Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

December Iravukal
December Iravukal
December Iravukal
Ebook183 pages1 hour

December Iravukal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
December Iravukal

Read more from Rajeshkumar

Related to December Iravukal

Related ebooks

Related categories

Reviews for December Iravukal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    December Iravukal - Rajeshkumar

    10

    1

    801 தற்கொலைகள்: அமெரிக்காவின் கயானா மாநிலத்தில் ஜோன்ஸ் என்ற மதத்தலைவரும் அவரது சிஷ்யர்கள் 800 பேரும் கடவுளைக் காண்பதற்காக 1978ஆம் ஆண்டு விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்கள். படத்தில் அந்த விஷம் கலக்கிய பாத்திரம்.

    அந்த டிசம்பர் மாதத்தின் முதல்நாள் கொஞ்சம் அதிகப்படியான குளிரோடு விடிந்து கொண்டிருந்தது. சூரியன் கிழக்குப் பக்கமாய்க் கீறிக்கொண்டு புறப்பட, சவுக்கடிபட்ட வெற்றுடம்பின் இரத்த விளாறுகளைப் போல் வானம் பூராவும் சிவப்புத் தீற்றல்கள் தெரிந்தன. புகையில் நெய்த பனிப் போர்வை. பட்சிகளின் கீச் கீச்.

    கோவை நகரின் ஏறக்குறைய வால்பகுதி அது. ஹவுசிங் யூனிட்டுகள் புதிது புதிதாய்ப் பிரசவமாகும் சாயிபாபா காலனியின் கடைசியில் அந்த பங்களா கொஞ்சம் அந்நயத்தனமாய் நின்றிருந்தது. இரவெல்லாம் பூத்துக் கொட்டிக் களைத்த பன்னீர் மரங்கள் காம்பௌண்ட் சுவரோரம் செழித்திருக்க, ரோஸ்மில்க் நிறத்தில் போகன்வில்லாப் பூக்கள் குழந்தைகளாய் சிரித்தன.

    வாசலில்- தமிழ் தெரிந்த நேப்பாள கூர்க்கா, விசுவாசம் மிக்க அல்சேஷனாய் நின்றிருந்தான். காம்பௌண்ட் கேட்டைத் தாண்டினால்-

    காம்பஸால் ஒரு பெரிய வட்டம்போட்டு அதில் பச்சைப் பெயிண்ட் அடித்த மாதிரி புல்வெளி. அதன் நடுவே ராதையின் கையைப்பற்றி இழுக்கும் கண்ணன் சிலை. சிலையைச் சுற்றிலும் ரோஜாத் தொட்டிகள். அதில் சிரிக்கும் ஈஸ்ட்மென் கலர் ரோஜாக்கள்.

    புல்வெளியைத் தாண்டி... குறுக்கிடும் போர்டிகோவைத் தாண்டி உள்ளே நுழைந்தால்-

    வரவேற்பறை. பிரம்பு நாற்காலிகளும், ஸ்டீல் சேர்களும் திசைக்கொன்றாய் இறைந்து கிடக்க நடுவேயிருந்த அந்த வெளிர் ஊதா நிற சோபா-கம் பெட்டில் -

    கங்காதர் உட்கார்ந்திருந்தார். கையில் விரிக்கப்பட்ட ஆங்கில நாளிதழ். கங்காதருக்கு வயது ஐம்பத்தைந்திலிருந்து அறுபதுக்குள் இருக்கலாம். குழந்தைத்தனமான முகம். நடிகர் ரங்காராவை நினைவுபடுத்தும் உயரம், வழுக்கை, மூக்குக்கண்ணாடி. வாழ்க்கையில் சில நியமங்களைத் தவறாமல் கடைப்பிடிக்கறவர். குளிர் காலமானாலும் சரி, மழைக்காலமானாலும் சரி, விடியற்காலை ஐந்து மணிக்குப் பச்சைத்தண்ணீரில் குளியல். ஈர வேஷ்டியோடு பூஜையறையில் ஒரு மணி நேரம் தியானம். பிறகு உடை அணிந்து வரவேற்பறையில் அமர்ந்து அன்றைய நாளிதழ்களைப் புரட்டல். ஏழு மணிக்கு காலை டிபன். ஏழரை மணிக்கு சூலூரில் பிரம்மாண்டமாய்ப் பரவிக் கிடக்கும் அவருடைய உரத் தொழிற்சாலையான ‘கங்காதர் பெர்டிலைசர்’ஸுக்கு விஜயம். அப்புறம்... அவருடைய நியமங்களைச் சொல்லி முடிப்பதற்குள் ஒரு குரல், குட் மார்னிங் அப்பா!

    கங்காதர் கையிலிருந்த பேப்பரைத் தாழ்த்திக் கொண்டு விழிகளை உயர்த்தினார். அவருடைய மகள் மேகலா கையில் பெரிமேசனோடு நின்றிருந்தாள்.

    வாம்மா மேகலா, உட்கார்.

    அவள் உட்கார்ந்தாள். கண்களில் தூக்கம் இன்னமும் பாக்கியிருந்தது. நேற்றைக்கு இரவு பூசிய லோஷன், முகத்தில் எண்ணெயாய் மாறியிருந்தது. தலை முடி கலைந்திருந்தது. நைட் கவுன் கசங்கி இருந்தது. பருவம் கன்னத்தில் பருக்களை வைத்திருந்தது. மூக்கு, காது, கழுத்து எங்கேயும் ஒரு தங்கத்துணுக்குக் கூட இல்லாமல் வெறுமையைப் பூசிக் கொண்டு நின்றது.

    ஏம்மா மேகலா, இன்னிக்கு வெள்ளிக்கிழமை. இன்னிக்காவது சீக்கிரமா குளிக்கக் கூடாதா?

    ஸாரிப்பா! இந்தப் பெரிமேசனை முடிச்சுட்டுத்தான் குளியல். நாற்காலியில் உடலைக் குறுக்கிக் காலை நீட்டியபடி பெரிமேசனை விரித்தாள் மேகலா.

    கங்காதர் புன்னகையோடு தன் வழுக்கையைத் தடவிக் கொண்டார், உங்கம்மா உயிரோடு இருந்திருந்தா நீ வளர்க்கப்பட்டிருக்கிற முறையே வேற விதமா இருந்திருக்கும். இன்னிக்கு நீயும் உங்க ரெண்டு அண்ணன்களுக்குச் சமமா வளர்ந்து நிக்கறே! கங்காதர் பேப்பரை வீசிவிட்டு டிபன் சாப்பிட எழுந்தார்.

    உட்புற ஹாலை நோக்கி நடந்தவர், சட்டென்று நின்று மேகலாவைத் திரும்பிப் பார்த்தார். அம்மா மேகலா! அழைத்தார்.

    என்னப்பா? எரிச்சலாய்த் தலை நிமிர்ந்தாள்.

    எனக்கொரு உதவி செய்யறியாம்மா? உங்க அண்ணன் பார்த்திபன் ஏர்போர்ட்டுக்குப் போய் யாரோ ஒரு ஃபிரண்டை ரிஸீவ் பண்ணணுமாம். ஏழு மணிக்கெல்லாம் எழுப்பிவிடச் சொன்னான். போய் அவனைக் கொஞ்சம் எழுப்பி விட்டுடம்மா.

    பெரிமேஷனைக் கோபமாகச் சாத்தினாள் மேகலா.

    அண்ணனோட ரூம்ல அலாரம் டைம்பீஸ் இருக்குமே...? அலாரம் வெச்சா அடிச்சுட்டுப் போகுது. திருப்பள்ளியெழுச்சி பாட ஒரு ஆள் வேணுமாக்கும்?

    மாடிப்படிகள் அதிரத் தொம் தொம் என்று நடந்தாள். மாடி வராந்தாவை அடைந்து வலக்கைப் பக்கமாய்த் திரும்பி இரண்டாவதாய்த் தெரிந்த அந்த அறைக் கதவின் மேல் கையை வைக்கப் போனாள். சட்டென்று நின்றாள்.

    உள்ளே பார்த்திபன் யாருடனோ போனில் பேசிக்கொண்டிருந்தான். பயந்த குரல். சொல்லிவிடாதே! யார்கிட்டேயும் சொல்லிவிடாதே! - கெஞ்சிக் கொண்டிருந்தான்.

    குழப்பமான மேகலா குனிந்து சாவித் துவாரத்தில் கண்ணை வைத்துப் பார்த்தாள். பார்த்திபன் கையில் ரிஸீவரோடு அந்தக் குளிரிலும் முகத்தில் வியர்வை வழிய நின்றான். கண்கள் பீதியில் சுழல உடம்பு பதட்டத்தில் நடுங்கிக் கொண்டிருந்தது.

    ‘பார்த்திபன் யாரோடு பேசிக் கொண்டிருக்கிறான்?’

    மேகலா மெல்லப் பின் வாங்கித் தன் அறையை நோக்கித் தரையில் கால் பாவாமல் ஓடினாள். அறைக்குள் நுழைந்து ஆவேசமாய் ரிஸீவரை எடுத்துக் காதுக்குக் கொடுத்தாள். பார்த்திபன் குரலும் வேறொரு கரகரப்பான ஆண் குரலும் தெளிவாய்க் கேட்க ஆரம்பித்தன. மூச்சுக் காட்டாமல் நின்றாள் மேகலா.

    பார்த்திபா! சொன்னதை நல்லா ஞாபகம் வெச்சுக்கோ. இன்னிக்கு ராத்திரி சரியா எட்டு மணிக்கு க்ராஸ் கட் ரோட்ல இருக்கிற ‘தீப மாலிகா’ ஓட்டலுக்கு நீ வரப்போற! கையை வீசிட்டு இல்லே- ரூபாய் பத்தாயிரத்தோட - தந்தூரி ஹால்லே மூலையிலே போட்டிருக்கிற 20 ஆம் நெம்பர் டேபிள் உனக்காக ரிசர்வ் பண்ணியிருக்கு. அந்த டேபிளுக்குக் கீழே பணத்தை வெச்சுட்டு ஒரு டொரினோ ஆரஞ்சைச் சாப்பிட்டுட்டு நீபாட்டுக்கு எழுந்திரிச்சு வந்துட வேண்டியது!

    பார்த்திபன் பதறினான். பணத்தைக் குடுத்துட்டா அந்த விஷயத்தைப் போலீஸ்லே சொல்ல மாட்டியே?

    மாட்டேன்! செய்யறது பிளாக்மெயில் தொழிலானாலும் வெள்ளை மனசு எனக்கு. பணத்தை வாங்கின கையினாலே உன்னைக் காட்டிக் கொடுக்க மாட்டேன்.

    தேங்க்ஸ். சரியாக எட்டு மணிக்கு தீப மாலிகாவுக்கு வந்துடறேன்.

    வா! தனியா வா! புத்திசாலித்தனமாகக் காரியம் பண்றதா நினைச்சிக்கிட்டு யாரையும் கூட்டிட்டு வந்துடாதே. பணத்தோட வா!

    ரிஸீவர் வைக்கப்படும் ஒலி கேட்டது.

    மேகலா பயமானாள். ரிஸீவரைக் கைகள் நடுங்க வைத்தாள். ‘பார்த்திபனை மிரட்டிப் பணம் கேட்ட அந்தக் குரல் யாருக்குச் சொந்தம்? ’போலிஸில் சொல்லி விடாதே’ என்று தீனமாய்க் கெஞ்சும் அளவுக்குப் பார்த்திபன் என்ன குற்றம் செய்தான்?’

    மேகலா பூனை நடை நடந்து பார்த்திபன் அறைக்கு வந்தாள். பார்த்திபன் கண்களை மூடி நெற்றிப் பரப்பில் கைகளை வைத்துக் கொண்டு படுக்கையில் சாய்ந்திருந்தான்.

    அண்ணா! மேகலா மெல்லிய குரலில் அழைத்தாள்.

    Enjoying the preview?
    Page 1 of 1