Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Anu Oru Aacharyam!
Anu Oru Aacharyam!
Anu Oru Aacharyam!
Ebook148 pages53 minutes

Anu Oru Aacharyam!

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Anu Oru Aacharyam!

Read more from Rajeshkumar

Related to Anu Oru Aacharyam!

Related ebooks

Related categories

Reviews for Anu Oru Aacharyam!

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Anu Oru Aacharyam! - Rajeshkumar

    15

    1

    பாதை விலகிய ஓர் எரிநட்சத்திரம் (வால்) மற்ற ஈர்ப்பு சக்தியால் ஒரு சமயம் சூரியனுக்கு அருகில் போனபோது சூரியனின் புறப்பகுதி அலை அலையாக மலை போல மேல்நோக்கி எழும்பியது. அந்த சமயம், சூரியனுக்கு அருகே வந்துபோன அந்த வால் நட்சத்திர ஈர்ப்பு சக்தியால் அலையாக மலை போல எழும்பிய நெருப்பு மலை வெடித்துச் சிதறி அண்டமே அதிர அவை தொடர்ந்து ஒன்றன் பின் ஒன்றாக இழுத்துச் செல்லப்பட்டன. அதனதற்கு உள்ள இழுப்பு சக்தியின் குறைவுகளில், அண்ட வெளியிலேயே அவைகளும் உருண்டு திரண்டு மிகப் பெரிதாக, வாயு அழுத்தம் குறைந்த கோள்களாக, சூரியனின் இழுப்பு சக்திக்குட்பட்டு; அந்தச் சூரியனையே மையமாக வைத்து, தங்களைத் தாங்களே சுழற்றி சுற்ற ஆரம்பித்தன. இந்த உண்மையை கி.பி.140-இல் எகிப்திய மேதை கிளாடியஸ் டாலமி என்பவரும் அவர் வழியில் நிகோலஸ் கோபர்னி என்பவரும் உறுதிப்படுத்தினர். அப்படிப் பெயர் பெற்ற கிரகங்களே புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், ப்ளூட்டோ ஆகியனவாகும்.

    அனுலேகாவின் இதயப் பரப்பு பூராவும் அரபிக் கடலாய் இரைச்சல்.

    ‘காதல் கைதிகள்’ சினிமாவின் வெள்ளி விழா ஷீல்டுக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த அழகான ஸ்விஸ் க்ளாக்கில் முட்கள் நொண்டுவதை அடிக்கடி பார்த்தாள்.

    அனுலேகா தமிழகத்தின் சூப்பர் ஸ்டாரிணி என்பதைப் போன பாராவில் ஊகித்திருப்பீர்கள்.

    டெலிபோன் வீறிடத் துவங்க-

    எழுந்து சென்று ரிசீவரை எடுத்தாள்.

    ஹலோ...

    ஈஸ் இட் எய்ட் டபுள் டூ ஒன் ஃபைவ் த்ரீ சிக்ஸ்...?

    ஒரு விநாடி நிதானித்தாள் அனுலேகா.

    இந்தக் குரல் பரிச்சயமான குரல்.

    கிசுகிசுக்களுக்குப் பெயர் போன ஒரு பத்திரிகையின் நிருபருக்குச் சொந்தமான குரல்.

    சட்டென தன் குரலை சற்றே கடினமாய் மாற்றிக் கொண்டாள்.

    தமிழ்ல பேசுங்க... இங்கிலீஷ் எனக்குப் புரியாது...

    நடிகை அனுலேகாவோட வீடுதானே...?

    ஆமாங்க...

    அவங்க இல்லையா...?

    வெளியே போயிருக்காங்க...

    நீங்க யாரு பேசறது...?

    நான் வீட்டு வேலைக்காரிங்க...

    கோர்ட்டுக்குத் தானே போயிருக்காங்க...?

    ஷூட்டிங் போயிருக்காங்க...

    இல்லேம்மா... இன்னிக்கு அவங்க கேஸ் கோர்ட்டுக்கு வருது... அங்கே தானே அவங்க போயிருக்கணும்...?

    அதெல்லாம் எனக்குத் தெரியாதுங்க... அம்மா ஷூட்டிங் போயிருக்காங்க...

    யாராவது ஃபோன் பண்ணினா அப்படிச் சொல்லச் சொன்னாங்களா...? நான் அவங்களுக்கு ரொம்ப வேண்டியவன்ம்மா... வக்கீல் ஆபீசிலிருந்து பேசறேன்... ஒரு முக்கியமான விஷயத்தை அவங்க கிட்டே சொல்லணும்... என்கிட்டே நீ மறைக்காமப் பேசலாம்...

    வீட்ல யாரும் இல்லைங்க... நீங்க அப்புறமா ஃபோன் பண்ணுங்க... சொல்லிவிட்டு எரிச்சலோடு ரிசீவரைச் சாத்தினாள்.

    இனி ஒவ்வொரு பத்திரிகையிலிருந்தும் குடைய ஆரம்பிப்பார்கள். தற்காலிகமாய் டெலிபோன் தொல்லையைத் தவிர்க்கும் உத்தேசத்தோடு ரிசீவரை எடுத்துத் தனியே வைத்தாள்.

    கப்போர்டில் வைத்திருந்த நீள் செவ்வக செல்போனைக் கையிலெடுத்து அதன் பொத்தான்களை நெயில் பாலீஷ் மின்னும் விரலால் அமுக்கினாள்.

    சிறிய இடைவெளிக்குப் பின் ரிங் போனது.

    ஹலோ...என்றது ஆண் குரல்.

    பார்த்தசாரதியா...? நான் அனுலேகா பேசறேன்...

    சொல்லுங்க மேடம்...

    நீ கோர்ட்டில் தானே இருக்கே...?

    எஸ் மேடம்...

    எத்தனை மணிக்கு ஜட்ஜ் வர்றார்...?

    சரியா பத்தரை மணிக்கு கோர்ட் ஹாலுக்குள் வந்துடுவார் மேடம்... நீங்க இன்னும் பத்து நிமிஷம் கழிச்சு கிளம்பி வந்தீங்கன்னா சரியா இருக்கும்...

    கோர்ட்ல கூட்டமா இருக்கா...?

    எப்படியோ நியூஸ் லீக் ஆயிருக்கு... பொதுஜனங்க கூட்டமே நிறைய இருக்கு...

    நான் கார்ல வந்திறங்கி கோர்ட்டுக்குள்ளே போறதுக்கு இடைஞ்சல் இல்லாம பார்த்துக்கோ பார்த்தசாரதி...

    இன்ஸ்பெக்டர் தாமோதரன் கிட்டே சொன்னேன்... அவர் நாலைஞ்சு கான்ஸ்டபிள்சை அனுப்பி வெச்சிருக்கார்... கூட்டத்தைக் கண்ட்ரோல் பண்ணறதுக்கு அவங்க போதும்.

    பத்திரிகைக்காரங்க...?

    அவங்களும் நிறைய பேர் இருக்காங்க...

    ‘விழிகள்’ பத்திரிகை நிருபர் ஃபோன் பண்ணி குடைஞ்சார்... நான் ஸர்வன்ட் மாதிரி பேசிட்டு ஃபோனை வெச்சிட்டேன். எல்லாருமே விஷயத்தைத் தெரிஞ்சுக்கறதில் கீனா இருக்காங்க... பத்திரிகைக்காரங்க கிட்டே மனம் விட்டுப் பேசறதைப் பத்தி ஒண்ணுமில்லை... ஆனா பின்னாடி கோர்ட் தீர்ப்பு நமக்குச் சாதகமா இல்லாம போயிடுச்சுன்னா என்ன பண்றது? அதனாலதான் தீர்ப்பு வர்ற வரைக்கும் சைலன்ட்டா இருந்துக்கலாம்னு முடிவு பண்ணினேன்... ஆனா ஆரம்பத்திலிருந்தே அரசல் புரசலா நியூஸ் லீக் ஆயிட்டே இருந்திருக்கு...

    பனிரெண்டு மணிக்குள்ளே தீர்ப்பு தெரிஞ்சிடும் மேடம்...

    நமக்குச் சாதகமா இருக்குமா பார்த்தசாரதி...?

    அவன் மவுனித்து பேசாமல் இருக்க-

    அனுலேகா புன்னகைத்தாள்.

    சாதகம் எது, பாதகம் எதுன்னு உன்னால தீர்மானம் பண்ண முடியலையா...?

    இல்லை மேடம்...

    சரி, லைனைக் கட் பண்றேன்... கொஞ்ச நேரத்தில் அங்கே வர்றேன்...

    ஃபோனை அணைத்தாள் அனுலேகா. தன்னுடைய அறையை விட்டு வெளியே வந்தாள்.

    கேரட் நிறத்தில் கார்ப்பெட் விரித்த மாடிப்படிகள் ஆங்கில எழுத்து ‘எஸ்’ஸை எழுதிப் பார்த்தபடி தரையைத் தொட்டன.

    படிகளில் சரிந்தாள். போர்ட்டிகோவில் முயல்குட்டி மாதிரி மாருதி ஆம்னி நின்றிருக்க, அதன் டிரைவிங் இருக்கையில் பொதிந்தாள்.

    குளிர் கண்ணாடிகளை முழுவதுமாய் ஏற்றி விட்டுக் கொண்டபின் இக்னீஷியனை உசுப்பினாள். கார் பங்களாவைப் புறக்கணித்து விட்டு சாலைப் போக்குவரத்தில் கலந்தது. பதினைந்து நிமிடப் பயணம்.

    செங்காவி நிற உடம்புடன் இருந்த கோர்ட்

    Enjoying the preview?
    Page 1 of 1