Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Arupathainthavathu kalai!
Arupathainthavathu kalai!
Arupathainthavathu kalai!
Ebook122 pages39 minutes

Arupathainthavathu kalai!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Arupathainthavathu kalai!

Read more from Rajeshkumar

Related to Arupathainthavathu kalai!

Related ebooks

Related categories

Reviews for Arupathainthavathu kalai!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Arupathainthavathu kalai! - Rajeshkumar

    18

    1

    ஒரு ஜூன் மாத ராத்திரியின் 10.05.

    ஆர்.எஸ்.புரத்தின் பிரதான வீதிகளில் சோடியம் வேபர் விளக்குகள் அநியாயத்துக்கு எரிந்து கொண்டிருக்க, அதன் கிளை வீதிகளில் இருட்டு சோம்பலாய் உட்கார்ந்து கால் நீட்டியிருந்தது.

    திவான் பகதூர் ரோடின் மூன்றாவது குறுக்கில் பிரியும் தெருவை அடையாளம் வைத்துக் கொண்டு அந்த வயலட் நிற ஃபியட் கார் திரும்பியது. ரோடின் மேடு பள்ளங்களில் சாவதானமாய் நீந்தி, தெரு முடியும் இடத்தில், சில்வர் பிரீக் மரத்துக்குக் கீழே மௌனமானது. காரின் நான்கு பக்கக் கண்ணாடிகளும் சிரத்தையாய் மேலேறிக் கொண்டன.

    டிரைவிங் சீட்டிலிருந்த அபிஷேக் சிகரெட் புகையோடு இறங்கினான். கொஞ்சம் வித்தியாசமான பெயரோடு அறிமுகமாகும் அபிஷேக் ஒரு ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி. ராஜாவின் பெயர் சீத்தாராம். ஒரு வேலையில்லா பட்டதாரியைக் கூப்பிட்டு, ‘கோயமுத்தூரில் இருக்கும் சில முக்கிய புள்ளிகளை அட்டவணைப்படுத்து பார்க்கலாம்’ என்று சொன்னால் இந்த சீத்தாராம் ஏழாவதாக வருவார். நிறைய பிசினஸ்; நிறையப் பணம்.

    அபிஷேக்குக்கு வருவோம்.

    அவன்தான் நமக்கு முக்கியம்.

    அபிஷேக் ஆறடி ஓரங்குல உயரம் இருந்தான். இரண்டு பத்து பைசாக்களைப் போட்டுவிட்டு எடை மிஷினைத் தட்டோ தட்டென்று தட்டியதில் 61 கிலோ வந்தது. அட்டையின் பின்பக்கத்தில் எழுதியிருந்த வாசகம், ‘நீ மனோதிடம் வாய்க்கப் பெற்றவன். அற்புதங்களை நிகழ்த்த உன்னால் முடியும்’ என்று பொய் சொன்னது.

    அபிஷேக், மிகவும் உயர்தரமான - - உன்னதமான ஸ்காட்சுகளை தினசரி உபயோகப்படுத்தி வந்ததில் ரோஸ் நிறம் உடம்பில் ஏறியிருந்தது. தீர்க்கமான கண்களில் பெண்களைக் காயப்படுத்துகிற கூர்மை தெரிந்தது.

    காரை விட்டு இறங்கிய அபிஷேக் -

    மெதுவாய் நடந்து போய் இருட்டில் நின்றிருந்த அந்த பங்களாவுக்குள் நுழைந்தான். காம்பௌண்ட் சுவரோரமாய் வளர்ந்திருந்த சிப்ரஸ் மரங்கள் காற்றில் ஆடின.

    அபிஷேக் வாசற் படியேறி, காலிங் பெல்லைத் தொட்டான்.

    கிளிக் கூட்டம் கத்துவதைப் போல் பங்களாவின் உள்ளே சத்தம்.

    அபிஷேக் சிகரெட் புகையோடு காத்திருந்தான்.

    அரை நிமிஷ அவகாசத்தில் கதவு தெரிய - கதவுக்கு பின்னால் மனோன்மணி தெரிந்தாள். நாற்பது வயதைத் தாண்டிய மனோன்மணிக்கு பிந்துகோஷ் உடம்புவாகு. பட்டுப்புடவை கட்ட வேண்டுமானால் காஞ்சிபுரத்துக்கே போய் ஆர்டர் கொடுத்தால்தான், அவளால் உடம்பில் சேலையைச் சுற்ற முடியும். அகலமான ராஜவீதி மாதிரியான முகம். எப்போதோ ஓடிப்போன கணவனுக்காக வட்டமாய் பொட்டு வைத்துக் கொள்பவள். ‘சமூக சேவகி’ என்ற போர்வையில் ‘பலான’ தொழில் செய்பவள். போலீஸ் இவளைக் கண்டு கொள்ளாமல் ஒதுங்கி விடுவதற்குக் காரணம் - அரசியல்.

    அடடே! அபிஷேக் தம்பியா? வாங்க தம்பி. வெற்றிலைச் சிவப்பேறிய பல்வரிசையில் பணச் சிரிப்பு சிரித்தாள். வரவழைத்துக் கொண்ட வெட்கத்தில் தன் விஸ்தாரமான முதுகைப் பட்டுப் புடவையின் முந்தானையில் போர்த்தினாள்.

    அபிஷேக் ஷூவைக் கழற்றாமல் உள்ளே போனான். இடது கை விரல்களில் சிகரெட் மூச்சு விட்டுக் கொண்டிருந்தது. நடந்து போய் சோபாவில் உட்கார்ந்தான்.

    என்ன மனோன்மணி... பங்களா பூராவும் வெறிச்சோடிப் போயிருக்கு. ஒருபட்சிகூட இல்லையா?

    எல்லாமே வெளியே போயிருக்கு தம்பி. நீங்க போன் பண்ணி ஒரு வார்த்தை சொல்லியிருந்தா நம்ப தேவியை நிறுத்தி வெச்சிருப்பேன்.

    சை! என்றான் அபிஷேக். எல்லா பட்சியும் அலுத்துப் போச்சு மனோன்மணி. இன்னிக்கு ஹைதராபாத்திலிருந்து ஏதோ புதுசா ஒரு பட்சி வருதுன்னு சொன்னியே அது வரலையா?

    ஓ! தம்பி அதை ஞாபகம் வெச்சுட்டுத்தான் இவ்வளவு நேரத்துக்கு மேலே வந்திருக்கீங்களா? மன்னிக்கணும் தம்பி, குருவி வரலை... ஹைதராபாத்துக்கே நாளைக்கு ஆளை அனுப்பப் போறேன். எவ்வளவு செலவானாலும் போய்க் கூட்டியாரட்டும்.

    அபிஷேக் கையிலிருந்த சிகரெட்டை வீசி விட்டு எழுந்தான்.

    என்ன தம்பி எந்திரிச்சுட்டீங்க?

    பின்னே... உட்கார்ந்துட்டு என்ன பண்றது?

    வேற பக்கம் ஒரு பட்சி இருக்கு. போறீங்களா தம்பி?

    எந்த ஏரியா?

    ஐஸ்வர்யா நகர்.

    பட்சியோட பேரு?

    ஜெயா.

    ஜெயாவா? ஊருக்குப் புதுசா?

    புதுசுதான். வந்து ஒரு வாரம் பத்து நாளாச்சு. கொஞ்சம் காஸ்ட்லி.

    நல்லாயிருப்பாளா?

    ஆக்ட்ரஸ் மாதிரி இருக்காளாம். நம்ம சேது பார்த்துட்டு வந்து சொன்னான்.

    ஐஸ்வர்யா நகர்ல எந்த வீதி?

    பாரதி வீதி, வீட்டு நம்பர் 41.

    Enjoying the preview?
    Page 1 of 1