    தமிழ்நாடு டூரிஸம் அண்ட் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷனிலிருந்து அந்தக் கடிதம் வந்து இருந்தது. கடிதம் முழுக்க கம்ப்யூட்டர் எழுத்துக்கள்.

    அன்புள்ள பிரேம் அவர்களுக்கு,

    வணக்கம். எங்களுடைய சுற்றுலாத்துறை நிர்வாகம் உங்களை ஒரு சிறப்பு அழைப்பாளராக தேர்வு செய்து இந்தக் கடிதத்தை உங்களுக்கு அனுப்புவதில் மகிழ்ச்சி கொள்கிறது. நீங்கள் உதவி ஆசிரியராக பணியாற்றும் ‘இதயத் துடிப்பு’ பத்திரிகை மக்கள் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வெற்றிகரமாய் செயல்பட்டு வருவது பெருமைக்குரிய விஷயம். சுற்றுலாத் தலங்கள் என்றால் பெரும்பான்மையான மக்களுக்கு ஊட்டி, கொடைக்கானல், குற்றாலம் போன்ற ஊர்கள்தான் நினைவுக்கு வருகின்றன. வருடா வருடம் திரும்பத் திரும்ப அதே ஊர்களுக்கு ஏதோ ஒரு கடமைக்காக போய்விட்டு வருகிறார்கள். இந்த செக்குமாட்டுத்தனத்தை மக்களிடமிருந்து அகற்றி அவர்களுக்குப் புதிய சுற்றுலாத் தலங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு டூரிஸம் மற்றும் கேரளா டூரிஸம் இணைந்து ஒரு திட்டத்தை செயல்படுத்த உள்ளது. அதன்படி தமிழ்நாட்டு மக்களுக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1