Athikaalai Nila and Nilavu Thoora Uravugal
By Rajeshkumar
()
About this ebook
Read more from Rajeshkumar
Thirumarana Azhaippithazh Rating: 5 out of 5 stars5/5Dial For Kill Rating: 4 out of 5 stars4/5Raja Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsIrapathu Nee Irupathu Naan Rating: 5 out of 5 stars5/5Nanthini Nalai Irakkiral! Rating: 3 out of 5 stars3/5Iruttil Parakkum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsPanchavarna Kili Rating: 0 out of 5 stars0 ratingsUyir Eduppaan Thozhan Rating: 5 out of 5 stars5/5Naan Nalina Nalliravu Rating: 0 out of 5 stars0 ratingsVidathey Vivek! Vidathey Rating: 4 out of 5 stars4/5Konjum vanjanai! Rating: 5 out of 5 stars5/5Vetri Endraal Vivek Rating: 5 out of 5 stars5/5Sivappu November Rating: 0 out of 5 stars0 ratingsKondraal Kondraan Kondren Rating: 5 out of 5 stars5/5100-Vathu Pournami Rating: 4 out of 5 stars4/5Rojakkalum Thottakalum Rating: 0 out of 5 stars0 ratingsIrandhu Kidandha Thendral Rating: 0 out of 5 stars0 ratingsUyir Veelchi Rating: 0 out of 5 stars0 ratingsJune, July, Aaa...! Rating: 4 out of 5 stars4/5Mella Mella Ennai Kollathey Rating: 0 out of 5 stars0 ratingsPiriyamaana Kolaikaran Rating: 5 out of 5 stars5/5Neelam Enbathu Niramalla Rating: 0 out of 5 stars0 ratingsKaruppu Rattham Rating: 5 out of 5 stars5/5Ore Oru Naal Rating: 5 out of 5 stars5/5Sivappu Vatathukkul Sinthuja Rating: 0 out of 5 stars0 ratingsEngum Vivek! Ethilum Vivek! Rating: 5 out of 5 stars5/5Moondru Vinaadi Mugam Rating: 5 out of 5 stars5/5Thanga Macham Rating: 5 out of 5 stars5/5Kavanam Vivek Rating: 5 out of 5 stars5/5Theepantham Edu! Theemaiyai Sudu Rating: 0 out of 5 stars0 ratings
Related to Athikaalai Nila and Nilavu Thoora Uravugal
Related ebooks
Vaanavil Kutram Rating: 5 out of 5 stars5/5Thooratthu Ponman Rating: 0 out of 5 stars0 ratingsSaththamillatha Nayaakara Rating: 0 out of 5 stars0 ratingsOru Roja Ithazhum Sila Raththa Thuligalum Rating: 0 out of 5 stars0 ratingsMugamatra Nizhalgal Rating: 0 out of 5 stars0 ratingsAthikalai Nila Rating: 0 out of 5 stars0 ratingsEttu Vanna Vanavil Rating: 0 out of 5 stars0 ratingsPistal Mutham Rating: 5 out of 5 stars5/5Karupu Vaanavil Rating: 0 out of 5 stars0 ratingsKaagitha Iruthayangal Rating: 5 out of 5 stars5/5Kaatrai Kaithu Sei Rating: 5 out of 5 stars5/5Nizhalgal Rating: 0 out of 5 stars0 ratingsNalliravu Seithi and Kannilladikuthu Minnal Rating: 0 out of 5 stars0 ratingsPoomaalai Neeye Rating: 0 out of 5 stars0 ratingsIntha Rojavukku Niramillai and Uyirin Uyire! Rating: 0 out of 5 stars0 ratingsHydrogen Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsKeezhe Vizhatha Nizhal Rating: 5 out of 5 stars5/5Meendum August 15 Rating: 0 out of 5 stars0 ratingsViolet Kanavugal! Rating: 0 out of 5 stars0 ratingsNil..! Kavani..! Kaathiru..! Rating: 0 out of 5 stars0 ratingsAgmark Murder Rating: 0 out of 5 stars0 ratingsKaruppu Udai Thevathai Rating: 5 out of 5 stars5/5Naalai Yaaro! Rating: 0 out of 5 stars0 ratingsSivappu Udai Devathai! Rating: 0 out of 5 stars0 ratingsPani Nilavu Rating: 0 out of 5 stars0 ratingsNeruppu Nimishangal Rating: 3 out of 5 stars3/5Goodnight Kurotham Rating: 5 out of 5 stars5/5Oru Azhagana Aabathu Rating: 0 out of 5 stars0 ratingsMoochil Vaazhum Pullanguzhalgal! Rating: 0 out of 5 stars0 ratingsUlagai Vilai Kel! Rating: 1 out of 5 stars1/5
Related categories
Reviews for Athikaalai Nila and Nilavu Thoora Uravugal
0 ratings0 reviews
Book preview
Athikaalai Nila and Nilavu Thoora Uravugal - Rajeshkumar
24
1
ரேஸ் ட்ரைவிங் சூட்டை தரித்துக் கொண்டு மாடிப்படிகளில் மெல்ல இறங்கி கீழே வந்தான் சௌந்தர்யன். ஆறடி உயரம். அறுபத்திரெண்டு கிலோ உடம்பு. இருபத்தைந்து வயது. சதுரமான சதைப்பிடிப்பு முகம். அடர்த்தியான க்ராப். ஆரோக்கியமான சிவப்பு உதடுகள். கெட்டியான மீசை. கழுத்தை ஒட்டிப் பிடித்த மாதிரியான டாலர் செயின்.
சௌந்தர்யனின் ஷூ சத்தம் கேட்டு - பேப்பர் புரட்டிக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருந்த ராமபத்ரன் நிமிர்ந்தார். சௌந்தர்யனுக்கு அண்ணன். வயது முப்பத்தைந்து. தலை, பாதி நரைத்துப் போனதில் நாற்பத்தைந்து வயதைப் போல் தோற்றம் காட்டினார். மூக்குக் கண்ணாடியை தாழ்த்திக் கொண்டே கேட்டார்.
நேத்திக்கு ராத்திரி நானும் உன்னோட அண்ணியும் அவ்வளவு புத்தி சொல்லியும் காதுல ஏறலை போலிருக்கு...
ஸாரிண்ணா... இந்த ஒரு தடவை மட்டும் கார் ரேஸ்ல கலந்துக்க பர்மிஷன் குடுங்க... அடுத்த வருஷத்திலிருந்து கலந்துக்க மாட்டேன்.
ஒவ்வொரு வருஷமும் இதையேதானே சொல்றே...?
இந்த தடவைதான் கடைசி...
எனக்கு இஷ்டமில்லை. இந்த தடவை நான் உனக்கு பர்மிஷன் தரமாட்டேன்.
நீங்க ஒண்ணும் பர்மிஷன் தரவேண்டாம். நா... அண்ணிகிட்டே கேட்டுக்கிறேன்.
சொன்னவன், பக்கத்து அறைக்கு அருகாக போய் நின்று கொண்டு குரல் கொடுத்தான்.
அண்ணீ...!
...
அண்ணீ...ஈ...ஈ...
வர்றேன்.
தலைக்கு குளித்து ஈரத்துண்டை சுற்றிக் கொண்டே அண்ணிக்காரி கனகா வெளிப்பட்டாள். முப்பது வயது. ஊட்டமான சாப்பாட்டினால் உடம்பு மினுமினுப்பாய் தெரிந்தது.
என்ன தம்பி...
நான் ரேஸ்ல கலந்துக்கப் போறேன் அண்ணி. உங்க பர்மிஷனும் ஆசீர்வாதமும் எனக்கு வேணும்.
கனகா புருஷனை கவலையாய் பார்த்தாள். நீங்க என்ன சொன்னீங்க...?
நா ஒண்ணுமே சொல்லலை... உன் பாடு... உன்னோட கொழுந்தன் பாடு... ராத்திரி ஒரு மணி நேரம் ஹால் சோபாவில் உட்கார வெச்சுக்கிட்டு - ரேஸ்ல கலந்துக்க வேண்டாம்னு புத்தி சொன்னேன். அப்ப சரி சரின்னு தலையாட்டிட்டு... இப்ப பர்மிஷன் வேணும்னு வந்து நிக்கறான்... அவன்கிட்ட பேசப் போறதில்லை. நீ பர்மிஷன் தர்றதும் தராததும் உன்னோட இஷ்டம். நான் குளிக்கப் போறேன்.
போய் விட்டார்.
சௌந்தர்யனை ஏறிட்டாள் கனகா.
ஏன் தம்பி, இந்த ரேஸுக்கு போகாம உன்னால இருக்க முடியாதா...?
அண்ணி! இதுதான் லாஸ்ட் சான்ஸ்... அடுத்த வருஷத்திலிருந்து நான் தலைகீழாக நின்னாலும்... பர்மிஷன் கிடைக்காது. எனக்குப் பெண்டாட்டியா வரப்போற ரத்னா பர்மிஷன் குடுக்க மாட்டாளே...
கனகா புன்னகைத்தாள். வர்ற மாதம் பதினாலாம் தேதி கல்யாணத்தை வெச்சுகிட்டு... இந்த மாதிரி ஆபத்தான ரேஸிலெல்லாம் கலந்துக்கணுமா தம்பி...?
அண்ணி! ப்ளீஸ்! இந்த ஒரு தடவை மட்டும்...
என்னை இக்கட்டான நிலைமையில விட்டுட்டு... உங்க அண்ணன் போயிட்டாரு... உனக்கு பர்மிஷன் குடுத்தா... என்னைக் கண்டபடி திட்டுவாரு...
எனக்காக இந்த ஒரு தடவை மட்டும் திட்டை வாங்கிக்கிங்க... அண்ணி. ப்ளீஸ்! நான் இந்த ரேஸ்ல கலந்துக்கலைன்னா... ஃப்ரண்ட் சர்க்கிளில் எனக்கு மதிப்பு இல்லாம போயிடும்.
கனகா பெருமூச்சொன்றை விட்டாள்.
சரி. ஷூவை கழட்டி வெச்சுட்டு என் பின்னாடி வா.
எதுக்கண்ணி?
வா, சொல்றேன்.
சௌந்தர்யன் ஷூக்களைக் கழற்ற - உள்ளறைக்கு கூட்டிப் போனாள். சுவரில் வரிசையாய் கடவுள் படங்கள். பக்கத்தில் என்றைக்கோ இறந்து போன - சௌந்தர்யனின் அப்பா - அம்மா புகைப்படங்கள்.
கனகா, தட்டில் கற்பூரத்தை ஏற்றி - படங்களுக்கு காட்டினாள். ஏதோ ஒரு ஸ்லோகத்தைச் சொல்லி பூஜை செய்துவிட்டு - தட்டை அவனிடம் நீட்டினாள்.
இதெல்லாம் என்ன அண்ணி...?
நீ ஆசீர்வாதம் கேட்டியே? விபூதியை எடுத்து நெத்தியில இட்டுக்கோ. கார் ரேஸ்ல நீ ஜெயிக்கிறது பெரிசில்லை. பத்திரமா திரும்பி வர்றதுதான் முக்கியம்.
அண்ணி! போன வருஷம் ஒரு மயிரிழையில் வெற்றியைத் தவற விட்டுட்டேன். இந்த வருஷம் அப்படியில்லை. அஞ்சு கிலோ வெள்ளிக் கோப்பையை சுமந்துக்கிட்டுதான் வரப்போறேன். நாளைக்கு காலையில எல்லா பேப்பர்லேயும் என்னோட பாஸ்போர்ட் போட்டோ சிரிக்கும்.
நெற்றிக்கு விபூதி இட்டுக் கொண்டு, அப்பா - அம்மா போட்டோக்களைத் தொட்டு கும்பிட்டுவிட்டு - அறையினின்றும் வெளியே வந்தான்.
டீபாயின் மேலிருந்த டெலிபோன் அலறிக் கொண்டிருந்தது. சௌந்தர்யன் போய் ரிஸீவரை எடுத்தான்.
ஹலோ.
குட்மார்னிங் மாப்பிள்ளை ஸார்!
- ஒரு பெண் குரல் கேட்டது.
யாரு...?
என்ன மாப்பிள்ளை ஸார்... எங்க அக்கா ரத்னாவை பெண் பார்க்க வந்தப்ப உங்க கூட எவ்வளவு நேரம் அரட்டையடிச்சேன். என்னோட குரலை உங்களாலே ஐடென்டிஃபை பண்ண முடியலையா?
ஸாரி, வருங்கால மைத்துனி...!
மன்னித்தோம்.
என்ன விஷயம்...
அக்கா உங்ககிட்டே பேசணுமாம்
என் வருங்கால மனைவி என்கிட்டே பேசணுமா...? என்னே என் பாக்கியம்! ரிஸீவரைக் கொடு.
அடுத்த சில விநாடிகளில் ரத்னாவின் குரல் கேட்டது.
வணக்கங்க. நான் ரத்னா.
என்ன குரல் நடுங்குது?
அப்பா அம்மாவுக்கு தெரியாமே பேசறேன்.
அப்படியா... சரி என்ன விஷயம்?
நீங்க கார் ரேஸ்ல கலந்துக்கப் போறதா கேள்விப்பட்டேன். உண்மையா?
உண்மைதான். ரேஸ் ட்ரைவ் சூட்டை மாட்டிக்கிட்டு கிளம்பிட்டே இருக்கேன்.
தயவு பண்ணி போகாதீங்க.
சரியா போச்சு. இப்பத்தான் என்னோட அண்ணியை சமாதானப்படுத்தி பர்மிஷன் வாங்கினேன். நீ போன்ல ஆரம்பிச்சுட்டியா?
சொல்றதைக் கேளுங்க.
என்னை ஏன் போக வேண்டாங்கிறே?
எனக்குப் பயம்மா இருக்கு!
எதுக்கு பயம்?
டி.வி.யில்தான் கார் ரேஸை பார்க்கிறேனே. ஒவ்வொரு காரும் என்னமா குட்டிக்கர்ணம் அடிச்சு விழுந்து நெருப்பு பத்திகிட்டு எரியுது.
சௌந்தர்யன் சிரித்தான்.
நம்ம ஊர் கார் ரேஸ்ல அது மாதிரி இருக்காது ரத்னா. ரோட்ல ஓட்டறதைக் காட்டிலும் கொஞ்சம் வேகமாக ஓட்டுவேன் அவ்வளவுதான்.
இருந்தாலும் எனக்குப் பயம்மா...
இதோ பார் ரத்னா! நீ பட்டிக்காட்டுப் பெண்ணில்லை. பி.ஏ.டிகிரி ஹோல்டர். கார் ரேஸிங் ஒரு இண்ட்ரஸ்டான ஈவண்ட். கடந்த அம்பது வருஷகாலமா ரேஸ் நடந்துட்டு வருது. இதுவரைக்கும் மூணு தடவை மட்டுமே விபத்து நடந்திருக்கு. அந்த மூணு விபத்திலேயும் ஒரு விபத்துதான் மோசமான விபத்து.
நீங்க என்னதான் தைரியம் சொன்னாலும் எனக்கு ஒரே டென்ஷனா இருக்கு. ஃபீவர் வர்ற மாதிரி ஃபீலிங். நேத்து ராத்திரி பூராவும் நான் தூங்கலை.
ஒரு காரியம் பண்ணு.
என்ன?
ஒரு தூக்க மாத்திரை போட்டுக்கிட்டு தூங்கிடு. நான் சாயந்தரம் திரும்பற வரைக்கும் டென்ஷன் இருக்காது.
ப்ளீஸ்... நான் சொல்றதைக் கொஞ்சம் கேளுங்க...
டூ லேட். கிளம்பிட்டே இருக்கேன். பக்கத்துல என் அண்ணி இருக்காங்க. பேசு.
சொன்னவன் - ரிஸீவரை அருகில் நின்றிருந்த அண்ணி கனகாவிடம் கொடுத்துவிட்டு - போர்டிகோவில் நிறுத்தியிருந்த ரேஸ் காரை நோக்கி ஓடினான்.
‘Who Can Beat Me’ என்ற வாசகம், காரின் முதுகிலும் பக்கவாட்டிலும் வர்ண வர்ண எழுத்துக்களில் தெரிந்தது. முன்பக்க கதவைத் திறந்து கொண்டு உள்ளே போனான் சௌந்தர்யன்.
இக்னீஷியனை ‘ஜக ஜக’வென்று உசுப்பி கியரை மாற்றி - ஆக்ஸிலேட்டரை மிதித்தான்.
ஒயிட் பெட்ரோல் நிரப்பப்பட்ட கார் - குபீரென்று கிளம்பி திறந்திருந்த காம்பௌண்ட் கேட் வழியே தெருவுக்கு வந்தது.
கையிலிருந்த செகண்ட் வாட்ச்சைப் பார்த்தான்.
நேரம் 7.25.
‘சரியாய் எட்டு மணிக்கெல்லாம் ஸ்டார்ட்டிங் பாயிண்ட்டில் இருக்க வேண்டும்.’
சௌந்தர்யனின் காலில் ஆக்ஸிலேட்டர் மிதிபட ஸ்பீடா மீட்டரில் முள் எண்பதைத் தொட்டு நடுங்கியது.
போக்குவரத்து அதிகம் இல்லாத ரோடு.
கார் சீறியது.
‘இந்த தடவை ஜெயிக்க முடியுமா?’
‘கோயமுத்தூர் முரளியும்... பெங்களூர் பாபு